சீனாவின் ஆயுதங்கள், போர்விமானங்களுடன் தென்சீனக் கடலில் பாதாளச் சுரங்கம்

தென்சீனக் கடலில் பாதாளச் சுரங்கம் அமைந்திருப்பதை அமெரிக்க செயற்கைக் கோள் புகைப்படங்கள் ஆதாரப்படுத்தியுள்ளன. தென்சீனக் கடலில் சீனா அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை பதுக்கி வைத்திருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தது. அது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவத்துள்ளது. உலகின்...

வடகொரிய அதிபர் கிம் இன் சகோதரி காணாமல் போயுள்ளார்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் குறித்து பல செய்திகள் பரவி வரும் நிலையில் தற்போது அவரின் சகோதரி கிம் யோங் உன் திடீரென காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கோமா நிலைக்குச் சென்று...

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகினார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே (வயது 65) ஜப்பா் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக பதவி வகித்ததுடன்...

ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தென்சீனக் கடலிற்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக...

ஈராக், சிரியாவில் 10,000இற்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயற்படுகின்றனர் ஐ.நா

ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. பாதுகாப்சபை கருத்துத் தெரிவிக்கையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கியுள்ளனர். சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் உலகமே முடங்கியிருக்கும் நேரத்தில் ஆட்சேர்ப்புஇ நிதித்திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரியவில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் தலையெடக்கத் தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈராக்கிலிருந்து 2014ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுப் படைகளால் ஐ.எஸ் படைகள் பெருமளவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபரின் புதிய புகைப்படங்கள் வெளியாகின

வடகொரிய அதிபர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரின் பொறுப்புக்கள் யாவும் அவரது சகோதரியிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகிய செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் வடகொரிய அதிபரின் சமீபத்திய புகைப்படங்களை அரசு வெளியிட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையில்

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் 03ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல்...

சீனாவை எச்சரிக்கும் இந்திய முப்படைத் தளபதி பபின் ராவத்

இந்திய – சீன எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமிடத்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பபின்...

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது பொலிசார் சுட்டதை கண்டித்து போராட்டம்

அமெரிக்காவின் விகான்சின் மாநிலத்தில் ஞாயிறு அன்று , உள்ளுர் பிரச்சினை காரணமாக ஜக்கப் பிளேக் என்ற கறுப்பினத்தவரை பொலிசார் சரமாரியாக சுட்டனர். இதனைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. ஞாயிறு அன்று  நடைபெற்ற இந்த...

அவுஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்படலாம் ஆய்வறிக்கை எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவுகளை உண்டாக்கியது. இது போன்ற காட்டுத்தீ மீண்டும் அடுத்த ஆண்டில் ஏற்படலாம் என விசாரணை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட்  மாதம் பயங்கரமான காட்டுத்தீ பரவியது....