செய்திகள்
முதல் கட்டம் 330 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இன்னும் இருதினங்களில் இலங்கைக்கு...
உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்து முதலிடம்- 112-வது இடத்தில் இலங்கை
‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை...
இலங்கையின் கடன்விவகாரங்கள் தொடர்பில் இந்திய ஜப்பான் பிரதமர்கள் பேச்சு
இந்திய பிரதமர் ஜப்பான் பிரதமருடன் இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜப்பான் பிரதமர்பியுமோ கிசிடாவுடன் திங்கட்கிழமை இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் கடன் விவகாரங்கள்...
தமிழர்களின் எல்லைக் கிராமங்களை சத்தமில்லாமல் பௌத்தமயமாக்க முயற்சி
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதித்...
இலங்கையில் சீர்திருத்தங்கள் அவசியம் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா
இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை...
தேர்தலை ஒத்திவைக்குமாறு பரிந்துரை செய்யவில்லை – சர்வதேச நாணயநிதியம்
சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாக்கி இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தேர்தல் நடவடிக்கைகளில் சர்வதேச நாணயநிதியம் தலையீடு செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் ஒருபோதும்...
அரகலய குழுவினரின் யாழ்ப்பாணப் பேச்சு-அகிலன்
அடக்குமுறைக்கு எதிராக என்னதான் போராட்டங்களை தென்னிலங்கையின் அரகலய என்ற கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்டாலும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அவா்கள் குரல் கொடுக்கமாட்டாா்கள் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்படடிருக்கின்றது.
சிங்களவா்கள் மத்தியில்...
சர்வதேச நாணயநிதியத்தின் தீர்மானத்திற்கு அமெரிக்கா வரவேற்பு
இலங்கைக்கான நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
https://twitter.com/USAmbSL/status/1637873737876774924?s=20
மிகப்பெரும் செய்தி பொருளாதார மீட்சி நோக்கிய பயணத்தில் முக்கியமான நடவடிக்கை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
வெந்நீரூற்று ஆக்கிரமிப்பு அரசின் இலக்கு என்ன?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி
திருமலையில் கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழா்களைப் பொறுத்தவரையில் இதனுடைய முக்கியத்துவம் என்ன? தொல்பொருள் திணைக்கள் எவ்வாறான இலக்குடன் இதனைச் செய்கின்றது? என்பன தொடா்பாக அரசியல் ஆய்வாளா் யதீந்திரா...
நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – ரணில்
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது...
சீன-ரஷ்ய- அரபுலக உறவில் இந்தியாவின் நிலை என்ன?- இதயச்சந்திரன்
சிரிய அதிபர் பசீர் அல் அசாத் ஐக்கிய அரபுக் குடியரசிற்கு (அபுதாபி) போகிறார். அரபுலகத்தில் சிரியா மீண்டும் இணைய வேண்டுமென்கிற சகோதரத்துவ வேண்டுகோளினை விடுக்கிறது ஐக்கிய அரபுக் குடியரசு.
அதுமட்டுமா.....ஈரான் அதிபர் சவூதி அரேபியாவிற்குப்...
மாகாணசபைத் தேர்தல்களை தாமதமின்றி விரைவாக நடாத்தவேண்டும் – தமிழரசுக்கட்சி தீர்மானம்
தமிழரசுக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை இயலுமானவரை விரைவாக நடாத்தவேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (19) மன்னாரில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் உள்ளக விவகாரங்கள், மாகாணசபைத் தேர்தல்கள், உள்ளுராட்சிமன்றத்...
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ 220 கோடி ஒதுக்கீடு…
இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல்...
பஞ்சாப் மாநிலத்தில் 112 பேர் கைது
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடும்போக்கு சீக்கிய மதப் பிரச்சார் ஒருவரை அதிகாரிகள் தேடும் அதிகாரிகள், அவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 112 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இத்தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக...
உக்ரைன் – ரஷ்யாவின் தானிய உடன்படிக்கை மேலும் நீடிப்பு
ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு மத்தியில் உக்ரைனின் பல மில்லியன் தொன் தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் அது எத்தனை காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை. உக்ரைன்...
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு இணக்கம்: கிழக்கு பல்கலை ஆசிரியர் சங்கம்
எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவருமான தில்லைநாதன்...
இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது
இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் நேற்றையதினம் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று (20) பி.ப 2...
இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலுக்கு இந்தியா உதவி
இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகர் கோபால்...
இலங்கைக்கான கடன் – நிறைவேற்று சபையின் அங்கீகாரம் இன்று
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் தொகைக்கான நிறைவேற்று சபையின் அங்கீகாரம் இன்று (திங்கட்கிழமை) கிடைக்கப்பெறவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை நேரப்படி நாளை காலை விசேட ஊடக...
வங்கிகளினூடாக அனுப்பப்படும் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவிகள் குறைவடையும் வாய்ப்பு – சுரேந்திரன்
புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும் என பொருளியல் ஆய்வாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளருமான கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து...