செய்திகள்
ஜப்பானின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்
ஜப்பானின் ஜெய்கா (JICA )ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர்...
சவாலான காலங்களில் இலங்கையின் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும்-ரணிலுடனான சந்திப்பில் தூதுவர்கள் கருத்து
சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த...
காலை உணவு இன்றி மயங்கி விழும் மாணவர்கள்- இலங்கை தேசிய அதிபர்களின் சங்கம் சுட்டிக்காட்டு
பாடசாலை மாணவர்களின் வருகை 30 –40 வீதத்தால் குறைந்துள்ளதாக அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் பிரச்சினைகளால், பாடசாலை மாணவர்களின் வருகை குறைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை தேசிய...
இலங்கையில் மின் கட்டணம் 75% அதிகரிப்பு- பெரும் நெருக்கடிக்குள் மக்களின் வாழ்க்கை
இலங்கையில் இன்று முதல் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக செயற்படுவதாக தூதுவர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்துள்ளனர்.
அத்தோடு,...
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறல்- தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக இழுவைப்படகு ஒன்றினையும் அதில் இருந்த 9 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின்...
பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்
போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம்...
தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தங்கள்- பாராளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க இணக்கம்
தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள்...
ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை
ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள், மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி...
“மேதகு 2 திரைக் கதையை மக்களிடம் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழருடைய கடமையாகும்“
மேதகு 1 திரைப்படம் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருந்த நிலையில், மேதகு 2 திரைக்கதை உருவாக்கப்பட்டு திரைப்படமாக வெளிவரவுள்ளது. முன்னதாக குறித்த படத்தின் பாடல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இத்...
அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் கோட்டாபயவுக்கு இல்லை-தாய்லாந்து கருத்து
மனிதாபிமான அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாய்லாந்தில் தங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வர கோரிக்கை விடுத்துள்ளதை தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு...
மின்சாரக் கட்டணத்தின் நியாயமற்ற அதிகரிப்பு -அனைத்து தகவல் தொடர்பு சேவை,அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
மின்சாரக் கட்டணத்தின் நியாயமற்ற அதிகரிப்பு காரணமாக, அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) போட்டோ பிரதி மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணங்களை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அண்மைக்கால மின்வெட்டுகளால் தமது தொழிலை...
இலங்கை பாராளுமன்றத்தில் புதிய நிதிக் குழு நியமனம்
அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்...
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் இன்று காலை...
தாய்லாந்துக்கு செல்கின்றார் கோட்டபாய
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நாளை செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தை அடுத்து இலங்கையின் வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து...
நுவரெலியாவில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்
நுவரெலியா அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
நாட்டில் ரணில் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்....
ரணிலுக்கு இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சீனக்கப்பல் விவகாரம்- அகிலன்
இராஜதந்திரச் சிக்கல் ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது மாட்டிக்கொண்டிருக்கின்றார். இலங்கையை மையப்படுத்திய சீன - இந்திய ஆதிக்கப்போட்டியில் முக்கியமான ஒரு கட்டத்தில் இப்போது நாம் இருக்கின்றோம். அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும்...
தமிழ்த்தரப்பின் செயல் வழி என்ன? -பி.மாணிக்கவாசகம்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த உரையைப் பலரும் வரவேற்றுள்ளார்கள். ஆளுமையுள்ள ஓர் அரசியல் தலைவரின் உரையாக அது அமைந்திருப்பதை மேலோட்டப் பார்வையில்...
கப்பல் விவகாரம் – இலங்கை குறித்த நிகழ்வை இடை நிறுத்தியது சீனா
சீன கப்பலிற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்துள்ளமைக்கு பதிலடியாக சீனாவில் உள்ள இலங்கை துாதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை சீனாவின் சமூக ஊடகமொன்று இடைநிறுத்தியுள்ளது என தவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் இலங்கை குறித்த...
சம்பள விடயத்தில் முழுமையான தீர்வு கிடைத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் ஜீவன் தொண்டமான்
சம்பள விடயத்தில் முழுமையான தீர்வு கிடைத்தமைக்கு தொழிலாளர்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை...