செய்திகள்
மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்ய இடைத்தேர்தல் அவசியம் – மல்கம் ரஞ்சித்
மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தலொன்று தேவை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கட்டானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள அவர் தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால்...
வாகரையில் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி
சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி வியாழக்கிழமை (8) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல்...
சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையில்,...
கஜேந்திரகுமார் கைது-அமெரிக்க அமைப்பு கருத்து
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்ய்பபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதியின் உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளும் தமிழர்களின் தலைவிதியை சிங்களவர்கள் அல்ல...
கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும்-அமெரிக்கா
கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துசுதந்திரத்திற்குள்ள உள்ள உரிமையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் என...
இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளுக்காக மேலும் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட...
வட கொரியாவில் தற்கொலைக்கு தடை-தென் கொரியா தகவல்
வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் ஆரம்பித்து 2300ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது கருத்துத்...
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் திறமையான மற்றும் பயனுள்ள திட்ட அமலாக்கத்திற்கான தரவு சேகரிப்பு ஆய்வறிக்கையை அதன் தலைவர் சனத் நிசாந்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி...
புத்தளத்தில் கொத்து கொத்தாக இறக்கும் காகங்கள்
புத்தளம் நகரில் பல காகங்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காகங்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
புத்தளம் நகரின் வானா வீதி ஏரிக்கு...
அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான புதிய புலம்பெயர்வு ஒப்பந்தம்
அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புலம்பெயர்வு ஒப்பந்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் மாணவர்கள், பட்டதாரிகள், ஆய்வாளர்கள், தொழில் செய்வோர் புலம்பெயர்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக...
அரசு நடைமுறைப்படுத்தப் போகும் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்-அன்னலிங்கம் அன்னராசா
ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம், ஊடகவியலாளர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படுவதாகவும், இதன்மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் வெளிவராமல் தடுக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம்...
300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக...
தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வராது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசாங்கம் முன்வராது. எனவே ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்று கொள்ள முடியும் என்பதை...
ஜனாதிபதி ரணிலுடன் IFRC மற்றும் செம்பிறைச் சங்கங்களின் தலைவர்கள் சந்திப்பு
ஜனாதிபதி மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (07) காலை நடைபெற்றது.
கொழும்பில் நடைபெறும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான...
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும்...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது தொடர்பில் பிரித்தானிய எம்.பி. கண்டனம்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளதை பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டித்துள்ளார்.
தமிழர்களிற்கான அனைத்து கட்சிபாராளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன்...
உக்ரைனின் அணை தகர்ப்பு- ஐ.நா கண்டனம்
உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை,...
கொழும்பு-ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த - பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்,...
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும்- ரொபர்ட் கப்ரொத்
இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதvவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு கடந்த...