அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் சுட்டுக்கொலை – போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது
அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடுத்து போராட்டங்கள் நடந்து வருகின்றது.
இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20...
மியான்மரில் நடக்கும் போராட்டங்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொலை
மியான்மரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து கொண்டிருப்பது போலவே, கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அரசியல் கைதிகளுக்கு உதவும்...
கொரோனா பரவல் முடிவுக்கு வர நீண்ட நாட்களாகும் -WHO
கொரோனா பரவல் முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் (Tedros Adhanom Ghebreyesus)தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த டெட்ராஸ் அதானம்,“ பல்வேறு நாடுகளில்...
உத்தரகண்ட் கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்- அதிகரிக்கும் கொரோனா தொற்று
உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக கும்பமேளா கொண்டாட்டத்தை இரத்து செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் அம் மாநில...
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பானுக்கு IAEA அனுமதி
ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பானுக்கு சர்வதேச அணு சக்தி முகமை (IAEA) ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜப்பானில் தற்போது பயன்பாட்டில் இல்லாத புகுஷிமா அணு...
வடகொரியா அதிபராக பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்த கிம்
வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பதவிஏற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அந்நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.
வடகொரியாவில் 2011ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கிம் ஜொங் இல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து...
அகதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்க்கத் தடை! – யேர்மனிய எதிர்க்கட்சி தேர்தல் வாக்குறுதி!
யேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. குடியேற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக எதிர்த்துவருகின்ற ஏஎப்டி (Alternative für Deutschland-AfD) கட்சி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி...
நாம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் சிறப்பாக இல்லை- சீனா
சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார்.
சீனா இதுவரை நான்கு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தடுப்பூசிகள்...
அதிகரிக்கும் கொரோனா – போராட்டத்தை கைவிட விவசாயிகளிடம் வலியுறுத்தல்
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று...
இந்தோனேசியாவில் புயல் – 100க்கும் மேற்பட்டோர் பலி
இந்தோனேசியாவில் செரோஜா புயல் பாதிப்புகளால் 177 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவை செரோஜா என்ற புயல் கடுமையாகத் தாக்கி வருகிறது. கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு...










