Home Blog Page 2807

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக் கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, புலிகள் இயக்கத்தை முற்றி லுமாக அழித்துவிட்டதாக அந்த நாடு கூறிவருகிறது.

இருந்தாலும் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவா ளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டுவருகின்றனர் என்றும் குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் அதற்கான ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அந்த அமைப்புக்கான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை  நீட்டித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் விடுதலை புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள்

நடப்பதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த அமைப்புகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்கிற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

 

படையினரால் பெருவளவிலான ஆயுதங்கள் மீட்பு

வெள்ளாவையில் குடா-ஓயாவில் நிலத்தில் புதைக்கப்பட்ட
நிலையில் துப்பாக்க கள் மற்றும் அவற்றிற்கான தோட்டாக்கள், தொலைநோக்கு குறிகாட்டிகள், ஆயுதங்கள் தொடர்பான நூல்கள் போன்றவை குடா ஓயா பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.image 95dbeba748 படையினரால் பெருவளவிலான ஆயுதங்கள் மீட்பு

தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுமுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.WhatsApp Image 2019 05 14 at 01.53.591 தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் WhatsApp Image 2019 05 14 at 01.53.57 தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

சமூகவலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு 7 வருடசிறை

 

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணம் தவிர்ந்தநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும்விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்குசட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.வடமேல் மாகாணத்தில் மட்டும் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச்சட்டம் தொடரும் என காவற்துறை ஊடக பேச்சாளர், அலுவலகம்இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டத்தை பயன்படுத்திஅமைதியை நிலைநாட்ட நடவடிக்கைஎடுக்குமாறு காவற்துறை தலைமையகம்அனைத்து காவற்துறை அதிகாரிகளுக்கும்பணிப்புரை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாகபொய்யான மற்றும் இனங்களுக்குஇடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்துகண்டறிய காவற்துறைதலைமையகத்தினால் விசேட காவற்துறைபிரிவு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.அதன்மூலம்குற்றவாளியாகஇனங்கானப்படுபவர்களுக்கு எதிராக 3தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கப்படும் என காவற்துறைஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார்.

அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காகவிதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும்அமுலில் உள்ளது.

வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் உதவிக்கரம் நீட்டுகிறது முஸ்லிம் சமூகம்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் தமது தாக்குதல்களை அட்டூழியங்களை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் அரசாங்கமும் பாதுகாப்பு படையினர் கட்டளைகளை அமுல்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக இன்று அவசரகால சட்டம் ,விசேட ஊரடக சட்டம் அனைத்தும் அமுல்படுத்தப் பட்டு இன்று வடமேல் மாகாணத்தில் குருநாகல், ஏனைய பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற நேற்றைய வன்முறைகளில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டம், நாத்தாண்டிய, கொட்டாரமுல்லை பகுதியை சேர்ந்த அமீர் என்பவரும், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவருமே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது ஆனால் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டும் காணாது போன்றும் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர்

இது இலங்கையில் நடக்கின்ற முதல் தடவை சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் தாக்குதல் அல்ல இதற்கு முதல் அளுத்கம, திகன, அம்பாறை, தாக்குதல்கள் கடந்த வருடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது ஒவ்வொரு புனித ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல் நடத்துவது வரலாறாக காணப்படுகின்றது.

ஆகவே தயவு செய்து இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சர்வதேச சமூகத்தில் கண்டிப்பாக கட்டளைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவ படைக்கும் வழங்கப் படுகின்ற போது தான் இவற்றை கட்டுப்படுத்த முடியும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு முஸ்லிம்களுக்கு எதிரான யூலைக் கலவரமாக இது மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

அவசியமாக நீங்கள் செய்ய வேண்டிய உதவிகள்:

வெளிநாட்டில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் அந்தந்த நாட்டு வெளிநாட்டு தூதர் ஆலயங்களுக்கு சென்று இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைமை தொடர்பான தெளிவான ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து உதவி கோரல்

✓•குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழுகின்ற எமது சகோதரர்கள் அந்த முஸ்லீம் நாட்டு தூதுவர்வர்களிடம் சென்று இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக உணவு வைத்திய சேவைகள் தேவைப்படுவதால் நீங்கள் உடனடியாக தலையிட்டு இந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது.

✓•ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்ற எமது சகோதரர்கள் அங்கு காணப்படும் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயம் , மனித உரிமை நிலையம் போன்றவற்றில் முஸ்லிம்கள் மீது அடாத்தாக நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் வன்முறைகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து பாதுகாப்பு உதவிகளையும் கேட்பது.

✓•வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கை முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் நடத்தப்படுகின்ற அநீதிகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கி வெளிநாட்டு ஊடக செய்திகளில் அவற்றை ஆதாரங்களாக வெளிப் படுத்துவது.

✓•வெளி நாட்டில் காணப்படுகின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக உதவிக்கரம் கோரியும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளுதல்.

✓•விஷேடமாக இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் உடனடியாக அவசரமாக வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பை மேற்கொண்டு தற்போது நடக்கிறது சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதன் மூலம் தான் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அரசாங்கம் உடனடியாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இங்கு இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களும், வெறும் பயனில்லாத அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் வெறும் வீரப் பேச்சு களை மட்டும் தான் பேச முடியும் செயல்வடிவில் எதுவும் அமுல் படுத்தப் பட மாட்டாது இவர்களைப் பற்றி பெரும்பான்மை சமூகமும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அதனால்தான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது.

சிறிலங்காவின் பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமாக சீனா சென்றுள்ளதால், பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளை அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பு பதில் அமைச்சுப் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இது நாட்டில் பல பிரச்சினைகளை தோற்றுவித்தது.

இவ்வேளையில் பாதுகாப்பு தொடர்பாக உரிய தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என எதிர்த் தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ வெளிநாடு செல்லும் போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பார்.

ஆனால் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் 21 வரை பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக எவரையும் நியமிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அரிக்கன் லாம்பும்

12.05.2019 அன்று கனடாவில் நடைபெற்ற ஈகுருவி நைற் என்ற நிகழ்வில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஈகுருவி நைற் என நடைபெற்ற நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிகழ்வை நினைவு கூரும் நிகழ்வாக அமைந்தது. இந் நிகழ்வில் காலையில் வன்னி இறுதிப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்களின் இறுதிப் போர்க்கால அனுபவங்கள் அடங்கிய.  Kass Ghayouri என்பவரால் எழுதப்பட்ட ”A note from no fire zone” என்னும் நூல் வெளியிடப்பட்டது.

இந் நூல் வெளியீட்டின் போது, மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர்கள் கைகளில் அரிக்கன் விளக்குகளை (Hurricane Lamp)  சபையோர் ஊடாக எடுத்து வந்தனர். இது மருத்துவர் வரதராஜன் அவர்கள் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவ சேவை வழங்கியதை நினைவு கூர்வதற்காகவேயாகும்.

canada 1 முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அரிக்கன் லாம்பும்2010இல் M V Sun Sea கப்பலில் கனடா வந்து சேர்ந்த 492 ஈழத் தமிழர்களில் சிலரது அனுபவங்கள் ”முள்ளிவாய்க்கால்” என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டது. இந் நூல் மாலையில், வெளியிடப்பட்டது.

போரின் இறுதிக் காலகட்டத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட போது, பெரிய கிடாரங்களில் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அந்தப் பகுதி மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற உதவியது. இந்த நிகழ்வை நினைவு கூர்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்தோருக்கு, அறுசுவை உணவிற்குப் பதிலாக கஞ்சியே வழங்கப்பட்டது.

நாம் பட்ட துயரங்களை மறக்காமல் இருப்பதற்காகவும், இதை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிப்பதற்குமாகவே இது மேற்கொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு கூரும் நிகழ்வில் இந்த ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” ஒரு நினைவு சின்னமாக விளங்கட்டும்.

உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

அன்றய வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (North-East Secretariat on Human Rights – NESoHR ) முக்கிய உறுப்பினரும், தாயகத்தில் பெண்கள் முன்னேற்றச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் தமிழர் உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான கலாநிதி. ந. மாலதி அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி – முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றைய நிலையில் நீதி வழங்கப்படுவது, தமிழர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவது தொடர்பில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் – முன்னேற்றம் போன்ற சில தோற்றப்பாடுகளை ஐநா மனித உரிமை கவுன்சில் காட்டி வருகிறது. நாமும் அத்தோற்றப்பாடுகளை பார்த்து ஏமாந்து வருகிறோம் என்பது தான் உண்மை. இந்த ஐநா மனிதவுரிமை கவுன்சில் செயற்பாடுகள் நீர்ச்சுழல் போன்று அபாயமானது. ஈழத்தமிழர்களை உள்ளிழுத்து அவர்களின் வளங்களையும் சக்தியையும் விரயம் செய்வதற்கான ஏமாற்று வழிதான் இது.

இதுவரை கிடைத்த ஒரேயொரு முன்னேற்றம் ஜெர்மனியில் உள்ள பிரேமன் நகரில் 2013 டிசம்பர் மாதத்தில் அமர்ந்த நிரந்தர மக்கள் தீர்பாயம் வழங்கிய தீர்ப்பு ஒன்று மட்டுமே. ஐநா மனிதவுரிமை கவுன்சில் அமர்வுகளை ஈழத்தமிழர் ஊடகங்கள் பேசும் அளவுக்கு நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்புகளை எமது ஊடகங்கள் பேசுவதில்லை. இது ஏன் என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.201803asia srilanka missing உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

கேள்வி – இவ்வாறானதொரு நிலைக்கான முக்கியமான காரணங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – எமது போராட்டம் அழிக்கப்பட்டதன் பின்னணியையும் தொடர்ந்து எமது உரிமைகள் மறுக்கப்படுவதற்கான பின்னணியையும் புரிந்து கொள்வதற்கு பூகோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம். எமது போராட்டத்தை பற்றிய ஆழமான அறிவு மட்டும் இத்தகைய தெளிவை தர மாட்டாது. உலகளாவிய ரீதியில் மக்களின் போராட்டங்களுக்கு என்ன நடந்தது நடக்கிறது என்ற வரலாற்று அறிவு அவசியம்.

இதை மையநீரோட்ட ஊடகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது. அவை மேற்குலக நன்மை சார்ந்தே பாதி உண்மைகளை மட்டும் செய்திகளாக வெளியிடும்.
இலங்கை தீவின் பூகோள கேந்திர முக்கியத்துவம் பற்றி, அதனுடன் பின்னிப் பிணைந்து நிற்கும் பூகோள அரசியலின் யதார்த்தம் பற்றி ஈழத்தமிழ் அரசியல் வாதிகளோ வேறெந்த தமிழர் தரப்போ மக்களுக்கு பெரிதாக அறிவூட்டவில்லை. இதனால் நாம் இதுபற்றிய புரிதல் போதாமையில் இருக்கிறோம். தமிழரின் ஊடகங்களும் தமிழருக்கு இந்த விழிப்புணர்வை கொடுக்க தவறுகின்றன.

இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினால் வல்லரசுகளுக்கு இத்தீவு மிகவும் தேவையாக உள்ளது. இது இன்று நேற்று தோன்றியதல்ல. காலனிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. சிங்களவர்களை ஆரியர்களாக அன்று பிரித்தானிய ஆய்வாளர்கள் சித்தரித்தது இதற்காகவே. ஆரியவாதம் மேலோங்கி இருந்த காலம் அது. இத்தீவின் தேவை வல்லரசுகளுக்கு இன்றும் இருப்பதால், ஆரிய போதை ஊட்டப்பட்ட சிங்கள மக்களை இன்றும் அது இலகுவாக கையாளுகிறது.

முள்ளிவாய்கால் போர்குற்றங்களை விசாரணை செய்வோம் என்று சிங்களவர்களை பயமுறுத்துவதும் இன்று மேற்குலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். உலகெங்கும் கெட்டவர்களை அரசியலில் அமர்த்தி அவர்களை ”நமது கெட்டவர்களாக” நட்பு கொண்டாடுவது ஐ-அமெரிக்காவின் ஒரு கைவந்த கலை.
அண்மையில் ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கை தீவில் நடந்த தாக்குதல்களின் பின்னணியிலும் இந்த மேற்குலக வல்லரசுகளின் கை இருப்பதை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியர்களை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்காக 1980களில் இலங்கையில் உருவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய தீவிரவாதம்.

கேள்வி – வன்னியில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பேரழிவுகளை ஏன் அனைத்துலக சமூகத்தால் தடுத்து நிறுத்த முடியாமற் போனது ?

பதில் – இன்றைய அனைத்துலக சமூகம் என்று நாம் எதை கருதுகிறோம். மேற்குலகமா? சீனாவா? இந்தியாவா? ஐ-நாடுகளா? இவற்றில் எவையாவது உலகில் நீதி நிலைநாட்டுவதற்காக தன்னலம் இன்றி உழைக்கின்றனவா? இல்லையல்லவா? அப்படியானால் இதை தடுப்பதால் இவற்றில் எவருக்கு இலாபம்? எவருக்கும் அதை தடுப்பதால் இலாபம் இல்லாமல் போனது ஈழத்தமிழரின் துர்ரதிஸ்டம். இருந்தாலும் இத்துணை மோசமாக ஒட்டுமொத்த மக்கள் அழிக்கப்படும் போது உலகம் கைகட்டி பார்த்துக்கொண்டு நிற்கும் என்பதை எம்மவர் எவரும் நம்பியிருக்க மாட்டார்கள். உலகில் நீதி எவ்வாறு கோலோச்சுகிறது என்பதையே இது காட்டுகிறது.

கேள்வி – இறுதிப் போரின் நேரடிச் சாட்சிகளுள் ஒருவர் என்ற வகையிலும், ஒரு மனிதவுரிமைச் செயற்பாட்டாளார் என்ற வகையிலும் அங்கு சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப் மனிதவுரிமை மீறல் செயற்பாடுகளாக, மானுடத்திற்கெதிரான குற்றச் செயலாளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – 1956ம் ஆண்டிலிருந்த நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள், 1983ம் ஆண்டு ஜுலாய் படுகொலைகள், தென் தமிழீழத்தில் தமிழ் கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது, தமிழீழம் எங்கும் தமிழர் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகள் சித்திரவதைகள், தமிழ்பெண்கள் மேல் நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், இன்றும் தொடரும் நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு எல்லாமே மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்தான்.

முள்ளிவாய்க்கால் இவற்றிற்கு சிகரம் வைத்தது. தற்கால உலக நீதி இந்த கொடிய இனவழிப்பை தடுக்கும் என்று நாம் நம்பியது எமது தவறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி போரில் இடம்பெற்ற பல சம்பவங்களை நிசோர் பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபரங்கள் சேகரித்தார்கள். அவற்றை தொடர்ச்சியாக நிசோர் அறிக்கைகளாக வெளியிட்டோம். 2008 டிசம்பர் மாதம் கொத்துக்குண்டுகள் வன்னியில் போடபட்டது பற்றியும் நிசோர் பணியாளர்கள் எடுத்து வந்த தரவுகளை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டோம்.

இக்காலத்தில் நான் புதுக்குடியிருப்பில் இருந்த செந்தளிர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்தேன். ஒரு குண்டு தக்குதலின் போது இச்சிறுவர் இல்லத்திலும் குண்டுகள் விழுந்தன. அருகிலிருந்த வள்ளிபுனம் பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முல்லைதீவு வைத்தியசாலையின் ஒரு கிளை மேல் சனவரி 2009 இல் எறிகணை தாக்குதல் நடந்தது

2009 மார்ச் மாதம் நாம் இடம் பெயர்ந்து முள்ளிவாய்காலுக்கு வந்து விட்டோம். பொதுமக்கள் நெரிசலாக கூடராங்களில் இருந்தோம். எமது கூடாரத்தை சுற்றி எறிகணைகளாலும் விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுகளாலும் நடந்த இறப்புக்கள் பற்றி எமது காதுக்கு செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எமது கூடாரத்துக்கு மிக அருகில் விழுந்த ஒரு குண்டில் குழந்தைகள் உட்பட பலர் பலியானார்கள்.

கேள்வி – இனவழிப்புக்கான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய தமிழர் உரிமைகளை மீள நிலைநிறுத்த தமிழர் தரப்புகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – நாம் ஒரு போராடும் மக்கள். மேற்குலக அரசுகளுடன் கைகோர்த்து போராட்டத்தில் வெற்றி பெறலாம் என்பது மூடத்தனம். நாம் ஒரு போதையூட்டப்பட்ட அரசியல் தெளிவற்ற மக்களாக இருந்தால் மட்டுமே மேற்குலகம் எம்மோடு கைகோர்க்கும். அப்போதுதான் எம்மை சுலபமாக அது கையாளலாம்.
ஈழத்தமிழர் விடுதலைக்காக நாம் இரண்டு வழிகளை ஒரே நேரத்தில் பின்பற்றலாம்.DSC02444 உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

முதலாவது உலகெங்கும் உள்ள பல போராடும் மக்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். நாம் வாழும் நாடுகளில் உள்ள உலக மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களுடனும், சிங்களவர்கள் உட்பட நாம் இணைய வேண்டும்.
இரண்டாவது, தேசியம் மட்டுமே நீதிக்கான வழியல்ல என்பதை உணர்ந்து எமது அமைப்புக்களிலும் எமது சொந்த வாழ்க்கையிலும் நாம் சமூக நீதியை முன்னிறுத்த வேண்டும். சாதி ஒழிப்பு, சமத்துவம், ஆடம்பரமின்மை, கூட்டுணர்வு போன்றவை எம்மை உண்மையான விடுதலைக்கு தயார் செய்யும்.

விடுதலை ஒரு நீண்ட பயணம். ஈழத்தமிழராகிய நாம் அதில் நெடுந்தூரம் வந்து விட்டோம். மிகுதி தூரத்தையும் உறுதியுடன் கடக்கலாம். இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து நிற்கிறோம்.பிரிவுகள் இயற்கையானதே. பிரிவுகளிடையேயும் தேசிய விடுதலையும் சமூகநீதியும் என்ற இரட்டை நோக்கம் பற்றிய தெளிவு இருந்தால் நாம் ஒன்றாக பயணிக்கலாம். இலக்கை அடையலாம்.

இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் – அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

சிங்கள இனத்தவர்களின் வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்திய போதும் தென்னிலங்கையில் வன்முறைகள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரு முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸீல் ஹமீட் (40) மற்றும் கொட்டருமுல்லையைச் சேர்ந்த அமீர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளினுள் புகுந்த சிங்கள வன்முறையாளர்கள் அவர்களை அடித்தும் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.

இதனிடையே குருநாகல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளில் இதுவரை 9 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளதுடன், 30 முஸ்லீம் கிராமங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள அதேசமயம் கொழும்பில் மயான அமைதி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் முஸ்லீம் அமைச்சர்களை பதவி விலகுமாறு முஸ்லீம் சமூகம் கடுமையான அழுத்தங்களை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

kurunagal5 இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் - அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சிறப்பு பேட்டி

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் என சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியதோடு ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்குவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணி கே.வி.தவராஜா அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் நாட்டில் அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- மிக மோசமாக நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட இரண்டு சட்டங்கள் அமுலில் இருக்கின்ற நிலையில் எதற்காக அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது என்ற கேள்வி இல்லாமில்லை. தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் ஒரு சிறு குழுவினரே தொடர்புபட்டுள்ளமையால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமானது. எனினும், பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 41 ஆண்டுகளாக நாட்டில் அமுலில் உள்ளது. ஏறக்குறைய நிரந்தரச்சட்டம் போன்றாகி விட்டது.

அவ்வாறிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவது நிரந்தரமாகவே பயங்கரவாத சூழலையும் அதற்கேற்ற அரசையுந்தான் உருவாக்குவதற்கு வழிசமைப்பதாய் இருக்கும். அவசரகாலச் சட்டத்தினைப் பொறுத்த வரையில் ஒரு மாதம் வரையில்த்தான் அதனை அமுலில் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு தடவை பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமாக இருக்கின்றது. தற்போதைய தாக்குதல்களில் இஸ்லாம் அடிப்படை வாதத்தின் பிரகாரம் பணபலம் உள்ளிட்ட சகல வசதி படைத்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளார்கள். 1983 கலவரம், 30 ஆண்டு விடுதலைப்போராட்டம் ஆகியவற்றுக்கும் தற்போதைய தாக்குதல் களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

அப்படிப் பார்க்கின்றபோது, நாட்டில் அவசரகால சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்ற அடிப்படையில்த்தான் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்திலும் ஏகமனதான அங்கீகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடைபெறுவதுதான் வழமையாக இருக்கின்றது. ஆனால் அதன் பிரயோகத்தினையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

கேள்வி:- பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதனால் பல்கலைகழக மாண வர்களின் கைதுவரை அதன் எதிர்வினையை தமிழர்கள் உணர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்க, அவசரகால சட்டமும் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டங்களால் தற்போது தமிழர் தாயகம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதுதான் பொதுப்படை. ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நான் இதற்கு இரண்டு உதாரணங்களை கூற விளைகின்றேன். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய குற்றச்சாட்டில் ஒரு கார் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கார் வியாபாரம் செய்வதற்காகவே குறித்த நபருடன் தொலைபேசி வாயிலாக கதைத்துள்ளார். இவருக்கு அந்த நபர் சிரியா சென்றாரா? பயிற்சி பெற்றாரா? என்றெல்லாம் தெரியாது.

அப்படியிருக்க கார் வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இவர் மீது அவசரகால ஒழுங்கு விதிகளிலோ, அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. பொதுச்சட்டத்தின் கீழ்த்தான் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏனைய விசாரணை அறி க்கைகளின் பிரகாரம் இவர் தொடர்புபட்டு ள்ளாரா என்பதை கண்டறியும் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று தான் வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் கடமையாற்றிய பத்துபேரில் ஒன்பது பேருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ அல்லது அவசரகால சட்டத்தின் கீழோ கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதியின்றி பிணை அனுமதி வழங்க முடியாது. ஆகவே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்திலும் சுற்றிவளைப்புக்களின் போதும் நடைபெறும் அதிகமான கைதுகள் பொதுச்சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு பயங்கரவாத தடைச்சட்டமோ அவசரகால ஒழுங்கு விதிகளோ பயன்படுத்துவதாக இல்லை.ஆனால், தாயகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், தேநீர்ச் சாலை நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பயங்கர வாதத்திற்கு ஊக்கமளிக்கின்றார்கள் என்று கூறி அவர்களை பயங்கரவாத தடைச்சட் டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். தெற்கில், குண்டுகள் வெடித்து அதனுடன் தொடர்புடைய எத்தனையோ கைதுகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கைதுகள் இடம்பெற்றுள்ளன. என்ன குற்றம் இழைக்கப்பட்டது. அதனுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காவே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த குற்றத்தினை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இன,மத,மொழி வேறுபாடு இல்லை. அப்பிடியிருக்கையில், தெற்கில் ஒருமுறையிலும் வடக்கில் இன்னொரு முறையிலும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதனடிப்படையில் பார்க்கின்றபோது, அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால நிலைமையில் தமிழர்களை இலக்குவைத்து வலிந்து பாய்கின்றமைக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது உதாரணமாகின்றது.

கேள்வி:- பல்கலைக்கழக மாணவர்களின் கைது முறையற்றதொன்று என்ற பாரிய விமர்சனம் காணப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக, பல்கலைக்கழக வாளகத்தினுள் சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இரண்டாவதாக கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு வலு ஊட்டினார்கள் என்று கூறப்படுகின்றது. ஒளிப்படத்தினை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் பயன்படுத்திய கட்டடம் அவர்களுக்கு மட்டும் தனியான
உரித்தினைக் கொண்டிருக்கவில்லை. பதவிகள் மாறுகின்றபோது பதவிகளை ஏற்பவர்கள் அந்தக் கட்டடத்தினை பயன்படுத்துவதே வழமையாக இருகின்றது. அப்படியிருக்கையில், இந்த கைதின் தன்மையிலேயே பாரிய சந்தேகங்களும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதற்குதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் அது சம்பந்தமான விவாதத்தினை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இல்லை.

அவசரகால நிலைமைகளின் போதும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் கைதானவர்கள் அந்த சட்டங்கள் நீக்கப்பட்டாலும் அவர்கள் மீதான வழக்குகள் அந்தச்சட்டங்களின் தன்மைகளின் அடிப்படையில்த்தான் இருக்கும். அதில் மாற்றங்கள் நிகழும் என்று கூறுவது தவறாகும்.

கேள்வி:- புதிய பங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றபோதும் தற்போது உலகத் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்தவதற்கு அவசியமானது என்று காரணம் கூறப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமுலாகின்றபோது, அவசரகால ஒழுங்கு விதிகள் நாட்டில் நிரந்தரச் சட்டமாக மாற்றமடையும் சூழலே ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நீதிக்காக, உறவுகளின் விடுதலைக்காக, சொந்த நிலங்களுக்காக போராடும் தமிழினத்தின் சனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்துமே கட்டுக்குள்ளாகும் பாரிய ஆபத்து உள்ளது. இதனை விடவும் நாட்டின் அன்றாட நிலைமைகள் ஒருவிதமான பதற்றத்துடனே இருக்கும் நிலைமைகளே ஏற்படும். தொழிற்சங்க போராட்டம் முதல் தனி நபரின் கோரிக்கைகளையே முழுமையாக கட்டப்படுத்தும் வல்லமை இந்த சட்டத்திற்கு காணப்படுகின்றது.

மேலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் மரண தண்டனை உள்வாங்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் தனை சட்டமாக்குவதென்றால் சர்வசன வாக்கெடுப்பு அவசியமாகும். இந்த விடயத்தினை உயர்நீதிமன்றம் குறித்த சட்டம் மீதான வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருக்கும். ஆகவே அச்சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது அந்த விடயம் முக்கியமானதாக கருதப்படும். ஆகவே அவசாரகால சட்டமும், பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமுலாக்கப்படுவது தமிழர்களை மேலும் நெருக்கடியான கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சூழலையே உருவாக்கும்.

கேள்வி:- ஒருவர் வெளிநாடு சென்று பயிற்சி பெற்றாலோ பயங்கரவாத தொடர்புகளைப் பேணிவந்தாலோ அவரை கைது செய்வதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் நாட்டில் போதுமானதாக இல்லையென பிரதமர் ரணில் கூறியிருக்கின்றாரே?

பதில்:- உண்மையிலேயே அது சட்டங்கள் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாகும். அவசரகால சட்டம் அமுலில் இல்லாது விட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லாது விட்டாலும், பொதுச்சட்டத்தின் கீழ் உள்ள குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 120, 121 ஆம் பிரிவுகளின் அடிப்படையில் அரசுக்கு எதிராக எத்தகைய நபர்கள் குற்றம் புரிந்தாலும் அவர்கள் மீது விசாரணைகளை, வழக்குகளை தாக்கல் செய்து தண்டனை வழங்க முடியும்.

இதனை விடவும், குண்டுத்தாக்குதல் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே அறியப்பட்டள்ளதாகவும் அதனை தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. குண்டுத்தாக்குதல்கள் சம்பந்தமாக ஒருவர் மீது ஒருவர் விரல் சுட்டும் நிலமையில் பொறுப்புக்கூறுபவர் யார் என்பதும் வினாவாகின்றது.

குறிப்பாக, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய தரப்புக்கள் அறிந்துள் ளதாக கூறப்படுகின்றது. குற்றவியல் தண்டனைக்கோவைச் சட்டத்தின் கீழ் நட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் தகவல்களை அறிந்து கொண்டு மௌனம் காப்பதும் குற்றமாகும்.அதனடிப்படையில் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதே போன்று தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயத்தில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்ற அடிப்படையிலும் அத்துறை சார்ந்தவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கும் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.