சமூகவலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு 7 வருடசிறை

 

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணம் தவிர்ந்தநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும்விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்குசட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.வடமேல் மாகாணத்தில் மட்டும் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச்சட்டம் தொடரும் என காவற்துறை ஊடக பேச்சாளர், அலுவலகம்இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டத்தை பயன்படுத்திஅமைதியை நிலைநாட்ட நடவடிக்கைஎடுக்குமாறு காவற்துறை தலைமையகம்அனைத்து காவற்துறை அதிகாரிகளுக்கும்பணிப்புரை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாகபொய்யான மற்றும் இனங்களுக்குஇடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்துகண்டறிய காவற்துறைதலைமையகத்தினால் விசேட காவற்துறைபிரிவு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.அதன்மூலம்குற்றவாளியாகஇனங்கானப்படுபவர்களுக்கு எதிராக 3தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கப்படும் என காவற்துறைஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார்.

அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காகவிதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும்அமுலில் உள்ளது.