Home Blog

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் ஆசிரியர் தலையங்கம்
  • மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் ரகசியத் திட்டம்!அகிலன்
  • மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
  • போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
  • ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
  • இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
  • மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

Kilinoch 2 கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி  பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி  மேலும் விடயங்களை  அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி –  “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த  உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?

பதில் –  நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.Logo Klein தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?

பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில்,  மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள  அட்டை இதற்கொரு உதாரணமாகும்.

கேள்வி: இந்த நூலை இன்றைய  சூழ்நிலையில்  வெளியிடுவதில்  உள்ள முக்கியத்துவம் என்ன? 

பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.

இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.

சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ  இலங்கை அரசினூடாகவோ  செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.

கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?

பதில் –  நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை  நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன்  தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.a 1 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில்  முக்கியமானது?

பதில் –   2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள்  உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.

உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று  நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை  அரசு,  தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும்  முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.

கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு  கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?

பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை  விளங்கிக் கொள்ளும் போது  தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.a 2 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட  நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?

பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.

கேள்விஇந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள்  எவ்வாறு உள்ளன?

பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை  நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை  எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல்  பற்றிய தமது  நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.WhatsApp Image 2019 05 16 at 20.11.20 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? 

பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத்  தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.

சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளைக்கு திகதி அறிவிப்பு

சொல்லிசை கலைஞர் கணேசன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிணை மனு இன்று (11) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேசன் சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும், சங்கீத்சன் சார்பில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை (12) அல்லது, எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சங்கீத்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் சங்கீத்சன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலையை வலியுறுத்தி, வடக்கு, கிழக்கிலும், சர்வதேச நாடுகளிலும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாணக்கியனின் பிரேரணைக்கு அமைய தேர்தலை நடத்த முடியும் : சட்டமா அதிபர் திணைக்களம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைக்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இல்லை.

உள்ளடக்கத்தில் ஒருசில சொற்பிரயோகங்களை திருத்தம் செய்து தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குறித்த குழு அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடிய போது சட்டமா அதிபர் திணைக்களம் தமது தரப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு ஏதுவான வகையில் மூன்று வழிமுறைகளை முன்வைத்துள்ளது.

வாக்களிப்பின்போது விருப்பு வாக்களித்தல், பெண் பிரதிநிதித்துவத்துக்கு வாக்களித்தல், இளைஞர் பிரதிநிதிதித்துவத்துக்கு வாக்களித்தல் என்ற மூன்று வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முறைமையை புரிந்துக் கொள்வதற்கு வாக்காளர்களுக்கு கடினமானதாக அமையும் என்று குழுவின் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் கூட்டங்களில் மேலும் தெளிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – சிறிநேசன் எம்.பி

குற்றவியல் சட்டம் தொடர்பான விடயங்களில்  சர்வதேச நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அவசியம் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்பி ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. 10 – 15 வருடங்கள் கடந்த நிலையில் சில வழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் மத்தியஸ்த சபை சட்டம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

அனைத்து விடயங்களும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது வழக்குகள் தேங்குவது என்பது இயல்பான விடயம். அதனால் மத்தியஸ்த சபைகளை நிறுவுதல் அவற்றை ஆரோக்கியமானதாக முன்னெடுத்துச் செல்லுதல் அவசியமாகிறது.

அத்துடன் மத்தியஸ்த சபைகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மனிதநேயம் உள்ளவர்களாகவும் நடுநிலை தீர்ப்பாளர்களாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இந்த பின்னனிலேயே மத்திய சபை சட்டத்தை நாம் சாதகமான ஒன்றாகப் பார்க்கின்றோம்.

வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கும் வீண் செலவுகள் வீண் கால விரயங்களை குறைத்துக் கொள்வதற்கும் இந்த மத்தியஸ்த சபை நிறுவுதல் மற்றும் மேம்படுத்தல் என்பது முக்கியமாகின்றது.

சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை சமூகத்தின் பெரியவர்கள் மூலமாக தீர்த்துக் கொள்வது என்பது வரவேற்கத்தக்க விடயமாகும். குற்றவியல் சட்டங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு என்கின்ற விடயம் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரஸ்பர ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது  முக்கியமாகிறது.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு தலைவர்கள் கூட  கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசரீதியான பரஸ்பர ஒத்துழைப்பு இருப்பது சிறந்தது.

மேலும் நீண்ட காலமாக நமது நாட்டை போதைப் பொருட்களின் ராஜ்ஜியமாக அல்லது போதைப் பொருட்களின் களஞ்சியமாக  மாற்றிக் கொண்டிருப்பவர்கள் கைது செய்யப்படாமல் அதற்குப் பணியாற்றும் சிறியவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதால் அந்த ராஜ்யத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போகும்.

அதனால் குற்றவியல் சட்டம் தொடர்பான விடயங்களில்  சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் சமூகத்தை சீரழிக்கின்ற போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்.  பல நாடுகளிலிருந்து பல முக்கிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தலைவர்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம் என்றார்

கடல் வளங்களை பாதுகாத்து தருமாறு அரசாங்கத்திடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள்!

இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகு மூலம் ஊடுருவி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தயாராகும் இந்திய மீனவர்களின் வருகையை தடுப்பதுடன், இலங்கை கடல்  வளங்களை பாதுகாத்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் அவசர வேண்டுகோளினை முன்வைத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளது.குறித்த விடயம் தொடர்பாக தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (11) வியாழக்கிழமை காலை மன்னாரில் நடைபெற்றது.

இதன்போது  வடமாகாண கடற்றொழிலாளர் களின் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜூன் 15ஆம் திகதி எதிர்பார்க்கப்படும் இலங்கை எல்லை கடற்பரப்பில் தமிழ்நாட்டின் இழுவைப் படகுகளால் மீண்டும் தொடங்க படவிருக்கும் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த மற்றும் அவசரமான கவலையை வெளிப்படுத்துகிறோம்.

பல ஆண்டுகளாக, குறிப்பாக சட்டவிரோத அடிமட்ட இழுவை மீன்பிடி முறைகள் சம்பந்தப்பட்ட இத்தகைய அழிவுகரமான ஊடுருவல்கள், இலங்கையின் கடல் சூழல் அமைப்புகளுக்கு கடுமையான மற்றும் சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவை முக்கியமான கடல் உணவு இருப்புகளை குறைத்ததோடு குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடக்கு மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலும் சரி செய்ய முடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்னர், இந்த சட்டவிரோத ஊடுருவல் களை தடுத்து நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் வளங்களை பாதுகாக்க   ஜனாதிபதி கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளும் உடனடி தீர்க்கமான மற்றும் அமல் படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை வட மாகாண மீனவ சமூகம் மரியாதையுடனும் உரியது உறுதியுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அழிவுகரமான மீன்பிடி முறைகள் எளிதில் பாதிப்படைய கூடிய கடலடி தளங்களையும் கடல் வாழ்விடங்களும் சேதப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையும் அடிப்படையாக சீர்குலைக்கின்றன.

மேலும் உலகச் சந்தைகளுக்கு தரமான கடல் உணவு வழங்கும் நாட்டின் திறனையும் நேரடியாக பாதிக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் தற்போதுள்ள அமெரிக்க தீர்வைகள் மற்றும் பிரிவு 301 நடவடிக்கைகளின் கீழ் கூடுதலாக 12.5% தீர்வை விதிக்க ப்படும் அச்சுறுத்தல் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் தீவிரமடைந்து வரும் வர்த்தக தடைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவானது இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்து இலங்கை பொருளாதாரத்திற்கு இன்றியமையாத அந்நிய செலாவணி வருவாய் ஈட்டித் தரும் ஒரு தொழில் மீது மிகப்பெரிய மற்றும் தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

 நமது தேசிய மீன்பிடி வளங்களை பாதுகாப்பது என்பது ஒரு பொருளாதார அவசர தேவை மட்டு மல்ல . இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதிகள் மீதான சர்வதேச நம்பிக்கையை பேணுவதற்கும், முக்கிய உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு முன் நிபந்தனையாகும் என்று இலங்கை வடமாகாண மீனவ சமூகம் வலியுறுத்துகிறது.

இதனை மிக உயர்ந்த தேசிய முன்னுரிமையாக கருதி இலங்கையின் கடல் எல்லைகளை பாதுகாக்க சட்டத்தின் முழு பலத்துடன் செயல்படுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, நிலையான மீன்பிடி மேலாண்மை, பொறுப்பான அறுவடை நடைமுறைகள் மற்றும் இலங்கையின் கடல் சூழலின் நீண்ட கால பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிப்பதில் வடக்கு மீனவராகிய நாம் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எல் நினோ காலநிலை: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையானது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அந்தத் துறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன்கீழ், தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவினை விவசாயம், குடிநீர் மற்றும் வலுசக்தி துறையில் ஏற்படக்கூடிய அழுத்தங்களை முகாமைத்துவம் செய்யும் வகையில் பயன்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த முறை ஏற்படும் எல்-நினோ நிலைமையானது 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கக்கூடும் என இங்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அதற்கேற்ப விசேடமாக நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதன்கீழ், 2026 ஆம் ஆண்டின் சிறுபோக விவசாய நடவடிக்கைகளை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏற்படக்கூடிய சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் சில மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு மின் உற்பத்தி மற்றும் எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை வழங்குதல், குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான தேவையான திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டதைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் முகாமைத்துவம் செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முறையான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

20260611 084203 உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (11) காலை நீர்கொழும்பு பால்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணைகளில் தலையிடாதே,  கட்டுவபிட்டிய தேவாலயத்தை  காட்டிக் கொடுத்தது யார்?, குற்றம்   செய்யாவிட்டால் பயம் ஏன்?, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய  தேவாலயத்தில் இடம்பெற்ற போது  அங்கு கொல்லப்பவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் சிலரும் பிரதேசவாசிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

விசாரணைகள் இடையூறின்றி நடத்தப்பட வேண்டும், அரசியல் தலையீடுகள் கூடாது, விசாரணைகளுக்கு இடையூறு செய்பவர்கள்  கைது செய்யப்பட வேண்டும், அச்சுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.

அமைதியான முறையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் காலை 8:30க்கு ஆரம்பமாகி  9.30க்கு  நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சங்கீதன் கைது: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

IMG 20260611 WA0043 சங்கீதன் கைது: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (11) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பு நடைபெற்றது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சங்கத்தினர், அரசியல் பிரதிநிதிகள்,பெண்கள் அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும்,பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாட்டிலே இல்லாது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இந்த நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்,கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத் உற்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.இதற்கு ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்ட நிலையில் திடீர் என குறித்த பகுதிக்கு வருகை தந்த மன்னார்  காவல்துறை பதாகை ஒன்றில் எழுதப்பட்ட வசனம் ஒன்று குறித்து சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை…

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (10) போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாக பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

இதேவேளை, இந்த மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி, அதிபோசணை (Overnutrition) அதாவது தேவையற்ற முறையில் உடல் எடை அதிகரித்தல் என்ற நிலையும் அதிகமாகக் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஊட்டச்சத்து குறித்த அறிவு மட்டம் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு!

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்றைய தினம்(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி குருநகர் பகுதியில் இருந்து ஒரு படகில் 31 மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்ட தீவுக்கு சென்றிருந்தனர் .

இதன் போது அங்கு நின்ற கடற்படை யினர் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் வாளால் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர்.

இதன்போது 31 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த 31 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க- ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) ஒரு பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமான தொகையால் வேகமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சர்வதேச குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.47% ஆல் (2.30 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 95.40 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 2.89% ஆல் (2.60 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 92.63 டொலலர் வரை உயர்ந்துள்ளது.

எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மற்றும் இதர வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடப்படுவதாக ஈரானின் கூட்டு இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த எல்லையைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், வணிகக் கப்பல்கள் இன்னும் பாதுகாப்பாக அந்த கடல் வழிப்பாதை வழியாக பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், தங்களது போர்க்கப்பல்கள் எதன் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை பெரிய அளவிலான போருக்கான அறிகுறிகளைக் காட்டும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.