Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் – ஆசிரியர் தலையங்கம்
மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் இரகசியத் திட்டம்! – அகிலன்
மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும் லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.
ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19) பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும் இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி மேலும் விடயங்களை அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.
கேள்வி – “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?
பதில் – நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.
இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.
கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?
பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில், மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள அட்டை இதற்கொரு உதாரணமாகும்.
கேள்வி: இந்த நூலை இன்றைய சூழ்நிலையில் வெளியிடுவதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.
இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.
சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ இலங்கை அரசினூடாகவோ செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.
கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?
பதில் – நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன் தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில் முக்கியமானது?
பதில் – 2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.
உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும் முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.
கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?
பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை விளங்கிக் கொள்ளும் போது தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.
கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?
பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.
கேள்வி – இந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?
பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல் பற்றிய தமது நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.
கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத் தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதி;ப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் அவர்களை வலுப்படுத்தும் நீதியான சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை மான் பூங்கா உலகின் கடற்கரையோரத்தில் மிகவும் இயற்கையான சூழலில் அமைந்துள்ள திறந்த நகர மான் பூங்காவாக கொண்டாடப்படுகிறது.
மான்களின் இயற்கையான வாழ்விடத்தை ஆதரிக்கும் வகையில் பூங்காவின் சூழல் பராமரிக்கப்பட்டு, அவை சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கும் பார்வையாளர்களுடன் நிலையான முறையில் தொடர்புகொள்வதற்கும் அனுமதிக்கிறது.
திருகோணமலை மான் பூங்கா தனிச்சிறப்பு வாய்ந்தது, இது திறந்த நகர மான் பூங்காக்களில் அதிக மான்களைக் கொண்டுள்ளது, திருகோணமலை நகரம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட மான்கள் பரவியுள்ளன. இந்த அதிக எண்ணிக்கையிலான மான்கள் ஒரு தனித்துவமான அம்சமாகும், இது உலகெங்கிலும் உள்ள மற்ற ஒத்த பூங்காக்களிலிருந்து தனித்து நிற்கிறது.
பூங்காவில் உணவுக் கடை உள்ளது, பார்வையாளர்களுக்கு பல்வேறு உணவு விருப்பங்களை வழங்குகிறது. இது பூங்காவின் சுற்றுச்சூழல் நட்பு கருப்பொருளுடன் ஒத்துப்போகிறது, கிடைக்கும் உணவு நிலையானது மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுடன் இருப்பதை உறுதி செய்கிறது. நாரா மான் பூங்காவுடன் ஒப்பிட்டு பார்க்கையில், ஜப்பானில் உள்ள நாரா மான் பூங்காவில், மான்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே உணவான குறிப்பிட்ட சத்தான பிஸ்கட்டுகளை அரசு தயாரித்து விற்பனை செய்யும் இடத்தில், திருகோணமலை மான் பூங்காவில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. நாராவில், இந்த பிஸ்கட்கள் விலை அதிகமாகவும் உள்ளது, என்றாலும் மான்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது அரசாங்கம். ஆனால் விலங்குகளுக்கு இயற்கையான உணவுகளை கொடுப்பதே அவற்றின் வாழ்வியலுக்கு சிறந்தது.
திருகோணமலை மான் பூங்கா தனித்து நிற்கிறது ஏனெனில் பார்வையாளர்கள் நுழைவதற்கு கட்டணம் இல்லை. இது பரந்த அளவிலான மக்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது, மேலும் மான்கள் மற்றும் அவற்றின் இயற்கைச் சூழலை எந்த நிதித் தடையும் இல்லாமல் அதிக தொடர்பு மற்றும் பாராட்டுதலை ஊக்குவிக்கிறது.
இந்த ஒவ்வொரு அம்சமும் திருகோணமலை மான் பூங்காவின் தனித்துவமான அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது, இது இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது.
அமெரிக்காவின் பயண ஆலோசனை அறிவுரை அமெரிக்கர்கள் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் மறுபரிசீலனை செய்யும் நிலையை 3-ல் வைத்துள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் நிலை 4-ன் கீழ் வருகிறது. இது இங்கே பயணம் செய்யாதீர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பயணம் செய்யும் அமெரிக்க அரசு ஊழியர்கள் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வதற்கு முன், முன்அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், அவ்வப்போது நடக்கும் வன்முறைச் செயல்கள் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை (16) காலமானார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை இலங்கை நிராகரித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 ஜூலை 2024 அன்று கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு இரு நாடுகளிலும் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல” என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கறுப்பு ஜூலை இடம்பெற்று 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கனடா பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில்,
“இன்று நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து வன்முறைத் தாக்குதல்கள் தொடங்கின. ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகினர்.
பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் தமிழர் விரோதப் படுகொலை, பல தசாப்தங்களாக ஆயுத மோதலாக மாறியதில் பதட்டங்களை அதிகரித்தது. இது இலங்கை வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில், கனடா பாராளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.
உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனடியர்கள் மற்றும் தமிழ் சமூகங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கும் கௌரவிப்பதற்கும் கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும்.
“கறுப்பு ஜூலைக்குப் பின்னர், கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை நிறுவியது.
கனடாவில் இப்போது உலகின் மிகப்பெரிய தமிழ் புலம்பெயர்ந்தோர் உள்ளனர், மேலும் தமிழர்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஒவ்வொரு நாளும் செய்யும் பங்களிப்புகளை நாங்கள் கொண்டாடுகிறோம் – நாங்கள் அவர்களை எப்போதும் பாதுகாப்போம்.
“இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனடியர்களுடன் இணைந்து கொள்கிறேன்.
இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம், மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, அமைதியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப மீண்டும் உறுதியளிப்போம்.” என தெரிவித்திருந்தார்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திரு விழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடை பெறும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் திருவிழாவில் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நதியில் நடைபெறுகிறது. அணிவகுப்பில் தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் செல்கின்றனர்.
எமது அரசாங்கத்தில் நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவருவதுடன் திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தவர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலே நாங்கள் அப்போது நாட்டை பொறுப்பெடுக்க முன்வரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை வங்குராேத்து அடையச் செய்தவர்கள், தற்போது எங்களுக்கு தர்ம போதனை செய்கிறார்கள். எங்களுக்கு போதனை செய்வதற்கு முன்னர் தரமத்தின் பிரகாரம் அவர்கள் முதலாது செயற்பட வேண்டும். பொருளாதார சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த சவால் நிலையை ஏற்படுத்தியவர்கள் யார். கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் பிழையான, முட்டாள்தனமான தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.
நாட்டை வங்குரோத்து அடையச் செய்து நாட்டை சீரழித்த திருடர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் முன்வராதமை நாங்கள் செய்த பாவம் என இவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாவத்தை சுமக்க நாங்கள் விருப்பம். ஆனால் பொருளாதாரத்தை வீழ்ச்சியடை காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இவர்கள் மறந்துள்ளனர். கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், எஸ்.ஆர். ஆட்டிகல, பீ,பீ. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும் நாங்கள் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை, மக்கள் நலனுக்காக மீள் பரிசீலனைக்கு செல்வோம். நாணய நிதியத்துடன் மிகவும் சிநேகபூர்வமான முறையில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் நிச்சியமாக அந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றுத்திட்டம் இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்காகும். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் ஊழல் மோசடி செய்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுத்துக்கொள்வதற்கு மதுபானசாலை அனுமதி பத்திரம் வழங்கும் இவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அதனால் நாங்கள் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான அனைத்து துறைகளையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள பொருளாதார நிலைமாற்றம் சட்டத்தில் முழுமையான இணக்கப்பாடு எமக்கு இல்லை. அதனால் எமது ஆட்சியில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன்கொண்டுவருவோம். நாட்டில் திருடிய அனைத்து பணத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதனை அறிவிக்கவுள்ளதாக நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி தனிப்பட்ட பலரும் முன்வைக்கும் கருத்துக்கள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அது மீண்டும் அடுத்த வருடத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.
B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து 2025 ஆம் ஆண்டு ஆண்டு தை மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் தவணையிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது , குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் பொலிஸ் நிலையம் சென்றவர்களை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.