Home Blog

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் ஆசிரியர் தலையங்கம்
  • மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் ரகசியத் திட்டம்!அகிலன்
  • மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
  • போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
  • ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
  • இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
  • மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

Kilinoch 2 கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி  பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி  மேலும் விடயங்களை  அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி –  “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த  உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?

பதில் –  நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.Logo Klein தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?

பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில்,  மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள  அட்டை இதற்கொரு உதாரணமாகும்.

கேள்வி: இந்த நூலை இன்றைய  சூழ்நிலையில்  வெளியிடுவதில்  உள்ள முக்கியத்துவம் என்ன? 

பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.

இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.

சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ  இலங்கை அரசினூடாகவோ  செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.

கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?

பதில் –  நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை  நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன்  தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.a 1 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில்  முக்கியமானது?

பதில் –   2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள்  உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.

உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று  நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை  அரசு,  தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும்  முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.

கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு  கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?

பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை  விளங்கிக் கொள்ளும் போது  தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.a 2 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட  நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?

பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.

கேள்விஇந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள்  எவ்வாறு உள்ளன?

பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை  நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை  எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல்  பற்றிய தமது  நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.WhatsApp Image 2019 05 16 at 20.11.20 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? 

பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத்  தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்டம்!

பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் இன்று (25) வியாழக்கிழமை மருதானையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தது.

இப்பேரணியில் முன்னிலை சோசலிசக் கட்சி, பெண்கள் இயக்கம், இளைஞர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட கூட்டணி அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி, மொண்டல்பான் (Montalban) பகுதியில் இருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கராகஸ் (Caracas) நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக தலைநகரின் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலா மற்றும் அதனையொட்டிய கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பல வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை வேலையில்லாப் பட்டதாரிகள் முன்னெடுத்தனர்.

அத்துடன் அவர்கள், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாவிடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

கேப்பாபுலவில் போராடும் மக்களை படம் பிடித்து மிரட்டும் இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக புதன்கிழமை  (24) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவத்தினர் கமரா மற்றும் தொலைபேசியை பயன்படுத்தி படம் எடுத்து அச்சுறுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாபுலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். “போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் நாம் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது.

ஆனால் நாம் வீதியில் நின்று போராடி கொண்டிருக்கிறோம். எமது போராட்டத்தை எமது காணியில் நின்று எம்மையே படம் பிடித்து அச்சுறுத்துவது எவ் வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று கூறவேண்டாம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

”ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது,

“ஊழல், படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை எதிர்க்கட்சியினர் எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.

கடந்தகால ஊழல், படுகொலைகளின் பிரதான பங்காளிகளாகவே எதிர்க்கட்சியினர் உள்ளனர். இதுதான் உண்மை.

“லசந்த விக்கிரமதுங்க எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்? ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அரச ஆதரவு உள்ளது.

தாஜூதின் படுகொலை, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியில் அரச அதிகாரம் உள்ளது. இதனை வெளிப்படுத்தக் கூடாதா?

“நாட்டு மக்கள் எவரும் விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குற்றவாளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் தான் திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.எத்தனை கூடாரமிட்டு போராடினாலும் விசாரணைகளை நிறுத்த போவதில்லை.

 “ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்.

பாதாள குழுக்களுடன் 52 முறை தொலைபேசியில் உரையாடிய நபரும், அவர்களிடம் இலஞ்சம் பெற்ற நபரும் எதிர்க்கட்சியில் உள்ளார்கள். இவர்களுக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இவ்வாறானவர்களை இனியேனும் கட்சியில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

“நீதிமன்றத்துக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை நாட்டுக்கு கொண்டுவர சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படும்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் காணப்படுகின்றன. ஆகவே, பயங்கரவாத தடைச் சட்டம் இந்தாண்டுக்குள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்படும்.

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பாதாள குழுக்களை கட்டுப்படுத்த விசேட சட்டம் வெகுவிரைவில் இயற்றப்படும். “நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்கள் குறிப்பிட்ட சில காலத்துக்குள் நிரப்பப்படும்

“கீழ் நிலை நீதிமன்றங்களின் செயற்பாடுகளை பாதிப்புக்குள்ளாக்காத வகையில் தான் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பவேண்டும்.

நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP)  மற்றும் புனர்வாழ்வு பணியகம் (BOR) ஆகியவற்றிற்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்று இன்று (25) வியாழக்கிழமை இராஜகிரியவில் உள்ள காணாமல் போனோர் பற்றிய  அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பகிர்வு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் பலி

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, மொண்டல்பான் பகுதியிலிருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கராகஸில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் தலைநகரிலுள்ள சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெனிசுலா மற்றும் அதற்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன.  மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச் சூழல் சட்ட மூலம் தொடர்பில் மத்திய அதிகார சபையினால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நல்லூர் பிரதேச சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்கள் சார்பாக தமது அபிப்பிராயத்தினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  முன்வைத்தார்.

அவர் மேலும், தற்போது அரசாங்கத்தினால் சுற்றுச் சூழல் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலத்தின் வாயிலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களும் மீள மத்திக்கு எடுக்கப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின்  9 ஆவது அட்டவனையில் நிரலில் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள  உள்ளுராட்சி விடயங்கள் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பாக பறிக்கப்படுகின்றன.

கொண்டு வரப்படும்  சட்டத்தின் பிரகாரம், சுற்றாடல் விடயத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கான அளணியை நிரப்புவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. கழிவகற்றும் வாகனங்களுக்கான அனுமதிகள் கிடப்பில் உள்ளன.

சில நியமத்துணைவிதிகளை நாம் உருவாக்கவதற்கு மாகாண சபையின்றி தடைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் முந்திக்கொண்டு அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிப்பது மட்டுமல்ல  உள்ளுராட்சி   மன்றங்களை செயலிழக்கச் செய்யம் வகையில் நீதிமன்றங்களில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றது. கண்டிக்கத்தக்கது.

இவ்வாறாகவே எமது அதிகாரங்கள் ராஜபக்சாக்களின் காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபை, கடலோரபாதுகாப்பு அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்பட்டது. தற்போது சுற்றாடல் அதிகார சபை ஊடாகப் பறிக்கப்படுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்தார்.

“ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி” – ஐநாவில் இந்திய தூதர் தெரிவிப்பு

“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்.” என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

சர்வதேச பாதுகாப்பில் உள்ள செயல்பாட்டு இடைவெளியைக் குறைத்தல், பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பேணுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் அர்ரியா – ஃபார்முலா கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், “காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி வெளியிட்ட தேவையற்ற கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சமநிலையோடும், பாரபட்சமின்றியும் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ஒருவர் இந்தக் கூட்டத்தை அரசியல் மயமாக்க முயன்றது நம்ப முடியாததாக உள்ளது.

நேரமின்மை காரணமாக நான் ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முற்றிலும் உள்நாட்டு விவகாரம். அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது, இப்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக சீனா உள்ளது. 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் அதன் நிரந்தரமற்ற உறுப்பினராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளின் நிரந்தர பிரதிநிதித்துவ அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இஃப்திகார் அகமது, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இதையடுத்து, அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதிநிதி பர்வதனேனி தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியை இந்தியா வசம் ஒப்படைப்பது தொடர்பானது என்றும் இந்தியா கூறி வருகிறது. மேலும், இதில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா உறுதியாக நிராகரித்து வருகிறது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் பிரதிநிதி பர்வதனேனியின் உரை அமைந்திருந்தது.

மலையக இந்திய வீட்டுத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு!

இந்திய வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4,700 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ்,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பேரிடர் அபாயம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 2026 வீடுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகள் அடையாளம் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, 22 பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரச தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம அல்கடுவ ஆகிய தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தில் தலா ஒரு வீடு கட்டுமானத்திற்காக இந்திய அரசு 28 இலட்சம் ரூபாவையும், இலங்கை அரசு 4 இலட்சம் ரூபாவையும் ஒதுக்கியுள்ளன.

இந்த வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரபாத் சந்திரகீர்த்தி, வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க வேண்டுமெனவும் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை,அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) கே. எஸ். விஜயகீர்த்தி, பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) என். டி. என். புஷ்பகுமார, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) டபிள்யூ. ஏ. கே. எஸ். தமயந்தி, பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.