Home Blog Page 115

வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா?  – விதுரன் 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் எதிர்வரும் 23 – 26ஆம் திகதி வரை உள்நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
இவ்வாறு தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
தொடர்ந்து, கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், தலதா மாளிகைக்கச் செல்லவுள்ளதோடு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் அவர் செம்மணிப்புதைகுழியைப் பார் வையிடுவதோடு சிவில் சமூகப்பிரதிநிதிகளையும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதி
நிதிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
இதேவேளை, உயர்ஸ்தானிகர் போரின் கோரமுகமாயுள்ள முல்லைத்தீவின் முள்ளிவாய்க் காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவு கள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்குக்கு கடித மொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அதுபற்றிய எந்தப் பதிலளிப்புக்களும் இன்னமும் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கை இலங்கை அரசாங்கம் அழைக்க வேண்டியதன் காரணத்தினை நாம் சற்று ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது.
அநுர அரசாங்கத்தின் அழைப்பின் நோக்கம்
தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் பதவி யில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப் பெடுத்த இதுகால வரையிலான ஏழு மாதங்களுக்குள் இரண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளை முழுமையாகச் சந்தித்து விட்டது. இந்த இரண்டு அமர்வுகளில் முதலாவது அமர்வில் ஐ.நா.வுக்கான இலங்கையின் வதி விடப்பிரதிநிதி ஹிமாலி அருணத்திலக்க, உயர்ஸ்தானிகரின் ஆரம்ப உரையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பற்றி வலியுறுத்திய போதும், அதன்பின்னர் வாய்மொழி மூலமான சமர்ப் பணத்தின் போது கூறப்பட்ட விடயங்களையும் முழுமையாக நிராகரித்தார்.
உள்ளக தேசிய பொறிமுறையை அமைத்து அதற்கமைவாகவே அரசாங்கம் செயற்படப் போவதாகவும் அறிவித்தார். மனித உரிமைகள் மீறப்பட்ட நிகழ்வுகள் திட்டமிட்ட பாரபட்சமான குற்றச்சாட்டுக்கள் என்றும் உரைத்தார்.
இரண்டாவது அமர்வில், இலங்கையில் இருந்து சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினரும் மேற்படி கருத்தினையே கூறினார்கள். அத்துடன் தாம் முறைமை மாற்றத்தினை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமக்கு வாக்களித்த மூவின மக்களுக்கும் பார பட்சமின்றி செயற்படுவதாகவும் அறிவித்தார்.
அத்துடன், ஐ.நா.மனித  உரிமைகள் பேரவையின் அறிக்கை, உயர்ஸ்தானிகர் சுட்டிக் காட்டிய மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும் வெளிநாட்டு விசாரணையாளர்கள் உள்ளிட்டவர்களை அனுமதிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந் தார்.
அவ்வாறு கடந்தகால அரசாங்கங்களைப் போன்றே பிரதிபலித்தவர்கள் திடீரென்று எதற்காக உயர்ஸ்தானிகரை அழைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் கடந்தகால அரசாங்கங்களைப் போன்றல்லாது, ‘நீருக்கால் நெருப்பை கொண்டு செல்லும்’ தன்மையைக் கொண்டது. ஆகவே அவ்விதமானதொரு செயற் பாட்டைத் தான் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விடயத்தில் கையாள்வதற்கு முனைகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடருடன் இலங்கையில் நல்லிணக் கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள  தீர்மானம் முடிவுக்கு வரவுள்ளது. அத்தீர்மானத்தினை தொடர்ந்தும் பேணு வதற்காக புதிய தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சியில் பிரித்தானியா களமிறங்கியுள்ளது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் மீண்டும் புதிய தீர்மானம் கொண்டுவருவதை தடுப்பதென்றால் பிரித்தானியாவுடனோ அல்லது கனடாவுடனோ அணுகுமுறை ரீதியாக கையாள முடியாதவொரு விடயம்.
ஆகவே, தான் தாங்கள் வெளிப்படை யானவர்கள், இங்கே அமைதியாக மக்கள் சகோ
தரத்துவத்துடன் இருக்கின்றார்கள் என்ற விம்பத்தை உயர்ஸ்தானிகருக்கு காண்பிப்ப தோடு பொருளாதார வங்குரோத்திலிருந்து மீள் எழவேண்டியதுதான் முதன்மையான விடயம் என்பதையும் வலிந்தூட்டுவதற்
கான முயற்சியாகவே உயர்ஸ்தானிகருக்கான அரசாங்கத்தின் அழைப்பினை நோக்க வேண்டி
யுள்ளது.
மேலெழுந்த போர்க்கொடி
கடந்த காலங்களில் இலங்கைக்கு வலிந்து விஜயங்களை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை அம்மையாராக இருக்கலாம், செயிட் அல்ஹு சைனாக இருக்கலாம் இவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வீதிக்கு இறங்கியவர்கள் தென்னிலங்கை சிங்கள் தேசியவாத சக்திகளே. ஆனால் வொல்கர் ரேக்கின் வருகையை எதிர்ப்பவர்கள் நீதியை எதிர்பார்த்து காத்திருந்து களைத்துப்போன  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே.  அவர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது. அவர்களுக்கு எஞ்சிய நம்பிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் தான் உள்ளது. அந்த எதிர்பார்ப்புக் கூட வோல்கர் டேர்கின் வருகையால் கலைந்துபோய்விடக்கூடாது என்பதே அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாகின்றது.
அதாவது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் எதிர்வரும் செப்டெம்பருடன் நிறைவுக்கு வருகின்றது. அது நீட்டிக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதங்களும் தற்போது வரையில் இல்லை.
அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் சாட்சியங்களை திரட்டல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங் கும் என்பது அவர்களுக்குள்ள முதலாவது அச்ச மாக உள்ளது.
இரண்டாவதாக, உயர்ஸ்தானிகர் இலங்கை வருவதும் அரசாங்கத்தின் கண்துடைப்பு கட்ட மைப்புக்களான வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களுக்கான அலுவலகம், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கான சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கம் காண்பிக்கும் மாயைக்குள் சிக்கினால் நிலைமைகள் மோசமாகும்.
குறிப்பாக, உயர்ஸ்தானிகர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய செப்டெம்பரில்  வெளியிடவுள்ள எழுத்துமூலமான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப் படுத்தும் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
இந்த விடயங்களின் அடிப்படையில் தங்களது கரிசனைகளை வெளியிட்டே உயர்ஸ் தானி கரது இலங்கை விஜயத்தை பிற்போடுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்குவலுச்சேர்க்கும் வகை யில், 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வ தேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட தரப்பினர் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தனர். ஆனால், உயர்ஸ்தானிகரின் பக்கத்திலிருந்து எவ்விதமான பதிலளிப்புகளும் இதுவரையில் கிடைத்திருக்கவில்லை என்பது ஏமாற்றம் தான்.
சொல்வரா? செய்வாரா?
இவ்வாறான நிலையில் இலங்கை வரும் உயர்ஸ்தானிகர் ஆகக்குறைந்தது, இலங்கையில் மனித உரிமைகள்,மனிதாபிமானச் சட்ட மீறல்கள் நிகழ்ந்தன. அதற்கு அரசாங்கம் பொறுப் புக்கூற வேண்டும் என்பதை அரச தரப்புச் சந்திப்புக்களின்போதும், இலங்கையிலும் பகிரங் கமாக வலிறுத்துவாரா?
செம்மணி மனிதப் புதைகுழு உட்பட கொக்குத்தொடுவாய், மன்னார், திருகோணமலை கீழறை சித்திரவதை முகாம், உட்பட அனைத்து இடங்கள் குறித்த பகுப்பாய்வுக்கு அரசுக்கு அழுத்தமளிப்பாரா? சர்வதேச பிரசன்னத்தைக் கோருவாரா?
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற் றிட்டத்தினை வருடமொன்றுக்காவது நீடித்து அதன் அங்கத்தவர்களை இலங்கைக்குள் பிரவேசிக்க அரசைக் கோரும் அதேநேரம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் இதுகாலவரையிலான சேக ரிப்பை வெளிப்படுத்துவாரா?
படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சாட்சியங்கள் உள்ள கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் விசாரணைகளை, வழக்குகளை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை அரசுக்குப் பிரயோகிப்பாரா?
உயிர்வாழும் உரிமை, சுதந்திரமான, சுயா தீனமான நடமாட்டம், கருத்துச் சுதந்திரம், சொந்த நிலங்களில் வாழும் உரிமை, கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு அரசாங்கத்தின் உறுதிமொழி களை பெற்றுக்கொள்வாரா?
ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் இணைந்த வட,கிழக்கில் சுயநிர்ணயத்துடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை இனப் பிரச்சிக்கான முற்றுப்புள்ளியாக வைத்து கோரும் தமிழ் மக்களின் நியாயத்தை எடுத்துரைத்து ஒற்றையாட்சி நீக்கப்பட்டு தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய அரசியலமைப்பொன்றுக்கு வலியுறுத்துவாரா?
இலங்கை விஜயத்தில் நேரில் காணும் சாட்சிகளை யும், ஆதாரங்களையும் தன்னுடைய செப்டெம்பர் அறிக்கையில் உள்ளீர்த்து காத்திரமானதொரு அறிக்கையையும், பரிந்துரைகளையும், முன்வைப் பாரா?
இப்படி, எதிர்பார்ப்புக்கள் நிறைந்த பல கேள்விகள் ஐ.நா.மனித உரிமைகள் உயிர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடத்தில் உள்ளன. இவை அனைத்துமக்கும் அவரது இலங்கை விஜயமும் ஈற்றில் உரைக்கும் சொற்களும், செயற்பாடுகளும் தான் பதிலளிக்கப்போகின்றன.

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில்  முன்னெடுக்கப்பட்டது.
காணிகளை விடுவிக்க கோரி  நேற்று முன் தினமும்(21) மயிலிட்டி சந்தியில்  போராட்டம் நடைபெற்றது.

ஞாயிறு விடுமுறை என்பதால் பாடசாலை சிறுவர்கள் தமது நிலங்களிலே மூன்றாம் தலைமுறையாக உரிமை கேட்டு பெற்றாருடன் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், முதியோர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் பங்கு பற்றி இருந்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன என்று போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்று வரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களின் பலத்த ஆதரவை பெற்று அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை கடந்த பின்னும் பெரிய அளவில் காணி விடுவிப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகளை வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகளை விடுவிக்காமல் வைத்திருக்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.

அணுவாயுதத்தை தயாரிக்கும் திட்டம் ஈரானிடம் இல்லை – ஐ.நா

அணுவாயுதத்தை தயாரிக்கும் எந்த திட்டமும் ஈரானி டம் இல்லை நாம் அதனை அவர் களிடம் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பிரிவின் தலைவர் ரபேல் குறேசி அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கடந்த செவ்வாய்க்கிழமை(17) தெரிவித் துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மற்றும் படை அதிகாரிகள் மீது தாக்கு தலை நடத்தியிருந்தது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை அணுசக்தி மையத்தின் தலைவர் மறுத்துள்ளார். ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பும் கடந்த செவ்வாய்க் கிழமை(17) தெரிவித்திருந்தார்.
ஆனால் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக் கும் நிலையில் இல்லை என்பதை அமெரிக்காவின் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் துல்சி கபாட் தெரிவித்திருந்தார். எனினும் அவரின் கூற்று தொடர்பில் தான் கருத்தில் எடுக்கப்போவதில்லை என ஊடகவியலாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும் குறேசி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துக் களை மறுதலித்துள்ளதுடன் தற்போது ஈரான் அணுவாயுதம் தயாரிக்கும் நிலையில் இல்லை எனவும், ஆனால் சில வருடங்களில் அது சாத்தியமாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வியாழக்கிழமை(19) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் மற்றுமொரு அணு சக்தி நிலையத்தை தாக்கியுள்ளது. எனினும் அங்கு அணுசக்திக்கான பார நீரை உற்பத்தி செய்வதனால் கதிர்வீச்சுக்கள் ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என ரஸ்யா எச்சரித்துள்ளது. ஈரானின் சில அணுசக்தி நிலையங்களில் தமது அதிகாரிகளும் பணியாற்றி வருவதாகவும், எரிசக்தி தேவைக்காக அணு சக்தியை பயன்படுத்தும் உரிமை ஈரானுக்கு உண்டு எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துசெய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துசெய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் மொஹமட் ருஸ்டி என்ற இளைஞர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் தங்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டது.

இதன்படி எந்தவொரு குற்றத்திற்கும் ஆதாரங்கள் இல்லாத போதிலும், ருஸ்டியை 14 நாட்கள் தடுத்து வைத்து, ‘மதரீதியான கடும்போக்காளர்’ எனச் சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுவிக்கப்பட்டவுடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவில் வாராந்தம் முன்னிலையாதல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் அவர் வைக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் ருஸ்டியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சருக்கான கடிதத்தில் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், குற்றம் தொடர்பான வரைவிலக்கணம், விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கான சாத்தியம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த வேண்டிய அவசியமின்மை, பிணைக்கோரிக்கை நிராகரிப்பு மற்றும் பொலிசாரிடம் வழங்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் சாட்சியாக ஏற்கப்படல் ஆகிய ஐந்து விடயங்களும் இந்த சட்டத்தின் ஒடுக்குமுறை போக்குக்கான முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

An aerial image of the Fordo nuclear site

ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

“ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன,” என்று அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மத்திய கிழக்கை பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு

ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் பக்கம்தான் பிரச்சினை தெளிவாக உள்ளது.

எனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வரம்பற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறைச் சுழலாக தற்போதைய நிலைமை மோசமடைவதை நாம் தடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிலையில்,இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 343

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம்
  • வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
  • ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
  • வலுவானதாக மாறுமா ஐ.நாவின் தீர்மானம்-சுதர்சன்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-04 (இறுதிப்பகுதி) விதுரன்
  • இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான போரும் சிறீலங்காவின் இனப் பிரச்சினையும் – தமிழில்: ஜெயந்திரன்
  • தீப்பந்தம்- இசையமைப்பாளர்: சத்தியன்
  • மலையகத்தில் நாட்கூலி முறையில் உள்ள சிக்கலும் மறைமுகமாக இடம்பெறும் இனவழிப்பும் – மருதன் ராம்
  • ஈரான்-இஸ்ரேல் பிளவுக்கு நடுவே இந்தியாவின் ஆபத்தான கயிற்று நடை – சத்யா சிவராமன்
  • நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-1) நேர்காணல் B.A காதர்
  • ஈரானின் பலம் அறியாது களத்தில் குதித்ததா இஸ்ரேல்? வேல்ஸில் இருந்து அருஸ்

 

ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 344

ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும் மற்றைய நாடுகளுடன் பேச்சுக்களை இப்போதிருந்தே தொடங்க வேண்டியுள்ளது எனச் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் மதிப்புக்குரிய அன்றூ பற்றிக் அவர்கள் யூன் 18இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனைச் சந்தித்த பொழுது கூறியுள்ளர். பிரித்தானியத் தூதுவரின் மனித உரிமைகளைப் பேணுவது குறித்த இந்தக் கடமை உணர்வு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அவர்களின் இவ்விடயம் தொடர்பான கடமைப் பொறுப்பையும் உடன் செயப்பட வேண்டிய நேரமுகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த பிரித்தானிய தூதுவர், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் நேரடியாகக் கேட்டறிந்தமையை இலக்கு பாராட்டுகின்றது. தூதுவர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பொழுது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகத்தின் முக்கிய பங்களிப்பை பிரித்தானியா அங்கீகரிக்கிறது எனக் கூறியுள்ளமை சிவில் சமூக அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் சிறிலங்காவுக்கு இம்மாத இறுதி வாரத்தில் மனித உரிமைகளின் நிலை குறித்த மதிப்பீட்டுக்குச் செல்லும் நேரத்தில் மனித உரிமைகள் நிலை குறித்த கடந்த கால நிகழ்கால தரவுகளையும் தகவல்களையும் சான்றாதாரத்துடன் வெளியிட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. மேலும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்காவுக்கான பயணம் கேள்விக்குறியானாலும் கூட பிரித்தானியத் தூதுவருக்குத் தகுந்த சான்றாதாரங்களை சிவில் சமூகத்தினர் விரைவாகக் கையளிப்பது ஏற்புடைய பலன்களை அளிக்கும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இந்நேரத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் பணியாற்றிய தன்னார்வ அமைப்புக்கள் ஆணையகத்திடம் தேவையான அனைத்துலக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அளவுக்குச் சான்றுகள் இப்பொழுதே உள்ளன எனவும் இந்நிலையில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் இதற்கான சான்றாதாரங்களை ஆவணப்படுத்தும் அலுவலகத்தை அமெரிக்காவின் இன்றைய நிலைப்பாடுகளால் நிதியளிப்பு இல்லாது மூடப்பட்டு விடாது தடுப்பதுமே இன்றைய சமகாலத்தின் தேவையாக உள்ளதெனக் கூறியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். இதற்கு இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர்கள் தெளிவாகவும் ஒருங்கிணைந்தும் விரைவாகச் செயற்பட வேண்டும். ஒன்று ஈழத்தமிழர்கள் தாங்கள் இறைமையுள்ள மக்கள் என்பதை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மாறாத உறுதியுடன் வெளிப்படுத்துதல். அடுத்தது ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கான நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டாலே உலகின் குடிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் தமது நிதியுதவிகளை ஒருங்கிணைத்து நிதியின்றி தடைப்படக்கூடிய மனித உரிமைகளை பாதுகாப்பான அமைதியைப் பேணும் செயற்திட்டங்களைத் தொடர்ந்து இயங்க வைக்க முயற்கிக்க வேண்டும். இவை இரண்டிலும் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்களோ அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழரின் மனித உரிமைகள் பாதுகாப்புப் பெறும் என்பதே இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. மேலும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான மனித உரிமைகள் பாதுகாப்புப் பேரவை ஈழத்தமிழர்களால் உலகளாவிய நிலையில் அனைத்து ஈழத்தமிழர் மனித உரிமைகள் மற்றும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதிக்கான செயற்பாட்டாளர்கள் அனைவரையும் இணைத்து நிறுவப்பட்டால் மட்டுமே சரியானதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் உலகின் முன்வைக்க இயலும் என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. இல்லையேல் கடந்த வார வீரகேசரி வார இதழில் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது போல 13வது திருத்தத்தை வலியுறுத்துமாறு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க எந்தச் சட்டநிலைத் தகுதியும் இல்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்குச் சில தமிழ் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளமை போன்ற செயற்பாடுகளே நடைமுறையாக அமையும்.
தமக்கு விருப்பமானவர்களை ஆட்சியில் அமர்த்துவதையே ஆட்சி மாற்றம் என்று சதாம் ஹுசைன் முதல் பிரபாகரன் வரை செயற்பட்ட அதே வல்லாண்மைகளே, இன்று ஈரானில் தான் விரும்பிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றன. இஸ்ரேலுக்கு தனது இருப்பினைப் பாதுகாக்க ஈரான் மேல் தாக்குதல் நடாத்தலாம் என்னும் இதே அமெரிக்க மேற்குலக நாடுகள்தான், வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள இறைமையுடன் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பிலிருந்து பாதுகாக்க சனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் சரி ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்த வல்ல நடைமுறையரசை அமைத்தாலும் சரி அவற்றை ஏற்க மறுத்து, ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்கா மேற்கொள்ளும் இனஅழிப்பை அதன் தேசிய பாதுகாப்புக்கான செயற்பாடு என அங்கீகரித்து நிற்கின்றன. இந்நிலையில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழர் இறைமை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மீளுறுதி செய்யப்படாத வரை மனித உரிமைகள் ஆணையகத்தால் சிறிலங்காவைக் கொண்டு பொறுப்புக்கூறலைச் செய்விக்கவே இயலாது என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் பிரித்தானியத் தூதுவர் வடமாகாண ஆளுநர் வேதநாயகத்தைச் சந்தித்து தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை, 5941 ஏக்கர் தனியார் நிலத்தை மூன்று மாதத்துள் உரிமம் காட்டாதவிடத்து அரசுட மையாக்கும் வர்த்தமானிப் பிரகடனப்பிரச்சினை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு போன்ற சமகால பிரச்சினைகள் குறித்தும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்தல் விமான மற்றும் கப்பல் சேவைகளை வளர்த்தல் என்பன குறித்தும் கேட்டறிந்துள்ளமை ஈழத்தமிழ் மக்கள் குறித்த அவரின் அக்கறையாக உள்ளமைக்கு இலக்கு அவருக்கு நன்றி கூறுகிறது. பணியாட்சியில் உள்ள தமிழ் ஆளுநர்கள் அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்கள் மனச்சாட்சிக்கு அமைய தரவுகளையும் தகவல்களையும் உண்மையாக வழங்குவார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களின் நிர்வாகத்தில் ஈழத்தமிழர்கள் அனைத்துலக ஆதரவுகளை உதவிகளை வழிகாட்டல்களைப் பெறலாம். இது உள்ளூராட்சிக்கும் பொருந்தும். பிரித்தானியத் தூதுவர் யாழ்ப்பாண மாநாகரசபை முதல்வர் விவேகானந்தராசா மதிவதனியைச் சந்தித்து பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல்கள், மற்றும் இளையர்களுக்கான வேலை வாய்ப்பு, மாகாண மற்றும் நகராட்சி நிலையில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் குறித்து கலந்து பேசியுள்ளார். அவரின் இந்த ஆர்வத்தையும் முன்மாதிரியையும் பார்த்தாவது உள்ளூராட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் தனது மண்ணினதும் மக்களினதும் தேவைகள் அதற்கான வர்த்தகத் திட்டங்கள் கல்வி தொழில்நுட்ப இணைப்புக்கள் மூலதன மற்றும் மூலவள மனிதவள நிலைகள் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்களைத் தயாரித்து கைகளில் வைத்திருந்தால் மட்டுமே ஈழத்தமிழர் மேல் அக்கறை காட்டும் அனைத்துலகத்தினர் வழி ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேவைகளை பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும். அதுவும் உலகம் தன்னியங்கிகளதும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளதும் போருக்குள் போய்க் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களே தங்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழியில் செயற்பட வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.

ஆசிரியர்

மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

காணி உரிமை தினத்தை முன்னிட்டு அட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியுடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை (21) காலை முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி உரிமை மற்றும்  வீட்டுரிமைக்கான அமைதி வழிப்போராட்டம் எனும் தொனிப்பொருளில்  அட்டன் பல்பொருள் அங்காடியிலிருந்து பஸ்தரிப்பிடம் வரை பேரணியாக வருகைந்தந்து ஆர்ப்பாட்டம்  முன்னெடுத்தனர்.

மலையக மக்களின் காணி உரிமையை கோரிய கோசங்கள் பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள்,  அரசியல் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.

இன்றைய ஆர்பாட்ட பேரணிக்கு மலையக அரசியல் அமைப்புகள் தமது  ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 343

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம்
  • வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
  • ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
  • வலுவானதாக மாறுமா ஐ.நாவின் தீர்மானம்-சுதர்சன்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-04 (இறுதிப்பகுதி) விதுரன்
  • இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான போரும் சிறீலங்காவின் இனப் பிரச்சினையும் – தமிழில்: ஜெயந்திரன்
  • தீப்பந்தம்- இசையமைப்பாளர்: சத்தியன்
  • மலையகத்தில் நாட்கூலி முறையில் உள்ள சிக்கலும் மறைமுகமாக இடம்பெறும் இனவழிப்பும் – மருதன் ராம்
  • ஈரான்-இஸ்ரேல் பிளவுக்கு நடுவே இந்தியாவின் ஆபத்தான கயிற்று நடை – சத்யா சிவராமன்
  • நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-1) நேர்காணல் B.A காதர்
  • ஈரானின் பலம் அறியாது களத்தில் குதித்ததா இஸ்ரேல்? வேல்ஸில் இருந்து அருஸ்