Home Blog Page 3041

கோத்தபாயாவின் வெற்றி யாருக்கு ஆபத்தானது? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் இந்த பத்து வருடங்களில் எந்த நிலையை அடைந்துள்ளோம் என்ற மீள் ஆய்வுகளை தமிழ் மக்களும், அமைப்புக்களும் பல தளங்களில் மேற்கொண்டிருந்தன.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற ஆயுத மௌனப்பின் பின்னர் எமது போராட்டம் வேறு வடிவத்தில் பலம் கொண்டு நகரும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் இருந்தது.

ஒரு இனத்தின் பேரழிவு என்பது அந்த இனமக்களை ஒரு அணியில் இணைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, உலகத்தின் எதிர்பார்ப்பும் அவ்வாறானதாகவே இருந்தது. கிட்லரின் நடவடிக்கைக்கு பின்னர் யூதர்களின் ஒருங்கிணைவும், ஜேர்மனியின் ரஸ்யா நோக்கிய படை நகர்வின் பின்னர் இரும்புத்திரையாக மாறிய சோவியத்து ஒன்றியத்தின் ஒற்றுமையும் வரலாறு எமக்குத் தந்த பாடங்கள்.

ஆனால் நாம் எதிர்பார்த்தது இடம்பெறவில்லை, எதிரியின் எதிர்பார்ப்பே வெற்றிகரமாக நகர்ந்தது. புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கடந்த 10 ஆண்டுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளின் முடிவு இது. அதாவது தமிழ் இனம் சிதறிப்போயுள்ளது. புலத்திலும், தாயகத்திலும் அது நிகழ்ந்துள்ளது, அதன் விளைவாக நாம் பலவீனமடைந்துள்ளோம்.

எனவே எதிர்வரும் 10 ஆண்டுகளில் நாம் விரைவாக நகரவேண்டிய கட்டாயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு தேவை சிறீலங்காவின் தேசிய அரசியலிலும், அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளிலும் தமிழ் இனம் மேற்கொள்ளும் முடிவுகளும் நகர்வுகளுமே.

இந்த நிலையில் தான் சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் சிறீலங்காவின் அரசியலில் பூகோள அரசியல் நலன்சார் நாடுகளின் தலையீடுகள் அதிகம்.

இந்த பூகோள அரசியல் சக்திகளின் துணையுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையில் சிக்கிய தமிழ் இனம் தற்போது அதே வலையமைப்பின் ஊடாகத் தான் வெளிவரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

LTTE wome கோத்தபாயாவின் வெற்றி யாருக்கு ஆபத்தானது? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்ஏனெனில் போரின் போது மட்டுமல்லாது போரின் பின்னரும் மேற்குலகம் சிறீலங்காவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்டு வருகின்றது.

போர் நிறைவடைந்தவுடன் பொன்சேக்காவை பயன்படுத்தி மேற்குலகம் ஒரு இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்டது ஆனால் அதனை அறிந்த இந்தியா மகிந்தாவை காப்பாற்ற தனது இராணுவத்தை நள்ளிரவில் தயார்படுத்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. சிங்களவர்களின் தலைகள் பல தப்பின.

அதேசயம், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்தா பெரு வெற்றியீட்டியதுடன், நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 18 ஆவது திருத்தச்சட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஏப்பிரலில் கொண்டு வந்து எத்தனை தடவை வேண்டுமானாலும் தான் அரச தலைவராக இருக்கலாம் எனவும், சுதந்திரமாக செயற்பட்ட அரச நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்தார். பொருளாதார ரீதியாக சீனா தனக்கு பக்கபலமாக இருக்கும் என்பது அவரின் அசையாத நம்பிக்கை.

ஆனால் மேற்குலகம் ஓய்ந்துபோகவில்லை 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் என பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. பல தீர்மானங்கள் வந்தன, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும், அதனை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மேற்குலக வல்லுனர்களும் ஊடகவியலாளர்களுமே மேற்கொண்டு வந்தனர்.

உதாரணத்திற்கு சனல் 4 தொலைக்கட்சி, பிற்றர் சார்க்ஸ், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய காலம் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் மேரி கெல்வின் என நாம் இங்கு பலரைக் குறிப்பிடலாம்.

ஊடகப்பிரிவு பணியாளர் இசைப்பிரியா தொடர்பான போர்க்குற்ற ஆதாரங்களையும் சனல் 4 இன் ஆசிய பிரிவு ஊடகவியலாளர் ஜொனார்தன் மில்லர் 2013 ஆம் ஆண்டு வெளிக்கொண்டந்திருந்தார்.

WWW1 கோத்தபாயாவின் வெற்றி யாருக்கு ஆபத்தானது? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

போரின் பின்னரான தேடுதல் மற்றும் துப்பரவு என்ற போர்வையில் சிறீலங்கா படையினர் பரிய அளவிலான படுகொலைகளை மேற்கொண்டதாகவும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் சரணடைந்தவர்களே எனவும் அனைத்துலக போர்க் குற்றவியல் வழக்கறிஞர் யூலியன் நோவல் தெரிவித்திருந்தார்.

மேலும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீதான தடையை கூட மகிந்தாவின் காலத்தில் நீக்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் பொருளாதாரத்தை ஒரு தேக்க நிலையில் தான் வைத்திருந்தது.

2015 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தாவின் கட்சியை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உடைத்தன சிறீசேனா என்ற பகடைக்காய் உருவாக்கப்பட்டார்.

எனினும் தனது சகோதரர்களின் உதவியுடன் இராணுவப்புரட்சி ஒன்றிற்கு மகிந்தா தயாரானார், அதற்காக சிறிலங்கா இராணுவத்தின் கஜபா றெஜிமென்ட தயார்படுத்தப்பட்டது, அலரிமாளிகையை விட்டு வெளியேற மறுத்தார், ஆனாலும் அமெரிக்கா விடவில்லை, அப்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்து ஜோன் ஹெரியிடம் இருந்து வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து மகிந்தா அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரிபால சிறீசேனாவும், ரணிலும் கைகோர்த்தனர், மகிந்தாவின் 18 ஆம் திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதன் மூலம் அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. ஒருவர் இரு தடவைகள் தான் அரச தலைவராக வர முடியும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது.

இதன் முலம் முதலில் சீனாவை வெளியேற்றுவது பின்னர் தாம் பங்குபிரிப்பது என்பதே அமெரிக்க – இந்திய கூட்டு முன்னனியின் அன்றைய திட்டம். ஆனால் மகிந்தா சீனாவுடன் மேற்கொண்ட 99 ஆண்டு கால அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் சீனாவை வெளியேற்ற முடியாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

அதற்கு இணையாக திருமலைத்துறைமுகத்தை அமெரிக்கா ரணிலிடம் கோரியது. திருமலைத்துறைமுகத்தை வைத்து சில நன்மைகளை அடைய சிங்களம் திட்டமிட்டது, எனவே அது சிங்களவர்களின் பிரதேசம் என காண்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை ரணில் அரசு முன்னனெடுத்தது.
எனவே கண்ணியா நீரூற்று நிலைகளை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் இதனை மேப்பம் பிடித்த இந்திய விழித்துக் கொண்டது.

EU delegates 2019 கோத்தபாயாவின் வெற்றி யாருக்கு ஆபத்தானது? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்அமெரிக்காவின் திருமலைத்துறைமுகக் திட்டத்தை தவிர்ப்பதற்கு மீண்டும் மகிந்தாவை பயன்படுத்தியது, அதன் தாக்கமே கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி. ஆனால் திட்டம் தோல்விகண்டது.
ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் தோல்வியை சீர் செய்ய இந்தியாவும், தனது படைத்துறை உடன்படிக்கையில் எற்பட்ட பின்னடைவுகளை சீர்செய்வதற்கு அமெரிக்காவும் தற்போது முயற்சிக்கின்றன. எனவே தான் கோத்தபாயா மீது அவசரமான வழக்குகள் தொடுக்கப்பட்டன, அவர் குடியுரிமையை இழந்துள்ளதாக அறிவித்துள்ள போதும், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை திணைக்களம் அதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் போட்டியில் குதித்துள்ளார்.

கோத்தபாயா வெற்றியீட்டினால் அமெரிக்கா முதலில் நட்புக் கரத்தை நீட்டும், அதற்கான முன்முயற்சியாகவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இராஜதந்திரிகள் மகிந்தாவை சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால்?

போர்க்குற்ற ஆதாரங்களுடன் மேற்குலகம் களம் இறங்கும். கோத்தபாயாவை அடிபணிய வைப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அவர்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, அனைத்துலக எல்டேர்ஸ் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு என பல அமைப்புகள் மேற்குலகம் சார்பானவை. அவர்களை புறம்தள்ள சிறீலங்காவால் முடியாது.

எனவே பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவோ அல்லது போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிக்கவோ அவர்களால் முடியும். சீனா அல்லது ரஸ்யா தமது வீட்டோ அதிகாரம் மூலம் அதனை தடுக்கலாம் எனினும் அது சந்தேகமே ஏனெனில் முன்னாள் யூகோஸ்லாவாக்கிய அதிபரின் விடயத்தில் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.

அதற்கான காரணம் போர்க்குற்றம், ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகள் என வைக்கப்படும் சான்றுகளின் மீது பிரயோகிக்கப்படும் வீட்டோ அதிகாரம் அந்த நாடுகளின் நன்மதிப்பை குறைத்துவிடும்.

சரி அவ்வாறு அவர்கள் பயன்படுத்தி சிறீங்காவைக் காப்பாற்றினலும் அது அமெரிக்காவை மேலும் சீற்றம் கொள்ளவே செய்யும். எனவே கோத்தபாயாவின் வெற்றி என்பது பல திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன் சிங்கள மக்களுக்கு அனுகூலமானதல்ல.

உயிர் காத்த விமானிக்கு உயரிய விருதினை ரஷ்ய சனாதிபதி வழங்கினார்

ரஷ்யாவில், விமானத்தை சோளக்காட்டில் தரையிறக்கி அதிலிருந்த 233 பேரை பத்திரமாக மீட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு அந்நாட்டின் உயரிய விருதினை ரஷ்யாவின்    சனாதிபதி விளாடிமிர் புதின் வழங்கினார்.

அண்மையில், மாஸ்கோ அருகிலுள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்திலிருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் நோக்கி புறப்பட்டு சென்ற  விமானம் மேலெழும்பிய இரு நிமிடத்திலேயே, பறவைகள் கூட்டம் மோதி அதன்  பொறியியல் பகுதி  இரண்டும் அடுத்தடுத்து கோளாறானது.

இதனைத் தொடர்ந்து விமானத்திலிருந்து புகை வெளியேற தொடங்கவே, விமானிடமிர் யுசுபோவ்,  துணை விமானி உதவியுடன் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை சோளக்காட்டில் பத்திரமாக தரையிறக்கினார்.

இதில்  விமானத்தில் பயணித்த சிறுவர்கள் உட்பட 70 பேர் லேசான காயமடை ந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விமானத்திலிருந்த 7 விமான ஊழியர்கள் மற்றும் 226 பயணிகளின் உயிரை காத்த விமானியை பலரும் ரஷ்யாவின் ஹீரோ என பாராட்டினர், இருப்பினும் அவர் அதனை தன்னடக்கத்துடன் தவிர்த்தார்.

இந்நிலையில், பொறியியல் பகுதி  பழுதான விமானத்தை  புதிக்கூர்மையுடன்  செயல்பட்டு சோளாக்காட்டில் தரையிறக்கி விபத்தை தவிர்த்த விமானி டமிர் யுசுபோவ் மற்றும் துணை விமானி ஜார்ஜி முர்சின் ஆகியோருக்கு ‘த ஹூரோ ஆப் ரஷ்யா’என்ற நாட்டின் உயரிய விருதினை சனாதிபதி விளாடிமிர் புதின் வழங்கி பாராட்டினார்.

மேலும் அவர்களுடன் பயணித்த விமான குழுவினர் 5 பேருக்கும் ‘ஆர்டர் ஆப் கரேஜ்’ என்ற விருதினை வழங்கி புதின் கவுரவித்தார்.

 

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

நவதாராளவாதம் சனநாயகத்தை அழிக்கிறது நோம் சொம்ஸ்கி நேர்காணல்

 50 ஆண்டுகளாக நோம் சொம்ஸ்கி, எம்மை குத்தும் கேள்விகளை கேட்டு, அமெரிக்காவின் சோக்கிரடீஸ் ஆக இருந்து வருகிறார். வேதனையை அனுபவிக்கும், இப்போது பேராபத்தில் இருக்கும்உலகமென்னும் கிராமத்தையே இவர் கேள்வி கேட்கிறார்.

பிரச்சனைகளில் மூழ்கிய உலகம், பல ஆண்டுகளாக எம்மை எச்சரித்து வந்த சொம்ஸ்கியின் கதவையே தேடிப்போகிறது. இந்த உலகத்திற்கு சொம்ஸ்கியின் எச்சரிக்கைகளுக்கான தீர்வு தெரியவில்லை. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இவரை உலகிலே இன்று வாழும் புத்திசீவிகளில் மிகவும் முக்கியமானவர்என்று விபரிக்கிறது.

ஆனால் இதே பத்திரிகை இவரின் கருத்துக்களை பிரசுரிப்பதில்லை அவற்றை விவாதிப்பதும் இல்லை. தொலைக்காட்சி நிகழ்வுகளும் இவரை கவனிப்பதில்லை. இருந்தும் தனது 89வது வயதிலும், இவர் உலகெங்கும் புகழ்பெற்றவராக மதிக்கப்படுபவராக உள்ளார்.

 உலகெங்கும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் இவர் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார். ஆனால் முடிவுகள் எடுக்கும் அதிகார மையங்களில் இவர் புறந்தள்ளப்படுகிறார். இவரது இடமான MITஇலோ இவர் எப்போதும் அணுகக் கூடிய பேராசிரியராக எல்லோருடைய மின்னஞ்சல்களுக்கும் பதிலளிப்பவராக எம்மை போன்றாரை எப்போதும் வரவேற்பராக உள்ளார். நாமும் அவரை தேடி போனோம்.

(இருபக்க அரசியலிலும் உள்ள மேல்மட்டத்தவர் எவ்வாறு எமது சமூக, அரசியல், சூழல் வளங்கள் பாதுகாப்பை பலவீனமாக்குகிறார்கள்.)

கேள்வி: எத்தனையோ மக்கள் ஏதோ ஒரு வரலாற்று விளிம்பில் நிற்கிறார்கள். இதற்கு ஒரு சொம்ஸ்கியின் சுருக்கம் இருக்கிறதா?

 சொம்ஸ்கி: இரண்டாம் உலக போருக்கு பின்னரான வரலாற்றை கவனித்தீர்களானால், குறிப்பிடத்தக்க ஒன்றை அவதானிக்கலம். மனிதர்களின் புத்திசாலித்தனம் இரண்டு பேரழிவு தருக்கூடிய வேலைகளை செய்தது. இரண்டுமே இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவுகளாக வந்தவை.

ஒன்று நமக்கெல்லாம் தெரிந்தது தான் – அணுகுண்டு ஆயுதங்கள். இரண்டாம் உலக யுத்தமே அணுகுண்டு போட்டதுடன் முடிவுக்கு வந்தது. இது மேலும் விரிவடைந்து மனித குலத்தின் அழிவுக்கு வழி செய்யும் என்று அப்போதே விஞ்ஞானிகளுக்கு விளங்கி விட்டது.

1947ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகளின் வெளியீடு ஒன்று அழிவுக்கால மணிக்கூடு (Doomsday Clock) ஒன்றை ஆரம்பித்து வைத்தது. அது அழிவுக்கு ஏழு நிமிடங்களில் அப்போது நின்றது. 1953ம் ஆண்டு அழிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு வந்துவிட்டது.nuclear weapon factsheet 2 தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

அந்த வருடம் தான் ஐ-அமெரிக்காவும் சோவியத் குடியரசும் ஹைட்ரஜன் குண்டுகளை பரிசோதித்தன. நான் குறிப்பிட்ட இரண்டாவது பேரழிவு உலக சூழலையே மாற்றுகிறது. இந்த காலத்தை மானிடரால்-அழிவு என்றே நாம் குறிப்பிடலாம். அதாவது மானிடர்கள் சூழலில் ஏற்படுத்தும் பேரழிவு கொண்டு வரும் மாற்றங்கள். ஆக இரண்டு பேரழிவுக்கான வழிகளை எம்முடைய புத்திசாலித்தனத்தால் உருவாக்கியிருக்கிறோம்.

மூன்றாவதாக 1970களில் ஒன்று ஆரம்பித்து இருக்கிறது. மேலே விபரித்த இரண்டு பேரழிவு சாத்தியங்களுக்கும் தடையாக இருக்கக் கூடியவற்றை அது அழித்தது அல்லது பலவீனப்படுத்துகிறது. அது தான் நவதாராளவாதம். அதற்கு முன்னர், 50களிலும் 60களிலும் இடம்பெற்றது ”அரச முதலாளித்துவம்”. அது சமத்துவமான வளர்ச்சியையும், சமூக நீதியையும் கொண்டு வந்தது.

ஓம். சமூக சனநாயகம். நவீன முதலாளித்துவத்தின் பொற்காலம் என்றும் அதை அழைப்பார்கள். 70களில் நவதாராளவாதத்தின் தொடக்கத்துடன் இது மாற்றமடைகிறது. இன்றுவரை அந்த நவதாராளவாதத்தின் கீழேயே நாம் வாழ்கிறோம். அது என்ன என்று கேட்பீர்களானால், சமூக கூட்டொருமை, கொள்கை முடிகளில் வெகுசன பங்கு போன்றவற்றின் அடிப்டைகளை தகர்த்துவதே நவதாரவாதத்தின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. ஆனால் இது அப்பெயரால் அழைக்கப்படுவதில்லை.

இதை “சுதந்திரம்” என்றே அழைக்கிறார்கள். குவிமையப்படுத்தப்பட்ட தனியார் அதிகாரத்திற்கு கீழிருப்பதையே இங்கு ”சுதந்திரம்” என்கிறார்கள். முடிவுகள் எடுப்பதில் வெகுசன பங்கு இருப்பதற்கான கட்டமைப்புக்கள் திட்டமிட்டு பலவீனப்படுத்தப் படுகின்றன. இதையே ஒரு முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரட் தச்சர் “சமூகம் என்ற ஒன்றில்லை. தனி நபர்கள் மட்டும் தான்” என்று விபரித்தார்.

அதாவது இரண்டாம் உலக போருக்கு பின்னர், நாம் இரண்டு பேரழிவு வழிகளை உருவாக்கியிருக்கிறோம். நவதாராளவாதத்தை தொடர்ந்து இவற்றை கையாளும் வழிகளையும் அழித்துக் கொண்டு வருகிறோம்.

மார்கரட் தச்சர் தன்னையறியமாலேயே கார்ல் மார்க்ஸ் சொன்னதை சொல்லியிருக்கிறார். கார்ல் மார்க்ஸ் பிரான்ஸ் நாட்டின் அடக்குமுறையை பற்றி, “அடக்குமுறை சமூகத்தை சாக்கிலுள்ள கிழங்குகள் போலாக்குகிறது. அங்கு தனி நபர்கள் மட்டும் தான். இவர்கள் கூட்டாக இயங்க முடியாது” என்று தாக்கினார்.

அது மார்க்சின் கண்டனம். இதையே மார்கரட் தச்சர் சிறப்பென்கிறார். அதுதான் நவதாரளவாதம். மக்கள் ஒன்றாக பங்குபற்ற கூடிய ஆட்சிமுறைகளை பலவீனப்படுத்துவது. தொழிற்சங்கங்களையும், ஏனைய மக்கள் கூட்டுக்களையும் பலவீனப்படுத்தி அவர்களை சாக்கு கிழங்குகளாக்குவது. அதே நேரம் சுதந்திரம் என்ற சொல்லிணியின் பின்னால் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தனியாருக்கு விட்டுவிடுவது.

இதனால் என்ன நடக்கும். பேரழிவுகளுக்கு தடையாக இருக்ககூடிய, மக்கள் கூட்டாக இயங்குதல் வேண்டுமென்றே அழிக்கப்படுகிறது.

70களிலிருந்து இன்னுமொரு பெரும் மாற்றம் நடந்தது. நிதிசார் அமைப்புக்கள் (Financial Institutions) பெருமளவு அதிகரித்தன. 2007இல் கார்பரேசன்களின் ஒட்டுமொத்த இலாபத்தில் 40 வீதம் இந்த நிதிசார் அமைப்புக்களுக்கே சென்றன. ஆனால் இவ்வமைப்புக்கள் உண்மையான பொருளாதாரத்துடன் இணைந்தவை இல்லை.

கேள்வி: அப்டியானால். இந்த சமூக முறைகள் நன்மையானவை அல்ல என்று மக்கள் உணரும் தறுவாயில், இதை மாற்றுவதற்கான செயற்பாடுகளை எடுக்கும் வல்லமை மானிட இனத்திற்கு இருக்கிறதா?

சொம்ஸ்கி: மானுட இனத்தின் விதியே அப்படி ஒரு செயற்பாட்டில் தான் தங்கியிருக்கிறது. நாம் ஒரு பெரும் புயலை உருவாக்கி விட்டோம். தலைப்பு செய்திகளாக வர வேண்டியவை இவை. இரண்டாம் உலக போருக்கு பின்னர் அழிவுக்கான இரண்டு வழிகளை உருவாக்கியிருக்கிறோம். நவதாராளவாதம் ஆரம்பித்ததில் இருந்து இவற்றை கையாளுவதற்கான வழிகளையும் அடைத்து விட்டோம். இவைதான் எமது குரல்வளையை அழுத்துகின்றன. இதுவே பிரச்சனை. இதற்கு தீர்வு காணாவிட்டால் நாம் அழிவது நிச்சயம்.

60களில் வளர்ந்த மக்கள் போராட்டங்கள் பற்றி, 70களில் மேல்மட்டத்தவர் மத்தியில் ஒரு கவலை வளர்ந்தது. “பிரச்சனைகளின் காலம்” என்று அவர்கள் இதை விபரித்தார்கள். மக்கள் போராட்டங்கள் நாட்டை நல்வழியில் இட்டு சென்றன. அது இவர்களுக்கு அபாயமாக தெரிந்தது.activism main தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

அன்று வரை செயற்பாடுகள் அற்று இருந்த மக்கள் பிரிவுகள் தங்கள் கரிசனைகளுக்கு தீர்வு தேடி ஏதோ ஒரு வழியில் அரசியலில் நுழைந்தார்கள். இதை ”விசேட கரிசனைகள்” என்றார்கள் மேல்மட்டத்தவர். அதாவது இளையோர், வயோதிபர், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் ஆகிய சிறுபான்மையினர். உண்மையில் மக்கள். மக்களின் கரிசனைகள் “விசேட கரிசனைகள்” ஆக்கப்பட்டு, மக்கள் செயற்பாடுகள் இல்லாமல் அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

இதற்கு சனநாயகத்தை மட்டுப்படுத்த வேண்டும். எங்கும் உள்ள சர்வதேச தாராளவாதிகளும் தொழில் மயமாக்கப்பட்ட மூன்று நாடுகளும் இதை ஆமோதித்தார்கள். அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் “இளையோருக்கு போதிக்கும் நிறுவனங்கள்” – பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், வழிபாட்டு மையங்கள் போன்றவை – தங்கள் பொறுப்பை சரியாக செய்யவில்லை. அதாவது இளையோரை அமைதியாக செயற்பாடுகள் அற்று இருப்பதற்கான போதனைகளை இந்த நிறுவனங்கள் செய்யவில்லை.

இதனுடன் தொடர்புடைய ஒரு விடயம் உண்டு. 60களின் மக்கள் செயற்பாடுகளாலும் தொழிலாளர் போராட்டங்களாலும் இலாபம் குறைந்து கொண்டு வந்தது. இது ஏற்க முடியாதது. குறைந்து வரும் இலாபத்தை மீண்டும் அதிகரிக்க செய்ய வேண்டும். மக்களின் சனநாய செயற்பாடுகளை பலமிழக்க செய்ய வேண்டும். இதை எப்படி செய்வது. நவதாராளவாதம் இதை செய்கிறது.

மொழியாக்கியவரின் குறிப்பு உலகெங்கும் இடம்பெறும் சூழல், மக்கள் இயக்கங்கள் போன்றவை அழிக்கப்படுவதை சொம்ஸ்கியின் விளக்கத்துடன் பொருத்தி பார்த்தால் இவ்வழிவுகளின் பின்னாலுள்ள சக்திகளை பற்றிய புரிதல் ஏற்படும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை புரிந்து கொள்வதற்கும் இந்த நவதாராளவாத விளக்கம் அவசியம்.

 

மூலம் கிறிஸ்தோபர் லின்டன்

https://www.thenation.com/article/noam-chomsky-neoliberalism-destroying-democracy/

 

 

கோத்தாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

பிரஜைகள் அமைப்பின் இணை அமைப்பாளர்களான காமினி வியங்கொட, பேராசிரியர் சந்திர குப்த தேநுவர ஆகியோரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.  கடந்த 15 ந் திகதி பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடு நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வெளிநாட்டுக் கடவுச் சீட்டுகள் இருப்பதாகவும், 2004ஆம் ஆண்டில் அவர் இலங்கைப் பிரஜையாக இல்லாத நிலையில் 2005ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் இந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

இம் முறைப்பாட்டில் 2003 ஜனவரி மாதம் 31ஆம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை பிரஜாவுரிமையிலிருந்து விலகி ஐக்கிய அமெரிக்காவின் பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ ON Arrival எனும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் விஸா மூலம் இலங்கை வந்துள்ளார்.

இதன் போது அவர் நீதிமன்றத்துக்கு வழங்கிய சத்தியக் கடிதத்தில் தனது சகோதரரின் தேர்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக இங்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் நிலையில் இலங்கையின் தேசிய அடையாள அட்டையொன்றை ஒரே நாள் சேவையின் மூலம் பெற்றுக் கொண்டதோடு மற்றொரு கடவுச் சீட்டையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனிடையே 2004ஆம் ஆண்டில் 2005ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இது எப்படி நடந்தது? என்பது குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டு மென இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரட்ண, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து மனு தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா? என்பதை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் கோட்டா இதற்கு பதில் சொல்ல வேண்டும் – சிவமோகன்

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கட்சியினர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளனர்.

அங்கு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாலகுமாரன், யோகி மற்றும் கவிஞர் ஒருவரும் சரணடைந்திருக்கின்றார்கள். வெளிப்படையாக அவர்களின் குடும்பங்கள் முன்னிலையிலேயே அவர்கள் சரணடைந்துள்ளார்கள்.

நூற்றுக்கணக்கானோர் ஒரு கிறிஸ்தவ மதகுருவுடன் சேர்ந்து சரணடைந்தார்கள். எனவே அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டு கோத்தாபய வாக்குக் கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றார்.

‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ டிரம்புக்கு முகத்தில் அறைந்த டென்மார்க்

உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்று அதை நிர்வாகம் செய்யும் டென்மார்க் பதில் கூறியுள்ளது.

தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லந்துப் பகுதியில் பனிப்படலங்கள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் உள்ளதால் சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.

கிரீன்லாந்தில் மூன்று அனைத்துலக விமான நிலையங்களைக் கட்ட சீனா முன்வந்தது. ஆனால் அதை டென்மார்க் நிராகரித்தது.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவது பற்றிப் பேசியதையடுத்து உலக நாடுகளின் கவனம் அதன் மேல் மீண்டும் திரும்பியுள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் யோசனையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்ற போதும் ஆர்க்டிக் வட்டாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரது நிர்வாகம் உணர்ந்திருப்பதை அது காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.

வடக்கும் – கிழக்கும் இந்தியா வசம் சென்றுள்ளதா?

சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசை தமது கட்டுப்பாட்என் கீழ் கொண்டுவருவதில் பிராந்திய வல்லரசுகளும், மேற்குலகமும் கடுமையான போட்டிகளில் இறங்கியிருந்தன. ஆனால் தற்போது இந்த போட்டியில் சிறீலங்காவின் பிரதேசங்கள் பகுதி பகுதியாக பறிபோயுள்ளதாக சிறீலங்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டையை சீனா தன்வசப்படுத்தியுள்ள நிலையில் திருமலைத் துறைமுகத்திற்காக அமெரிக்கா போராடி வருகின்றது. ஆனால் சத்தமின்றி வடக்கையும், கிழக்கையும் இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது.

போர் நிறைவடைந்ததும், யாழ்ப்பாணத்தில் தனது தூதரகத்தைத் திறந்த இந்தியா, அதன் பின்னர் இந்தியாவில் இருந்து சிவசேனை என்ற இந்துக் கட்சியை யாழில் களமிறக்கியிருந்தது. தற்போது இந்து மாநாடு என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து சாமிகளை அழைத்து வந்து மாநாடு ஒன்றை நடத்திவருகின்றது.

அதேசமயம், பலாலி மற்றும் மட்டக்களப்பு வானூர்தி நிலையங்களையும் அபிவிருத்தி என்ற போர்வையில் இந்தியா கையகப்படுத்தியுள்ளது. அதாவது தென்னிலங்கை சிங்கள மக்களின் அறிவுக்கு எட்டாது மெல்ல மெல்ல இந்தியாவின் ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றது, அதனை சிறீலங்கா அரசு அனுமதித்துள்ளது என்பதை விட கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் அவர்களை அனுமதிக்க வைத்துள்ளது என்றே கூறலாம் என அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெண் வேட்பாளர்கள் இல்லாத சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை இலங்கையை இரண்டு பெண்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றது அவரின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய இருவருமே இலங்கையை ஆட்சி செய்த பெண்களாவர்.

1960 1965, 1970 – 1977 மற்றும் 1994 – 2000 வரையான காலப்பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையில் பிரதமராக பதவி வகித்தார்.

இதே போன்று இவரின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தார்.

1994ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலப்பகுதி வரை இரண்டு முறை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

இதன்படி 1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இரண்டு பெண்களே நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்களைத் தவிர இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் எந்தவொரு பெண்ணும் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதி பதவியையோ வகிக்கவில்லை.

இந்த ஆண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பெண் வேட்பாளர்கள் எவருமே போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை.

chadrika mahi பெண் வேட்பாளர்கள் இல்லாத சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல்ஜனாதிபதிக்குரிய வேட்பாளர்கள் அறிவிப்பின் போது, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபயா ராஜபக்ஷவின் பெயர் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே போல் ஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. தமது கட்சியின் வேட்பாளர் ஒரு ஆண் வேட்பாளர் என்று தன்னால் கூறமுடியும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித         ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை தீர்மானிக்கவில்லை என அறிய முடிகின்றது.

தமிழ்க் கட்சிகள் உட்பட ஏனைய சிறிய கட்சிகள் கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகள்  குறிப்பிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

எனவே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் பெண் வேட்பாளர்கள் களமிறங்குவது சாத்தியமில்லை போல் தெரிகின்றது. தற்போது இலங்கை பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 13 பேரே பெண் உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கை மக்கள் தொகையில் 52 வீதம் பெண்கள் இருந்த போதும் பாராளுமன்றத்தில் 5.8 வீதமே பெண் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

1982ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் பிரதமர் ஆட்சியே காணப்பட்டது. அதற்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அமுலுக்கு வந்தது. இருந்தும் 1999ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.

சட்டங்கள் நிறைவேற்றப்படும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்க தயக்கம் தெரிவிக்கின்றமையே பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வராமைக்கான காரணமாகும் என கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அதற்கு முன்னர் பெண்களுக்கான அதிகார பங்கீடு குறித்து அதிகளவில் பேசப்பட்டாலும் 25வீத இலக்கு கிட்டத்தட்ட 23வீதத்தை அண்மித்த ஒரு உள்ளுராட்சி சபைத் தேர்தலாக அமைந்திருந்தது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 25 வீதம் என்ற இலக்கு இனிவரும் காலங்களில் 50 வீதம் என்ற இடத்திற்கு வரவேண்டும். ஜனாதிபதி தேர்தலிலும் பெண்கள் போட்டியிட வேண்டும் என்று உமா சந்திரா பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெண்கள்

தேர்தல்               வேட்பாளர்                  பெண் வேட்பாளர்கள்

எண்ணிக்கை

1982                         5                           பெண்கள் இல்லை

1988                          3                             சிறிமாவோ பண்டாரநாயக்க

1994                          6                             சந்திரிகா, சிறிமா திஸநாயக்க

1999                           13                           சந்திரிகா பண்டாரநாயக்க

2005                           13                           பெண்கள் இல்லை

2010                           22                           பெண்கள் இல்லை

2015                           19                           பெண்கள் இல்லை

 

 

தேர்தல் திருவிழா- யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய விரும்பும் ரணில்

அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மயிலிட்டி துறைமுகத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டார். இந் நிகழ்வில் அவர் உரையாற்றும் போது,

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு காணிகள் கையகப்படுத்தப்படும் என தெரிவித்தார். பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்றும், வடக்கு கிழக்கில் சுற்றுலாத்துறையை வளர்க்கும் நோக்கில் இரண்டு விமான நிலையங்களையும் அபிவிருத்தி  செய்யவுள்ளதாகவும், பலாலி ஒரு பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வடக்கில் ஒரு படகுச் சேவையை அறிமுகப்படுத்தவும் தான் விரும்புவதாகவும், அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குரிய வேறு பல திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 14 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், வடக்கு மாணவர்களுக்கு ரப் கணனிகள் வழங்கப்படும் என்றும், வடக்கின் கல்வி நிலையை உயர்த்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

வடக்கில் மேலும் 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும். யுத்தம் முடிவடைந்ததிலிருந்து 2009 முதல் இன்று வரை மொத்தம் 80,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தனது குழந்தைப் பருவத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்கியது. ஆனால் போரின் காரணமாக அது அந்த அந்தஸ்தை இழந்து விட்டது. மீண்டும் அதை மீட்டெடுப்பேன் என உறுதியளிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

இதே சமயம் பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்த காணிகளை கையகப்படுத்த இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இந்தியாவை அனுசரித்துப் போவதன் மூலம் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களைத் தடுக்கலாம் என்பதால் இந்தியாவுக்கு யாழ் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமானநிலையங்களை கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளார் ரணில்.

அதேசமயம் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வடபகுதி பாடசாலைச் சிறுவர்களுக்கு மடிக் கணணிகளை வழங்குவதற்கும் ரணில் திட்டமிட்டுள்ளார்.

தற்போது ஜே.வி.பி தனது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மைச் சமூகம் மீது தமது அக்கறைகளைக் காண்பிக்கத் தலைப்பட்டுள்ளன.

 

அதி சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியது ரஷ்யா

ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியிருப்பதாகவும், எனினும் இதன் சோதனை தோல்வி அடைந்து விட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த மையத்திலிருந்து பெருமளவில் புகையும் நெருப்பும் வந்தது.

இந்த சம்பவம் பற்றி கருத்துத் தெரிவித்த ரஷ்யாவின் அணு சக்தி மையம், அணு மின்னணு நிலையத்தில் செய்யப்பட்ட சோதனையொன்று தவறாக முடிந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. சிறிய அளவில் அருகில் உள்ள ஊர்களில் அணுக் கதிர் வீச்சு இருக்கும். மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ரஷ்யாவில் வெடித்தது அணுஆயுதம் தான். கண்டிப்பாக அணுஉலை இல்லை. அவர்கள் அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய ஏவுகணையை சோதனை செய்துள்ளனர். அது வெடித்து கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளது. அவர்களின் சோதனை தோல்வியடைந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் ரஷ்யாவோ  நாங்கள் ஏவுகணை ஒன்றை சோதனை செய்யும் போது வெடித்து விட்டது. ஆனால் அது அணு ஆயுதம் கிடையாது. இதனால் மக்களுக்கு அணுக்கதிர் பிரச்சினை கண்டிப்பாக இருக்காது என்றும் கூறியது.

இந்த நிலையில் அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய இந்த ஏவுகணையின் பெயர் ஸ்கைஃபால் (Skyfall) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon) என்று அமெரிக்கா கூறுகின்றது.

இந்த ஏவுகணை உலகின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தாக்கும். வானத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தாக்கும். இதன் திறனுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. இந்த ஏவுகணை அணுசக்தி மூலம் இயங்குவதால் இதை அணு ஆயுத தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த படியாக இந்த ஏவுகணை ஏவப்பட்டு விட்டாலே அது கதிர் வீச்சை வெளியிட்டுக் கொண்டே செல்லும் அதாவது ஒரு நாட்டை தாக்காமல் அந்த நாட்டை கடந்து சென்றாலே அங்கு சிறிய அளவு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆகவே இது போகும் வழியில் எல்லாம் கதிர் வீச்சு பாதிப்பு இருக்கும். அதனால் தான் இந்த ஏவுகணையை உலக அழிவிற்கான ஆயுதம் என்று கூறுகின்றார்கள்.

அமெரிக்காவின் தரப்பில் இதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா அப்படி எந்த விதமான ஆதாரத்தையும் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அதே சமயம் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை இன்னும் ரஷ்யா நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.