Home Blog Page 24

முப்படைகளின் பலமா? வல்லரசுகளின் நலனா? : விதுரன்

இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்து ள்ள இலங்கைத்தீவு, வரலாற்று ரீதியாகவே சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாயப் பாதைகளின் சந்திப்புப் புள்ளி யாக விளங்கி வருகிறது.
அண்மையக் காலங்களில் இலங்கையின் முப் படைகளுக்கும், பொலிஸாருக்கும் சர்வதேச நாடுகளிட மிருந்து தாராளமாக வந்திறங்கும் இராணுவத் தளவாடங்கள், வான்கலன்கள் மற்றும் வாகனக் கொடைகள் வெறும் ‘நட்புறவு’ சார்ந்த உதவிகள் அல்ல.
மாறாக, அவை தீவிரமடைந்து வரும் பூகோள அரசியல் போட்டியின் நேரடிப் பிரதிபலிப்பாகும். அவற்றுக் குப் பின்னால் தூரநோக்குடைய நிகழ்ச்சி நிரல்களும் இருக் கின்றன என்பதை மறுப்பதிற்கில்லை.
அமெரிக்கா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் தத்தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுவதை இக்கொடைகள் அப்பட்டமாக உணர்த்துகின்றன.
இலங்கைப் படைகளின் பலத்தை அதிகரிப்பதை விட, தமது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதே இந்நாடுகளின் முதன்மை இலக்காகும். இலங்கைக்கு அண்மையில் கிடைத்த இராணுவ உதவிகளை உற்று நோக்கினால், ஒவ்வொரு நாட்டின் பின்னணியிலும் உள்ள மூலோபாய கணக்குகள் தெளி வாகப் புலப்படும்.
அவுஸ்திரேலியா இலங்கை கடலோரக் காவல் படைக்கு 12 அதிநவீன கண்காணிப்பு ட்ரோன் களை வழங்கியுள்ளது. மிரிஸ்ஸ கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, அவுஸ்திரேலி யாவின் நீண்டகால பாதுகாப்பு கவலையோடு தொடர்பு டையது.
இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர், இலங்கை யிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற சட்டவிரோத அகதிகள் படகுகள் அந்நாட்டுக்கு பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின.
அவுஸ்திரேலியா கண்காணிக்க வேண்டிய 5500 கிலோமீற்றர் பரந்து விரிந்த கடற்பரப்பில் தனது சொந் தப் போர்க்கப்பல்களை நிறுத்துவதை விட, இலங்கை கடற்படையினதும் கடலோரக் காவல்படையினதும் கண் காணிப்புத் திறனை மேம்படுத்துவது அதற்கு செலவு குறைந்த உத்தியாகும்.
குறைந்த மனிதவளம் மற்றும் எரிபொருள் செல வில் அதிக பரப்பளவைக் கண்காணிக்க உதவும் இந்த ட்ரோன்கள், அவுஸ்திரேலியாவின் எல்லையை இலங்கைக் கடற்பரப்பிலேயே பாதுகாக்கும் ஒரு ‘முன்னரங்கு வேலி’ அமைப்பாகச் தொழிற்படுகின்றன.
மறுபுறம், அமெரிக்க கடலோரக் காவற்படையால் வழங்கப்பட்ட ‘டெசிசிவ்’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், ‘என்எல்என்எஸ் சமுத்ரவிஜய’ (பி-628) என்ற பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து 78 நாட்கள் பயணித்து, 14,775 கடல் மைல்களைக் கடந்து இலங்கை கடற்படை வரலாற்றில் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு இக்கப்பல் வந்து சேர்ந்துள்ளது.  இதற்கு இணையாக, அமெரிக்க கடற்படையில் பயன்படுத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட பத்து ‘ரி.எச்-57 சீ ரேஞ்சர்’ பலநோக்கு ஹெலிகொப்டர்களும் விமானப் படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
போர் நடைபெற்ற காலத்தில் கூட ஒரே தடவையில் இவ்வளவு எண்ணிக்கையிலான வான்கலன்கள் இலங்கைக்கு வந்ததில்லை. அமெரிக்காவின் நோக்கம் முற்றிலும் சர்வதேச கடல்சார் பாதைகளின் பாதுகாப்போடு தொடர்புடையது.
இலங்கைக்கு தெற்கே 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள உலகளாவிய எரிபொருள் மற்றும் வர்த்தகப் பாதையைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதே அமெரிக்காவின் ‘இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின்’ முக்கிய அங்கமாகும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட சமுத்ர, கஜபாகு, விஜயபாகு கப்பல்களின் வரிசையில் சமுத்ரவிஜயவும் இணைந்திருப்பது, இலங்கை கடற்படையை அமெரிக்கத் தரநிலைகளுக்கு பழக்கப்படுத்துவதோடு, இவ்வாறான கொடைகளின் மூலம் இலங்கையின் பாதுகாப்பு கொள்கையைத் தன்வசப்படுத்த அமெரிக்கா முயல்வதைக் காட்டுகிறது.
கடல்சார் பாதுகாப்புக்கு அப்பால், இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பிலும் நிலைத்தன்மையிலும் இந்தியா தீவிர அக்கறை காட்டுகிறது.  அதனொரு பகுதியாக, வட மாகாண பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 300 மில்லியன் ரூபா பெறுமதியான 134 கப் வாகனங்களை இந்தியா கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஏற்படும் எந்தவொரு தளம்பலும், இந்தியாவின் – குறிப்பாக தமிழ் நாட்டின் – சமூக, அரசியல் சூழலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புதுடில்லி நன்கறியும்.
போர்க்கால ஆயுதங்களை வழங்குவது இலங்கைக் குள் தேவையற்ற அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதால், பொலிஸ் மற்றும் சட்ட அமுலாக்கக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்தகைய சிவில்-பாதுகாப்பு உதவிகளை இந்தியா வழங்குகிறது. இதன் மூலம் வடக்கில் தனது மூலோபாய இருப்பை இந்தியா உறுதி செய்கிறது.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்குள் பூகோள சக்திகளின் ஊடுருவல் என்பது அண்மைக்கால நிகழ்வல்ல. முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதும், அதற்குப் பின்னரும் சீனா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் ஆற்றிய பங்களிப்பு இன்றும் தொடர்கிறது.
உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இலங் கைக்கு பெருமளவிலான கனரக ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும் தங்கு தடையின்றி வழங்கிய நாடு சீனா. போரின் பின்னரும் இலங்கை கடற்படைக்கு ‘பி-625’ என்ற அதிநவீன ரோந்துக் கப்பலைக் கொடையாக வழங்கியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான சீனாவின் கட்டுப்பாடும், அதன் ‘மறைமுக இராணுவப் பயன்பாட்டு’ அச்சமும் பிராந்தியத்தில் பெரும் விவாதப் பொருளாக உள்ளது.
அதேபோல, இலங்கையின் விமானப்படை மற்றும் காலாட்படை வீரர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகளையும், போர்க்காலத்தில் அவசர ஆயுத விநியோகங்களையும் வழங்கியதன் மூலம் பாகிஸ்தான் இலங்கையின் பாது காப்புத் துறையில் நம்பகமான பங்காளியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ஜப்பானும் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்த முகாமைத்துவத்தில் தொடர்ந்து இலங்கைக்கு நிதியுதவிகளையும், சிறிய ரக ரோந்துப் படகுகளையும் வழங்கி வருகிறது.
தற்போது கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கவும் ஜப்பான் முன்வந்துள்ளது. இது சீனாவின் ‘ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி’ திட்டத்திற்குப் போட்டியாக ஜப்பானின் ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக்’ கொள்கையின் கீழ் அமைகிறது.
வல்லரசுகளின் இந்த அதீத ‘கொடைக் கலாசாரம்’ இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் எதிர்காலத்தை சிக்கலான புள்ளிக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் சீனா வழங்கும் கப்பல்களும் ஹெலிகொப்டர்களும் ஏற்கனவே பயன்படுத்தப் பட்டவையாகும். இவை ஆரம்பத்தில் கொடையாகக் கிடைத் தாலும், இவற்றின் நீண்டகாலப் பராமரிப்பு, உதிரிப்பாகங்கள் கொள்வனவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு இலங்கை அந்தந்த நாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.
இது இலங்கையின் பாதுகாப்பு வரவு,செலவுத் திட்டத்தில் மறைமுகப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத் துவதோடு, அவசர காலங்களில் அந்த நாடுகள் உதிரிப்பாக விநியோகத்தை நிறுத்தினால் இத்தளவாடங்கள் முடங்கிப் போகும் அபாயமும் உண்டு. மேலும், இலங்கைப் படைகளின் ஒரு பிரிவி னருக்கு அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் பயிற்சிய ளிக்க, மறுபுறம் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தத்தமது இராணுவக் கோட்பாடுகளின்படி பயிற்சி யளிக்கின்றன.
ஒரே பாதுகாப்புப் படைக்குள் வெவ்வேறான மூலோபாயக் சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் ஊடுருவும் போது, அது இலங்கையின் தேசியப் பாதுகாப்புக் கொள்கையில் ஒருமுகத்தன்மை இல்லாமையை ஏற்படுத்தும்.
சர்வதேச நாடுகள் வழங்கும் நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் சேகரிக்கப்படும் கடல்சார் புலனாய்வுத் தகவல்கள் மறைமுகமாக அந்த வல்லரசுகளின் கட்டுப்பாட்டு மையங்களுக்கும் பகிரப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், இலங்கையின் கடல் எல்லைக்குள் நடக்கும் அனைத்து நகர்வுகளையும் வெளிப்புற சக்திகள் கண் காணிக்கும் நிலையும் உருவாக்கும் ஆபத்துக்கள் நிறைந்து வருகின்றன.
சர்வதேச நாடுகள் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகிறதோ இல்லையோ, இலங்கை யைச் சுற்றியுள்ள கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதன் மூலம் தமது சொந்தப் பாதுகாப்பு நலன்களை அடைந்துகொள்ள முயல்கின்றன என்பதே தற்போதைய யதார்த்தம்.
பூகோள சக்திகளின் இந்த மூலோபாயப் போட்டியை இலங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியமான இராஜதந்திரத்தைக் கையாள வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட வல்லரசுக்கும் இலங்கையின் இராணுவத் தளங்களையோ அல்லது கொள்கைகளையோ தாராளமாகப் பயன்படுத்த இடமளிக்கக்கூடாது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில், சொந்தப் பணத்தில் வாங்க முடியாத நவீன கப்பல்களையும் ஹெலிகொப்டர்களையும் கொடையாகப் பெற்று, நாட்டின் கடல்சார் வளக் கொள்ளை, மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு இவற்றை இலங்கை திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பூகோள அரசியல் சதுரங்கத்தில் இலங்கை பகடைக் காயாகவும் மாறிவிடாமல், அதேநேரம் வல்லரசுகளின் தேவைகளைத் தனது சொந்தத் தேசியப் பாதுகாப்புப் பலமாக மாற்றிக் கொள்ளும் புத்திசாலித்தனமான இராஜ தந்திரப் பாதையிலேயே அதன் எதிர்காலப் பாதுகாப்பு தங்கியுள்ளது.

பிரித்தானியா ஏற்படுத்திய பிரச்சனையை தீர்க்க அவர்கள் வரவேண்டும் – நேபாளப் பிரதமர்

நேபாளப் பிரதமர் பாலன் ஷா, தனது நாட்டிற்கும் அதன் பெரிய தெற்கு அண்டை நாடான இந்தியாவிற்கும் இடையிலான நீண் டகால எல்லைப் பிரச்சினையை மீண்டும் கிளறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த் தையில் ஐக்கிய இராச்சியமும் சீனாவும் பங்கேற்க வேண்டும் என்று கூறியதன் மூலம், அவர் இந்தப் பிரச்சினைக்கு மேலும் தீயை மூட்டியுள்ளார்.
நாடு முழுவதும் பரவிய ஊழலுக்கு எதிரான மாபெரும் ‘ஜென் Z’ தலைமுறைப் போராட்டங் களைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஷா, ஞாயிற்றுக்கிழமை அன்று, “இந்தியா நேபாளத்தின் நிலத்தை ஆக்கிரமித்தது மட்டு மல்லாமல், நேபாளமும் பல இடங்களில் இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது” என இந்த வாரம் ஆர்.ரி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதில் அவர் சமரசப் போக்கைக் காட்டிய அதே வேளையில், காத்மாண்டு இந்தப் பிரச்சினை குறித்து இந்தியா மற்றும் சீனாவுடன் மட்டுமல்லாமல் (சர்ச்சைக்குரிய பகுதியை ஒட்டியிருக்கும் சீனாவின் திபெத் பிராந்தியம்), ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துடனும் பேசியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
“பிரிட்டிஷார் இப்பகுதியை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை இருப்பதால், ஐக்கிய இராச்சியமும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எங்கள் கருத்து,” என்று ஷா கூறினார். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை, பிரிட்டன் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது. அதன் கொடூரம் மற்றும் சுரண்டலுக்காக, குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானாகப் பிரித்ததற்காக, அது இன்றும் கசப்புடன் நினைவுகூரப்படுகிறது.
“பிரிட்டிஷ் மற்றும் நேபாளத்திற்கு இடையேயான 1816 ஒப்பந்தத்தில் இருந்த தெளிவின்மையால்தான் இந்தப் பிரச்சினை முழுவதுமாக எழுந்தது,” என்று புது தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் கௌரவப் பேராசிரியர் எஸ்.டி. முனி கூறினார்.

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடை: கடற்றொழில் அமைச்சர் மீது குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பௌத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி சிதம்பர மேகன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

லண்டனில் வாழும் தமிழ் அன்பர் ஒருவர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வைப்பதற்காக இந்த நடராஜர் சிலையை அனுப்பி வைத்திருந்ததாக கலாநிதி சிதம்பர மேகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிலையை விமான நிலைய வளாகத்தில் நிறுவுவதற்கான முயற்சிகளைத் தாம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் உள்ளூர் விகாராதிபதி ஆகியோருடன் இணைந்து மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்குக் கலாசார அமைச்சர் பச்சைக்கொடி காட்டியிருந்த நிலையிலும், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மத முரண்பாடுகள் தோன்றிவிடும் எனக் கூறி இந்த சிலையை வைக்க விடாமல் தடுத்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

அமைச்சரின் இந்த முட்டுக்கட்டை மற்றும் எதிர்ப்புத் காரணமாக, லண்டனில் இருந்து விமான நிலையத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, தற்போது யாழ்ப்பாணம் நாக விகாரைக்குள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விவகாரம் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதிக்கும் ஒன்றாக மாறுவதற்கு முன்பதாக, சம்பந்தப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் புற்றுநோய்க்கு சிகிச்சை

ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட புற்று நோய் தடுப்பூசி திட்டத்திற்காக தற்போது 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். முதல் சிகிச்சைகளே ஏற்கெனவே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருகின்றன என்று ரஷ்ய கூட்டாட்சி மருத்துவ-உயிரியல் முகமையின் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான வெரோனிகா ஸ்க் வோர்ட்சோவா, புதன்கிழமை(3) தெரிவித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றம் 2026-ன் ஒரு பகுதியாகப் பேசிய ஸ்க்வோர்ட்சோவா, இந்த சிகிச்சையானது புற்றுநோய்க்கு எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது என்று கூறினார்.
இந்தத் தடுப்பூசி ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறைக்கு சுமார் 42 நாட்கள் ஆகும். விஞ்ஞானிகள் ஒரு நபரின் கட்டி மற்றும் இரத்தத்திலிருந்து மாதிரிகளை எடுத்து, ஆர்.என்.ஏ-வை வரிசைப்படுத்தி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் முன்கணிப்பு வழிமுறைகளைப் பயன் படுத்தி, நோயாளியின் மரபணுவை கட்டியின் மரபணு வுடன் ஒப்பிட்டு தனித்துவமான பிறழ்வுகளைக் கண்டறி கின்றனர்.
அந்த இலக்குகள் கண்டறியப் பட்டவுடன், இந்தத் தடுப்பூசி பெப்டைடுகளை அறிமுகப்படுத்துகிறது. இவை, நோயெதிர்ப்பு மண்டலத்திற்குப் புரியவைத்து, வீரியம் மிக்க செல்களில் உள்ள அதே அடையாளங்காட்டிகளை அடையாளம் கண்டு, அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொல்லும். அதே நேரத்தில் ஆரோக்கியமான திசுக்களைப் பாதிப்பின்றி விட்டுவிடுகின்றன.
“வீரியம் மிக்க கட்டி செல்களைக் கொல்ல நாங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்துகிறோம்,” என்று ஸ்க்வோர்ட்சோவா கூறினார். “இது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாகும்.”
இந்தத் திட்டம், நியோஆன்கோவாக் மற்றும் ஆன்கோபெப்ட் போன்ற உள்நாட்டுப் புற்றுநோய் தடுப் பூசிகள் உட்பட, தனிப்பயனாக்கப்பட்ட நோயெதிர்ப்பு சிகிச்சைகளில் ரஷ்யாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
முதல் இரண்டு பெருங்குடல் புற்றுநோயாளிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சையைத் தொடங்கினர், மேலும் அவர்கள் ஏற்கனவே ஐந்து ஊசிகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்க்வோர்ட்சோவாவின் கூற்றுப்படி, தடுப்பூசி இதுவரை பாதுகாப்பானதாகவும், நன்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் தோன்றுகிறது, மேலும் அவர்களின் கட்டிகளில் உள்ள ஜி இம்யூனோகு ளோபுலின்களின் செறிவு 50 முதல் 100 மடங்கு அதிகரித் துள்ளது. நான்காவது ஊசிக்குப் பிறகு நிணநீர் முடிச்சு களின் அளவில் குறைவு ஏற்பட்டதையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்துக்கு அதிகார பகிர்வு வழங்குவது தேசத்துரோகம் : ஜனாதிபதிக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை

வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் தேர்தலை நடத்தி அதன் பின்னர் வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால்தான் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் மாகாணங்களுக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் இந்த வேலையைச் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றுவார் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஒருவேளை வடக்கு மாகாணத்திற்கு இத்தகைய காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டால், இந்த நாடு ஒரு கூட்டாட்சி ராஜ்யமாக மாறிவிடும் என்று சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இதுவரைகாலமும் இரத்தமும் தியாகமும் சிந்திப் பாதுகாத்து வந்த நாட்டின் ஒற்றையாட்சி முறைமை முற்றாக இல்லாமல்போகும் என குறிப்பிடப்பட்டார்.

எனவே, இது ஒரு தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும் என்றும், இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்றே தாம் நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

செம்மணியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகளின் போது அவை மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 296 என்பு கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 290 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளின் போது , என்பு கூடொன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பு உருவாக்கம்

நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதியிடப்பட்டு இந்த விசேட வர்த்தமானி குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, புதிய நிறுவகமானது சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன் முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு செயற்படவுள்ளது.

ஊடகத்துறையில் பணியாற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களையும் ஒரே தொழில்சார் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருதல் இதன் நோக்கமாகும்.

அத்துடன் தகைமை வாய்ந்த ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாக நிரலிற் சேர்த்தல் மற்றும் அவர்களின் தராதரங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்தல், ஊடகக் கல்வி, பயிற்சி நெறிகள் மற்றும் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளும் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மிக முக்கியமாக, அனைத்து உறுப்பினர்களும் மாணவர்களும் பின்பற்றுவதற்கென விசேட நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, தொழில்சார் ஒழுக்காற்றைப் பேணுதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான தமிழ் பாடகருக்கு விடுதலை கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான, ஆவணங்கள் மற்றும் சத்தியக் கடதாசியில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாக சங்கீதன் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி, உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் எழுச்சிப் பாடலை, அண்மையில் நிகழ்வொன்றில் பாடியதாக தெரிவித்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடலை பாடியதன் மூலம், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியாட்டத்தை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால், மக்கள் மத்தியில் செல்ல அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.

நாட்டு மக்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு தரப்பிற்கும் பாராமன்றத்தில் அல்லது ஆட்சியில் அபரிமிதமான (மூன்றில் இரண்டு) அதிகாரத்தை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அதிகார மமதையால் நாட்டை சீரழிக்கும் தவறான அரச ஆளுகை முறையே உருவாகும்.

ஒரே மாற்றாகக் காணப்படும் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கூட சாதாரண பெரும்பான்மையே போதுமானது; அறுதிப் பெரும்பான்மையோ அல்லது அபரிமிதமான அதிகாரமோ எமக்கும் தேவையில்லை.

மக்களின் துயரங்களை விற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று அவற்றை மறந்து சுகபோகங்களை அனுபவித்து வருகின்றது. உலக சந்தையில் நிலவரங்கள் சாதகமாக இருந்தும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கவோ அல்லது எரிபொருளுக்கான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியால் “தேசிய நடவடிக்கைக் குழு” ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதில் பதவிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், மக்களின் துயரங்களைத் தீர்க்கப் போராடும் அனைவரும் உள்வாங்கப்படுவர்.

மாகாண சபைகள் மூலம் சர்வதேச முதலீடுகளைக் கூட ஈர்த்து சிறந்த சேவையாற்ற முடியும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. சர்வதேசத்திற்குச் சென்றால் ’13 பிளஸ்’ என்றும், உள்நாட்டில் சில பகுதிகளில் ’13 மைனஸ்’ என்றும் இரட்டை வேடம் போடும் அரசியல் எமக்குக் கிடையாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

பாடவும் ஆடவும் எழுதவும் கருத்துச்சுதந்திரமில்லையென வெளிப்படையாகவே ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அநுர ஆட்சி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 394

தனது  தேசிய மக்கள் சக்தி ஆட்சி, மாற்றத்துக்கான ஆட்சி என்று ஈழத்தமிழர் தாயகத்தில் தேர்தல் காலங்களில் உறுதி கூறி வாக்குப்பெற்று பதவிக்கு வந்த  சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்காவின் ஆட்சியில் என்ன நடக்கிறது?
கிளிநொச்சியில் கலைவிழாவில் பாடிய இளையவர் கைது. உரும்பிராயில் கோயிலில் பாடிய தாயகத்தின் பெருங்கலைஞர் சாந்தனின் மக்கள் இருவரும் கைது இருதேசமென்ற உண்மையை எழுதியதற்காக தீபச்செல்வனின் நூல்கள் இரண்டு தடுத்துவைப்பு மொத்தத்தில் அநுர ஆட்சியில் ஈழத்தமிழர் பாடவும் ஆடவும் எழுதவும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் கருத்துச்சுதந்திரமற்றவர்களாக வெளிப்படையாகவே வாழ்வது தெரிகின்ற பொழுது ஈழத்தமிழர் இறைமையை அநுர ஆட்சி ஒடுக்குகிறது என்பது தெளிவாகிறது என்பதை  இலக்கு இவ்வாரத்தில் உலகின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறது.
இளையவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நிலை அவர்களுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதனால் அவர்கள் எந்த எதிர்வினை செய்தாலும் அவர்களை சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாக்கி அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய அபாயம் உள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர்கள் காலனித்துவத்தால் தங்கள் தன்னாட்சி உரிமையைப்பயன்படுத்தி தங்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதிவாழ்வை வளர்ச்சிகளை நிர்ணயிக்கும் தன்னாட்சி உரிமையை நடைமுறைப்படுத்தாது உள்ளனர் என்ற உண்மையை ஏற்று அவர்கள் தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தி தங்களது அரசியல் எதிர்காலத்தை நியமிக்கும் வரை ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க சிறப்புப் பிரதிநிதியொருவரை பலஸ்தீன மக்களுக்கு நியமித்தது போல அனைத்துலகச் சட்டங்களின் கீழ் நியமிக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
மேலும் தீபச் செல்வனின் நூல்கள் தடுக்கப்பட்டு பலநாள் ஆகியும் கூட அதனை விடுவிக்க வைப்பதற்கான எந்தவொரு அக்கறையுமற்றவர்களாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் வாழ்வை முன்னெடுக்கிறார்கள். 1799இல் பிரித்தானிய காலனித்துவ அரசின் இலங்கைக்கான முதல் செயலாளராகப் பதவியேற்ற சேர். கியூ கிளேகோன் (Sir Hugh Cleghorn) ஈழத்தமிழர் இறைமையின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசில் இருந்து இலங்கையையும் தமிழகத்தையும் ஆட்சி செய்த காலத்திலேயே இருதேசம் இலங்கையில் உண்டு என்று கூறி 1879 இல் அறிக்கையாகவும் ஆவணப்படுத்தினார்.
1857இல் வரையப்பட்ட யோண் அரோசிமித் வரைபடத்தில் இலங்கைத்தீவில் இரு தேசங்களாக வடக்கு கிழக்கு தமிழர் தேசமாகவும் தென்மேற்கும் மத்திய பகுதிகளும் சிங்களவர்களின் தேசமாகவும் தெளிவான வேறு படுத்தலுடன் வரையப்பட்டதே. இவ்வாறு பல வெளிநாட்டவர்களின் நூல்கள் இலங்கையை இருதேசங்களின் தீவாக அறிவூட்டுகையில் தீபச்செல்வனின் நூலை எந்த நியாயப்படுத்தலின் கீழ் தடைசெய்யலாம். இவற்றை சுட்டிக்காட்டி வாதாடாது ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் இருப்பதுதான் சிறிலங்கா அரசாங்கம் தான் நினைத்த மாதிரி எல்லாம் ஈழத்தமிழர்களை நடாத்தலாமென்னும் துணிவுக்கு வருவதற்கு மூலகாரணம் என்பதையும் இலக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதே நேரத்தில் தீபச் செல்வனின் விடயத்தில் அவரது இழப்பை ஈடுசெய்யக் கூடிய உதவிகளைத்தானும் உலகத் தமிழர்களும் செய்யாது இருப்பதும் உலக ஈழத்தமிழரிடையிலும் செயற்திறன் உடன் செயற்திட்டங்கள் வழி செயற்பட இயலாத நிலை தொடர்வதையே உணர்த்துகிறது என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அவ்வாறே ஈழத்தமிழரின் சமூக ஊடகங்கள் வலைத்தளங்கள் எப்பொழுதும் மக்களின் பிரச்சினைகள் மக்களின் தேவைகள் மக்களின் பாதிப்புக்களுக்கு குரல்கொடுத்தல் காட்சிப்படுத்தல் இன்றி பொறுப்பற்ற முறையில் ஒருவரையொருவர் திட்டித் தீர்த்தலால் தமக்கு பணமும் புகழும் தேடும் நோக்கையே தமது போக்காகக் கொண்டு திகழ்வதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. அத்துடன் குறைபேசு தளமாகவே தம்மை மாற்றிக் கொண்ட சமுக ஊடகங்கள் வலைத்தளங்கள் தமது விருப்பு வெறுப்பை ஊடகத்தில் கொட்டித்தீர்த்து ஒழுங்காகச் செயற்படும் நிறுவனங்களையும் முறிவடைய வைக்கும் கைங்கரியத்திலும் நன்கு பெருவளர்ச்சி பெற்று வருகின்றன. இதனால் ஊடகப்பணி என்பது வாழ்நாள் பொறுப்புள்ள பணி என்பதனை ஏற்படும் உள்ளக்கிளர்ச்சியில் ஊடகவியலாளர்களையே மறக்க வைக்கும் ஆற்றல் உள்ளனவாக இந்த சமுகப் பொறுப்பற்ற சமுக ஊடகங்கள் தம்மை வளர்த்துக்கொண்டுள்ளன என்பது  வேதனையான உண்மை என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. விமர்சனம் என்னும் வடசொல்லுக்கு பரீட்சித்தல் என்பதே பொருள்.
ஒருவர் தனக்குள்ள அறிவு தனக்குள்ள அனுபவம் குறித்து படைப்பை பரீட்சித்தல் என்பதே சிறந்த விமர்சனமாகும். திறனாய்வு என்பது அந்தப்படைப்பில் உள்ள திறனை ஆய்வு செய்தல் என்று பொருள். நான் நினைக்கிறேன் “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று சொல்கிற தொல்காப்பிய நெறிப்படுத்தலிலும் ஒன்றில் உள்ள உயர்ந்ததையே நாம் வெளிக்கொண்டு வருகின்ற போது சமுகம் உயர்வானதாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் என்கின்ற கருத்து உள்ளது. உண்மையில் தமிழர் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் தமிழின் அடிப்படையான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதில் எல்லா ஊரும் மனிதர் வாழவல்ல ஊர்களே எல்லாமனிதரும் நாம் மனிதர் என்ற வகையில் நம் உறவினர் என்ற உண்மையைத் தெரிவிக்கிறது.  அப்பொழுதுதான் மனித சமத்துவம் தமிழர்க்கான தமிழின் முதல் அழைப்பாக உள்ளதென்பது தெளிவாகும். அவ்வாறே ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’  என்கின்ற அடிப்படை உண்மையையும் தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அறிவுள்ளவன் பகுத்தறிவுத்தன்மையே இதற்குக் காரணம். நான் செய்கிற செயலுக்கு நானே பொறுப் பேற்றுக்கொள்வதே ஏற்புடையது. அதனை விடுத்து அடுத்தவனைத் திட்டித்தீர்ப்பது என்பது தமிழ்மரபல்ல. இதனால்தான் பெரியோரென வியத்தலுமிலமே, சிறியோரென இகழ்தலும் இலமே என்கிற வரியும் மனிதரை பெரியவர் இகழ்வானவர் என வகைப்படுத்தல் என்பதே அனைத்து மனிதசமத்துவமின்மைக்கும் அடிப்படைக்காரணம் என்பதை நெஞ்சிருத்தி அதனை விலத்தப்பழக்குகிறது.  இதனால் அவரவருக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் அவரவரது அறிவாக அனுபவமாக மாறுகிறது. ஆதலால் ஒரு நிகழ்வுக்குரிய காரணத்தை அறிய முற்படுதல்தான் உண்மையான பகுப்பாய்வு என்பதைக் கருத்தில் வைத்து, ஆளை வைச்சுவாங்காமல் அந்த காரணத்தைக்கண்டறிந்து அதனை மாற்றுவதா ஏற்பதா என்ற வகையில் திறனாய்வுகளைச் செய்தல் சமுகத்துக்கு நலமளிக்கும்.
மேலும் கழிந்த காலம்தான் தமிழில் உள்ளதே தவிர இறந்த காலமில்லை. ஆதலால் ஒருநிகழ்வு நிகழ்ந்து விட்டால் அதனையே திருப்பித் திருப்பி பேசி மகிழ்வது அல்லது புலம்புவது என்ற போக்கை விட்டு விலகி அதனை அனுபவமாகக் கொண்டு நிகழ்காலத்துக்கான பலமாக அதனை மாற்றி செயற்படத் தொடங்கினாலே எதிர்காலத்தைப் புதுமையுடன் எதிர்கொண்டு  காலத்திற்கு ஏற்ப இடத்துக்கேற்ப வாழும் ஆற்றலைப் பெறலாம். உதாரணமாக இன்று ட்ரம்பின் கூற்றுக்களைக் கொண்டு எந்த எதிர்வு கூறலையும் கூறஇயலாது என மேற்குலக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் அமெரிக்காவை மீளவும் பெரிய அமெரிக்காவாக மாற்றுவேன் என அவர் கடந்த காலத்தை உயர்வாகக் காட்டி நிகழ்காலத்தைக் கட்டமைக்க முயல்கின்றாரே தவிர நிகழ்காலத்தின் மாற்றங்களை உள்வாங்கி எதிர்காலத்தை அணுகும் முறையில் செயற்பட மறுக்கிறார். இதே நிலைதான் தமிழ் அரசியலிலும் உள்ளது. அவர் வல்லரசின் அரசத்தலைவர் என்பதால் மீளவும் புத்துயிர் பெறுகின்றார். ஆனால் ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமென்பதால் மீள்புத்துயிர்ப்பைத் தாங்களே முன்னெடுக்க வேண்டிய கஷ்டமான  நிலையில் உள்ளனர். மக்கள் இறைமையைக் கொண்டே இதனைச் செய்ய வேண்டியிருப்பதால் தேசிய ஒருமைப்பாடு ஈழத்தமிழரின் விடுதலைக்கான தலையாய நிபந்தனையாக அமைகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் செயற்திட்டங்களைச் செயற் படுத்தாது வெற்றுப்  பேச்சுக்களால் தாங்களே தங்களின் தேசிய ஒருமைப்பாட்டைச் சிதறடித்து வருகின்றனர் என்பதை இலக்கு வேதனையுடன் வெளிப்படுத்த விரும்புகிறது.
அத்துடன் இன்றைய முதலாளித்துவத்திற்குப் பின்னான நவீன உலகின் அரசியல் நிலப்பரப்புக்கள் ஒருதுருவ அல்லது இருதுருவ முனைவாக்கத்தில் இருந்து பன்துருவ முனைவாக்கம் (Multipolarity) நோக்கி,  பொருளாதார தேசியவாதத்துக்கு உச்சமளித்தல் (heightened economic nationalism)  என்பதனைத் தமது தலைமை பண்பாகக் கொண்டு காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் இன்றைய உலகின் மூன்று முக்கியதன்மைகளான  உலகமயமாக்கல் (globalisation) செயற்கை நுண்ணறிவு இணைப்புடன் கூடிய தொழில்நுட்பம், காலநிலை மாற் றம் என்பவற்றுடன் ஆழமான கருத்தியல் மற்றும் கொள்கைசார் பிளவுகள் உள்ளனவாக உள்ளன. நிலவுகிற ஒரு பொதுவான எண்ணத்துடன் இணையாது நாடுகள் பல்வேறு  போட்டித்தன்மைகளையும் ஒன்றுடன் ஒன்று மேற்கவிப்புக்கொண்ட அரசியல் தத்துவங்களையும் கொண்ட சிக்கலான புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையை தோற்றுவித்துள்ளன.
சமகால உலகில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் தமது பொருளாதார பாதுகாப்பியலை (Protectionism)  மையப்படுத்தியே மக்களைக் கவரும் கொள்கைகளையும் (Populism)  தேசியவாதக்கொள்கைகளையும் (Nationalism) உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் சுதந்திர வர்த்தகம் குறித்த ஒருமித்த பொதுக்கருத்திசைவு பாதிப்புற்றுள்ளது. உள்ளூர் உற்பத்திகளுக்கே ஊக்கஉதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக அசைவுகள் எல்லாமே தாயக பொருளாதாரத்தை மீளமைத்தல் ( reshoring) என்னும் நோக்கிலேயே இறக்குமதிப்பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு ஏற்றுமதிப்பொருட்களுக்கு வரிக்குறைப்புப் பேச்சுவார்த்தைகள் என்பனவற்றின் வழி நகர்கின்றன. இவற்றைக் கவனத்தில் கொண்டு இன்றைய உலக சமுக அரசியல் பொருளாதார எதார்த்த நிலைகளுக்கு ஏற்ப கருத்தரங்குகள் மாநாடுகள் வழியாக காலத்துக்கு ஏற்ற கொள்கை வகுப்புக்களைச் செய்து ஈழத்தமிழர்கள் சமகாலத் தில் அனைத்துலகத்துடனும் ஒப்புரவாகி இறைமையை தக்கவைக்க வழிவகுக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்