செம்மணியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகளின் போது அவை மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 296 என்பு கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 290 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளின் போது , என்பு கூடொன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது