Home Blog Page 2390

விசாவை இடைநிறுத்தியது இந்தியா; இன்று முதல் பயணம் செய்ய முடியாது

இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விசாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வருகின்றது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இராஜதந்திர, உத்தியோகபூர்வ, ஐ.நா/சர்வதேச அமைப்புக்கள், வேலைவாய்ப்பு, நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றுக்கான விசாக்கள் தவிர்ந்த ஏனைய சகல செல்லுபடியாகும் விசாக்களும் 2020 ஏப்ரல் 15 ஆம் திகதிவரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் இந்த நடைமுறை அமுலாகும்.

இந்தியாவில் இருக்கும் சகல வெளிநாட்டவர்களதும் விசாக்கள் தொடர்ந்து செல்லுபடியாகும். அவர்கள் தமது விசாக்களை மாற்றுவதற்கு அல்லது நீடிப்பதற்கு விரும்பினால் அல்லது வேறு கொன்சியுலர் சேவைகளை பெற விரும்பினால் e-FRRO ஊடாக அருகிலுள்ள FRRO/FRO அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

OCIஅட்டைகளை வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணிக்கும் அனுமதி 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலும் புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் அமுலாகும்.

அத்தியாவசியமான தேவைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் அருகில் இருக்கும் இந்திய தூதரகத்தை அணுக முடியும்.

2020 பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ், கொரிய குடியரசு, ஈரான், இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணித்தவர்கள் அல்லது அந்நாடுகளிலிருந்து வருகைதரும் இந்தியர்கள் உள்ளிட்ட சகல பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த அறிவித்தல் புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் அமுலாகும்.

இந்தியாவுக்கு வருகைதரும் இந்தியர்கள் உள்ளிட்ட சகலரும் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் அவர்கள் வருகைதரும் நிலையில் ஆகக் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

சகல இந்தியர்களும் வெளிநாடுகளுக்கு தேவையற்ற பயணத்தை மேற்கொள்வதை தவிர்க்குமாறு மிகவும் ஆணித்தரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் நாடு திரும்பும் நிலையில் ஆகக் குறைந்தது 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள். அதிசிறந்த பரிசோதனை மற்றும் கண்காணிப்பு சோதனை முறைகள் தரை மார்க்கமான சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இந்த விடயம் தொடர்பாக உள்துறை அமைச்சினால் பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.

இலங்கையில் இதுவரை கொவிட் 19 தாக்கம் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக பாதிக்கப்பட்டவர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். இரண்டாவது நோயாளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

2020 மார்ச் 10ஆம் திகதி முதல் தென் கொரியா, இத்தாலி அல்லது ஈரான் ஊடாக அல்லது அந்த நாடுகளிலிருந்து வருகை தரும் சகல பயணிகளுக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது..

இந்த நாடுகளூடான பயணத்தினை கடந்த 14 நாட்களுக்குள் மேற்கொண்ட பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்.

பயணிகள் கப்பலின் பயணிகள் மற்றும் மாலுமிகள் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். (2020 மார்ச் 3ஆம் திகதி முதல்)

சுற்றுலா பயணிகளுக்கான வருகைதரு விசா நடைமுறை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது∙ இலங்கைக்கு வருகைதரும் சகல நாட்டவர்களும் வெப்பநிலை பரிசோதனைக்கு முகம் கொடுக்கவேண்டிய அதேநேரம் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும்.

சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்

கொரோனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டதையடுத்து நாட்டிலுள்ள பல்பொருள் அங்காடிகள் அனைத்திலும் பெருந்தொகையான மக்கள் முண்டியடித்து அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருப்பதை நள்ளிரவு வரையில் காணக் கூடியதாக இருந்தது.

998 சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்பெரும்பாலான கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தார்கள். இதனால், அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் நள்ளிரவுக்கு முன்னதாகவே காலியாகியிருந்தன.

பெருந்தொகையான மக்கள் கடைகளில் குவிந்ததால் வழமையான நேரத்தக்கு கடைகளை மூட முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கும் விற்பனை நிலையப் பணியாளர் ஒருவர், ஆனால், முக்கியமான பொருட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் நடப்பது உறுதி; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படவுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை அவ்வாறான தீர்மானமொன்றை எடுக்கவில்லை எனச் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். அத்துடன் தேர்தல் காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.

தேர்தல் கூட்டங்கள் இடம்பெறும் இடங்களில் கொரொனா தொற்று பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சமன் ஸ்ரீ ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்தான் ஏற்படுத்த வேண்டுமா? சுமந்திரன் கேள்வி

கொரனோ நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அரசாங்கம் உபயோகிப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்ற அதேவேளைஇ ஏன் இந்த ஆபத்தான நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

எனவே நாட்டில் ஒரு சுமூக நிலைமையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கமானது மக்கள் செறிவற்ற பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டுபிடித்து இத்தகைய தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும் என நாம் வேண்டுவதோடுஇ மக்களின் அபிப்பிராயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் என்பதனையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

போர்க்குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது; கஜேந்திரகுமார்

பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இனப்படுகொலையே நடந்தது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கின்றது. இந்த இடத்தில் குற்றவாளிகளைச் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள்தான் இதனைச் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில், போர்குற்றவாளியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல், போர்க் குற்றவாளிகள் தப்பிக்க முயல்கின்ற நிலை அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை குற்றாவாளிகள் தப்பிக்கமுடியாது. தமிழர்கள் எந்தளவுக்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றோமோ, அந்தளவுக்கு குற்றவாளிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி தமிழர்களுடன் புரிந்துணர்வுக்கு வரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றார்.

தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் பொருளாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான பீற்றர் இளஞ்செழியன்  தெரிவித்துள்ளார்.

அவர் இதுதொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பை இங்கு தருகிறோம்.

தற்போது கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே சாணக்கியன் இராகுல ராஜபுத்திரன் என்ற 2015ஆம் ஆண்டு வெத்திலை சின்னத்தில் போட்டியிட்ட ஒருவரை மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.ஆனால் அவர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி எந்தவொரு முன்மொழிவையும் செய்யவில்லை.FB IMG 1572159638829 தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

சாணக்கியன் என்பவரை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி சார்பில் தெரிவு செய்வதாக ஒரு செய்தி வந்திருந்தது. அதற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணிக்கும் எந்தவித ஒரு தொடர்பும் இல்லை.

இதேவேளை சாணக்கியன் இலங்கை தமிழரசுக் கட்சியில் 2018 கிழக்கு மாகாணத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலிலே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தலைமை தாங்கிய கூட்டத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு பொன்னாடை போர்த்ததன் ஊடாக உள்வந்ததாக அறிய முடிகின்றது.

அதேவேளை 2019ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியாவில் தெரிவு நடைபெற்றன. அந்தத் தெரிவு நடந்த போது, வடக்கு முல்லைத்தீவு போன்ற இடங்களில் இருந்தவர்களுக்கு சாணக்கியனை எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இராசமாணிக்கம் அவர்களின் பேரன் என்பவர் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி வேட்பாளராக நியமிக்கப்படுமிடத்து அதை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்.sanakkiyan 1 தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

அதேவேளை அவர் உங்கள் கட்சியில் ஒரு வேட்பாளராக நியமிக்கப்படுவாராக இருந்தால், நான் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி, வாலிபர் அணியிலிருந்து பதவி விலகி சாதாரண உறுப்பினராகவே இருக்க விரும்புகின்றேன்.இது எனதுதனிப்பட்ட கருத்து.

தற்போதைய நிலைமையிலே வடக்கு கிழக்கிலே இளைஞர்களையும் போட்டியிட வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் வாலிபர் முன்னணியானது இன்றைய நிலவரத்தின்படி கிழக்கு மாகாணத்திலே இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் சயோன் அவர்களை நாங்கள் அனைவரும் நியமிப்பதற்கு முன்வந்துள்ளோம்.

தமிழ் மக்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்ஸ, மைத்திரியுடன் இருந்த சாணக்கியன் இராகுல ராஜபுத்திரன் என்பவரை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய மாவீரர்களை தியாகம் செய்த மாவட்டம். அதிலே 2015இல் பிள்ளையான், கருணா, ஹிஸ்புல்லா போன்றவர்களுடன் இணைந்து போட்டிய சாணக்கியனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செயல் கட்சிக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான இராசமாணிக்கம் அவர்களின் பேரன் என்ற அடிப்படையிலே அவருக்கு ஆசனம் வழங்கப்படுமாயிருந்தால் அவர்  அவரின் வரலாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், இலங்கை தமிழரசுக் கட்சியுடனும் இருந்திருக்க வேண்டும்.

sanakkiyan2 தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் செயற்பட்ட இளைஞர்களை புறக்கணித்து மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாயா ராஜபக்ஸ, மைத்திரி போன்ற சிங்களக் கட்சியுடன் செயற்பட்ட ஒருவரை எங்களின் கட்சியின் ஊடாக அதுவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி ஊடாக நியமிப்பது என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எப்போதுமே சாணக்கியர் அல்லது இவர் போன்ற வழிப்போக்கர்களை கட்சியில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதைத் தான் நாம் இன்றும் சொல்லியிருக்கின்றோம். இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தமிழ் மக்களின் உரிமைக்காவும், எங்களின் அபிலாசைகளுக்காகவும் போராடக்கூடிய ஒரு அமைப்பு.

2015ஆம் ஆண்டு இதே பட்டிருப்புத் தொகுதியிலே, இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க சிங்கள கட்சிகளுடன் கூட்டச் சேர்ந்த சாணக்கியன் போன்றவர்களை நியமிப்பதாக இருந்தால், அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கிழக்கில் சாணக்கியனுக்குப் பதிலா இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சயோன் அவர்களை நியமிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு 827 பலி;அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடல்

இத்தாலியில்கொரோனா வைரஸ்   பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தவிர்த்து பிற பொருட்களுக்கான வர்த்தகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கோவிட் – 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 827 பேர். இதுவரை 700க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிருந்து விடுபட்டுள்ளனர். 12,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்கு தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு வர்த்தகத் தடையை இத்தாலி அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி பிரதமர் செப்பி கான்ட்டே கூறும்போது, “கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்கு படிப்படியாகச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். அதன்படி இப்போது மற்றொரு படி முன்னேற வேண்டிய நேரம் இது.

இப்போது அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் (அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்த்து) மூட உத்தரவு பிறப்பித்து வருகிறோம்.

மதுக்கடைகள், பார்கள், ஒட்டல்கள் ஆகியவற்றையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். வங்கிகள், தபால் நிலையங்களும் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இ.போ.ச தனியார் பேரூந்து விபத்தில் 10 பேர் காயம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துடன் இடம்பெற்ற விபத்தில் 10பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியாவிலிருந்து செட்டிகுளத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.ச பேரூந்துடன் கொழும்பிலிருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து நேரியகுளம் சந்தி பகுதியில் காலை 8மணியளவில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் இ.போ.ச பேரூந்து வீதியை விட்டு தடம் புரண்டுள்ளதுடன் பேரூந்தில் பயணித்த சாரதி, நடத்துனர், தனியார் பேருந்தின் நடத்துனர் உட்பட 10பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த நான்குபேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தனியார் பேரூந்து அதிகவேகமாக பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் தெய்வாதினமாக எவருக்கும் உரிராபத்துக்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மக்கள் நடமாடும் நடைபாதை வியாபாரம் செய்ய நகரசபையினால் மீண்டும் தடை

வவுனியா இலுப்பையடி பகுதியில் நடைபாதையில் இன்று வியாபாரம் மேற்கொண்ட சிலர் நகரசபையினால் மீண்டும் அகற்றப்பட்டு அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் கடந்த வருடம் டிப்பர் வானகம் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதையும் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக நெரிசல்கள், விபத்துக்கள் இடம்பெறுதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை செய்யுமாறு நகர வட்டார நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கத்தினால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன்மொழியப்பட்டதையடுத்து சபையின் அனுமதியுடன் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு நகரசபை தலைவர் இராசலிங்கம் கௌதமனினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு சிலர் முற்பட்டபோது நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராசலிங்கத்தின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து நகரசபை தலைவரின் கவனத்திற்கு நகரசபை உறுப்பினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து நகரசபை தலைவர் நகரசபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உடனடியாக அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள மீளத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு வியாபாரம் நடவடிக்கை மேற்கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை

வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை இன்று காலை 09.00 மணி தொடக்கம் 04.00 மணிவரை நடைபெற்று வருகின்றது.

ஒமந்தை பிரதேச விவசாயிகளின் விவசாய நடவடிக்கை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் நோக்கில் நடாத்தப்படும் இவ் நடமாடும் சேவை வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதன் போது விவசாயிகளின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சனைகள், காப்புறுதி தொடர்பான பிரச்சனைகள், குளங்கள் தொடர்பான பிரச்சனைகளிற்கான உரிய தீர்வுகளை கமநல உதவி ஆணையாளரினால் வழங்கப்பட்டிருந்தது.

இவ்நடமாடும் சேவையில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கலைச்செல்வன், கமநல அபிவிருத்தி குழு தலைவர் சின்னராசா மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC01000 வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை