வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை இன்று காலை 09.00 மணி தொடக்கம் 04.00 மணிவரை நடைபெற்று வருகின்றது.
ஒமந்தை பிரதேச விவசாயிகளின் விவசாய நடவடிக்கை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் நோக்கில் நடாத்தப்படும் இவ் நடமாடும் சேவை வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதன் போது விவசாயிகளின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சனைகள், காப்புறுதி தொடர்பான பிரச்சனைகள், குளங்கள் தொடர்பான பிரச்சனைகளிற்கான உரிய தீர்வுகளை கமநல உதவி ஆணையாளரினால் வழங்கப்பட்டிருந்தது.
இவ்நடமாடும் சேவையில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கலைச்செல்வன், கமநல அபிவிருத்தி குழு தலைவர் சின்னராசா மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.