Home Blog Page 2810

அஜந்தன் விடுதலை – சிறீலங்கா அரசின் போலியான குற்றச்சாட்டுக்கள் அம்பலம்

வவுணதீவில் சிறீலங்கா காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எந்தவித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் இன்று (11) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் அவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் வவுணதீவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் வழமைபோல எந்தவிதமான ஆதாரங்களையும் சேகரிக்காத சிறீலங்கா அரசும் அதன் காவல்துறையும் முன்னாள் போராளிகளை நோக்கி கையை காண்பித்திருந்தது.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு எவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மற்றும் எவ்வாறு தமிழ் மக்களை பொய்யாக தண்டிக்கின்றது என்பதற்கான அண்மையா சாட்சியமாக முன்னாள் போராளி அஜந்தன் உள்ளார்.

முன்னாள் போராளி அஜந்தன் கைது செய்யப்பட்டு ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கபட்டிருந்தார். சிறீலங்காவில் தடுப்புக்காகவில் உள்ள அரசியல் கைதிகளைப் போலவே அவரும் விசாரணைகள் இன்றி மற்றும் குற்றங்கள் உறுதிப்படுத்தாத போதும் தடுத்துவைக்கபட்டிருந்தார்.

விசாரணைகள் இன்றி தடுத்து வைப்பதற்கு சிறீலங்கா அரசிடம் உள்ள ஓரே ஆதாரம் தமிழர் என்ற சிறுபான்மை இனம் மற்றும் முன்னாள் போராளி என்ற பெயர். ஆனால் தற்போது வவுணதீவு தாக்குதலை மேற்கொண்டது சிறீலங்கா அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் துணையுடன் இயங்கி வரும் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது.

சிறீலங்கா படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்ட இந்த அமைப்பே கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியிருந்ததுடன், அந்த தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழ் கிறிஸ்த்தவ மக்களை நோக்கி இலக்குவைப்பட்ட இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்கள்.

கைது செய்யப்பட்டவர்களே தற்போது வவுணதீவுத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் பொய் வழக்குகள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகி உள்ளது. அதாவது தமிழ் மக்களை நீதிக்குப்புறம்பாக சிறீலங்கா அரசு தண்டித்து வருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிக்குப்புறம்பான கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் போகச் செய்தல் என்பவற்றை சிறீலங்கா அரசு அப்பாவித் தமிழ் மக்கள் மீது எவ்வாறு நிகழ்த்துகின்றது என்பதை அனைத்துலக சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும் இதன்மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாது இந்த சம்பவத்தை தமிழ் அமைப்புக்கள் அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதுடன், சிறீலங்காவில் உள்ள சட்டங்களை சிறீலங்கா அரச படையினர் எவ்வாறு தமிழ் மக்கள் மீது தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் நாம் வெளிஉலகின் முன் கொண்டுவரவேண்டும் என அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறீலங்கா அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், இவ்வாறான பழிவாங்கல் மற்றும் நீதிக்குப் புறம்பாக சாட்சியங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்டவர்களே. எனவே அவர்களையும் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
ஒரு சிறுபான்மை இனமக்களை சாட்சியங்கள் எதுவுமின்றி எழுந்தமானமாக கைது செய்வதும் விசாரணைகள் இன்றி குற்றங்களை உறுதிப்படுத்தாது தடுத்து வைப்பதும் இன ஒடுக்குமுறையின் வடிவங்களே.

அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் துன்புறுத்தப்பட்டவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு மீது சுயாதீன விசாரணைகளுக்கான கோரிக்கையை நாம் முன்வைப்பதுடன், அதற்கான ஆதரவுகளையும் அனைத்துலக மட்டத்தில் திரட்டவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அச்சத்தில் சிறீலங்கா படையினர் – தென்னிலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் சிறீலங்கா படைத்தரப்பையும், அரச தரப்பையும் கடுமையான அச்சத்திற்குள் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக அச்சத்துடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா படையினர் பல இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று (11) காலை தென்னிலங்கையில் உள்ள வத்தளை குனுபிட்டியா பகுதியில் சிறீலங்கா படையினரின் சோதனை நிலையத்தில் நிற்காமல் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறீலங்கா கடற்படைனர் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிறிதொரு இடத்தில் சோதனை நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் ஒரு சாரதி படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப். கொமாண்டர் இசுறு சூரியபண்டாரா.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு – பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவுதினம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று பிரித்தானியாவில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தில் நேற்று (10) இடம்பெற்றிருந்தது.

இந்த கருத்தரங்கின் போது சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சி ஒன்று உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரும், பி.பி.சி ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளருமான பிரான்ஸிஸ் ஹரிசனினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக உறவுகள் கற்கைநெறிக்கான விரிவுரையாளர் மார்ச் லெஃபி தலைமை தாங்கியிருந்தார். மார்க் அரசியல் மற்றும் அனைத்துலக கற்கை நெறிக்கான திணைக்களத்தின் தலைவருமாவார்.

மேலும் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் தலைவரும், சிறீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஜஸ்மின் சூகா அவர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

london confe முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு – பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வுஅனைத்துலக மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் சட்ட நிபுணர் றுபேட் ஸ்கில்பெக்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் மேதல்களும், நீதியும் மற்றும் உரிமைகளுக்குமான மையம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

சிறீலங்கா விமானநிலையப் பாதுகாப்பு அதிகரிப்பு – மேலும் தாக்குதல்கள் நடக்கலாம்?

கட்டுநாயக்கா விமாநிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசு நேற்று (10) அறிவித்துள்ளது. அதற்குரிய அறிவுறுத்தல்களையும் சிறீலங்கா அரசின் விமான போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் விமானச் சேவையை பாதிக்காது எனவும்இ ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறீலங்காவின் விமானப் போக்குவரத்து துறை தலைவர் தம்மிக்க ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இந்த வடிவடிக்கைகள் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் அதனை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காப் படையினரும் அதிகளவில் விமான நிலையத்தில் நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் புதிய நடைமுறைகளின் பிரகாரம் பயணிகள் நான்கு மணிநேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். பயணிகளை தவிர்ந்த ஏனையோர் விமான நிலையத்திற்குள் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன்இ வாகனங்களுக்கும் அதிகளவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுதுவதுடன்இ சிறீலங்காவின் சுற்றுலாத்துறையையும் அது கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் ஆவணங்களை தேடும் சிறீலங்கா படையினர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது

இதன்போது நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொலீசார்,  படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலக அதிகாரிகள்,கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் குறித்த காணிப்பகுதியில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை.

 முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பின் பத்தாவது வருடத்தை நினைவுகூரும் முயற்சிகளை தமிழ் மக்கள் மேற்கொண்டுவருகையில் அதனை சீர்குலைக்கும் வகையில் சிறீலங்கா அரசும் அதன் படைகளும் வடக்கில் கைதுகள் மற்றும் தேடுதல்கள் என்ற போர்வையில் வன்முறைகளை மேற்கொண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

vlcsnap 2019 05 08 13h57m47s887 விடுதலைப்புலிகளின் ஆவணங்களை தேடும் சிறீலங்கா படையினர்

கொழும்பு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி மரணம்

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள சங்கரி-லா ஆடம்பரவிடுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரி செல்சியா டெகமின்டா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்ததுள்ள நிலையில் அது பலனளிக்காது மரணமடைந்துள்ளதாக ஏ.எப்ஃபி செய்தி நிறுவனம் இன்று (9) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாதம் 21 ஆம் நாள் சிறீலங்காவின் தலைநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ள மூன்று ஆடம்பர விடுதிகளிலும் மூன்று தேவாலயங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலைத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதல்களில் 258 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள். டியூக் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த செல்சியா அமெரிக்காவின் வர்த்தகத் திணைக்களத்தில் பணிபுரிந்திருந்தார். அதன் பின்னர் சிறீலங்காவில் பணியாற்றும் நோக்கத்துடன் அவர் அண்மையில் சிறீலங்கா வந்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சங்கரி-லா விடுதியில் இரண்டு தற்கொலைதாரிகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த செல்சியாவை அமெரிக்க அதிகாரிகள் விமனம் மூலம் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தனர். ஆனால் அவர் சிகிச்சைகள் பலனளிக்காததால் அங்கு கடந்த வார இறுதியில் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு சிறீலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெபிலிஸ் தனது அஞ்சலிகளை செலுத்தியதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் தான் அஞ்சலிகளை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நாம் இழப்புக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தும் அதேசமயம், தீவிரவாத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராடவேண்டும் என அமெரிக்காவின் வர்த்தகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, ஆனால் நாடு தற்போதும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள இந்த முரன்பட்ட கருத்தும், விரைவில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என சிறீலங்கா அரசியல்வாதிகள் தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துக்களும் அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா தொடர்பில் விசனங்களை தோற்றுவித்துள்ளதுடன், சிறீலங்காவிற்கு செல்லும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா ஆயுத சோதனை: ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில் இருந்து அதாவது வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 4.30 மணி அளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தென்கொரிய கூட்டு படைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவுகணை ஏவப்பட்டதாக கூறிய தென்கொரிய ராணுவம், மேலதிக விவரங்களை வெளியிடவில்லை

அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான சலுகைகளை வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவே வடகொரியா இந்த ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது எனக் கருதப்படுகிறது.

முடங்கியுள்ள அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி பேசுவதற்காக அமெரிக்க தூதர் தென்கொரிய தலைநகர் சோலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

கிம் முன்வைத்த மோசமான ஒப்பந்தம் என்று விவரிக்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தையில் இருந்து அதிபர் டிரம்ப் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

படம்: பி.பி.சி.

லத்தீன் அமெரிக்கா (இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு)

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது.அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழ பேராசிரியரான ஜோன் சாள்ஸ் செய்டின் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Born in Blood and Fire என்ற நூலின் தமிழாக்கம் இது.

கியூபா, பொலிவியா, வெனிசுவேலா, பிரேசில், அர்ஜென்டினா என லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தத்தை உறிஞ்சிய வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கொடுமைகள் நிறைந்த வரலாற்றினையும் அதனை எதிர்த்து நின்ற லத்தீன் அமெரிக்க மக்களின் போராட்ட வரலாற்றினையும் இந்த நூல் ஆராய்கிறது. திரிக்கப்பட்ட பொய் வரலாறுகளை அம்பலமாக்கி> உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நூலக இது அமைந்துள்ளது. 2001 இல் வெளிவந்த இதன் முதற்பதிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து இருவரை மேலும் மூன்று பாதிப்புகள் வெளிவந்துள்ளன.

இத்தகைய ஒரு நூல் தமிழில் கிடைப்பது ஒரு சிறப்பான விடயமே. லத்தின் அமேரிக்காவின் வரலாற்றில் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.இந்த நூலை தமிழின உணர்வாளரும் எழுத்தாளருமாகிய கலாநிதி .ந. மாலதி தமிழாக்கம் செய்துள்ளார். இத்தகையதொரு நூல் தமிழர்கள் அனைவரின் வீடுகளிலும் இருப்பது பயனுள்ளதாகும்.

சிறிலங்காவிலுள்ள வெளிநாட்டு அகதிகள் பிரச்சினை-ஐ.நா அதிகாரிகளுக்கு மைத்திரி விளக்கம்

சிறீலங்கா ஜனாதிபதி தனது செயலகத்தில் ஐ.நா.பிரதிநிதிகள், அமைப்பு க்கள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்களையும் சந்தித்தார்.

நாட்டில் 1,600 அயல்நாட்டு அகதிகள் இருப்பதாகவும், தற்போதைய சூழல்களில் அவர்களைக் கவனித்துக் கொள்வதில் கஷ்டங்கள் இருப்பதாகவும் சிறீலங்கா ஜனாதிபதி விளக்கினார்.

ஒரு ஏற்கத்தக்க தீர்வைக்காண ஐ.நா. பிரதிநிதிகள் முடிந்த வரை விரைவில் முயற்சிப்பர் என்று உறுதியளித்தார். இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பற்றியும், நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் பற்றியும் சிறீலங்கா ஜனாதிபதி விளக்கினார். இந்த நேரத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக சர்வதேச சமூகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தற்போதைய வெற்றிகரமான செயற்பாடு மற்றும் உளவுத் துறையின் வெளிநாட்டு நிபுணத்துவத்தின் உதவியுடன், பயங்கர வாதத்தின் அச்சுறுத்தலானது விரைவில் சீர்குலைக்கப்படலாம் என தான் நம்புவதாக சிறீலங்கா ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல்கள் குறித்து அவர் குறிப்பிடும் போது, சில இனவாத கட்சிகள் அமைதி யின்மையை தூண்டி விடுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களை மீது இனஅழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுகள் அவர்களை அகதிகளாக்கி உலகம் எங்கும் அலையவிட்டிருந்தன. இந்த நிலையில் வெளிநாட்டு அகதிகள் மீது அக்கறை காண்பிப்பதுபோல நடிப்பது அனைத்துலகத்தை ஏமாற்றி உதவிகளை பெறும் நோக்கம் கொண்டது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி

அணு மின் உற்பத்தி செய்த பிறகு மீதி இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளில் விற்றுவிடுவதற்கு பதிலாக  நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஏனைய தரப்புகள், தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோஃப் கூறியுள்ளார்.

அறுபது நாட்களில் உயரிய நிலையிலான யுரேனிய செறிவூட்டலை மீண்டும் உருவாக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு அதில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரானும், ரஷ்யாவும் வலியுறுத்திய சற்று நேரத்திற்கு பின்னர் இந்த கூற்று வந்துள்ளது.

ஈரான் எடுத்துள்ள முடிவை அணுசக்தி ஒப்பந்தத்தின் பிற உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது முதல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சை தோன்றியது.

ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றி கொள்வதாக கூறி ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் கூட்டு விரிவான திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் ஈரான் பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கு பதிலாக தனது அணுசக்தி நடவடிக்கைகளை குறைக்க ஒப்புக்கொண்டது.

அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்ததால், ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பட உதவி: பி.பி.சி.