சிறிலங்காவிலுள்ள வெளிநாட்டு அகதிகள் பிரச்சினை-ஐ.நா அதிகாரிகளுக்கு மைத்திரி விளக்கம்

சிறீலங்கா ஜனாதிபதி தனது செயலகத்தில் ஐ.நா.பிரதிநிதிகள், அமைப்பு க்கள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்களையும் சந்தித்தார்.

நாட்டில் 1,600 அயல்நாட்டு அகதிகள் இருப்பதாகவும், தற்போதைய சூழல்களில் அவர்களைக் கவனித்துக் கொள்வதில் கஷ்டங்கள் இருப்பதாகவும் சிறீலங்கா ஜனாதிபதி விளக்கினார்.

ஒரு ஏற்கத்தக்க தீர்வைக்காண ஐ.நா. பிரதிநிதிகள் முடிந்த வரை விரைவில் முயற்சிப்பர் என்று உறுதியளித்தார். இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பற்றியும், நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் பற்றியும் சிறீலங்கா ஜனாதிபதி விளக்கினார். இந்த நேரத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக சர்வதேச சமூகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தற்போதைய வெற்றிகரமான செயற்பாடு மற்றும் உளவுத் துறையின் வெளிநாட்டு நிபுணத்துவத்தின் உதவியுடன், பயங்கர வாதத்தின் அச்சுறுத்தலானது விரைவில் சீர்குலைக்கப்படலாம் என தான் நம்புவதாக சிறீலங்கா ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல்கள் குறித்து அவர் குறிப்பிடும் போது, சில இனவாத கட்சிகள் அமைதி யின்மையை தூண்டி விடுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களை மீது இனஅழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுகள் அவர்களை அகதிகளாக்கி உலகம் எங்கும் அலையவிட்டிருந்தன. இந்த நிலையில் வெளிநாட்டு அகதிகள் மீது அக்கறை காண்பிப்பதுபோல நடிப்பது அனைத்துலகத்தை ஏமாற்றி உதவிகளை பெறும் நோக்கம் கொண்டது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.