சிறீலங்கா விமானநிலையப் பாதுகாப்பு அதிகரிப்பு – மேலும் தாக்குதல்கள் நடக்கலாம்?

கட்டுநாயக்கா விமாநிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசு நேற்று (10) அறிவித்துள்ளது. அதற்குரிய அறிவுறுத்தல்களையும் சிறீலங்கா அரசின் விமான போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் விமானச் சேவையை பாதிக்காது எனவும்இ ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறீலங்காவின் விமானப் போக்குவரத்து துறை தலைவர் தம்மிக்க ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இந்த வடிவடிக்கைகள் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் அதனை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காப் படையினரும் அதிகளவில் விமான நிலையத்தில் நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் புதிய நடைமுறைகளின் பிரகாரம் பயணிகள் நான்கு மணிநேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். பயணிகளை தவிர்ந்த ஏனையோர் விமான நிலையத்திற்குள் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன்இ வாகனங்களுக்கும் அதிகளவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுதுவதுடன்இ சிறீலங்காவின் சுற்றுலாத்துறையையும் அது கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.