கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் தமிழரசு கட்சியின் மே தின பேரணிகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமை வகிக்கவுள்ளதோடு கட்சியின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்புக் கூட்டம் பெரியகல்லாறு சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.