Home Blog Page 2721

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்…

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன.

பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில் மாணவர்களே நான் தருகின்ற விடயத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றேன்.

மாணவர்கள் ஆவலோடு சேர் என்ன கட்டுரை என்று கேட்டனர்.

என்னிடம் இப்போது இருந்தால்… என்று கற்பனைக் கட்டுரை எழுதுங்கள் என்று கூறினேன்.

அவ்வளவுதான் மாணவர்கள் ஆர்வத்தோடு கட்டுரை எழுதத் தொடங்கி 30 நிமிடங்களுக்குள் பூர்த்தியாக்கினர்.

மாணவர்களிடம் இருந்து குறித்த கட்டுரைகளை வாங்கும்போது அவர்கள் இட்ட தலைப்புக்களை அவதானித்தேன்.

என்னிடம் விமானம் இப்போது இருந்தால் என்று ஒரு மாணவன் எழுதியிருந்தான். என்னிடம் நாட்டை ஆளும் அதிகாரம் இப்போது இருந்தால் என்பது இன்னொரு மாணவனின் கட்டுரை.

மற்றொரு மாணவன் இட்டிருந்த தலைப்பு என்னைத் திகைக்க வைத்தது. என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால் என்பதுதான் அவன் இட்ட தலைப்பு.

தலைப்புத் தந்த ஆச்சரியத்தோடு அந்த மாணவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால் அதனைப் பெறுமதியாகப் பயன்படுத்துவேன்.

அதன்மூலம் எங்கள் மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ முடியும்.
இதை நான் எழுதும்போது ஏ.கே.47 ஆயு தத்தால் எப்படி நிம்மதியான வாழ்வை உருவாக்க முடியும் என்று இதைப் படித்துப் பார்க்கின்ற என் ஆசிரியர் தனக்குள் கேள்வி எழுப்பலாம்.

அந்தக் கேள்விக்கான பதிலையும் நான் தந்தாக வேண்டும்.
இன்று ஈழத் தமிழ் மக்கள் நாதியற்று இருப்பதற்குக் காரணமே நான் கூறிய ஏ.கே.47 எங்களிடம் இல்லாததுதான்.

அது இருந்திருந்தால்; தமிழ் அரசியல்வாதிகள் என்னிடம் வந்து, வரவு செலவுத் திட்டத் துக்கு ஆதரவு வழங்கலாமா? நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க முடியுமா? நீங் கள் சொல்வதன்படி நாங்கள் செய்கிறோம் என்று கைகட்டி நின்றிருப்பர்.

என்ன செய்வது அந்த 47 இல்லாததால், தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றி இம்மியும் சிந்திக்காமல் தங்கள் பாட்டில் எங்கள் அரசியல்வாதிகள் நடக்கின்றனர்.

தவிர, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து விகாரை கட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்.

இருந்தபடி இருக்க விடுங்கள். இல்லையாயின் உங்கள் காயத்தை மாற்ற வேண்டி வரும் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பேன்.

அவ்வளவு தான் எல்லாம் சரியாக நடக்கும். இவற்றுக்கு மேலாக, இன்னும் சிலருக்கு ஏ.கே.47 பதிலளிக்கும்.

அதில் நுண்கடன் வழங்கிவிட்டு பாலியல் இலஞ்சம் கேட்பவர்கள் முன்னுரிமை பெறுவர் என்று அந்த மாணவனின் கட்டுரை இருந்தது.

கட்டுரையைப் பார்த்து விறுவிறுத்துப் போன நான் அதனைக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு ஏதும் நடக்காதது போல இருந்து கொண்டேன்.

நன்றி: வலம்புரி

ஆலயங்கள் மீதான பௌத்தமயமாக்கலை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்

இந்து சமய ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை கண்டித்து எதிர்வரும் 03ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

சமீப காலமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களான வெடுக்குநாரி சிவன் கோவில், கன்னியா பிள்ளையார் ஆலயம், கந்தப்பிள்ளை விநாயகர் ஆலயம் போன்றவையும், திருக்கேதீஸ்வர ஆலய வளைவு பிற மதத்தவர்களால் அழிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு வருவதாலும் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதும் இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செயல்களை கண்டித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் எதிர்வரும் சனிக்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் நல்லை ஆதீன முன்றலில் இந்து அமைப்புக்களின் ஒன்றியமும் இந்து சமயப் பேரவையும் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அமைதிவழி செயற்பாட்டில் அனைத்து இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய அறங்காவலர், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு இந்துக்களின் மனஉணர்வுகளை வெளிப்படுத்தி வன்முறையாளர்களின் அத்துமீறல்களை அவர்களுக்கு உணர்த்த முன்வருமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கலை இலக்கியப் பேரவை மாநாடு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ். பிரதேசப் பேரவை மாநாடும் உறுப்பினர் இணைவும் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் உள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில், தேசிய கலை இலக்கியப் பேரவை தலைவரும், தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த மக்கள் கலை இலக்கியச் செயற்பாட்டில் இணைந்து இயங்க விரும்புகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆரமவலர்கள் அனைவரையும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைத்துள்ளனர்.

சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவிந் எந்தவொரு பகுதியையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமாட்டாது என அமெர்க்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்க உதவுவதன் மூலம் சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்களிக்க அமெரிக்கா விரும்புகின்றது. புனரமைக்க முன்மொழியப்பட்ட அனைத்து வீதிகளின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை சிறிலங்காவே வைத்துக் கொள்ளும். எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா சொந்தமாகவோ, கட்டுப்படுத்தவோ, நிர்வகிக்கவோ மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு எதிர்வரும் செம்டெம்பர் 7ஆம் திகதி அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் மக்கள் பேரவையின்  ஏற்பாட்டில் எதிர்வரும்  செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும் பேரினவாத சக்திகளின் கபடத்தனத்தையும் உலகறியச் செய்கின்ற  மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமாகும்.

இலங்கை மண்ணில் பெரும்பான்மை இனத்தின் ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை ஏமாற்றி காலம் கடத்துகின்ற தந்திரோபாயத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்தேறிய யுத்தம் தமிழின அழிப்புக்கானது என்பதைச் சர்வதேச சமூகம் ஏற்றுள்ள போதிலும்  தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புகளுக்கும் அவலங்களுக்கும் இன்னும்  நீதி கிடைக்கவில்லை என்பதை நடுநிலை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்வர்.

நல்லாட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்று   உறுதியளிக்கப் பட்டது. ஆனால் எதுவுமே நடந்தாகவில்லை. மாறாகப் புதுப் புதுப்பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின்பால் தமிழ்மக்களைத் திசை திருப்பி தமிழ்மக்களை உளவியல் ரீதியில் தாக்குகின்ற மிக மோசமான நடவடிக்கைகளை  பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தும்  செய்து கொண்டே இருக்கின்றனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தமும் அப்படியே நின்று போயிற்று. அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பிய தமிழ் அரசியல் தரப்புகளும்  இப்போது கைவிரித்து,  இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டனர் என்ற உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுள்ளன.

இவைதவிர,  காணாமல் போனவர்களின் உறவுகள் இன்றுவரை  தங்கள் உறவுகள் எங்கே?, அவர்களுக்கு நடந்தது என்ன? என்று கேட்கின்றனர். மனிதவுரிமைகள் பற்றி அதிகமாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில்;  காணாமல் போன எங்கள் தமிழ் உறவுகளுக்கு நடந்தது என்ன? என்பதைக்கூட அறிய முடியாத அளவில் எங்கள் அவலங்கள் அவதானிக்கப்படாதவையாக ஆக்கப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் தமிழின விரோத செயற் பாடுகளைக் கண்டும் காணாமல் விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமை சர்வதேச சமூகத்திடம் இருப்பது  வேதனைக்குரியது.

ஆயினும் இத்தகையதோர் நிலைமைக்குப் பின்னால், பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்ற அதர்மங்களும் அட்டூழியங்களும் வலுவான முறையில்  சர்வதேசத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும்  முன்வைக்கப்படவில்லை என்பதை  ஏற்றுத்தானாக வேண்டும்.

இவைதவிர, தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக எத்தனையோ தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களை சிறைகளில் முன்னெடுத்தனர்.  ஆனால்  இன்றுவரை  அவர்களுக்கு விடுதலை வழங்கப்படவில்லை என்றால், எங்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எவ்வாறாக  உள்ளதென்பதை  எவரும் புரிந்து கொள்ளமுடியும்.

இவையாவற்றுக்கும் மேலாக, தமிழர்களின் வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களை ஆக்கிரமிப்பதும் பௌத்த விகாரைகளை அமைப்பதும் அதனூடு தமிழர்களின் வரலாற்றுச் சான்றாதாரங்களை அழிப்பதும்  குறித்த இடங்களில் ஏலவே பௌத்த விகாரைகள் இருந்துள்ளன என்றும் அவை பௌத்த சிங்கள வரலாற்றிடங்கள் என்றும் பொய்ப்பிரசாரம் செய்கின்ற கொடுமைத்தனம்  வேகமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதன் உச்சமே கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை அமைக்கின்ற  நடவடிக்கையாகும்.
இந்நிலையில் தடுக்கவும் தட்டிக்கேட்கவும் தமிழர்கள் நாதியற்றவர்கள் என்று நினைக் கும் பேரினவாதத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

அதிலும் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களும் ஒன்றுபட்டு தங்கள் உரிமைக்காகப் பேரெழுச்சி கொண்டெழுவர் என்பதை  உலகிற்கு உறுதியாகச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில்  நாம் இருக்கின்றோம்.

இந்நிலையில் எமக்குள் இருக்கக்கூடிய அகமுரண்பாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு அரசியல் பேதங்களை மறந்து, எம் தமிழினம் சுதந்திரத்தோடும் உரிமையோடும் வாழவேண்டும். எங்கள் இனத்திற்கு அவலம் இழைத்தவர்கள் தண்டனை பெற வேண்டும். இன்றுவரை கண்ணீரும் கம்பலையுமாய் அலையும் எங்கள் உறவுகளின் துயரம் தீர்க்கப்படவேண்டும்;. தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பற்ற தமிழர் தேசமாக எழுந்து நிற்கவேண்டும் என்ற ஒரே இலக்குடன் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செப்டெம்பர் 7 ஆம் திகதி  நடைபெறும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டுமென தமிழ்மக்கள் பேரவை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும்  கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது  அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில்  பங்கேற்க வேண்டும் என்பதாகும்.

இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ்மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை.எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம்  திகதி  வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் தமிழ் மக்களின்  மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகள், அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், மதபீடங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய, கடற்றொழில் சங்கங்கள், சமாசங்கள் என அனைத்து அமைப்புகளும் ஒன்றாகத் திரண்டெழுந்து தமிழர்களின்  எழுச்சிப் பிரவாகத்திற்கு  உத்வேகம் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்கு மேலாக, தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும்  அநீதி கண்டு கொதிப்படைகின்ற முற்போக்கு சக்திகள் சிங்கள- முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்கவே செய்கின்றன.எனவே தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற  சிங்கள, முஸ்லிம்  முற்போக்கு அமைப்புக்கள் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் தங்கள் தார்மீக ஆதரவை வழங்குவதோடு அவர்கள் கலந்துகொள்ளவும் வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில்  தமிழ்மக்கள் பேரவை கேட்டு நிற்கிறது.

அன்பார்ந்த தமிழ்மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு  தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடு விக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது.

இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று எங்கள் அவலத்தை உலகறியச் செய்வோம். இது தமிழினம் வாழ்வதற்கான  எழுகை.

உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால்  செப்டெம்பர் 7 ஆம் திகதி  பேரலையாய் எழுந்து  பேரணியில் கலந்து  கொள்ளுங்கள் என  தமிழ் மக்கள் பேரவை உங்களை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது

 

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானில் காவல்துறை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று (30) மாலை கெட்டா பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது உந்துருளியில் வந்த தற்கொலையாளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அது காவல்துறை வாகனத்தை குறிவைத்தே காவல் நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்ததாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இரு காவல்துறை அதிகாரிகளும் அப்பாவி மக்கள் மூவரும் கொல்லப்பட்;டதுடன். பல காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக இவ்வாறான பல தாக்குதல்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா தாயக உறவுகளின் மத்தியில் மேலெழுந்துள்ளதோடு பாரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது ஆட்சிப்பீடத்தில் இருப்பதற்கு எந்தவிதமான நிபந்தனைகளையோ, உடன்படிக்கைகளையோ செய்யாது வரவுசெலவுத்திட்டங்கள், பெரும்பான்மையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள், நம்பிக்கை இல்லாப்பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கள் உள்ளிட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமிழர்களையும் மறந்து தேசியத்தினையும் இழந்து காவல்தெய்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது. எத்தனையோ விமர்சனங்களும், வினாக்களும் பொதுவெளிகளிலும், ஊடகங்களிலும், ஏனைய பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டபோதும் அமைதியாக குஞ்சை அடைகாப்பது போன்று ஐ.தே.க அரசாங்கத்தின் மீது எந்தவிதமான கீறல்களும் விழாது பாதுகாத்து வந்திருந்த கூட்டமைப்பு இந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தான் பாதுகாத்து வந்திருந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடக்கம் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் சரவெடியாக அடுக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டது என்கிறார் தீடீரென விழித்தெழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மைத்திரி நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டார் என்கிறார் கம்பெரலிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா.

தமிழர் தாயகத்தில் பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பால் அழிவடையும் இந்து மதத்தைக் காப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்கிறார் தமிழ் மக்களின் அதிக ஆணைபெற்றவர் என்று மார்பு தட்டிவரும் சிறிதரன், புதிய அரசியலமைப்பு வராது விட்டால் நாடு பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்கிறார் சுமந்திரன்.

மைத்திரியும், ரணிலும் ஏமாற்றிவிட்டதால் அரசாங்கத்தினை பதவியில் தொடரவைப்பதா இல்லையான என்ற கோணத்தில் செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், கோடீஸ்வரன் என தமது மனதுக்குப்பட்டவகையில் அரசுக்கு எதிரான வார்த்தைகளை அள்ளிவீசுகின்றார்கள். சனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்காக ரணில் அரசாங்கத்தினை ஆட்சியில் அமரவைத்திருக்கின்றோம்.

யானை ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் அதன் பாகனாக இருக்கும் கூட்டமைப்பின் அங்குசத்தின் சுட்டுக்களிலேயே அது நகர்கின்றது என்று பூடகம் போட்டவர்கள் ஏன் இவ்வாறு திடீரென்று அரச எதிர்ப்புவாத கருத்துக்களை காட்டுத் தீயாய்ப் பரவ விடுகின்றார்கள் என்ற சந்தேகம் அனைவரினதும் மனதில் இயல்பாகவே எழுகின்றது. சிறீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய சனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ranil sampanthan தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்மறுபக்கத்தில் இனப்படுகொலையை அரங்கேற்றிய மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி தனது சனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்குரிய முனைப்புக்களைச் செய்துவரும் அதேநேரம் ஆரம்பகாலம் தொட்டு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக தமிழர்களை நசுக்கி வரும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 5ஆம் திகதி தனது புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை நிகழ்வையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் கட்சிகள் ஐ.தே.க தரப்புடன் இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் கூட்டமைப்பும் பெரும்பாலும் அவ்வாறான முடிவொன்றையே எடுக்கவுள்ளது. மகிந்த இனவழிப்புக்கு காரணமாக இருந்தவர் என்பதால் அவரை ஆதரிக்க முடியாது என்பதில் நியாயமான காரணம் இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப் பதற்கு கூட்டமைப்பிடம் நியாயமான காரணங்கள் எதுமே இல்லை.

மேலும் தற்போதும் அக்கட்சியின் அரசுக்கு எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி சரணாகதியடைந்து ஆட்சியில் அமர்வதற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு சனாதிபதி தேர்தல் உட்பட அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்களிடத்தில் வாக்குகளை கேட்டுச் செல்வதற்கு எவ்விதமான விடயங்களும் கையில்லை. உரிமைகளை பெற்றுத்தருவோம் என்றோ அல்லது அபிவிருத்தியை பெற்றுத்தருவோம் என்றோ கூறி தாம் சார்ந்திருக்கும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த பெருந்தேசியவாத கொள்கையைக் கொண்ட ஐ.தே.கவுக்கு வாக்குகளை சேகரிக்க முடியாது.

யானையின் தும்பிக்கையாக இருக்கும் தம்மீது தமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை பட்டவர்த்தனமாக புரிந்திருக்கும் கூட்டமைப்பு தேர்தல்களுக்கு முன்னதாக மக்களிடத்தில் செல்வதற்கான வழியை அமைப்பதற்காகவே இத்தகைய எதிர்ப்பு வாத அரசியல் நாடகமொன்றை மெல்லென அரங்கேற்ற ஆரம்பித்தள்ளது என்பது வெளிப்படையாகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில், வரவு செலவுத்திட்டங்களுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியது, மூன்று தடவைகளுக்கு மேலாக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்து, ஐ.தே.க அரசாங்கத்தினை காப்பாற்றியது, ஒக்டோபர் புரட்சியின் போது எவ்விதமான நிபந்தனையுமின்றி ஆட்சியமைப்பதற்கு கைகொடுத்திருந்தது, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மையுடன் இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற மக்கள் ஆணை பெற்ற கோட்பாட்டை கைவிட்டு ஒற்றை ஆட்சிக்குள் தீர்வினை தேட விளைந்தது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயம் உட்பட தாயக தமிழர்கள் முகங்கொடுக்கும் எந்தவொரு ஆக்கிரப்புக்கள், கையகப்படுத்தல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக எந்தவிதமான சனநாயகப் போராட்டங்களையோ அல்லது முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவையோ வழங்காதும் இருந்தது.

இவற்றை விடவும், ரணங்களைச் சுமக்கும் எந்தவொரு உறவுகளின் மனங்களில் உள்ள வேதனைகளையும் உணராது சர்வதேச அரங்கில் நீதிகோரலுக்காக நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையும் நீர்ப்புறச்செய்து தான் முண்டுகொடுக்கும் அரசாங்கம் மூச்சுவிட்டுச் செயற்படுவதற்காக செவ்வனே காப்பாற்றியிருந்தது கூட்டமைப்பு. இவ்வளவு தூரம் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து விட்டு எவ்வாறு தாயகத்தில் உள்ள உறவுகளிடத்தில் மீண்டும் தமக்கோ அல்லது தாம் சார்ந்த தென்னிலங்கை தரப்பினருக்கோ வாக்குகளை கோருவது. ஆகவே தான் மகிந்தவை பரம விரோதியாகவும், தாம் தற்போது சார்ந்திருக்கும் தென்னிலங்கை தரப்பினை மென்வலு விரோதியாகவும் சித்தரித்து பகிரங்க வெளியில் எதிர்ப்புக்குல் எழுப்பும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

உரிமைகளுக்காகவும், அபிலாசைகளுக்காகவும் ஏழு தசாப்தத்திற்கும் மேலாகவும் காத்திருக்கும் பாரம்பரியம் கொண்ட தன் இனத்தினையே இலகுவாக ஏமாற்றி தமது அரசியல் இருப்பினையும் சுகபோகத்தினையும் பாதுகாக்க விளையும் அரசியல் தரப்புக்களின் மாய வித்தை என்பது தாயக உறவுகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். ஆகவே இந்த எதிர்ப்புவாத அரசியல் சரசரப்புக்களுக்கு ஒருபோதும் பனங்காட்டு நரிகள் அஞ்சப்போவதுமில்லை. சோரம்போகப் போவதுமில்லை என்பது திண்ணம்.

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது – அனைத்துலக மன்னிப்புச்சபை

முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஊடகவியலாளர் சக்திகா சத்குமார உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நேற்று (30) வெளியிட்ட அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பௌத்த ஆலயங்களில் பௌத்த துறவிகளால் பாலியல் துன்புறத்தல்களுக்கு உள்ளாகிய இளம் துறவிகள் தொடர்பில் பத்தி ஒன்றை எழுதி முகநூலில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட சத்குமார தற்போது 10 வருட சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

அமைதியான முறையில் தனது கருத்தை வெளியிட்டவரை கைது செய்துள்ளது ஊடக சுதந்திரத்தை மீறும் செயலாகும். எனவே அவர் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு ‘பிரேத பரிசோதனை’ – பூமிகன்

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் முற்பட்ட அதற்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது புதிய அரசியலமைப்பு மீதான ஒரு பிரேத பரிசோதனையாகவே இருந்தது. இதனைக் கொன்றது யார்? அதற்கு எவ்வாறு சமாதி கட்டப்பட்டது என்பதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக வாதிட்டுள்ளார்கள்.

“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததில் தெளிவான செய்தி ஒன்று பொதிந்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இடம்பெற்று, குற்றுயிராக – கோமா நிலையில் கிடந்த புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது என்பதுதான் அது. இன்னும் நான்கு மாதங்களில் சனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அது முடிந்து சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும். ஆக, இதற்கு முன்னதாக அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிளுக்குப் புத்துயிர் கொடுக்க முடியாது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் தீர்வு என பிரதமர் கூறியிருப்பது ஒரு புறம் அடுத்த தேர்தலை இலக்கு வைத்த வாக்குறுதியாக இருந்தாலும், மறுபுறத்தில் தற்போதைய அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மறைமுகமாக அறிவிப்பதாகவும் அமைந்திருந்தது.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவுக்கு ரணில்தான் தலைமை தாங்கினார். அதற்கான செயலகத்துக்குப் பொறுப்பாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவும், சுமந்திரனும் இருந்தார்கள். ஆக, அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது என்பது இவர்களுக்குப் புரியாமலிருக்காது.TH24WORLDSRILANKAPOLITICS புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு 'பிரேத பரிசோதனை' - பூமிகன்

பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்ட பின்னணியில், “புதிய அரசியலமைப்புக்கு என்னதான் நடந்தது?” என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதம் ஒன்றும் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த விஷேட கவனயீர்ப்புப் பிரேரணையையடுத்து வியாழன் வெள்ளி என இரண்டு நாட்களுக்கு இந்த விவாதம் இடம்பெற்றது. இந்தப் பிரேரணையின் மூலம் அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கே கூட்டமைப்பு முயன்றதாகத் தெரிகின்றது. ஏனெனில் கூட்டமைப்புக்கு அது தேவையாக இருந்தது.

அடுத்தமாதம் புதுடில்லி செல்வதற்கு கூட்டமைப்பு திட்டமிடுகின்றது. அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகள் ஒன்றுமே இல்லை – தேர்தல் தயாரிப்புக்கள்தான் நடைபெறுகின்றது என்றால், அங்கு சென்று பேசுவதற்கு எதுவுமே கூட்டமைப்புக்கு இருக்காது. அதனைவிட, புதிய அரசியலமைப்பில்தான் கூட்டமைப்பு தனது அரசியல் முதலீடுகளைச் செய்திருக்கின்றது. அதற்குச் சமாதி கட்டப்பட்டுவிட்டது என்றால், தேர்தலுக்கு முகங்கொடுக்கும் போது மக்களை எதிர்கொள்ள கூட்டமைப்பிடம் எதுவும் இருக்கப்போவதில்லை. அதனால்தான் இந்த விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தாலும், அரசியலமைப்பு குறித்த ஒரு பிரேத பரிசோதனைதான் இரண்டு நாட்களாகப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது எனச் சொல்லலாம். கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் இங்கு அவர்கள் காராசாரமாக நிகழ்த்திய உரைகள், மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவுத் தளத்தைத் தக்க வைப்பதற்குப் போதுமானது என அவர்கள் நம்பலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில், அதனை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. கடந்த மாதம் கூட ரணிலைப் பாதுகாத்தவர்கள் இப்போது வீராவேசமாகப் பேசுவதை நம்புவது எப்படி என்பதுதான் அவர்களுடைய கேள்வி!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழமைபோல ஆக்ரோஷமாக ஒன்றரை மணிநேரம் பேசினார். “புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் அதிகார பரவலாக்கம் குறித்தும் அரசாங்கம் உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு நம்பிக்கையற்றதொன்றாகிவிடும். புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகளை எடுத்துக்கொண்டு பிளவுபடாத நாட்டுக்குள் முறையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும்.  இல்லாவிட்டால் இந்த அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க முடியாதநிலை ஏற்படும்” என்பது சம்பந்தனின் எச்சரிக்கை. சம்பந்தன் இவ்வாறு எச்சரிப்பதும் பின்னர் ரணிலுடன் பேரம் பேசி ஆதரவளிப்பதும் வழமையானது என்பதால் அதனையாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.Sambandan புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு 'பிரேத பரிசோதனை' - பூமிகன்

அரசாங்கம் தனது பயணத்தின் இறுதிக்கு வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் மாற்றங்கள் வரப்போகின்றது. அரசியலமைப்பை உருவாக்கும் பணியின் ஆரம்பத்தில் சொல்லியிருக்க வேண்டியதை இறுதிக் காலத்தில் சொல்வதன் மூலம் சம்பந்தனால் எதனையும் சாதிக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

அரசியலமைப்பு பணி ஆரம்பமாவதற்கு முன்னரே, அதாவது 2015 இலேயே, “அடுத்த வருடத்தில் தீர்வு” என நம்பிக்கை வெளியிட்டவர் சம்பந்தன். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளைச் செய்வது, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலீடாகாது. புதிய அரசமைப்பைக் கொண்டுவராவிட்டால் நாடு இதுவரை சந்தித்திராத பேரழிவை எதிர்கொள்ளும். 70 ஆண்டுகளாக நாங்கள் தீர்வைப் பெற முயல்கிறோம். எங்களால் இயன்ற முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். எங்களுக்கு தேவை என்றபடியால் தான் நாங்கள் உச்சபட்ச ஒத்துழைப்பு மற்றும் விட்டுக்கொடுப்பை வழங்கியுள்ளோம். பிரதமரும் அரசும் தங்களின் பொறுப்பில் இருந்து நழுவி விட முடியாது” எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும் என்பதற்கு இலங்கையின் வரலாற்றில் 70 ஆண்டு கால அனுபவம் உள்ளது. எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளையே கிழித்தெறியும் அரசாங்கங்களை நாம் கண்டுவந்திருக்கின்றோம். தந்தை செல்வாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு தடவைகள் மீறப்பட்டன. மூன்று சந்தர்ப்பங்களில் மட்டும்தான் அதிகபட்சமான தீர்வுக்கு இலங்கையின் அரசாங்கங்கள் இறங்கிவந்திருந்தன.

ஒன்று – இந்தியாவின் அழுத்தத்தால் உருவான 13 ஆவது திருத்தம். இரண்டு – உள்ளக சுயாட்சிக்கு இணங்கிய ஒஸ்லோ உடன்படிக்கை, மூன்று சந்திரிகா தயாரித்த பிராந்தியங்களின் ஒன்றியம். இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் விடுதலைப் புலிகளின் பலம் அரசாங்கத்தை பணியவைத்தது. 87 இல் இந்தியாவின் தலையீடு 13 ஆவது திருத்தத்துக்கு காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அதாவது ஆயுத பலம் அல்லது, வெளிநாட்டு அழுத்தம்தான் அரசாங்கத்தைப் பணியவைக்கும். இல்லையெனில் பேரினவாத நிலைப்பாட்டில்தான் அரசு செல்லும். சிறீலங்கா அரசாங்கம் என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட பௌத்த –

சிங்கள கடும்போக்கால் நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒன்று. 2015 தேர்தலின் போது சம்பந்தனுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக சனாதிபதியும், பிரதமரும் புதிய அரசியலமைப்பைக்கொண்டுவந்து இன நெருக்கடிக்குத் தீர்வைத் தருவார்கள் என யாராவது நம்பியிருந்தால் அவர்கள் வரலாற்றைப் படிக்காதவர்களாக இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டபோதே, அதன் முகவுரையில் அதிகாரப்பரவலாக்கல் என்ற பதம் நீக்கப்பட்டது. அப்போதே இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது வெளிப்படையாகியது. அப்போதே உசாரடைந்து அதற்கேற்ற உபாயங்களை கூட்டமைப்புத் தலைமை வகுத்திருக்க வேண்டும்.

கல்முனை விவகாரத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு கொடுத்த வாக்குறுதியைக்கூட அரசாங்கம் காப்பாற்றவில்லை. ஆனால், கூட்டமைப்பின் வாக்குகளால் அரசு நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து தப்பியது. அந்த ஒரு சிறிய பிரச்சினைக்கே தீர்வு கிடைக்கவில்லை. கன்னியா, செம்மலை விவகாரங்கள் நீதிமன்றத்துக்குச் செல்கின்றன. இவற்றுக்குக் கூட அரசியல் ரீதியிலான தீர்வு இல்லை. இந்த நிலையில், இனநெருக்கடிக்கு அரசாங்கம் நியாயமான தீர்வைத் தரும் என கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றதா? கூட்டமைப்புக் கோரிய விவாதத்துக்குப் பதிலளிக்கக்கூட பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் யாரும் சபையில் இருக்கவில்லை. சம்பந்தன் பேசிய போது சபையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தார்கள்.

அரசியலமைப்பு குறித்த இந்த விவாதம் – அல்லது பிரேத பரிசோதனை இரண்டு விடயங்களைத் தெளிவாக்கியிருக்கின்றது. ஒன்று – சிங்களக் கட்சிகள் எவற்றுக்குமே இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. இரண்டு – அதனைத் தெரிந்து கொண்டும் பாராளுமன்ற ஆக்ரோச உரைகளின் மூலம் இழந்து போன தமது ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பவும், தமது தவறுகளுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் தலையில் போட்டுவிடுவதற்கும் கூட்டமைப்பு முயன்றுள்ளது.

கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.kanniya 2 கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன்  அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது  தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.

இதேவேளை இப்பகுதியில்  போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர்.