யாழ்ப்பாணத்தில் கலை இலக்கியப் பேரவை மாநாடு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ். பிரதேசப் பேரவை மாநாடும் உறுப்பினர் இணைவும் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் உள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில், தேசிய கலை இலக்கியப் பேரவை தலைவரும், தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த மக்கள் கலை இலக்கியச் செயற்பாட்டில் இணைந்து இயங்க விரும்புகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆரமவலர்கள் அனைவரையும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைத்துள்ளனர்.