Home Blog Page 2717

நல்லூரில் உருவாக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றி இன்று (04.08) பொலிசாரால் ஆராயப்பட்டது.  கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனை செய்வதன் பின்னரே அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கென யாழ். மாநகரசபையால் 3இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருந்தும் இன்னும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிசாரால் கோரப்பட்டுள்ளது.

எனினும் இந்த சோதனைக் கூடுகள் எங்கே வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இன்று ஞாயிற்றுக் கிழமை நேரில் ஆராய்ந்தனர். இவர்களுடன் யாழ். மாநகரசபை பொறியியலாளரும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வழமையாக அமைக்கப்படும் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காலம் விடுமுறைக் காலம் என்பதால் பல இலட்சம் மக்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

திருமலை துறைமுகத்தை குறிவைக்கின்றது ரஸ்யா கடற்படை

சிறீலங்காவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் கடற்படை ஒத்துழைப்புக்கள் பலமடைந்துள்ளதாகவும், முதல் தடவையாக சிறீலங்கா கடற்படைத் தளபதி ரஸ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரஸ்யா பாதுகாப்பு அமைச்சின் அழைப்பினை அடுத்தே சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கடந்த மாதம் 27 ஆம் நாளில் இருந்து 30 ஆம் நாள் வரையிலும் ரஸ்யாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சிறீலங்கா கடற்படைத்தளபதி ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இது ரஸ்யாவின் மிகப்பெரும் தலையீடாகவே கருதப்படுகின்றது. ரஸ்யா கடற்படையின் மிகப்பெரும் கடற்படை அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காகவே சிறீலங்கா கடற்படை அதிகாரிகள் கொண்ட குழு தனது பயணத்தை மேற்கொண்டிருந்தது.

ரஸ்யாவின் அதிபர் விளாமிடீர் பூட்டின் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ராஸ்யாவிற்கு சார்பான நாடுகளான இந்தியா, ஈரான், சிறீலங்கா, பங்காளாதேஸ், மியான்மார் உட்பட 13 நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றியிருந்தனர்.

சிறீலங்கா கடற்படையினரை தனியாக சந்தித்த ரஸ்யா கடற்படைத் தளபதி பல தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு உறுதிவழங்கியுள்ளார்.

மேலும் ரஸ்யா கடற்படை அதிகாரிகள் திருமலைத் துறைமுகத்திற்கு பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் சிறீலங்கா அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டுள்ளபோதும், இந்தியா அதனை தடுத்து ரஸ்யாவின் பக்கம் சிறீலங்காவை நகர்த்திவருகின்றது.

பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியா உதவும் – இந்திய வெளியுறவு அமைச்சர்

சிறிலங்காவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடுகளில் இந்தியா உதவி செய்யும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

02.08 அன்று பாங்கொக்கில் நடைபெற்ற ஆசியான் வருடாந்த மாநாட்டில் பின்னர் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முக்கியமாக பேசப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, பங்களாதேஸ், நிêசிலாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் பிரெட்ரிக்கா மொகரினியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கூட்டமைப்பினரின் முகத்திரைகள் கிழிக்கப்படும் ; முகவுரையாக சில விடயங்கள் – நாமல்

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, எம்மீது சேறுபூச விளைந்தால் ஒவ்வொரு தனி நபர்கள் பற்றிய பூரண விபரங்களையும் வெளியிட்டு தமிழ் மக்களின் முன் உங்களின் முகத்திரையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் தயங்கப்போவதில்லையெனவும் நாமல் சூளுரைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான எனக்கு தமிழர் வரலாறு தெரியாது என்றும்  நானொரு சின்னப்பையன் என்றும் தெரிவித்துள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரும் எம்மீது விமர்சனங்களையும் முன்வைத்துள்ள நிலையிலேயே அவர்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமாக நாமல் ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மை பற்றி விமர்சிக்க அவர்களிற்கு என்ன தகுதி உள்ளது என்ற கேள்வி எழுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான எனக்கு தமிழர் வரலாறு தெரியாது என்றும்  நானொரு சின்னப்பையன் என்றும் மாவை சேனாதிராஜா ஐயா கூறியுள்ளார்

அது உண்மைதான் அவரின் வயதுடன் ஒப்பிடும் போது நான் சின்னப் பையன் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தமிழர்கள் அவதியுற்ற காலத்தில் தனது குடும்பத்தை இந்தியாவில் பாதுகாப்பாக வைத்ததுடன் அவரது மகன் கலையமுதனை லண்டனில் படிக்க வைத்து விட்டு பயங்கரவாதத்தினை நாம் ஒழித்த பின்னரே மாவட்ட புரத்தில்  அரண்மனை கட்டி குடும்பத்துடன் குடியமர்ந்தார். துற்போது கூட அவரது மகள் இந்தியாவில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கின்றார்.

மாவை ஐயா, அவர்களின் பிள்ளைகளிற்கு இலங்கைத் தமிழர் போன்று சரி வர தமிழ் மொழி கூட கதைக்கத் தெரியாது. இவ்வாறான நிலையில் தான் இலங்கையர் என்ற அடையாளத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற இலக்குடன் எம்மீது விமர்சனம் வைக்கின்றார். முதலில் அவர் தனது பிள்ளைகளுக்கு சரியாக இலங்கைத் தமிழர் வரலாற்றை கற்பித்து விட்டு பின்னர் என்னைப்பற்றி விமர்சிப்பதே சாலச்சிறந்ததாகும்.

அடுத்து, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவனும் சிறிதரனும் எம்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். இவர்களுக்கு எம்மீது விரல் சுட்டுவதற்கு என்ன தகுதி உள்ளது.

சரவணபவன் 1989 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதையும் சப்பரா எனும் நிதி நிறுவனம் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை மோசடி செய்துள்ளார்.

வடக்கில் பல தமிழர்களின்  தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளார். தீவிர தமிழ்த் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்தும் அவர் தனது மகளின் 18 ஆவது பிறந்தநாளிற்கு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பல அரசியல் பிரமுகர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தவர். அன்று தீர்வு பற்றியோ அல்லது அல்லல்படும் மக்களின் வாழ்வாதார விடயங்கள் பற்றியோ தமிழ் கைதிகள் பற்றியோ ஜனாதிபதியுடன் கதைத்திருக்கலாமே. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை முடக்கப்பட்டதன் பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அடுத்தபடியாக கற்பனை செய்துகொண்டிருக்கின்றார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இருந்த ஒரேயொரு தொடர்பு தீபனின் தங்கையை திருமணம் முடித்தது மட்டும் தான். தனது மச்சானான தீபன் உயிரிழக்கும் வரை அவருடன் உரையாடியது கூட இல்லை. உயிரிழந்த பிறகு கூட அவருடைய நினைவேந்தலையே மேற்கொள்ளவதை தவிர்த்து வரும் ஒருவராக உள்ளார். இது தான் விடுதலைப்புலிகளுடனான அவரின் உறவாகும். ஆனால் தமிழ் மக்களை குழப்புவதற்காக புலிவாலை பிடித்தவராக காண்பிக்க முற்படுகின்றார்.

அதுமட்டுமன்றி அன்று விடுதலைப்புலிகளே அரவணைத்து கிளிநொச்சி உட்பட வன்னி எங்கும் குடியேற்ற மலையக வாழ் மக்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்த்து அவர்களை வார்த்தைகளால் வஞ்சித்துள்ளார்.  தற்போதும் அந்த மக்களின் மனதில் அவ்விடயம் வடுவாகி அவர்கள்  வேதனைப் படுவதை நான் நேரடியாகவே அறிந்திருக்கின்றேன். அது மட்டுமா கிளிநொச்சி இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதில் இரட்டைவேடம் போட்டவர்.

தனது கட்சிக்குள் கடுமையான சாதியத்தையும் பிரதேசவாதத்தையும்  பார்க்கும் கீழ் மட்ட அரசியல்வாதிகளான சிறிதரன் போன்றவர்களுக்கு எம்மை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது.

எம்மைப் பார்த்து விரல்களை நீட்டுவதற்கு முன்னர் தமிழ் மக்களிற்கு தாங்கள் சிறந்த தலைவர்களாக இருக்கின்றோமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இப்படியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது வருகையை கண்டு கொதிப்பதை விட மக்களுக்கு இதய சுத்தியுடன் நேர்மையாக இருக்க முற்பட வேண்டும். தமது வாக்கு வங்கிக்காக பொய்யான வாக்குறுதிகளையும் போலித் தமிழ்த் தேசியத்தினையும் விதைப்பதற்கு முற்படக் கூடாது.

வரலாற்றினை நோக்கினால் தமிழர்களுக்கு தீர்வினை வழங்க மறுத்து திட்டமிட்ட அழிவுகளை ஏற்படுத்தியது ஐ.தே.க.வே இதனை மறுக்க முடியுமா?

புதிய அரசியலமைப்பில் சமஷ்டியைப் பெற்று தருகின்றோம் என்று கூறிய நீங்கள் இன்று சமுர்த்தி திட்டத்தில் மக்களை இணைத்து வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சிக்கின்றீர்கள். உங்களின் நல்லாட்சி அரசில் கம்பரலிய வேலைத்திட்டம் தானா தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தென்னிலங்கை அரசுகளை விட தமிழ் மக்களை தென்னிலங்கையில் அடமானம் வைத்து சுயலாப அரசியல் பிழைப்பு நடத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். மாறாக நாமல்ல.

தமிழ்த் தலைவர் மீது எமக்கு எவ்விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் அரசியலுக்காக கருத்துக்களை கருத்துக்களால் வெல்லமுடியாது. சேறுபூச விளைந்தால் ஒவ்வொரு தனி நபர்கள் பற்றிய பூரண விபரங்களையும் வெளியிட்டு தமிழ் மக்களின் முன் உங்களின் முகத்திரையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் தயங்கப்போவதில்லை என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றேன் என அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைத்­தி­ரி மற்றும் சஜித் பிரே­ம­தாஸ இணையும் பல­மான மூன்­றா­வது அணி

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரின் கூட்டில் பல­மான மூன்­றா­வது அணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெற்று வரு­வ­தாக இரு­த­ரப்­பி­லு­முள்ள நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறிய முடி­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாஸ கள­மி­றக்­கப்­ப­டாத பட்­சத்­திலும், பொது­ஜன முன்­ன­ணிக்கும், சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டையும்  நிலை­யிலும்  இந்தப் புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த கூட்­ட­ணியில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் பொது­ஜன முன்­ன­ணி­யிலும் அதி­ருப்­தியில் உள்ள அனைத்து தரப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைத்து பரந்து பட்ட பல­மான மூன்­றா­வது அணியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

விசே­ட­மாக இவ்­வாறு உரு­வெ­டுக்கும் மூன்­றா­வது அணி­யா­னது ‘கஜ­ச­வித்த சமூக இளைஞர் முன்­னணி’ என்று தற்­போது இயங்கி வரும் அமைப்பின் பெயரில் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இப்­பெ­யரில் கள­மி­றங்­கு­வதால் யானை சின்­னத்­தினை ஆத­ரிக்கும் கிராம மட்ட மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வினைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது

இதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­க­ளுடன் முரண்­பட்­டி­ருக்­கையில் எவ்­வாறு சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் இணைந்து பணி­யாற்­றுவார் என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போது, சமுக கட்­ட­மைப்பு ரீதி­யாக இரு­வரும் கொண்­டி­ருக்கும் அடை­யா­ளங்கள் கார­ண­மாக  இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான  வாய்ப்­புக்கள்  உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

முன்­ன­தாக கடந்த ஒக்­டோ­பரில் ஏற்­பட்ட அர­சியல் புரட்­சியின் போது சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­தமர் பத­வியை ஏற்­கு­மாறு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்­த­போதும் அதனை அவர் மறுத்­தி­ருந்தார். இருப்­பினும் தற்­போ­தைய நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பான பனிப்போர் உச்ச கட்­டத்­தினை அடைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந் நிலையில் எந்த சவா­லையும் முகங்­கொ­டுத்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தயார் என்று சஜித் பிரே­ம­தாஸ பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ளார். இந்த அறி­விப்­பா­னது மேற்­படி முயற்­சி­யினை பின்­ன­ணி­யாக கொண்டு முதற்­கட்­ட­மாக அவர் தரப்­பி­லி­ருந்து ஐ.தே.க தலை­மைக்கு விடுக்­கப்­பட்­டுள்ள சவா­லாக அமைந்­துள்­ள­தாக   அர­சியல் அவ­தா­னிப்­பா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

ஐ.தே.க கூட்­டணி

இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­ட­ணியைப் பொறுத்­த­வ­ரையில் சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்டால் அவரின் கீழ் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவால் கட­மை­யாற்ற முடி­யாது. அத்­துடன் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை முழு­மை­யாக நீக்கி பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­திலும் சிக்­க­லான நிலைமை ஏற்­படும். மேலும் சஜித்­துக்கு வேட்­பாளர் பதவி வழங்­கப்­ப­டு­வ­தாயின் பிர­தமர் ரணில் முழு­மை­யாக அர­சி­ய­லி­லி­ருந்து விலக வேண்டும். எனினும் அது உட­னடிச் சாத்­தி­ய­மில்லை.

மறு­ப­டியும்  கதிர்­காமம் மாநாட்டில் நிறை­வேற்று அதி­கார முறை­மையை நீக்­கு­வ­தற்கு முன்­மொ­ழிந்த சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை வேட்­பா­ள­ராக நிய­மித்து முன்­மொ­ழி­வுக்கு அமைய அம்­மு­றையை முழு­மை­யாக நீக்கி வெஸ்­மி­னிஸ்டர் முறை­மையை அமு­லாக்க முயன்றால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது வாய்ப்­பாக இருக்கும் . ஆகவே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ச்­சி­யாக அர­சி­யலில் நீடிக்கும் வரையில் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கான வாய்ப்பு இங்கு  கேள்­விக்­கு­றி­யா­கின்­றது.

அதே­போன்று பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், ஐ.தே.கவின் பங்­கா­ளி­க­ளா­க­வுள்ள தமிழ், முஸ்லிம் தரப்­பு­களும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கே ஆத­ரவை வெளி­யிட்­டுள்­ளன. இதனால் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­டா­த­வி­டத்தில் கட்சி மற்றும் கூட்­ட­ணி­யினுள் பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­மா­க­வுள்­ளன.

 மஹிந்த அணி

மஹிந்த அணியைப் பொறுத்­த­வ­ரையில் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லி­ருந்தே ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற நிலை­மையே  அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. எனினும், கோத்­தா­பய, சமல், பசில், தினேஷ், சிரந்தி என பட்­டியல் நீண்டு செல்­கின்­றது.  ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லி­ருந்து வேட்­பாளர் நிய­மிக்­கப்­பட்டால் தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளா­க­வி­ருக்கும் சிறு­பான்மை தரப்­பு­களின் ஆத­ரவை பெறு­வது கடி­ன­மாக இருக்கும் என்ற கருத்­து­களும் அவ்­வ­ணிக்குள் வெகு­வாக வலுத்­துள்­ளன. குறிப்­பாக கோத்­தா­ப­ய­வுக்கு இடது சாரிக்­கட்­சிகள் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­கின்­றன.

அதே­போன்று மஹிந்­தவின் குடும்­பத்­திற்­குள்ளும் மறை­முக எதிர்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இத­னை­வி­டவும் மஹிந்த அணி­யுடன் இணைந்­துள்ள, இணை­ய­வுள்ள தரப்­புகள் அதி­கா­ரப்­ப­கிர்வு கோத்­தா­பய எதி­ரா­னவர் என்­பதால் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை உட­ன­டி­யாக முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற உறு­தி­மொ­ழியை எழுத்­து­மூ­ல­மாக பெறு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ளன.

இட­து­சா­ரி­களின் கோரிக்­கையை மீறி கோத்­தா­பய வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டு­கின்ற போதும் தமிழ்த்­த­ரப்­பு­களின் நிபந்­த­னைகள் ஏற்­கப்­ப­டாத பட்­சத்­திலும் அங்கும் பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்புகள் உள்ளன.

 மைத்திரிக்கான தெரிவு

இதேவேளை 2015இல் மஹிந்தவை தோற்கடித்தமையால் மீண்டும் அவருடன் கூட்டிணைவது தொடர்பில் அச்சமான மனநிலை ஜனாதிபதி மைத்திரிக்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் பிரதமர் ரணிலுடனும் இணைவதென்பது சாத்தியப்படாது. தனித்து போட்டியிடும் முடிவெடுக்கின்ற பட்சத்தில் சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டு கட்சியின் தடமே இல்லாது போய்விடும் ஆபத்தும் உள்ளதாகக்கூறப்படுகின்றது. . ஆகவே இந்த இரண்டும் கெட்ட நிலையில் தன்னையும் தனது கட்சியையும் பாதுகாப்பதென்றால் நம்பிக்கையான தெரிவு மூன்றாவது அணி என்றே அவர் நம்புகின்றார் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்

இத்தகைய நிலைமைகளிலேயே மூன்றாவது அணிக்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 20 பேர் பலி ,24 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே நேற்று சனிக்கிழமை குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய பற்றிக் க்ரூசியஸ் எனும் டல்லாஸ் பகுதியில் வசித்த இளைஞரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்லும் மக்களுக்காக இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகள் பொது மக்கள் கூடும் சிறிய இடங்களில் சிறிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், மற்றும் பிற பொதுப் பகுதிகள் பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கலாமெனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் பதிவு செய்து அவசரகால உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், முகநூல் மற்றும் ட்விட்டரில் வெளியுறவுத்துறையைப் பின்பற்றலாம். என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அநுருத்த ரத்வத்தவின் புதல்வரின் அடிவடித் தனங்கள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் மாமனுமான அநுருத்த ரத்வத்தவின் மகனான, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான லொகான் ரத்வத்த தனது அடாவடித் தனங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி லொகான் ரத்வத்தவின் மனைவி நிலாவெளி கோபாலபுரம் உள்வீதியில் மீன்வியாபாரம் செய்யும் ஒருவரை தனது ஜீப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் சென்று விட்டார். அச்சமயம் அவர் போதையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். தனக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களை தனது பாதுகாப்பு பிரிவினரை (MSD- அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர்) அனுப்பி துப்பாக்கியை காட்டி மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையறிந்த குச்சவெளிப் பொலிசார் மக்களை மிரட்டி வழக்கை வாபஸ் பெறும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இது தொடர்பாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இவர் அநுருத்த ரத்வத்தவின் 3 புதல்வர்களில் மூத்த புதல்வராவார். இவரின் மற்றய சகோதரர்கள் மகேன் மற்றும் ஷானுக்க ஆவர். சிறுவயது முதலே சண்டியனாகவே வளர்ந்தவர். தந்தையின் பெயரை வைத்தே சிறுவயது முதலே கிளப், ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றில் அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக வந்தும் தனது இந்த செயல்களை தொடர்ந்த வண்ணமே உள்ளார்.

இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவில் அகதிகள் படும் இன்னல்கள்

அவுஸ்திரேலியா அகதிகள் மட்டுமல்ல இந்தோனேசியாவிலுள்ள 14ஆயிரம் அகதிகளும் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மனுஸ் மற்றும் நவுறு தீவுகளைப் போலவே அடிப்படைப் பிரச்சினைகளை இந்தோனேசியாவிலுள்ள அகதிகளும் அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அங்குள்ள பல அகதிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் சிலர் தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.

தெற்கு ஜாவாவிலிருந்து கிறிஸ்மஸ் தீவிற்கான கடல் வழியை இராணுவ ரீதியாக தடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறினாலும் 2014இற்குப் பின்னர் இந்தோனேசியாவில் உள்ள அகதிகள் தொடர்பில் அவர்கள் அக்கறையுடன் நடந்து கொள்ளவில்லை.

குறிப்பாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதிகளை மீளக் குடியமர்த்துவதில் பிரதமர் ஸ்கொட் மோரிசன் கடும் போக்குடையவராக செயற்படுவதாகவும் அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டது.

இதேவேளை அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக படகுகள் மூலம் சென்ற பெருமளவு இலங்கையர்களும் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

இன்டபோலினால் தேடப்படும் நபர் கோதபயாவின் நிகழ்வில்

இன்டபோல் பொலிசாரால் தேடப்படும் ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் நடைபெற்ற கோத்பயாவின் “வெளிச்சம்“ என்ற பிரசார நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மிக் 27 ரக விமானங்களின் கொள்வனவின் போது, 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டு இவரின் மேல் சுமத்தப்பட்டிருந்தது.

Uthayanka 2 இன்டபோலினால் தேடப்படும் நபர் கோதபயாவின் நிகழ்வில்2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யக் கோரி இன்டபோல் சிவப்பு எச்சரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.