ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-தொழிற்சங்கம் அறிவிப்பு

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால், நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்ட முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால் போராட்டம் இடம்பெறும் என அதன் அழைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிமுதல் இரண்டு மணிநேரம் இந்த போராட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.