தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு பயணம் செய்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் இன்று திங்கட்கிழமை (ஜன.02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில்,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.