போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் தயார்
கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற வேண்டும்!
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்த உட்பட கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை, முதல்வர் வேட்பாளர் விஜய் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐ.நாவிற்குள் ஊடுருவிய பிரித்தானியா உளவுத்துறை
செம்மணி மனித புதைகுழியில் ஏராளமானவர்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தகவல்
செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் சார்பிலும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது. மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது.
மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது.
நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது.
உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.
தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.
தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
அதற்கான கட்டளை எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும்.
செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள்.
அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.
அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும்.
கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.
இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.
பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 346
Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025
Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025
Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம் அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- Ilakku Weekly ePaper 345 | இலக்கு-இதழ்-345-யூன் 28, 2025
- இறைமையில் வாழாது விட்டு இருப்பினையும் இழக்க வைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 345
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்
- பேச்சுக்களின் விளைவுகள் என்ன? விதுரன்
- கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு பதவி முற்றாக புறக்கணிப்பு – பா. அரியநேத்திரன்
- செம்மணி மனித புதை குழி, நீதி கிடைக்குமா? – கிண்ணியான்
- விடியலைத்தேடி மயிலிட்டித்துறை – கலாநிதி சூசை ஆனந்தன்
- அணையா விளக்குப் போராட்டம் நடைபெற்ற போது என்ன நடந்தது” – மக்கள் செயல் அமைப்பு- மணிவண்ணன் தனுசன்
- வஞ்சிக்கப்படும் மலையக மாணவர்கள் எங்கே ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது? – மருதன் ராம்
- இலக்கு- இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
- கனடா மார்க்கம் நகரில் நடந்த நட்புரீதியிலான இரண்டு காற்பந்துப் போட்டிகளிலும் தமிழீழ மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
- ஈரானின் கண்களுக்கு முகமூடி போட்ட உளவாளி- பகுதி 2 (இறுதிப் பகுதி) பருத்திவீரன்-வளைகுடா
- இந்தியாவில் தடம்புரண்ட அமெரிக்க வான்படையின் உயர் தொழில்நுட்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை : ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிசாரே காரணமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை என்றும் விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றது.
‘இங்கு சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்ற போது, சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுவதாக பொலிசாரோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய ஏனைய தரப்பினரோ போலிக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது நாட்டில் ஆட்சிபீடத்திலுள்ள அரசும், அரசுத்தலைவரும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமெனக் கூறுகின்றனர்’.
‘நாமும் சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றே தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்’.
‘ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கு சீரின்றியே காணப்படுகின்றது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசார் மீதே நாம் குற்றச்சாட்டு முன்வைக்க வேண்டியுள்ளது’.
‘பொலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் உள்ளிட்ட, பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன’.
‘விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான மணல் அகழ்வு செயற்பாடுகள் மற்றும் கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களோ எவையும் இருக்கவில்லை’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்தில் எதிர்மறை அபாயங்கள் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார கண்ணோட்டத்தில் எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா () இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அண்மையில் அங்கீகரித்திருந்தது.
இந்தநிலையில், நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா, இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான எதிர்வுக்கூறல்களை வெளியிட்டுள்ளார்.
நிதி திட்டங்களின் கீழ் இலங்கையின் செயற்திறன் வலுவாக உள்ளதுடன் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி வலுவடைந்துள்ளதுடன் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. இருப்புக்கள் அதிகரிக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் நிதி வருவாய் மேம்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பொருளாதார கண்ணோட்டம் நேர்மறையாக இருக்கின்ற போதிலும் சில எதிர்மறையான அபாயங்கள் உள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா தெரிவித்துள்ளார்.
நிதி நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு நிலையான வருவாய் திரட்டல் மிக முக்கியமானதாகும்.
வரி விலக்கு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல் என்பன முக்கியமாகும்.
பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான பாதுகாப்புடன் இலக்குகளை மேலும் அதிகரித்தல் அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்துடன் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், எஞ்சியுள்ள வணிக கடன் வழங்குநர்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் இறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணியில் சிறுமியின் ஆடையுடன் மேலும் இரு சிறார்களின் என்புக் கூடுகள் மீட்பு
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் (04) இரண்டு சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் இரண்டு சிறார்களின் என்புக் கூடுகளுடன், சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரையில் 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 37 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று (03) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது, சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இரண்டு சிறார்களின் என்புக்கூடுகளும், வௌ;வேறு இடங்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக இஸ்ரேல் காசா மீதான தாக்குதலிற்கு சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்களும் தலைமைகளும் தங்கள் கடமைகளை தட்டிக்கழிக்கும் அதேவேளை இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு , இனவெறி மற்றும் தற்போதைய இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் பெருநிறுவனங்கள் பலத்த இலாபத்தை ஈட்டியுள்ளன என ஐநாவின் அறிக்கையாளரின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்த விடயத்தின் சிறுபகுதியை மாத்திரமே அம்பலப்படுத்தியுள்ளது தனியார் துறையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எவ் 35 போர் விமானத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு கொள்வனவு மூலம் இஸ்ரேலிய இராணுவம் பயனடைந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா அறிக்கையாளர் ஒரேநேரத்தில்1800 குண்டுகளை கொண்டு செல்லும் மிருகத்தனமான முறையில் முதன் முதலில் இந்த விமானத்தை இஸ்ரேலே பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை” என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை அமைந்துள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன ஈடுபாடு சட்டவிரோத குடியேற்றங்களிலிருந்து விளைபொருட்களை விற்கும் விவசாய நிறுவனங்கள் மற்றும் போருக்கு நிதியளிக்க உதவும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இது ஆராய்கிறது.