Home Blog Page 6

மே தினத்தன்று ரணிலை அறிவிப்பதிலிருந்து ஐ.தே.க. பின்வாங்கியது ஏன்?

000 மே தினத்தன்று ரணிலை அறிவிப்பதிலிருந்து ஐ.தே.க. பின்வாங்கியது ஏன்?ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பது கொழும்பு அரசியலில் குழப்பமான ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவின் கணிசமான பகுதியை ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடையில் இணைப்பதற்கு ஐ.தே.க தவறியதை அடுத்து, முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக “ஐலன்ட்’ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடையில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முதலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அவர்களது மே தினக் கூட்டம் அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாததால் ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிவிப்பை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கி விட்டது.

“ஐலன்ட்” எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வட்டாரங்கள், மே தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் மாறத் தயாராக இருந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் அதைச் செய்ய மறுத்துவிட்டதாக தெரிவித்தன.

இந்த நிலையில், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை முன்னெடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு 7 மலலசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர்கள் கடந்த சனிக்கிழமை சந்தித்தனர். பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கு இடையில் இதுவரை ஐந்து சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால் ஸ்திரமற்ற அரசாங்கமே உருவாகும் – உதய கம்மன்பில

கம்மன்பில பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால் ஸ்திரமற்ற அரசாங்கமே உருவாகும் - உதய கம்மன்பிலஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால் ஸ்திரமற்ற பாராளுமன்றம் உருவாகி நாடு மேலும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் அது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால், ஜனாதிபதி தெரிவான தரப்பினருக்கே பொதுத் தேர்தலில் வெற்றிக்கிடைக்கும். அவ்வாறு அன்றி முதலில் பொதுத் தேர்தல் நடக்கும் போது எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை கிடைக்காது போகும் என்பதுடன் ஸ்தீரமற்ற பாராளுமன்றமே உருவாகும்” என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “அவ்வாறு இடம்பெற்றால் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு இரண்டரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது போகும். அதனால் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்காத பாராளுமன்றமும் உருவாகலாம். அப்படி நடந்தால் ஜனாதிபதிக்கு தனது பதவிக் காலத்தில் 50 வீதமான நாட்களை வேலையெதுவும் செய்ய முடியாது இருக்க நேரிடும்” என்றும் சுட்டிக்காட்டினாா்.

“ஆகவே முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை நெருக்கடிக்குள் கொண்டு செல்லச் செய்யும் செயற்பாடாகவே அமையும். ஆஜர்டினாவை போன்ற நெருக்கடி நிலைக்குள்ளும் இலங்கை தள்ளப்படலாம்” என்றும் உதய கம்மன்பில எச்சரித்தாா்.

15 க்கு முன்னா் பாராளுமன்றத்தைக் கலையுங்கள் – ரணிலுக்கு மொட்டு கட்சி கடும் அழுத்தம்

ranil 15 க்கு முன்னா் பாராளுமன்றத்தைக் கலையுங்கள் - ரணிலுக்கு மொட்டு கட்சி கடும் அழுத்தம்இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவினர் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் ஜுன் இறுதியில் அல்லது ஜுலை ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று பொதுஜன பெரமுனவில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மையில் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதும், கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர்பில் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும், ஆனால் ஜனாதிபதி தரப்பில் இதற்கு இதுவரையில் இணக்கம் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பொதுஜன பெரமுனவினர், ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஜனாதிபதி மறுத்தால் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமா? என்பது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து வருவதாககவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஏற்கனவே அமைச்சரவையில் அனுமதிபெற்றுள்ள உத்தேச மின்சார சபை சட்டமூலம் உள்ளிட்ட சில முக்கிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதால் அது வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சட்டமூலங்களை விரைவில் நிறைவேற்ற உதவி செய்து, பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியை இணங்கச் செய்வதற்கு பொதுஜன பெரமுனவுக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய விசா நடைமுறையே பின்பற்றப்படும் – அமைச்சரவை தீா்மானம்

வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை அதேபோல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசாவை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார்.

இதில் உரையாற்றிய அமைச்சர், “புதிய விசா முறை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும். ஆனால் அது நவம்பரில் நிறைவேற்றப்பட்டது. ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது.

எனவே VFS அமைப்பு மூலம் அதை செய்ய நாங்கள் ஏப்ரல் 17 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ETA அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம். VFS என்றால் என்ன என்று வெளிநாடு செல்லும் அனைவருக்கும் தெரியும். 151 நாடுகளில் 67 அரசாங்கங்களால் சுமார் 3,300 மையங்களில் பயன்படுத்தப்படும் முறை இது” என்றார்.

குறைபாடுகளுடன் இயங்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை – கஜேந்திரன்

IMG 20240506 WA0026 குறைபாடுகளுடன் இயங்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை - கஜேந்திரன்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.இவ் விஜயத்தின் போது கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் க.குகன் உம் உடனிருந்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இன்று (06)கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

‘கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்தியிருந்தார். அதனை முன்னிட்டு அது தொடர்பில் ஆராய இன்று விஜயம் ஒன்றை நாம் மேற்கொண்டு வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் உட்பட ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

IMG 20240506 WA0025 குறைபாடுகளுடன் இயங்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை - கஜேந்திரன்சுகாதார ஊழியர்கள் குறைபாடுகள் காரணமாக வைத்திய நிபுணர்கள் தங்கள் கடமைகளை சரியாக மேற்கொள்ள முடியாமையும் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 100 ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன் தாதியர்களுக்கான பற்றாக்குறையும் கணிசமான அளவு நிலவுகிறது.

இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் இது போன்று பௌதீக வளங்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது அவசர விபத்து சிகிச்சை பிரிவு இங்கு இல்லை மற்றும் இருதய நோய்க்கான கட்டிடமும் இங்கு இன்மையால் நோயாளிகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

சிடி இயந்திரம் செயலிழந்தும் எம்.ஆர்.ஐ போன்ற இயந்திர பற்றாக்குறைமும் நீடிக்கிறது .வைத்தியசாலைக்கான விடுதிகளில் சீராக மின்விசிரி கூட இயங்குவதில்லை எனவும் குடி நீர் கூட பல பற்றாக்குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது இந்த பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டு திறம்பட சேவைகளை வழங்க வேண்டும் எதிர் வரும் வாரமளவில் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசி பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையால் மக்கள் பாதிப்பு

IMG 20240506 WA0012 கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையால் மக்கள் பாதிப்புகிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பொது மக்கள் தினமாகிய இன்று பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு சென்றனர் .

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து, இன்று (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையினை முன்னெடுத்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்களை சந்திக்க தூர பிரதேசங்களில் இருந்து பிரதேச செயலகத்துக்கு சேவை பெற சென்ற மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை

IMG 20240506 WA0006 மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைபத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை நேற்று திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் அவர்கள் ஆரம்பித்து வைக்க இவ்வமர்வை வளவாளர் கணேஷ் அவர்கள் சிறப்பான முறையில் நடத்தினார்.

IMG 20240506 WA0005 மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைஇந்த அமர்வினை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பணிப்பாளர் அஜித் குமார் உதயகுமார், ஆசிரியை செல்வி.டிலக்ஷிகா புகழ் வேந்தன் மற்றும் அறநெறி ஆசிரியை ஜெயவதணி இளங்கோவன் ஆகியோரால் ஒருங்கிணைப்பு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடுத்து வைக்கப்பட்ட வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் – 22 பட்டதாரிகள் கைது

மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் அகில இலங்கை ஐக்கிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க உட்பட 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.

பொலன்னறுவை வெலிகந்த போன்ற தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு வந்துள்ளனர், மேலும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை விட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வேலை வழங்கப்படவில்லை என இக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.

இன்று காலை பத்து மணியளவில் மாகாண சபையின் பிரதான வாயில் ஊடாக மாகாண சபை வளாகத்தினுள் நுழைந்த இவர்கள் வடமத்திய மாகாண சபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறுகளை அடைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

ஜளாதிபதித் தோ்தலில் வெற்றி யாருக்கு? சீன துணை அமைச்சா் தலைமையிலான குழு இரகசிய கருத்துக் கணிப்பு

9 ஜளாதிபதித் தோ்தலில் வெற்றி யாருக்கு? சீன துணை அமைச்சா் தலைமையிலான குழு இரகசிய கருத்துக் கணிப்புஅண்மையில் இலங்கை வந்த சீன துணை அமைச்சர் தலைமையிலான குழுவினர் பியகம தேர்தல் தொகுதியில் ஜனாதிபதித் தோ்தலில் யாா் வெற்றிபறுவாா்கள் என்பதை அறிவதற்காக நேரடியாக கருத்துக் கணிப்பை நடத்தினர் என்று தெரியவந்துள்ளது.

உத்தியோகபூர்வ பயணமாக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு உத்தேச ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை நேரடியாக கண்டறியும் நோக்கில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இந்த கருத்துக்கணிப்பின் தரவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான விசேட சந்திப்பின்போது சீன துணை அமைச்சர் சன் ஹையன் தெரியப்படுத்தியுள்ளார்.

அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பன தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள சீன இராஜதந்திர மையம் ஆய்வு அறிக்கைகளை ஏற்கனவே பீஜிங்குக்கு அனுப்பியிருந்தது. இவற்றை முழுமையாக அவதானத்த பின்னரே சீன துணை அமைச்சர் சன் ஹையன்
தலைமையிலான குழுவினர் கொழும்பு வந்தனர்.

ஆனால், ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த தகவல்களை நேரடியாக  உறுதிப்படுத்திக்கொள்ள தீர்மானித்திருந்தனர். இதன்படி, கருத்து கணிப்பு ஒன்றை அவர்கள் நடத்தினர். இந்தக் கருத்துக் கணிப்பு மிக இரகசியமாக கம்பஹா – பியகம தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் நடந்த சஜித் தரப்புடனான சந்திப்பில் கருத்துக் கணிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

23 சதுர கி. மீ. பரப்பிலேயே இன்னும் மிதிவெடி அகற்றப்பட வேண்டும் – சர்வதேச மாநாட்டில் இலங்கை தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் இன்னமும் 23 சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று சர்வதேச கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் இலங்கை தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட் டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயல்பாட்டுக்கு பாராட்டும் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வ தேச மையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக்குழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ. எஸ். சத்யானந்த, பிரதிப் பணிப்பாளர் வி.பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த, 3 வருடங்களில் இலங்கையை மிதிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இன்னும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை பிரதிநிதிகள் மாநாட்டில் தெரிவித்திருந்தனர்.