Home Blog Page 3145

வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் – சுருதி

telesur  என்ற ஊடகத்தின் தொலைக்காட்சியில் எம்பயர் ஃபைல்கள் என்ற தொடரை நடத்தும் அபி மார்ட்டின் என்ற அமெரிக்கர் அண்மையில் வெனிசுவேலாவிற்கு சென்றுவந்து கொடுத்த அறிக்கை வெனிசுவேலா பற்றி வேறொரு பார்வையை தருகிறது.

மையநீரோட்ட ஊடகங்கள் இன்று வெனிசுவேலா பற்றி என்ன சொல்லிக்கொண்டு வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். உணவு உட்பட அடிப்படை தேவையான பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் தொகையாக அந்த நாட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த நாட்டிற்கு ஏன் இந்த நிலைமை. அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் கோபம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக கொதிநிலையில் இருந்தது. இப்போது இது மேலும் அதிகரித்து வருகிறது.

வெனிசுவேலாவின் எதிர்கட்சி சனாதிபதி மதூரோவை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கிறது. மதூரோவும் அவரின் முன்னோடியான ஹகோ சாவேசும் தான் இன்றைய வெனிசுவேலாவின் நிலைமைக்கு காரணம் என்கிறார்கள் எதிர்கட்சியினர். நாளாந்த தேவைகள் கிடைக்காததால் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நம்பிக்கை இழந்த வெனிசுவேலர்கள் ஐ-அமெரிக்காவை நோக்கி வருகிறார்கள். ஐ-அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி 2015இல் இங்கு வந்த வெனிசுவேலர்களில் பன்னிரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது நாட்டுக்கு திரும்பாமல் இருக்கிறார்கள்.

இதுதான் இன்று மையநீரோட்ட ஊடகங்கள் சொல்லிவரும் செய்தி. அபி மார்டின் என்ன சொல்கிறார்.மக்கள் தப்பியோடுகிறார்கள். அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. உண்மைதான். ஆனால் இவற்றின் பின்னாலுள்ள பெரிய விடயங்களை இவை நடப்பதற்கான காரணங்களை அவதானிக்க வேண்டும் என்கிறார் இவர். இதோ இவர் சொல்வது.

இந்த பிரச்சனையை பல அடுக்குகளாக அலச வேண்டும். சாவேஸ் முன்னெடுத்த மதுரோவால் தொடரப்படும் மக்களிடம் பிரபலமான வெனிசுவேலாவின் கொள்கைகளின் தோல்வியாகவே ஐ-அமெரிக்க கார்பரேட் ஊடகம் எப்போதும் இதை காட்டுகிறது. களத்தில் உண்மையான தரவுகளை பார்க்க வேண்டும். வெனிசுவேலாவின் ஏழை மக்கள் வெனிசுவேலா அரசை ஆதரிக்கிறார்கள். கார்பரேட் ஊடகம் தொடர்ச்சியாக போதிப்பது போல சர்வாதிகாரம் அங்கில்லை. தேர்தல்கள் நேர்மையாகவே நடக்கின்றன. எதற்காக ட்ரம்ப் அரசு, ஒபாமா அரசு மற்றும் நவதாராளவாத கார்பரேட் ஊடகம் எல்லாமே வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றம் தேவை என்கிறது.

உண்மை என்னவென்றால் 1999இல் சாவேஸ் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஐ-அமெரிக்கா வெனிசுவேலா ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிக்கிறது. புஸ் அரசு வெனிசுவேலா எதிர் கட்சியுடன் சேர்ந்து 2003இல் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சித்தது. அப்போது அது சாவேஸை துப்பாக்கி முனையில் கடத்தியது.wn20130414p1a வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் - சுருதி

அப்போது அதில் எதிர்கட்சியின் பங்கையும் பார்க்க முடிந்தது. எதிர் கட்சி உடனடியாக ஒரு புதிய அரசியல் சாசனத்தை அமுலாக்கியது. அதில் வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் தனியார் மயமாக்கப்பட்டது. இதை 2003 இல் நாம் பார்த்தோம். அப்போதிலிருந்து ஐ-அமெரிக்கா 50 மில்லியன் டொலர்களை எதிர்கட்சிக்கு கொடுத்திருக்கிறது. புஸ் அரசும் ஒபாமா அரசும் எதிர் கட்சி பிரதிநிதிகளை மீண்டும் மீண்டும் சந்தித்து வந்தார்கள்.

அத்துடன் வெனிசுவேலாவின் பிரச்சனைகள் தென்னமெரிக்க நாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவான பிரச்சனைகளும் தான். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த காலனியாதிக்கம். சொந்த காலில் நிற்க முடியாமல் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தது. இவை லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை அதன் எண்ணெய் வருமானம் அளவுக்கதிகமாக தாங்கி பிடித்தது. எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த பின்னர் எவ்வாறு தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது என்று அவர்கள் இப்போது முயற்சிக்கிறார்கள்.

வெனிசுவேலாவின் பிரச்சனையை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று சோசலிச கொள்கைகளின் தோல்வியாக. மற்றைய பார்வை ஏழ்மையான இடங்களில் இருக்கும் மக்கள் சொல்வது. உண்மையில் இது ஒரு வர்க்க போராட்டம் தான். ஊடகங்கள் எல்லாவற்றையும் திரித்து சொல்வதாக இந்த மக்கள் சொல்கிறார்கள். அங்குள்ள முதலாளிகள் பொருட்களை பதுக்குகிறார்கள். அங்குள்ள மிகப்பெரிய கம்பனிகள் ஒரு பொருளாதார போரை நடத்துகிறார்கள். அங்குள்ள ஒரு கம்பனிதான் பொலார்ட். அதன் அதிகாரி ட்ரம்ப் ஆதரவாளர். மதுரோவுக்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்காக வெளிப்படையாக இயங்குகிறார். அங்கு நான் எட்டு சூப்பர் மார்க்கட்டுகளுக்கு போனேன்.

ஏழ்மையான இடத்திலும், நடுத்தர இடத்திலும் பணவசதியுள்ள இடத்திலும் போனேன். அங்கு உணவு தட்டுப்பாடு இல்லை. குறிப்பிட்ட சில உணவு வகைகளுக்கு மட்டும் தட்டுப்பாடு. எண்ணெய், மா, பற்பசை, கழிவறை பேப்பர் போன்றவைகள். ஏன் இப்படி குறிப்பிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு. பழங்கள், இறைச்சி போன்றவை எல்லாம் கிடைக்கின்றன. சூப்பர் மார்கெட்டில் பேப்பர் டவல் பேப்பர் நப்கின் இருக்கின்றன. ஆனால் கழிவறை பேப்பர் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருவது என்னவெனில் இவைகளை முதலாளிகள் பதுக்கிறார்கள். அல்லது கொலம்பியாவுக்கு அனுப்புகிறார்கள்.

கிளப் எனப்படும் அரசாங்கம் கொடுக்கும் உணவு மானிய பெட்டியில் உள்ள பல பொருட்களுக்கு பொலார்ட் கம்பனி தான் பொறுப்பு. இதை மிகவும் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மானிய அடிப்படையில் அரசாங்கம் கொடுக்கிறது. அந்த உணவு பெட்டியில் உள்ள பொருட்கள் பலவற்றை பொலார்ட் உற்பத்தி செய்கிறது. அவற்றை இந்த கம்பனி பதுக்கிறது.

முதலாளிகள் இப்படி செய்ய மாட்டார்கள் என்று பலர் என்னோடு வாதிட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் இந்த கதைகளுக்கு இரு பக்கம் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே கேட்கிறோம். இந்த பிரச்சனையை ஊதிவிட அமெரிக்கா செய்வதைப் பற்றி எங்கள் காதில் எதுவும் விழுவதில்லை. முதலாளிகளின் பொருளாதார போர் மட்டுமல்ல. வெனிசுவேலாவின் மேல் போட்டுள்ள தடைகளும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். ஐ-அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்கட்சியுடன் சேர்ந்து வெனிசுவேலா கடன் எடுப்பதையும் தடுக்கிறது.

எண்ணெய் வளத்தின் மேல் வெனிசுவேலா இருக்கிறது என்பதற்கும் அப்பால், சாவேஸ் தனது சோசலிச கொள்கைகளால், அடிமட்ட மக்களை தூக்கிவிட்டு அவர்களின் குரல்களையும் கேட்க செய்தார். நூற்றாண்டுகளாக பொருளாதாரத்தை தங்கள் கையில் வைத்திருந்தவர்களால் இந்த ஏழை மக்கள் அடக்கப்பட்டார்கள். சாவேஸ் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட போது வெனிசுவேலா பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள். மில்லியன் கணக்கான ஏழைகள் சாவேசின் பின்னால் அணிசேர்ந்தார்கள். பூர்வகுடிகள், ஆபிரிக்க வெனிசுவேலர்கள், ஏழைகள் எல்லோருடைய குரல்களையும் சாவேஸ் கேட்கும்படி செய்தார். இதற்கு முன்னர் இவர்களின் குரல்கள் கேட்கப்படவில்லை. இன்று நாங்கள் பார்ப்பது ஒரு வர்க்க போராட்டம் தான். பல ஆயிரம் மக்கள் மதூரோ அரசுக்கு எதிராக வீதிகளில் போராடுகிறார்கள். இவர்கள் பெரும்பான்மையாக வெள்ளையர்கள். நடுத்தர வர்க்கத்தினர். கொஞ்சம் பணவசதியுள்ளவர்கள். மறுபக்கம் பல ஆயிரம் மக்கள் அரசை ஆதரிக்கிறார்கள்.bd7b670ec19b444bb72e90fbf9fa7af6 18 வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் - சுருதி

இவர்கள் ஏழைகள். ஆபிரிக்க வெனிசுவேலர்கள். ஏழைகளின் நிலையை உயர்த்தும் கொள்கைகள் டொமினோ மாதிரி ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பரவும் என்பதால் ஐ-அமெரிக்காவுக்கு இதுவும் பிடிக்காது.

நான் இன்னுமொரு விடயமும் சொல்வேன். மதுரோ தேர்தலில் 5 மில்லயன் வாக்குகளால் வெற்றி பெற்றார். டிரம்ப் அரசாங்கம் வெனிசுவேலாவின் எதிர்கட்சியை போட்டியிட வேண்டாம் என்று கெஞ்சி நிறுத்தியது. இதனால் எதிர்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

மதுரோவின் தெரிவு நேர்மையற்றது என்று காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்கள். மதுரோ எதிர்ப்பு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால், அவர் சர்வாதிகாரி என்று கதை பேசுவதற்கு இதுவும் பலம் கொடுக்கும். கடைசி நேரத்தில் இருவர் மதுரோவுக்கு எதிராக தேர்தலில் நின்றார்கள். மதுரோ சர்வாதிகாரி என்று சொல்வதை இது பொய் என்று நிரூபித்தது. இதுதான் எதிர்கட்சியின் தந்திரோபாயம். சனநாயகத்திற்கு எதிரான வழிகளில் அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் அது. வீதிகளில் வன்முறைகள் நிறைந்த போராட்டங்கள் வெடிக்கிறது. பலர் அமைதி வழியில் போராடுகிறார்கள். உண்மைதான். ஆனால் கருப்பின சாவேஸ் ஆதரவாளர்களையும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் தாக்கி வருகிறார்கள். சோசலிஸ்டுகளை கொலை செய்கிறார்கள். வெனிசுவேலா அரசின் அடையாளங்களை, பிரசவ வைத்தியசாலைகள், உணவு விநியோகிக்கும் இடங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கிறார்கள்.

இங்குதான் ஐ-அமெரிக்காவின் கதையின் பொய்கள் வெளிவருகின்றன. ஐ-அமெரிக்கா பட்டினி கிடக்கும் மக்களுக்காக என்று பேசுகிறது. அவர்களுக்காக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறது. ஆனால் இந்த மக்கள்தான் வெனிசுவேலா அரசை ஆதரிக்கிறார்கள். இந்த மக்களை ஐ-அமெரிக்கா கையாழும் விதம் மிகவும் இழிவானது.

எனக்கு ஆழ்ந்த வருத்தம் தருவது என்னவெனில் ஒரு நாடு இருக்கிறது. அங்கு பெரும் பட்டினி நடக்கிறது. அந்த நாட்டுக்கு பெயர் யெமன். நாசி ஜெர்மன் படுகொலைகளைவிட மூன்று மடங்கு மக்கள் அங்கு சாகப்போகிறார்கள். அதை புறந்தள்ளி வெனிசுவேலாவில் மனித உரிமை பற்றி தாங்கள் கவலைப்படுவது போல காட்டுவது. இழிவிலும் இழிவு. அமெரிக்கர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனாலும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லும்போது அதை நம்புவதற்கு எங்கள் மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை தாண்டி இங்கு வேறொரு பக்கமும் இருக்கிறது என்று அறிவதற்கு இதை மறுத்து பேசும் முற்போக்கு ஊடகங்களும் எம்மிடையே இல்லவே இல்லை.

மிகவும் அதிசயமான விடயம் என்னவெனில் தடைகள் எதற்காக போடப்பட்டனவோ அதை அது செய்கிறது. பிரச்சனையை தடைகள் இன்னும் மோசமாக்கி உணவும் மருந்தும் கிடைப்பதை இன்னும் கடினமாக்குகிறது. தடைகளை போட்டு அதன் விளைவுகளை காட்டி ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம். இந்த நஞ்சு வட்டத்தை எதிர்த்து இனி போதும் என்று நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

 

 

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடைபெற உள்ள இத்தருணத்தில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு நேற்று சிரமதான பணியொன்று நடத்தப்பட்டது. இதில் நினைவேந்தல் குழுவில் அங்கம் வகிக்கும் அருட்தந்தையர், அருட்சகோதரிகள், திருகோணமலை தென்கையிலை ஆதீன குருக்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

மே 18 அன்று அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

mulli 1 1 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

 

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா வே பதிலளித்தார். செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி தெரிவிக்கையில், கடந்த இரு மக்களவை தேர்தல்களின் போதும் (2009, 2014)  ஐ.பி.எல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை.

அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐ.பி.எல், ரம்ஸான், பாடசாலைத் தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று கூறினார்.

தேசத்திற்காக வாழ்ந்து மறையும் நாய்கள்

இராணுவத்தில் சேவை செய்கின்ற இந்த நாய்களின் இறுதி நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இராணுவத்தில் சேவையாற்றும் இந்த நாய்கள் வயது மூப்பு அடைந்த பின்னர் அவை கொல்லப்படுகின்றன. அதுவும் வலியில்லாமல் கொல்லப்படுகின்றன.

ஏன் இவை உயிர் வாழ்ந்தால் என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இராணுவத்தில் பணியாற்றும் நாய்கள் பலவிதமான கடுமையான பயிற்சியினை பெற்றுக் கொள்கின்றன. அத்துடன் இந்த நாய்களுக்கு மோப்ப சக்திகள் அதிகம். அப்படியிருக்கும் போது, இவை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை கண்டு பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றது.

வயது மூப்பு காரணமாக இவை ஓய்வு பெற்ற பின்னர் இவை பயங்கரவாதிகளின் கைகளில் அகப்பட்டால், தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தும் அபாயம் இருக்கின்றன. இதனால் தான் இந்த நாய்கள் ஓய்வு பெற்ற பின்னர் கொல்லப்படுகின்றன.

இப்படி கொல்லப்படும் நாய்கள் இராணுவ மரியாதையுடனேயே அடக்கம் செய்யப்படுகின்றன. இந்த நாய்களை ஒரு நிதியை ஒதுக்கீடு செய்து இராணுவமே பராமரிக்கலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகும்.

அடுத்தடுத்த நாய்களுக்கு பயிற்சியளிக்கும் போது இவைகளின் நிலை அவைக்கு  விநோதமாக அமையும். இதனாலேயே இவை கொல்லப்படுகின்றன.

நம் தேசத்திற்காக சேவை செய்து, தேச நலனுக்காக வாழும்  இந்த நாய்கள் மரியாதைக்குரியவையே ஆகும்.

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்த இயக்குநர் மு.களஞ்சியம் கைது

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் அவர்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது.

தமிழர் நலன் பேரியக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சோழன் மு.களஞ்சியம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில் சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியிருந்தார்.

இக்கூட்டத்தில் குறித்த ஒரு அரசியல் கட்சியை தாக்கிப் பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் களஞ்சியம் மீது 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறை முயற்சித்தது.

ஆனால் முன் பிணை கேட்டு மு. களஞ்சியம் அவர்கள் தரப்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

21 பைகள் அடங்கிய அமோனியா நைட்ரேட்டை காவல்துறையினர் கைப்பற்றினர்

அஸ்கிரிய காவல்துறை பிரிவில்  ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்ட அமோனியம் நைத்திரேட் அடங்கிய 21 பொதிகளை கண்டி காவல்துறையினர் கைப்பற்றினர்.

விசாரணையின் போது, இவை தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் ஒரு சிரேஸ்ட இராணுவ அதிகாரி தெரிவிக்கையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களில் அமோனியா நைத்ரேட் ஒன்றாகும்  என்று கூறினார். கண்டி காவல்துறை தலைமையகத்தின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஒரு காவல்துறை குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

தமிழ்த் திரைப்படங்களை தமிழினப்படுகொலை நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! – கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில்  வெளியிடாமல் தள்ளிவைப்பதே  உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் – தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மே 18 இன அழிப்பின் நினைநாள்! சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவ தமிழ் இனப்படுகொலை நாள்! 10 ஆண்டுகள் கடந்தும் மனக்காயம் ஆறாத நாளாக மே 18 நம் மனத்தில் வலியை நினைவுப்படுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளாக மே மாதத்தை தாயகத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகெங்கும் வாழும் புலம்பெயர் உறவுகளும் மே 18 ஆம் நாளை துக்கநாளாக கடைபிடிக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த செய்தி!

இந்த மே மாதம் தமிழர்களுக்கான சோகமாதம்! இம்மாதத்தில் கேளிக்கை விழாக்களோ, தங்களது இல்லத்தில் மகிழ்வான நிகழ்வுகளோ யாவரும் நடாத்துவதில்லை. இந்நிலையை நாம் உணர்ந்து கொண்டு கடைபிடிப்பது இன்னுயிர் ஈந்த தமிழீழ தமிழர்களுக்கு நாம் செய்யும் நினைவேந்தல் ஆகும்.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வெளிப்படும். அதாவது மே 17.05.2019 – 18.5.2019 ஆகிய நாட்களில் வெளிவருகிற நிலை உள்ளது. மே 18 ஒட்டிய இவ்வாரங்களில் தமிழ்த்திரைப்படங்கள் வெளியிடக்கூடாது என்று உலகெங்கும் வாழும் தமிழர் உணர்வாளர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர். அது உணர்வுபூர்வமானது மட்டுமன்றி ஞாயமானதும் ஆகும்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் ரிலீசாகி வெற்றிப் பெறுகிற நிலையில் இம்மேமாத வாரங்களில் ரிலீசாகும் தமிழ்த்திரைப்படங்களை தள்ளிவைப்பதே தமிழீழத்திற்காக உயிர்நீத்த இலட்சக்கணக்கான தமிழர் உறவுகளுக்கு நாம் செலுத்து அஞ்சலியாகும்.

நான் சார்ந்திருக்கிற தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இக்கோரிக்கையை வேண்டுகோளாக வைக்கி றேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் -ஒன்டராறியோ சட்டமன்றத்தில் விவாதம்

கடந்த மாதம் 30ம் நாள் ஒன்டராறியோ, கனடா சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ தொடர்பான சட்டமூலம் Bill 104இன் மீதான இரண்டாம் கட்ட வாசிப்பு நேற்று (16) இடம்பெற்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து ஒன்டராறியோ சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் உட்பட சிலர் ஆற்றிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலமானது, தற்போது மேல் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பது பற்றிய பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்று, மூன்றாவது முறை வாக்களிப்புக்கு விடப்பட்டு வெற்றி பெறுமிடத்து சட்டமாக்கப்படும்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார் – இராணுவத் தளபதி

அண்மையில் தெஹிவளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவர் தொடர்பாக வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன்னை மூன்றுமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக நேற்று இடப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத் தளபதி தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

முதல் இரண்டு அழைப்பிகளின் போது தான் அதுபற்றிய விபரங்களை அறிந்து தெரிவிப்பதாகப் பதிலளித்ததாகவும்,மூன்றாம் முறை அமைச்சர் தொடர்புகொண்டபோது ஒன்றரை வருடங்களின் பின் தொடர்புகொள்ளுமாறு தான் தெரிவித்ததாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார். இராணுவத்திற்கு பயங்கரவாத சந்தேகநபர் ஒருவரை வருட காலம் தடுத்துவைத்திருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,இராணுவத்தளபதிக்கு அழுத்தம் குடுத்தார் என வெளியான தகவல்கள் பற்றிக் கேட்டபோது,அதனை நிராகரித்த அவர் ‘அதனை நான் அழுத்தம் என்று கூறமுடியாது ,அதனை ஒரு வேண்டுகோள் என்றே கூறல்வேண்டும்’ என்கிறார்.

சிறீலங்காவில் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், சட்டத்தின் மூலம் எல்லா வன்முறையாளர்களும் ஒரே முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு தெளிவான தலைமைத்துவமும், வன்முறைகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முக்கியமானது. அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் தான் இனங்களுக்கு இடையில் ஒர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் வன்முறைகளை துண்டுவதை ஊடகங்களும், பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது.