சிறீலங்காவில் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், சட்டத்தின் மூலம் எல்லா வன்முறையாளர்களும் ஒரே முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு தெளிவான தலைமைத்துவமும், வன்முறைகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முக்கியமானது. அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் தான் இனங்களுக்கு இடையில் ஒர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் வன்முறைகளை துண்டுவதை ஊடகங்களும், பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது.