ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் -ஒன்டராறியோ சட்டமன்றத்தில் விவாதம்

கடந்த மாதம் 30ம் நாள் ஒன்டராறியோ, கனடா சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ தொடர்பான சட்டமூலம் Bill 104இன் மீதான இரண்டாம் கட்ட வாசிப்பு நேற்று (16) இடம்பெற்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து ஒன்டராறியோ சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் உட்பட சிலர் ஆற்றிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலமானது, தற்போது மேல் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பது பற்றிய பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்று, மூன்றாவது முறை வாக்களிப்புக்கு விடப்பட்டு வெற்றி பெறுமிடத்து சட்டமாக்கப்படும்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.