Home Blog Page 3136

‘அமெரிக்க தலிபான்’ ஜோன் வோக்கர் 17 ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து விடுதலை.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பில் இணைந்து செயற்பட்ட
அமெரிக்கரான லின்ட் தனது 20 வயதில் கைதுசெய்யப்பட்டார்.
ஆப்கானில் இருந்து அமெரிக்கா கொண்டுவரப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.இவர் ‘அமெரிக்க தலிபான்’ என்றே அழைக்கப்பட்டார்.d53709add25947ac8cf4942b6655d642 18 'அமெரிக்க தலிபான்' ஜோன் வோக்கர் 17 ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து விடுதலை.

கத்தோலிக்க மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறிய இவர் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்கு ம் பாகிஸ்தானுக்கும் பயணம் செய்தார். பின்னர் ஆப்கானில் தாலிபான்களுடன் இணைந்துகொண்டார். 20 வயதில் சிறைக்கு சென்ற அவர் தந்து 38 வயதில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் பதவிவிலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். அத்துடன் தான் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் ஜூன் 7 திகதி விலகுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள தெரீசா மே, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், ஜூன் 7ம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு “தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக” டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பில் தெரீசா மே கூறியுள்ளார்.பிரெக்ஸிட்டை அமுலாக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், நாட்டின் சிறந்த நலன்களை பேணும் வகையில் புதிய பிரதமர் இருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

கொழும்பிலிருந்து 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசைவாழ் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்துவதன் மூலம் 400 ஏக்கர் காணியைப் பெற்று பொது மற்றும் வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால், இவர்களை வெளியேற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத திணைக்கள காணி, கெட்டராமா அப்பிள்வாட், புளுமென்டல் மற்றும் இரத்மலானை நீர்ப்பாசனத் திணைக்களக் காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களே இத்திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படவுள்ள குடும்பங்களாகும்.

குடும்பங்களை அகற்ற 170 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்து, பெருநகர, மேற்கு அபிவிருத்திஅமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

 

 

அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைன் விடுவிக்கப்படுகிறார்

இரண்டுவருடங்களுக்கு மேலாக எகிப்திய அரசால் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைனை விடுதலைசெய்யுமாறு எகிப்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆயினு அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஹுசைனின் வழக்கறிஞர் ‘ஒருசில நாட்களில் விடுதலை இடம்பெறலாம் என்கிறார்.

எகிப்த்திய அரசுக்கெதிராக குழப்பங்களை ஏற்றப்படுத்தும்,அதனைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதாக கூறி 2016 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். எனினும் அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சட்டுத் தொடர்பாக விசாரணை ஏதும் நடைபேயாமல் 880 நாட்களுக்கு மேல் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். சிறையில் மோசமாக நடத்தப்பட்ட அவரின் கையொன்றும் முறிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக எகிப்தில் குற்றச்சாட்டு இன்றி குறைந்தபட்சம் 20,000 பேர் வரை தடுத்து வைக்க்கப்பட்டுள்ளனர் என மனிதவுரிமை அமைப்புகள் எகிப்திய அரசுமீது குற்றம் சாட்டுகின்றன.

ஜுலியன் அசங்கே மீது மேலும் 17 வழங்குகள்

விக்கிலீக்ஸ் இணையத்தள உரிமையாளர் ஜுலியன் அசங்கே மீது அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் மேலும் 17 வழக்குகளை தொடுத்துள்ளது.

அமெரிக்காவின் படைத்துறை ஆவணங்களை வெளியிட்டது, அதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டது, அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டது தொடர்பில் அமெரிக்கா நீதி மன்றம் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அசங்கே பிரித்தானியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன், அவர் விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் 90,000 ஆப்கான் போர் ஆவணங்கள், 400,000 ஈராக் போர் ஆவணங்கள், 800 குவந்தனமோ சிறை தொடர்பான ஆவணங்கள், 250,000 அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக் கூறிய சம்பந்தன்

இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நீங்களும் இந்திய மக்களும் எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளைப் பெறவேண்டுமென்றும் நாம் பிரார்த்திக்கின்றோம் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு, விசேடமாக தமிழ் பேசும் மக்களுக்கு தாங்களும், தங்களது அரசும் நல்கிய அனைத்து உதவிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தொடர்ந்து வரும் காலங்களிலும் எமக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவதற்கும், தெற்காசிய பிராந்தியத்தில் சமாதானத்தினை ஏற்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் நீங்கள் செயலாற்ற வேண்டுமெனவும் ஆவலாயுள்ளோம் என்றும்,  தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் – வேல்முருகன்

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, நமது தொப்புள் கொடி உறவுகள் இலட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக் கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு பத்து ஆண்டுகளாகிவிட்டது.

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழர்களை முழுமையாக அழித்தொழித்து ஒட்டுமொத்த இலங்கை தீவையும் சிங்கள மயமாக்குவதற்கு சிங்கள இனவெறி அரசு அரங்கேற்றிய இனப்படுகொலையின் சாட்சியமாக முள்ளிவாய்க்கால் மண் விளங்குகிறது.

சர்வதேச போர் விதிமுறைகளுக்கு இலக்கணமாக தமிழர்களின் அறத்துடன் போர் புரிந்த தமிழீழ விடுதலை புலிகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசு 25க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு நீதிக்கு புறம்பாக முடக்கியதோடு இலட்சக்கணக்கான எமது ஈழத்து உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றுகுவித்த இந்த நாளை உலகத்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை நினைத்து பார்ப்பான்.

என் தொப்புள்க்கொடி உறவுகள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையு டனான வாழும் உரிமைக்காக எழுபது ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் சனநாயக போராட்டங்களை முடக்கிய சிங்கள பேரினவாதம் எண்பதுகளில் எனது சகோதர சகோதரிகளை ஆயுதமேந்துவதற்கு உந்தித் தள்ளியது என்பதே உலகறிந்த உண்மை.

இன வன்மமும், குரூர மனங்களையும் கொண்ட சிறீலாங்கா படைகள் தமிழனத்தின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை முன்னெடுத்தன. கொடூரங்களை அரங்கேற்றின. இறுதியாக முள்ளிவாய்க்காலிலேயே தமிழனத்தின் மீது ஒரு இனப்படுகொலையை சிறீலங்கா படைகளின் உதவியுடன் அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.

Velmurugan உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் - வேல்முருகன்இத்துடன் போர் முடிவுக்கு வருவதாக 2009 மே 18ஆம் நாள் அறிவித்து விட்டு தனது மிலேச்சத்தன இனப்படுகொலையை மறைத்து போரில் வெற்றி பெற்றுவிட்டோம், ஆயுத வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்று உலகம் முழுவதும் மார்பு தட்டியது.

தமது விடுதலைக்காக இலட்சக்கணக்கானவர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். எங்களின் உறவுகள் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும்போது அவர்களை சிறீலங்கா அரச படைகள் கொன்றொழித்து பத்தாண்டுகளாகின்ற போதும் அதற்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள். முகாம் வாழ்க்கை முற்றுப் பெறவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள்கதை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. சிறைகளில் சகோதரர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சிங்கள பேரினவாதிகள் எமது உறவுகளின் தாயக தேசத்திலே திட்டமிட்டு புத்த விகாரைகளை அமைக்கின்றது. காணிகளை கைப்பற்றி சிங்கள மக்களை குடியேற்றுகிறது. சிறிலாங்கா இராணுவம் எமது உறவுகளின் காணிகளையும், பண்ணைகளையும் வலிந்து பறித்து வைத்திருக்கின்றது.

தாயகம் எங்கும் சிறீலங்கா படைகள் நிலைகொண்டிருக்கின்றன. தமிழினத்திதை நசுக்குவதையே இலக்காக கொண்டு செயற்படுகின்றன. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் இன்னமும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எந்தெந்த வடிவங்களில் எல்லாம் முன்னெடுக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று பத்தாண்டுகளாகின்றன. அந்த நினைவேந்தல் தினத்தினை வெறுமனே உணர்வுகளுக்குள் மட்டுபடுத்தி நிறுத்திக் கொள்ளாது எமது தொப்புள்கொடி உறவுகள் சுயநிர்ணய உரிமைகளைப் பெற்று தாயகத்தின் தனது தேசிய அடையாளங்களுடன் வாழுவதற்கான இலக்கை அடைய உறுதியான நடவடிக்கைகளை தாயகத்திலும், தமிழகத்திலும் எடுக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதியெடுப்போமாக.

அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்

இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளுடன் தனித்துப் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 4 விகித வாக்குகளை பெற்றுள்ளது.

நிதிவளம் இன்றி தமிழ் மக்களின் மேல் நம்பிக்கை வைத்து போட்டியிட்ட அதன் வேட்பாளர்கள் பல இடங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் வந்துள்ளது அதிக கவனத்தை பெற்றுள்ளது.

உதாரணமாக காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 26 வயதான த. சிவரஞ்சனி 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாவது நிலைக்கு வந்துள்ளார். தி.மு.க மற்றும் ஆளும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் அவர் போட்டியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

50 விகிதம் பெண் வேட்பாளர்கள் உட்பட இளம் தலைமுறையினரை களமிறக்கிய நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 15 இலட்சம் வாக்குகளை தனதாக்கிக் கொண்டது. எனவே எதிர்வரும் காலங்களில் பெரும் திராவிடக் கட்சிகளுக்கு அது சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

thirumanalan அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்இதனிடையே, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல். திருமாவளவன் பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் ஏறத்தாள 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி – தோழர் தியாகு

முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும் என தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராசபட்சே தலைமை யிலான சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனக்கொலைப் போர் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு பல்லாயிரம் தமிழ்மக்கள் துள்ளத்துடிக்கக் கொல்லப்பட்ட அவலம் நிகழ்ந்து பத்தாண்டு நிறைவு பெறுகிறது.

இந்த இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும். தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டம் ஐநா மன்றத்திலும் பன்னாட்டு அரங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அனைத்துக்கும் மேலாகத் தமிழீழத் தாயகத்தில் சிங்கள இராணுவ வல்லிருப்பையும் மீறித் தமிழீழ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒப்புக்குச் சில தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இனவழிப்புக் குற்றத்துக்காகவோ, போர்க் குற்றங்களுக்காகவோ இது வரை ஒரே ஒருவர் கூடக் கூண்டிலேற்றப்படவில்லை.

அது மட்டுமன்று, நடந்தது இனவழிப்பு என்பதை உலக நாடுகளில் ஒன்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இனவழிப்புக் குற்றத்துக்காகச் சிங்கள அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கும் வரை நமக்கு ஓய்வில்லை.

தமிழினத்தின் உரிமைக் குரலை முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கும் சிங்கள அரசின் முயற்சி தோற்று விட்டது. மறுபுறம், தமிழீழ விடுதலைக் குறிக்கோளை மடைமாற்றும் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் முயற்சியும் தோற்று விட்டது. இருபெரும் சிங்களக் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தேசிய அரசு, நல்லாட்சி அரசு எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டன.

thiyagu இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி - தோழர் தியாகுபுதிய அரசமைப்புச் சட்டத்தின் ஊடாக சமஷ்டித் தீர்வு அல்லது அது போன்ற ஒன்று என வாயளந்து கொண்டிருந்த நாடாளுமன்றத் தமிழ்த் தலைமையின் கனவு கலைந்து விட்டது. இழந்த நிலத்தை மீட்கவும், போர்க் கைதிகளின் விடுதலைக்காகவும், காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடிக்கவும், இனவழிப்புக்கு நீதி கோரியும் தமிழீழ மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை.

தமிழீழ மக்களின் மறுபகுதியான புலம்பெயர் தமிழர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முதலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் நடத்திவரும் போராட்டமும் ஓய்ந்துவிடவில்லை, ஈழத் தமிழர்களோடு தோழமை கொண்டு தமிழகம் நடத்தி வரும் போராட்டமும் ஓயப் போவதில்லை. இனவழிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் போதாது. இனவழிப்பின் வேராகிய இன ஒடுக்குமுறை களையப்பட வேண்டும். அதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஒருமித்த கோரிக்கை.

இந்தப் பொதுவாக்கெடுப்பு வழியாகத் தமிழீழம் மலரும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். முள்ளிவாய்க்காலில் விதைந்த உயிர்கள் விடுதலையாக விளைவதே வரலாற்று ஏரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ .எஸ். ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புக்கள் இந்தியாவில் காலூன்றுகின்றன

உலகளாவிய தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புகள் இந்தியாவில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருந்தன. எனினும் இந்தியாவில் இவர்கள் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்த எண்ணியுள்ளதாக அறியமுடிகிறது.

சிறிலங்காவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தமது செயற்பாட்டை தெற்காசியாவில் தீவிரப்படுத்த முயற்சிப்பதாக   தெரியவருகிறது.

விலியத் அல் ஹிந்த் எனப்படும் ஐ.எஸ்.ஐ யின் இந்தியாவிற்கான புதிய தலைவராக அபு முகமது அல் பெங்காளி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மீதான தாக்குதலை இந்த அமைப்பு இந்தியாவிலும், பங்களாதேஷிலும் நிகழ்த்தப் போவதையே இந்த நடவடிக்கை காட்டுகின்றது என்று அறியமுடிகின்றது.

இந்தியா மற்றும் சிறீலங்கா போன்ற நாடுகளில் காணப்படும் இன முரன்பாடுகள் மற்றும் அரசியல் குழப்பங்கள் இந்த அமைப்புக்களின் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வருவதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.