Home Blog Page 3130

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

கிழக்கு மாகாண ஆளுநர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரின் பதவிகள் பறிக்கப்படு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கக்கிழமை மட்டக்களப்பு தாமரக்கேணியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இன நல்லூறவை பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களையும், தரவுகளையும் சேகரித்து மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையதித்துள்ளோம். அதனடிப்படையில் இவரின் குற்றங்கள் சரியான முறையில் விசாரணை செய்யப்பட்டு அதற்கான தண்டனைகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

குடந்த காலங்களில் தமிழ் – முஸ்ஸிம் மக்களிடையே இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள காரணத்தினால், இவருடைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றுவதற்கு உத்தியோகத்தர்கள் விரும்பவில்லை. அத்துடன் மக்களும் இவரின் சேவையை புறக்கனிக்கின்றனர்.

பலதடவைகள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்திய போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையையும் இவர் மீது அரசாங்கம் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் தமது நல்லூறவை பேணுவதற்கு இவரின் செயற்பாடுகள் அமையவில்லை. இவரைப் போன்ற இழிவான அரசியல் வாதிகள், ஒட்டுமொத்த தமிழ் முஸ்ஸிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்த ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாண யக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பிரதமர் மோடி இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் மோடியின் ஆட்சியில் தொழிலற்றவர்களின் வீதம் அதிகரித்து காணப் பட்டதுடன் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். ஆனாலும் அவர் வெற்றியடைந்துள்ளார்.

இதற்கு காரணம் செல்வந்தர்களின் செல்வாக்கு மற்றும் இந்து, முஸ்லிம் மக்களிடத்தில் காணப்பட்ட பிளவே ஆகும்.

அந்தவகையில் தற்போது, பிரதமர் மோடியின் வழிமுறையை பின்பற்ற ஐ.தே.க.வும் முனைகின்றது. அதாவது சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் முரண் பாட்டை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபத்தை பெற்றுகொள்ள முயற்சிக்கின்றது.

ஆகையால் இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக பொதுஜன பெரமுன மக்களை அணிதிரட்ட வேண்டும்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு – வியாழேந்திரன் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவிகிதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழுவில் இணைத்தலைவராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் (திங்கட்கிழமை) காலை ஆரம்பமான நிலையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு மாறாக இணைத்தலைவர் நியமனம் நடைபெறுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

சமூக வலைத்தளங்களில் பழைய நிகழ்வுகள் சமகால சம்பவம் போல் சித்தரிக்கப்படுகின்றன – சிறிலங்கா காவல்துறை

இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு 100 மில்லியன் ரூபா தேசிய காப்புறுதி திட்டம்

தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கான தேசிய காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சிறீலங்கா ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்ற தோற்றம் அனைத்துலக மட்டத்தில் ஏற்பட்டுள்ளதுடன் பல நாடுகள் பயண எச்சரிக்கைகளையும் தமது மக்களுக்கு விடுத்துள்ளன.

இதனால் சிறீலங்காவின் பிரதான வருமானத் துறையான சுற்றுலாத்துறை கடும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு ஏதுவாக சிறீலங்கா அரசு தற்போது காப்புறுதி என்ற கவர்ச்சியான திட்டத்தை அறிவித்துள்ளது.

 

 

 

 

பொது இடங்களில் யூதர்கள் குல்லா அணிவதை தவிர்க்க ஜேர்மனிய ஆணையாளர் வேண்டுகோள்

யூதர்கள் பொது இடங்களில் தங்களுக்குரிய “கிப்பா“ எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என்று அன்ரி செமிடிசிசம் ஆணையாளர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜேர்மனியில் அதிகரித்து வருவதையடுத்து, இவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இது ஜேர்மனியில் யூதர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுவதாக இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் கூறியுள்ளார்.

பிரித்தானியா புதிய பிரதமர் பதவிக்கான போட்டி

பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே விலகியதையடுத்து, வெற்றிடமாகும் அந்தப் பதவிக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடையே கடும் போட்டி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் (பிரெக்சிட்) இழுபறி நீடித்து வருவதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக தெரசாமே வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இதுவரை 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.

பிரெக்சிட்டிற்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சார் பாெரிஸ் ஜாேன்சன் அடுத்த பிரதமராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ரோரி ஸ்டூவர், சுகாதாரத்துறை அமைச்சர் மத்யூ ஆன்காக், சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மைக்கேல் கோவ், பிரெக்சிட் விவகார முன்னாள் அமைச்சர் டொமினிக்ராப்,  ஓய்யூதியத்துறை முன்னாள் அமைச்சர் எஸ்தெர் மெக்வி, நாடாளுமன்றிற்கான முன்னாள் அரசுப் பிரதிநிதி ஆன்ட்ரியா லெட்சம் உட்பட மேலும் 7 பேர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்கவிருக்கும் கன்சர்வேட்டிக் கட்சிக் கூட்டத்தில இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை – பூமிகன்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கிடையேயான ஒரு போட்டிக்களமாக வல்லரசு நாடுகள் இலங்கையைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் மைத்திரி -ரணில் எனப் பிளவுபட்டிருப்பதும் வல்லரசு நாடுகளுக்கு உதவுகின்றது. இது இலங்கையின் இராசதந்திரத்துக்கு புதியதொரு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

ஈஸ்டர் குண்டு வெடித்த பின்னர் அவசரமாக இலங்கைக்குத் தேவையான புலனாய்வு உதவிகளை வழங்குவதில் அவசரமாக முன்வந்த நாடு அமெரிக்காதான். ஐ.எஸ். அமைப்புடன் அமெரிக்கா ஏற்கனவே போரை நடத்தியிருப்பதால், அது குறித்த அனுபவமும், அறிவும் அவர்களுக்கு உள்ளது. இலங்கையும் உடனடியாகவே அமெரிக்காவை அணுகியது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ. அவசரமாக தமது நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

ஐ.எஸ். அமைப்பை அடக்குவதற்கு உதவுவதுதான் அமெரிக்காவின் இந்த உடனடியான செயற்பாட்டுக்குக் காரணம் என வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதில் மறைமுகமான காரணம் ஒன்றும் இருந்தது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான ஒன்று. அதற்கான ஒரு பதில் செயற்பாடாகத்தான் இலங்கைக்கு உடனடியாக உதவிகளுடன் அமெரிக்கா விரைந்தது.

இது வெறுமனே ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக மறைந்துபோகக் கூடாது என்றால், இலங்கையுடன் ஏதோ ஒரு வகையான பாதுகாப்பு உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டும். அதன் மூலமாகவே இலங்கையில் தொடர்ந்தும் தமது இருப்பைத் தக்கவைக்கலாம். அதுவும் ஐ.எஸ். மூலமான அச்சுறுத்தலைப் பயன்படுத்தித்தான் இதனைச் செய்யலாம் என்ற வகையில் அமெரிக்கா சிந்தித்திருப்பதாகத் தெரிகின்றது.

அதன் பிரதிபலிப்புத்தான் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்த வாரம் வாஷிங்டன்  அழைக்கப்பட்டதும், அங்கு செய்யப்பட்ட உடன்படிக்கைகளும். உயர் மட்டக்குழு ஒன்றுடன் அங்கு சென்ற மாரப்பன, முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். அவர் முதலில் நடத்தியது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் போர்மியோவுடன். அது ஒரு வழமையான சந்திப்புத்தான்.  அவர்தான் அமெரிக்காவின் வெளிவிவகாரத்தை கையாள்பவர். அதனால் அந்தச் சந்திப்பில் அதிமுக்கியமாக எதுவும் இருக்கப் போவ தில்லை.

அதன் பின்னர் அவர் நடத்திய சந்திப்புத்தான் முக்கியமானது. அடுத்ததாக திலக் மாரப்பனை சந்தித்த நபர் அமெரிக்க சனாதிபதி டொனால்ட ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன். அவர் இலங்கை போன்ற ஒரு நாட்டுடன் அரசியல் விவகாரம் குறித்துப் பேசும் ஒரு நபரல்ல. இவர் பேசினால், அதன் பின்னணியில் ஏதோ இராணுவ விவகாரம் இருக்க வேண்டும். அதுவும் பெரியளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவின் சர்வதேச வேலைத் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுவிட்டது என்பது இதன் பொருளாக இருக்கலாம். இலங்கை விவகாரத்தில் அமெரிக்க சம்பந்தப்பட்டிருப்பது இப்போது இரகசியமான ஒன்றல்ல. முன்னர் குறிப்பிட்டது போல, எப்.பி.ஐ. இங்கு வந்திருப்பது பகிரங்கமானது. சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுச் சேவையைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்களா என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

100817 F 6824H 007 அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை - பூமிகன்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இப்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் ஆலோசகர்கள் வர இலங்கை வர இடமளிக்கப்பட்டுள்ளது. இராணுவம் வந்தால் நிச்சயமாக சர்ச்சை ஏற்படும். இராணுவ ஆலோசகர்கள் பெருமளவுக்கு வரலாம். அது சர்ச்சையை ஏற்படுத்தாது.

சீனப் புலனாய்வாளர்கள் அதிகளவில் இலங்கையிலிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக் கின்றது. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் இலங்கை அரசுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவர்கள் நுைழந்திருக்கலாம் என்பது அமெரிக்காவின் கணிப்பு. சீனப் புலனாய்வாளர்கள் இங்கிருப்பதற்கான சாத்தியத்தை இலங்கையின் பாதுகாப்புத் துறையினரும்  மறுக்கவில்லை. ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்காத வரையில் பிரச்சினையில்லை என்பதுதான் இலங்கையின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கையிலிருக்கக்கூடிய சீனப் புலனாய்வாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என அமெரிக்கா சிந்தித்தது. அதன் விளைவுதான் வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள military-to-military cooperation தொடர்பான உடன்படிக்கை. இதிலுள்ள மற்றொரு அம்சம் என்னவென்றால், அமெரிக்கக் கப்பல்களும் இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்பதாகும்.

ஐ.எஸ். மீதான சர்வதேசப் போர்ப் பிரகடனம் என்ற பெயரில் ஏதோ ஒருவகையில் இலங்கையைத் தன்னுடைய பாதுகாப்பு வலயத்துக்குள் அமெரிக்கா கொண்டுவந்துவிட்டது. இதனால்தான், எதிர்க்கட்சிகள் இப்போது கிளர்ந்தெழுந்திருக்கின்றன. அமெரிக்க தூதுவர் மகாநாயக்கர்கள் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையில் நிரந்தரமான முகாமை அமைப்பதற்கான உடன்படிக்கை எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கம் அழைத்தால் இலங்கை வரும் அமெரிக்கப் படையினர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமே உடன்படிக்கை இடமளிக்கும்” என விளக்கமளித்து ள்ளார்.

அதாவது, தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இலங்கை வந்து “தற்காலிகமாக” தங்கியிருப்பதற்கும் இந்த உடன்படிக்கை இடமளிக்கின்றது. “தற்காலிகமாக” என்பது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதற்கு இரு தரப்பினரிடமும் விளக்கம் இல்லை. அது வருடக்கணக்கிலும் நீடிக்கலாம்.

சனாதிபதி மைத்திரி சீனா சென்று செய்துகொண்டுவந்துள்ள பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான military-to-military cooperation குறித்த உடன்படிக்கை உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதனுடைய நீண்டகாலக் கவலையாக இருந்தது இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குதான். ஈஸ்ட்டர் குண்டுவெடிப்புக்கள் அதற்கு எதிராக வலுவாக காய்களை நகர்த்துவதற்கு அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருப்பதாகவே கருதப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் இது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு அதிஸ்டம் தான். தாராளமாக உதவிகளை வல்லரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு செய்கின்றன. முஸ்லிம்களை அடக்குவதாகக் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களுடைய சனநாயகப் போராட்டங்களையும் அடக்கமுடியும். அவசரகாலச் சட்டம் இதற்கு உதவும். “பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச யுத்தம்” ஒன்றில் இலங்கையையும் இணைத்துக்கொண்டுள்ள நிலையில், ஜெனீவாவிலோ சர்வதேச அரங்கிலோ இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க அமெரிக்கா முனையுமா என்பதும் முக்கியமான கேள்வி. ஆக, ஈஸ்டர் தாக்குதலால் அதிகளவு பலனடைந்திருப்பது இலங்கைதான்!

முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி – தீபச்செல்லவன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன் முள்ளிவாய்க்காலை கடந்தவர்களும்தான். பல்வேறு மறைமுக அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கண்ணீர் விடவும் தீபமேற்றவும் அதன் வழியே நீதிக்கானதொரு போராட்டத்தை முன்னெடுக்கவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் திரண்டிருந்தனர் ஈழ மக்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத வடு. நமது மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று அளிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்த நிலம். கஞ்சிக்காக பசியில் கிண்ணங்களை ஏந்தி வரிசையில் நின்ற குழந்தைகள் கொன்றொழிக்கப்பட அவர்களின் குருதிகள் கஞ்சிப் பானைகளில் தெறித்த நாட்கள். இனத்தின் விடுதலைக்காகவும் நிலத்தின்  உரிமைக்காகவும் போராடிய ஒரு இனம், தொகுதி தொகுதியாய் கொன்று அழிக்கப்பட்ட காலம் அது. அம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த இனப்படுகொலையில் இருந்து ஈழத் தமிழ் நிலம் தன்னுடைய காயங்களை எந்தளவுக்கு ஆற்றியிருக்கிறது? ஈழத் தமிழ் இனத்தின் காயங்களை ஆற்றுகின்ற, செயல்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா? உண்மையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆறாத ஒரு காயம். அதனை ஆற்றுவதற்கு நீதியே அவசியம். அதுவே மருந்து. பத்தாண்டுகளாக உழலும் எம் இனத்தின் காயங்களில் சிறிதளவேனும் ஆற்றப்படவில்லை. மாறாக காயங்களை பெருப்பிக்கும் முயற்சிகள்தான் நடக்கின்றன.51133892 2360689757288688 4706665887283806208 n முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி - தீபச்செல்லவன்

ஈழ மண்ணிலே, வீட்டுக்கு ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீட்டோடு முழு குடும்பமும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஈழ நிலத்திலே, வீட்டுக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீட்டோடு முழு குடும்பமும் கொன்று அழிக்கப்பட்டிருக்கிறது. கண்களை மூடிக்கொண்டால், முள்ளிவாய்க்கால்தான் எமை அலைக்களிக்கிறது. இரவுகளும் நினைவுகளும் முள்ளிவாய்க்கால் காயங்களையே கிளறுகின்றன. அதற்கான காரணம் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. அதற்கான பொறுப்பு கூறப்படவில்லை. இந்த நிலை எதுவரை தொடரப் போகிறது?

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஒரு விளக்கினை ஏற்றி அவர்களுக்கு ஒரு துளி கண்ணீர் விட்டு அழுவதற்கு நாம் இந்த பத்தாண்டுகளில் போராடி இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதை சொல்வதற்கு போராடியுள்ளோம். இதை சர்வதேச ரீதியிலான போராட்டமாக முன்னெடுப்பதற்குப் பதிலாக நமக்குள்ளான முரண்பாடுகளாகவும் சிக்கல்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போதும், முள்ளிவாய்க்காலில் யார் பிரதான சுடரை ஏற்றுவது? யார் அஞ்சலி செலுத்துவதை என்பதற்கான சண்டைதான் நடக்கிறது. வெறுமனே எண்ணையில் திரியினை முக்கி, தீபம் ஒன்று ஏற்றுவதே உத்தமான செயல் என்றளவில் உள்ளது எம் நிலவரம்.

நமது தரப்புக்கள் இதற்குள் முரண்பட்டுக் கொண்டிருக்க, சர்வதேச ரீதியில் ஈழ இனப்படுகொலை குற்றத்திலிருந்து எப்படி தப்புவது என்ற தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றது இலங்கை அரசு. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சர்வதேச சமூகத்திற்கு உகந்த அரசாக செயற்படும் மைத்திரிபால சிறிசேன – ரணில் கூட்டரசாங்கம், இன அழிப்பு குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வென்றிருப்பது தொடர்ந்தும் இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். சர்வதேச அரங்கில் ஒரு பேச்சு, நாட்டில் ஒரு பேச்சு என்ற நிலையில்தான் உள்ளது மைத்திரி மற்றும் ரணிலின் போர் குறித்த பொறுப்புக்கூறல்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. அவர்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்களுக்கென்று ஒரு தேசம் அவசியமானது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ் மக்கள் தமக்கான மரபுவழித் தாயகத்தையும் அவர்களுக்கான ஆட்சியையும் அதனை பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் இந்த உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இப்போதைய நகர்வுகள் அதனை பின்னுக்கு தள்ளி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழரை அழிக்க முனைகின்றது.

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர்களின் போராட்டம், தமிழர்கள் ஒரு அரசை உருவாக்க கூடிய, சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க கூடிய, நிலத்தையும் இனத்தையும் பாதுகாக்கக் கூடிய ஓர் அரசை நடைமுறையில் சாத்தியப்படுத்தியது. ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஓரினத்தின் விடுதலை அமைப்பு, எப்படி போராட்டம் இனி நகர வேண்டும்? இனி எமது ஆயுதம் எது என்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் சரியாக பயணிப்பதே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்.Attempt to place Buddha statue after demolishing the foundation of Pillaiyar Temple at Kinniya Trincomalee 2 முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி - தீபச்செல்லவன்

இப்போதும் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இப்போதும் பண்பாடு சிதைக்கப் படுகிறது. அறிவிக்கப்படாத யுத்தமும் கண்ணுக்கு தெரியாத இன அழிப்பும் நீள்கிறது. இந்தப் பத்தி எழுதி கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் கூட முல்லைத்தீவு கொக்கிளாயில் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருகோணமலையின் குச்சவெளி பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். முல்லைத்தீவிலும் புத்தர் சிலைகளை வைப்பதற்காக முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வவுனியாவில் சைவாலயங்களில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக் கின்றன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமது ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்களின் பண்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளையும் தமிழர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக இன்னமும் விஸ்தரித்துள்ளனர். இன்னமும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது என்பது மேலே குறிப்பிடப்பட்ட இன, நில அழிப்புக்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளாகத்தான் அமையும்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை அவையில் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குகின்ற செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணை அனுசரணை வழங்குகிறது. இதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைகளை வெளியிட மறுக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு இதற்காக எமது தலைமைகள் ஆதரவினை ஏன் வழங்குகின்றனர் என்ற கேள்வியை காணாமல்போனோரின் உறவுகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. இலங்கை அரசாங்கத்தினுடைய கட்டமைப்புகள் சிங்கள பேரினவாதத்தை வளர்த்தெடுக்கும் நோக்கிலேயே இருக்கிறது. இலங்கை அரசோ, இலங்கை அரசின் நீதிக்கட்டமைப்பிலோ தமிழர்கள் நீதியினை பெற முடியாது. அவ்வாறு பெறக்கூடியதாக இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் என்ற ஒரு இனப்படுகொலை ஈழ மண்ணில் நிகழ்ந்திராது. எனவே, நீதியான சர்வதேச தலையீடே இங்கு அவசியமானது.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், நிகழ்ச்சிகள் மிகவும் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக மண்ணில் நடுவதற்கு மரங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பந்தலிடப்பட்டு வழங்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஊடாக நீதியினை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்றும் முள்ளிவாய்க்கால் பிரகடனம், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

ஈழத்தில் சிங்கள அரசு நிகழ்த்திய இன அழிப்பு போரே சிங்கள தேசத்தின் அரசியலுக்கானது. இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தையும், கொல்லப்பட்டவர்களுக்காக நீதியையும்கூட ஆளும் அரசும் – எதிர்தரப்பும் அரசியலாகவே கையாண்டு வருகின்ற நிலையில், அந்த அரசியலுக்குள் நீதிக்கான போராட்டம் ஒருபோதும் சாத்தியமற்றது. இனப்படுகொலைக்கான நீதியை வழங்கும் பொறுப்பு, முழு சிங்கள தேசத்திற்குமானது. போர்க்காலத்தில், கொல்லப்பட்ட இராணுவத்தை, இன்று காணாமல் போன இராணுவமாக காட்ட முயலும் சிங்கள தேச அரசிடம், எவ்வாறு நீதியைப் பெற முடியும். அப்படி நம்பினால், ஓர் இனத்தின் அரசியலாக இல்லாது, அது ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றும் கட்சி அரசியலாகவே சுருங்கும்.

என்ன நடந்தாலும் ஈரான் பக்கமே நிற்போம் ஈராக்அறிவிப்பு

அமெரிக்கா ஈரானுக்கிடையிலான பிரச்சினையில் எப்போதும் தாம் ஈரான் பக்கமே நிற்போம் என ஈராக் தெரிவித்துள்ளது.

ஈரானை எதிர்க்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களை குவித்து வருகின்றது. அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு படைகளை அனுப்பியுள்ளது.

ஈரான் அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தை இரத்துச் செய்திருந்தது. இதனால் ஈரானின் எண்ணெய் வழங்களை வாங்குவதற்கு உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இதனாலேயே இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நிலை உருவாகியது. இதனாலேயே ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. 1,20,000 துருப்புக்களை  அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் ஈராக் வெளியுறவு அமைச்சர் முகமது அலி ஹக்கீம் நேற்று ஈரான் அதிகாரிகளை சந்தித்தார். அப்போதே ஈராக்,  எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என தெரிவித்துள்ளதுடன், இந்தப் பிரச்சினையை நாம் பேசித் தீர்ப்போம் எனவும் ஈராக் தெரிவித்துள்ளது.