சமூக வலைத்தளங்களில் பழைய நிகழ்வுகள் சமகால சம்பவம் போல் சித்தரிக்கப்படுகின்றன – சிறிலங்கா காவல்துறை

இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.