பிரித்தானியா புதிய பிரதமர் பதவிக்கான போட்டி

பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே விலகியதையடுத்து, வெற்றிடமாகும் அந்தப் பதவிக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடையே கடும் போட்டி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் (பிரெக்சிட்) இழுபறி நீடித்து வருவதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக தெரசாமே வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இதுவரை 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.

பிரெக்சிட்டிற்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சார் பாெரிஸ் ஜாேன்சன் அடுத்த பிரதமராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ரோரி ஸ்டூவர், சுகாதாரத்துறை அமைச்சர் மத்யூ ஆன்காக், சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மைக்கேல் கோவ், பிரெக்சிட் விவகார முன்னாள் அமைச்சர் டொமினிக்ராப்,  ஓய்யூதியத்துறை முன்னாள் அமைச்சர் எஸ்தெர் மெக்வி, நாடாளுமன்றிற்கான முன்னாள் அரசுப் பிரதிநிதி ஆன்ட்ரியா லெட்சம் உட்பட மேலும் 7 பேர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்கவிருக்கும் கன்சர்வேட்டிக் கட்சிக் கூட்டத்தில இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.