Home Blog Page 3076

கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் – தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களின் தயாகப்பிரேதங்களை காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (16) பெருமளவான மக்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் கூடி தமது எதிர்ப்பை பெருமபான்மை சிங்கள அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

பௌத்த ஆலயங்களை அமைப்பதன் மூலம் முதலில் நில ஆக்கிரமிக்பையும் பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு தற்போது தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார மையாமாகத் திகழும் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

பல இடங்களில் இருந்தும் தமிழ் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சென்றபோதிலும், சிறீலங்கா அரசு அதன் இராணுவத்தின் மூலம் பல இடங்களில் மக்களைத் தடுத்துள்ளது.

திரியாய் பகுதியில் மக்கள் சென்ற பேரூந்தை தடுத்த சிறீலங்கா இராணுவம் அதில் சென்றவர்களை போராட்டத்திற்கு செல்லவிடாது தடுக்க முற்பட்டதுடன், பேரூந்தின் சக்கரமும் காற்றுப்போயுள்ளது தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

kanniya2 கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் - தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசுkanniya bus கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் - தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருகிறது – க.வி. விக்னேஸ்வரன்

இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்கான போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின்   படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வு  இன்று (16) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்த பின் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது உண்மையான சரித்திரம் வெளி வராமல் சுதந்திரத்தின் பின்னரான காலம் தொடக்கமே எமது சிங்கள புத்தி ஜீவிகள் பார்த்துக்கொண்டமை இன்று யோசித்துப் பார்த்தால் கூட அறுவருப்பை தருகின்றது.

எனவே தான் எமது வரலாற்றில் சம்பவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஆவண மயப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 30 ஆண்டு போர் சூழல்களிலும்,இறுதி யுத்தத்தின் போதும்  ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த சிந்திக்க அல்லது மீட்டுப் பார்க்க முடியாத நிகழ்வுகளாக அமைந்தாலும் கூட அந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்கான போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.

இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.

எனவே எழுத்துத்துரை வளர்க்கப்பட வேண்டும்.தரமான படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மைகள் நடு நிலையில் இருந்து எழுத்துருவில் ஆராயப்படும்.

எம்மிடையே இன்றும் வாழும் எத்தனையோ இலக்கியப்படைப்பாளிகள் தமது படைப்புக்களை அச்சேற்றம் செய்வதற்கும், அவற்றை வினியோகம் செய்வதற்கும் தேவையான முதலீடுகள் அற்ற நிலையில் அமைதியாக இலை மறை காயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட படைப்புக்களை இனம் கண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவர்களின் படைப்புக்களை பிரசுரம் செய்வதற்கும் ஏதுவாக ஒரு புதிய வேலைத்திட்டம் வடமாகாண சபையினால் அறிமுகம் செய்யப்பட்டு அப்படைப்பாளிகளுக்கான கௌரவங்கள் மற்றும் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைப்பாளிகள் எமது காலத்தின் போது வடமாகாண சபையால் கௌரவப்படுத்தப்பட்டனர்.

அதே போன்றே சமாந்தர வேலைத்திட்மொன்று பிரதேச மட்டங்களில் உள்ள படைப்பாளிகளை அறிமுகம் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இயங்குகின்ற கலாச்சார பகுதியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருந்த போதும் இன்னும் பல கலைஞர்கள் இன்னமும் அடையாளப் படுத்தப்படாமல் இருக்கின்றார்கள்.தனிப்பட்ட காழ்ப்பணர்ச்சிகள்,வர்க்க ரீதியான சிந்தனைகள் போன்ற காரணங்களே அவர்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாம் இவ்வாறான குறுகிய சிந்தனைகளுள் இருந்து வெளியே வர வேண்டும்.நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற தாயக மொழிச் சிந்தனை மேலோங்க வேண்டும்.அவ்வாறான சிந்தனை மேலோங்கினால் தான் எம்மை ஆள்வதற்கு தகமை உடையவர்கள் ஆவோம்.

தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.மீண்டும்  படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.

அவர்களின் தரமான படைப்புகள் மக்களிடையே உலா வர ஆவனம் செய்ய வேண்டும்.அந்த வகையிலே சர்மிலா வினோதினியும் ஒரு சிறந்த படைப்பாளராக நீண்ட காலம் எம்மக்களிடையே உலா வர வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே இனத்தை உருவாக்க வழி கூறும் பிக்கு

நாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே   ரதன  தேரர்  தெரிவித்தார்.

அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அனைத்து பாடசாலைகளையும் கலவன் பாடசாலைளாக மாற்ற வேண்டும். ஒரே வகையான சீருடைகள் வழங்கப்பட வேண்டும். தலை மற்றும் முகத்தை மூடகூடாது. அவ்வாறு மூடிக்கொண்டு வர வேண்டுமாயின் மத்திய கிழக்கிற்கு அனுப்ப வேண்டும். இலவச கல்வியின் தந்தை கன்னங்கர கூறியது போன்று, மத்திய கல்லூரிகள், மகா வித்தியாலயங்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு மாணவர்களை கட்டாயம் அனுப்புங்கள். அதன் பின்னர் உயர் தரப்பரீட்சையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இராணுவத்திற்கு சென்று பயிற்சி பெறுங்கள். அப்போது நாம் ஒரே இனமாகின்றோம். அனைவரும் இலங்கையின் வரலாற்றை ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமிழை கற்றுக்கொள்வதில் பிரச்சினையில்லை. ஏனைய பகுதிகளை சார்ந்தவர்கள் சிங்களத்தில் வியாபாரத்தில் ஈடுப்பட முடியுமாயின் ஏன் அவர்களால் சிங்கள மொழியை பேச இயலாது.

ஆகவே ஒரு தேசிய கல்வி கொள்கைக்குள் அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்க வேண்டும் என தெரிவித்தார்.

‘இரத்தத்திற்காக கத்தும் சில பௌத்த துறவிகள்’ ; நான் மன்னிப்புக்கோர வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன் ராமநாயக்க

மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால், மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்தார்.

“நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒரு சில துறவிகள் மட்டுமே இரத்தத்திற்காக கத்துகிறார்கள், இந்த துறவிகளில் 90 சதவீதம் பேர் தலைமை துறவிகளால் வழி நடத்தப்படுகிறார்கள். எனவே நான் சொன்னது என்னவென்றால், ஒரு சில துறவிகள் தலைமை துறவிகளால் வழிநடத்தல் செய்யப்படுகிறார்கள் என்றுதான்.

எனினும் நான் கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனது அறிக்கையை அதன் உள்ளடக்கத்தை சிதைத்து திரிபுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எக்காரணத்தைக் கொண்டும் தமிழினத்தை மத, சாதி, பிரதேச அடிப்படையில் பிரிப்பதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் – மனோ

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள மதரீதியான பிரச்சினைகள் தமிழினத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.எக்காரணத்தைக் கொண்டும் தமிழினத்தை மத, சாதி, பிரதேச அடிப்படையில் பிரிப்பதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன். அதேபோன்று தமிழ் மொழி, எங்கள் கலாசாரம், வரலாறு ஆகியவற்றை எவருக்கும் விலை பேசி விற்க மாட்டோம் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ‘தெய்வீக சேவைத் திட்டம்’ யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மனோ கணேசன் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

நான் கன்னியா, நீராவியடி, திருக்கேதீஸ்வரம், உகந்தை முருகன் ஆலயம் ஆகியவற்றுக்குப் போனேன். இப்போதும் போய்க் கொண்டுதான் இருக்கின்றேன். நான் அவ்வாறு செல்கின்ற காரணத்தினாலேதான் அந்தப் பகுதியில் நடக்கக் கூடிய நிகழ்வுகளையும், அசம்பாவிதங்களையும், அட்டூழியங்களையும், ஆக்கிரமிப்புக்களையும் நாடு முழுவதும் அறியக் கூடியதாக உள்ளது

இப்பொழுது கன்னியாவிலே வெந்நீரூற்றுக் கிணற்றுக்கு அருகாமையில் இருக்கக் கூடிய விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டுள்ளது. அது இப்போது இடிக்கப்பட்டது அல்ல, கடந்த 2011 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டுவதற்காக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் அகழ்வாராய்ச்சித் திணைக்களம் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது வர்த்தமானியில் அகழ்வாராய்ச்சிக்குரிய இடமாக பிரகடனப்படுத்தியிருக்கின்றது. அது இப்போது அல்ல, இவை எல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தவைதான்.

அங்கே சென்று திருகோணமலை மாவட்டச் செயலகத்திலே மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் அழைத்து ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தேன்.

அதன் மூலமாக அகழ்வாராய்ச்சி இடத்திற்கு மேலே எந்தக் காரணம் கொண்டும் பௌத்த விகாரை கட்ட முடியாது என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். அது மட்டுமல்ல, அந்த வளவுக்குள்ளேயே வெந்நீரூற்று விநாயகர் ஆலயத்தைக் கட்டுவதற்கும் அமைச்சு நிதி உதவி செய்யத் தயாராக உள்ளதென்பதை அறிவித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றோம். இந்நிலையில்தான் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் எழுதியதன் அடிப்படையிலே கன்னியா விநாயகர் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரையொன்றைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக செய்திகள் காதுக்கு எட்டின. அப்போது நான் உடனடியாக திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமாரவை தொலைபேசியில் அழைத்து நாங்கள் எடுத்த தீர்மானத்தை மீறுவீர்களானால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையக் கூடிய பாதகங்களுக்கு, எதிர்விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வருமென்று கடுமையாகச் சொன்னேன்.

இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (15) யாழ்ப்பாணம் வருகின்றார். அவரிடம் இங்கிருக்கும் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே போல இங்கிருக்கும் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதனும் ஜனாதிபதியிடம் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கும் மேலாக இங்குள்ள வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் ஐனாதிபதியிடம் இதனை எடுத்து விளக்க வேண்டும். அவ்வாறு அனைவருமாக இணைந்து இதனை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமானது.

அதைவிடுத்து, மனோகணேசனை மாத்திரம் குறை சொல்வதற்கோ அல்லது மனோகணேசனை மாத்திரம் சுட்டிக்காட்டுவதற்கோ இந்த விடயங்களைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதும் சரியல்ல. அது பிழையானது.

இப்பிரச்சினைகள் தொடர்பில் சரியானதொரு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆகவே இந்த விவகாரத்தில் என்னுடன் சேர்ந்து கூட்டாகச் செயற்படுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடிய தமிழ் உறுப்பினர்களும் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”.

 

வாக்களிக்கும் வயதெல்லையை குறைப்பதற்கு மலேசியா திட்டம்

தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 18 ஆக குறைப்பதற்கு மலேசியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

18 வயதானவர்கள் வாக்களிப்பதுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்பதங்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போவதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வாக்களிக்கும் வயதெல்லை தற்போது 21 ஆக உள்ளது. ஆனால் பல நாடுகளில் அதன் எல்லை குறைவானது. இந்தோனேசியாவில் வாக்களிக்கும் வயது 17, ஒஸ்ரியாவில் 16 வயது.

உலகில் உள்ள 27 நாடுகளில் வாக்களிக்கும் வயது எல்லை 18 ஆக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தலைமுறைகளுக்கு இடையிலான பலமானவர்களை கொண்டுவரும் நடவடிக்கையாகும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சயிட் சத்திக் அப்துல் ரகுமான் அல்ஜசீரா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

26 வயதான அவர் மலேசியா நாடாளுமன்றத்தில் உள்ள இளம் அமைச்சார் ஆவார். மலேசியாவின் தற்போதைய அரச தலைவரும் இளையோர்களின் வாக்குகளினால் பதவியை கைப்பற்றியிருந்தார்.

ரணிலே, தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு : காணாமல் போன உறவுகள் போராட்டம்

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டமானது பிரதமரின் யாழ். நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது :

“ரணிலே , எங்கள் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு”

“எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை”

“உங்கள் ஏக்கிய ராஜ்யாவை குப்பையில் எறியுங்கள்”

போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

Protest ranil 2019 2 ரணிலே, தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு : காணாமல் போன உறவுகள் போராட்டம்

சிறீலங்காவின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியக் குழு ஆய்வு

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சிறீலங்காவுக்கு தமது உதவிகளை வழங்கி வருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவத்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் இணைப்பாளர் கிலிஸ் டி கேர்ச்சோவ் தலைமையிலான குழு சிறீலங்காவில் 11 ஆம் நாளில் இருந்து 16 ஆம் நாள் வரை தங்கியுள்ளது.

இந்த குழுவினர் ஆயுத நடவடிக்கை, தீவிரவாதம், மதவாதம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தமது ஆலோசனைகளை சிறீலங்காவுக்கு வழங்கி வருகின்றனர்.

சிறீலங்காவுடன் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம், நாடுகடத்துதல் மற்றும் தகவல்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

நால்வர் அடங்கிய இந்த குழுவினர் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மரபனாவின் அழைப்பினைத் தொடர்ந்தே சிறீலங்கா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

சிறீலங்காவில் இருந்து அதிக தேயிலையை கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் 70 விகிதத்தை கொள்வனவு செய்து வருகின்றது.

இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிக தேயிலை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டுவருவதாக சிறீலங்காவின் பெரும்தோட்டத்துறை மற்றும் தொழில்துறை செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கன்னியாவுக்காகத் திரள்வீர்

தமிழர் மரபுவழி தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு முழுவதுமே தொன்ம எச்சங்கள் மிதமாகக் காணப்படுகின்றன. கலாசார படைகளின் அடிப்படையில் பார்த்தால் இயற்கை மண்ணுக்கு அடுத்த நிலையிலேயே தமிழர்களுக்கான கலாசார கூறுகள் தென்படத்தொடங்கிவிடுகின்றன.

ஆனால் இங்கு தொல்லியல் திணைக்களமும், வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களும் அகழ்வாய்வுகளை நடத்துவதில்லை. மாறாக மேலாய்வின் அடிப்படையில் பௌத்தத்தின் எச்சங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறார்கள். அதைவைத்துக்கொண்டு அவ்விடம் பௌத்திற்குரியது எனக் கூறி பௌத்த விகாரையை மீளநடுவதிலும், அந்நிலத்தை அபகரித்து சிங்களமயப்படுத்துவதிலும் அக்கறையெடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு தெற்கின் எதிர்தேசமாகவே சிங்கள பழைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வட, கிழக்கு பகுதிகளில் அனேக இடங்களில் பௌத்த எச்சங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு அப்பகுதியை நிர்வகித்த தமிழ் குறுநிலத்தவர்கள், வணிகர்கள் கொடைகள் வழங்கியமை பற்றிய கல்வெட்டுக்கள் கூட உண்டு. அவை தமிழ் பௌத்ததிற்குரியவை. இன்று வளர்ச்சிபெற்றிருக்கும் சிங்கள தேராவாத பௌத்திற்குரியனவல்ல. வடக்கு கிழக்கு பகுதிகளில் மேலோங்கியிருக்கும் சைவத்துக்கு நிகராக ஈடுகொடுக்க முடியாமல் தெற்கு நோக்கி நகர்ந்துவிட்ட தமிழ் பௌத்த்தின் எச்சங்களைத் தான் இலங்கை தொல்லியல் திணைக்களம் சிங்கள பௌத்த மேலான்மைவாத அரசியலுக்குப் பயன்படுத்துகின்றது.

இதேநிலையைத் தான் கன்னியாவும் எட்டியிருக்கிறது. கன்னியாவுக்கு அயல் பகுதிகளில் (ராஜராஜ பெரும்பள்ளியை வெல்கம் விகார -சைத்திய என்கிறார்கள்) உள்ள ‘பௌத்த எச்சங்களை’க் கொண்டு அப்பகுதி முழுவதுமே சிங்கள தொல்லியல் திணைக்களத்துக்குரியது என மார்தட்டுகிறது அத்திணைக்களம். அத்திணைக்களத்துக்குச் சார்பாக நாட்டின் உயரதிகாரம் கொண்ட அனைத்துத் தரப்பினரும் அணிதிரண்டு நிற்கின்றனர்.

ஆனால், அந்தக் கன்னியா பகுதியில் இதிகாசங்களும், மரபுவழிக் கதைகளும், நம்பிக்கைளும், சடங்குசார் வழிபாட்டம்சங்களும் நிறைந்த உயரிய பண்பாடொன்றின் எச்சக்கூறுகள் மறைந்துகிடக்கின்றன. அவை 2002 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் திணைக்களத்தினால் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கின்றன. மிச்சமாயிருந்த – தனியார் காணியில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தின் இடிபாடுகளையும் அழிக்கும் வேலைகள் வேகமாக இடம்பெறுகின்றன. இது ஒரு விதத்தில் உத்தியோகபூர்வமான முறையில் நடக்கும் பண்பாட்டு இனப்படுகொலைதான். ஜனநாயகத்தை மீட்பதற்கான மனிதாபிமானப் போர்போல.

இந்த அழிப்பை தடுத்து நிறுத்த நம்மிடையே முதுகெலும்புள்ள, அதிகாரமிக்க அரசியல் தலைமைகள் எதுவுமில்லை. நீதிசார் பொறிமுறைகள் நியாயத்தை வெளிப்படுத்துவனவாக இல்லை. எனவேதான கூட்டாக நம் எதிர்ப்புக்குரலையாவது காட்டவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். எனவே நாளைய தினம் (16-07-2019, காலை 11 மணிக்கு)பண்பாடு சார்ந்த அதிக அலுவல்களைக் கொண்டிருப்பினும், அப்பண்பாடு உங்கள் சந்ததி கடந்து நிலைக்கவேண்டுமெனில் கன்னியாவைக் காப்பாற்றும் போராட்டத்துக்கு திரள்வீர் மக்களே..!

-ஜெரா தம்பி