வாக்களிக்கும் வயதெல்லையை குறைப்பதற்கு மலேசியா திட்டம்

தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 18 ஆக குறைப்பதற்கு மலேசியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

18 வயதானவர்கள் வாக்களிப்பதுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்பதங்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போவதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வாக்களிக்கும் வயதெல்லை தற்போது 21 ஆக உள்ளது. ஆனால் பல நாடுகளில் அதன் எல்லை குறைவானது. இந்தோனேசியாவில் வாக்களிக்கும் வயது 17, ஒஸ்ரியாவில் 16 வயது.

உலகில் உள்ள 27 நாடுகளில் வாக்களிக்கும் வயது எல்லை 18 ஆக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தலைமுறைகளுக்கு இடையிலான பலமானவர்களை கொண்டுவரும் நடவடிக்கையாகும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சயிட் சத்திக் அப்துல் ரகுமான் அல்ஜசீரா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

26 வயதான அவர் மலேசியா நாடாளுமன்றத்தில் உள்ள இளம் அமைச்சார் ஆவார். மலேசியாவின் தற்போதைய அரச தலைவரும் இளையோர்களின் வாக்குகளினால் பதவியை கைப்பற்றியிருந்தார்.