சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

சிறீலங்காவில் இருந்து அதிக தேயிலையை கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் 70 விகிதத்தை கொள்வனவு செய்து வருகின்றது.

இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிக தேயிலை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டுவருவதாக சிறீலங்காவின் பெரும்தோட்டத்துறை மற்றும் தொழில்துறை செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.