Home Blog Page 3073

ஆக்கிரமிப்பாளருக்கு அடி கொடுத்த தமிழன் வீர வரலாறு, திட்டமிட்டே அழியவிடப்படுகிறது

வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக  அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது .

தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடம் என தொல்பொருள் திணைக்களம் இதனை அடையாளப்படுத்தியுள்ளபோதிலும் இங்கே தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகைகள் எதனையும்  காணக் கிடைக்கவில்லை அத்தோடு  சிதைவடைந்து செல்லும் கோட்டையின் எச்சங்களை பாதுகாப்பதற்கோ தொல்பொருள் திணைக்களம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவு மக்கள் விசனம்  தெரிவித்துள்ளனர் .

பௌத்த இடங்கள் என தமிழ்  மக்களின் புராதன ஆலயங்களையும் வரலாற்று இடங்களையும் முல்லைத்தீவில் அடையாளப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் தொல்லியல் திணைக்களம் பல நூற்றாண்டு கால தமிழர்  வீர வரலாற்றை கூறும் இடங்களை புறக்கணித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் .

தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தில்  1715 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இந்த கோட்டை அமைக்கப்பட்டது . இதன்பின்னர் இலங்கையை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை 1795 இல் கைப்பற்றி மீளுருவாக்கம் செய்தார்கள் . அத்தோடு ஆங்கிலேயர்களின் படைத்தலைமையகமாகவும் இந்த கோட்டை விளங்கியது . ஆங்கிலேயருடன் போர் புரிந்த வன்னி மண்ணின் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இந்த கோட்டையை கைப்பற்றி இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிபெற்றான் என வரலாறு கூறுகின்கிறது .

இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் நுட்பமாக அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது . ஆனால் அவர்களின் மௌனிப்புக்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரால் 2009 இல்  இந்த கோட்டை அழிக்கப்பட்டிருந்தது .

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய வளாகத்தின் கட்டுமானப்பணிகளின் போதும்  மிக மோசமாக அழிக்கப்பட்டிருந்தது . தற்போது இந்த கோட்டையின் ஒருபகுதியை இராணுவத்தினர் அபகரித்து முகாம் அமைத்துள்ள நிலையில் எஞ்சிய எச்ச பகுதிகள் மாவட்ட  செயலகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளாலும் இயற்கையாலும் சிதைவடைந்து செல்கின்றது . விரைவில் முற்றாக அழிவடைய கூடிய சூழலும் தோன்றியுள்ளது. எனவே உரியவர்கள் இந்த வரலாற்று பொக்கிஷத்தின் எச்சங்களையாவது பாதுக்காக்க முன்வர வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட மக்களும் வரலாற்று ஆர்வலர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழிவுக்கு துணைபோகும் சிறிலங்கா காவல்துறை – பொது அமைப்புகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட பொதுஅமைப்புக்கள் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு திரைமறைவில் துணை போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.

அதாவது, மணலுக்கான எந்தவிதமான அனுமதிகளும் வழங்கப்படாத வன்னேரிக்குளத்தின் உட்பகுதி கல்லாறு உமையாள்புரம் தட்டுவன்கொட்டி கிளை ஊரியான் கோரக்கன்கட்டு அக்கராயன் பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்தெடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக, கண்டாவளைப்பிரதேசத்திற்குட்பட்ட கல்லாறு பெரியகுளம் ஊரியான் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களிலும் ஆறுகளிலும் அனுமதியற்ற முறையில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதொடர்பாக பொலிஸாருக்கும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பலதடவைகள் எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கண்டாவளைப்பிரதேச பொதுஅமைப்பக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த 11ஆம் திகதி கண்டவாளைப்பிரதேச செயலர்பிரிவிற்கு உட்பட்ட கனகராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிராத மணல் அகழ்வு கிராம அலுவலர் உத்தியோகத்தர்கள் சென்று மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினையும் அங்கு குவிக்கப்பட்டிருந்த 50 கியுப்பிற்கும் அதிக மணலையும் விடேச அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்தபோதும் தற்போது அப்பகுதியில் இன்றும் மணல் மணல் அகழ்வுகள் தொடர்வதாகவும் இதற்கு பொலிஸார் முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சட்டத்தரணிகள் முன்வராத காரணத்தால் தன்னுடைய வழக்கை தானே வாதாடிய குறித்த கைதி, வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பிணை கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

கிளிநொச்சி 5 ஜி அலைவரிசை மக்கள் கடும் விசனம்

கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக  மக்கள்  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

5ஜி தொழில்நுட்பத்தினால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவது குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் குறித்த தொழில்நுட்ப வசதி எமது பிரதேசத்திற்கு தேவை இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2ஜி, 3ஜி வசதிகளையே தாம் தடுத்ததாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், குறித்த தொழில்நுட்பத்தினால் விவசாயத்திற்கு உதவும் பூச்சிகள், பறவைகள் என பலவும் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்தே அவற்றை தாம் தடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்கா இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் பலி, மேஜர் காயம்

நேற்று (19) அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இராணுவ மேஜர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இhணுவத்தினர் சென்ற பிக்கப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதிய பின்னர் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ரம்பேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் சென்றவர்களும் காயமடைந்ததுள்ளனர். பிக்கப் வாகன சாரதியின் பொறுப்பற்ற தன்மையே விபத்துக்கு காரணம் என அதன் சாரதியை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் – மகிந்தாவின் தயவை நாடுகின்றது பிரான்ஸ்

அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாக சிறீலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவற்று சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்சாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகிந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்த பிரான்ஸ் தூதுவர் பிரான்ஸ் இன் தேசிய தின கொண்டட்டங்களில் கலந்துகொண்டதற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகள் உறுதியாகக் காணப்படுமானால் பல முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்போக்குவரத்து பாதையில் உள்ளது. அது முதலீட்டுக்கு சிறந்த இடமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தமது அரசு அமையும்போது முதலீட்டுக்கான வழிகளை தான் ஏற்படுத்துவதாக மகிந்தா தெரிவித்துள்ளார்.

சிங்களமயமாகும் மேலும் ஒரு தமிழர் தாயகப் பகுதி

2009 விடுதலைப் புலிகளின் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் நன்கு அறிவர். இந்த வகையில், இன்னுமொரு தமிழ்க் கிராமம் சிங்களவர்களின் குடியிருப்பாக மாறிவருகின்றது. அது மணலாறு கொக்குத்தொடுவாயில் உள்ள கோட்டகைக்கேணி கிராமமாகும்.

1984 நவம்பர் மாதம், விடுதலைப் புலிகள் ஊடுருவியதாக அறிவித்து, அரசாங்கம் அந்தப் பகுதி மக்களை வெளியேற்றியிருந்தது. இவர்கள் அளம்பில், வற்றாப்பளை, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் குடியேறியிருந்தனர்.  தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியவர்களாவர். மீண்டும் 1991ஆம் ஆண்டு திரும்பி வந்த போது, விடுதலைப் புலிகள், இன்னும் பிரச்சினை தீரவில்லை. வரவேண்டாம் என மறுத்தனர். அதை பொருட்படுத்தாது குடியேறி சிறிது காலத்தின் பின் அதே ஆண்டு மீண்டும் இடம்பெயர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. மீண்டும் இடம் பெயர்ந்து முன்னர் இருந்த இடங்களுக்கு சென்று பின்னர், 2012 இல் இந்தக் கிராமங்களுக்கு திரும்பியிருந்தனர்.

தமிழர்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1997இல் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில், மகாவலி அபிவிருத்தி குடியேற்றம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குடியிருப்பை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்தக் குடியிருப்பை முற்றுகையிட்டு, இங்கு குடியேறிய சிங்களவர்களை விரட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் மணலாறு மோதலில் பெருமளவு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டை அங்கு குடியேற்றப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு காவலாக போடப்பட்ட இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்டதாகும்.

இந்தக் கிராமவாசிகள் தற்போது அவர்களின் இடங்களைப் பார்ப்பதற்காகவும், பராமரிப்பதற்காகவும் அந்தப் பகுதிக்குச் சென்ற போது, அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருந்தன. அதை அந்த மக்களே தெரிவிக்கின்றனர்.

இங்கு அமைந்துள்ள கோட்டகைக்கேணி பிள்ளையார் ஆலய சூழலில் ஓர் புத்தர் சிலை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றகும். சிங்களமயமாக்கலை ஏற்படுத்தும் ஆரம்ப கட்டமே இதுவாகும். இந்த பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வனவளத் திணைக்களம் கற்களை நிறுவி காணிகளை அபகரித்துள்ளது.

சாம்பல் மோட்டை என்ற பகுதியை வனவளத் திணைக்களத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்ததுடன்,  இப்பகுதி அரச காணிகள் என குறிப்பிடுகின்றனர். இவை தமக்கு சொந்தமான காணிகள் என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

mannar 3 சிங்களமயமாகும் மேலும் ஒரு தமிழர் தாயகப் பகுதிகுத்துக்கால்வெளி,  வெள்ளைக்கல்லடி, சிவந்தா முறிப்பு, முந்திரிகைக்குளம், அடையக்கறுத்தான், ஆமையன்குளம், சாம்பாங்குளம், மணற்கேணி, குறுஞ்சாடி, அக்கரைவெளி போன்ற இடங்கள் இன்னும் விடுபடவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆமையன்குளப் பகுதிக்கே ஜுன் மாத நடுப்பகுதியில்   சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொண்டு, மகாவலி அபிவிருத்தி L வலய திட்டத்திற்கு இக்குளத்தினை பயன்படுத்தப் போவதாக அறிவித்ததுடன்     ஆமையன் குளத்திற்கு “கிரி இப்பவெவ“ என பெயரும் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காணிகள் பெரும்பான்மையின வர்த்தகர்களுக்கு பண்ணைச் செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளாவர்.

தற்போது அரசாங்கம் பண்ணை அமைத்துள்ள காணிகளில் வேலை செய்வதற்காக இப்பகுதி கிராம மக்களை அழைத்துச் செல்வதாகவும், தமது பகுதி நிலத்திலேயே தாம் கூலிகளாக வேலை செய்து, சிறியளவு சம்பளத்தை பெறுவதை நினைத்து அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.

இந்தக் காணிகளில் குடியிருந்த மக்கள், தங்களுக்கு குடியிருப்பதற்கு இடம் இல்லை என்ற காரணத்தினால், மீண்டும் இங்கு வரவில்லை என்றும் அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமது விவசாய நிலங்கள் மீண்டும் தரப்படவில்லை. 1973ஆம் ஆண்டு காலப்பகுதியில், படித்த வாலிபர் குடியேற்றம் என்ற திட்டத்தின் கீழ் 2ஏக்கர் வீதம் இந்தக் காணிகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் மரக்கறி வகைகள்,  சிறு தானியங்கள் போன்றவை பயிரிடப்பட்டு வந்தது. படித்த வாலிபர் குடியிருப்பு என்பது கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த காணிகளாகும்.

மற்றும் குஞ்சுக்குளம் என்ற பிரதேசத்தில் சாம்பல்மோட்டை, குஞ்சுக்குளம் என்ற இரண்டு பகுதிகள் இருந்தன. இவை அப்போதைய பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்ற போது வழங்கப்பட்டவையாகும். விவசாயத்திற்குத் தேவையான உதவிப் பொருட்களும் அப்போது வழங்கப்பட்டன. உள்ளுர் உற்பத்தியை பெருக்கும் நோக்குடனேயே அப்போதைய அரசாங்கம் இந்த உதவிகளை மேற்கொண்டது.

இந்தக் காலப்பகுதியில், கிராம மக்களாக இருந்தாலும், தாங்கள் எந்தக் குறையும்  இல்லாது செல்வந்தர்களாக வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் அந்தக் காலப்பகுதியை நினைவு கூர்ந்தனர்.

கொக்குத்தொடுவாய், கர்நாட்டகேணி, மணலாறு, மக்களின் வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. குடியேறியும் 8 வருடங்களாக தமது காணிகள் தமக்கு கிடைக்காத நிலையில், மீண்டும் அக்காணிகள் கிடைக்குமா? கிடைக்காதா? தாங்கள் மீண்டும் இடம்பெயரும் சூழல் வருமா என்ற ஏக்கத்துடனேயே இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். ஏனெனில், தமக்காக குரல் கொடுக்க ஒரு சரியான தமிழ் தலைமை இல்லை என்பதே இவர்களின் ஏக்கமாகும்.

அத்துரலிய ரத்ன தேரரின் ஞானம்

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான ஊடக சந்திப்பின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை  சிங்கள பௌத்த மக்கள் மேற்கொள்ளக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக் கொண்டார்.

கன்னியா விவகாரத்தில் ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம், நீதியின் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்கள் வன்முறையை பிரயோகிக்கக்கூடாது எனவும் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் – மு.திருநாவுக்கரசு

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற எடைபோடுதல் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்த்தது.

இந்நிலையில் நம்பிக்கையான வெற்றியை எதிர்பார்த்து மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னாக முன்கூட்டியே 2015 ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலை அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தன் கட்சிக்குள் இருந்து அவருடன் கூடயிருந்த மைத்திரிபால சிறிசேன அவருக்கெதிராக போர்க்கொடி தூக்கி ஜனாதிபதி வேட்பாளராய் களமிறங்கினார்.

இந்நிலையில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிய ராஜபக்ச அதனால் திணறிபோய் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியும் அடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அனைத்தும் முன்கூட்டிய எதிர்பார்க்கையோடும் அதற்க்கு ஏற்ற முன்னேற்பாடுகளோடும் ராஜபக்சகள் ஏப்ரல் மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி விட்டனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்புகள் ஜனாதிபதி தேர்தலை நோக்கிய மாபெரும் முதலாவது முற்தயாரிப்பாகும்.

இதை தொடர்ந்து தெற்கில் வெடித்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், பொது பல சேன தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து ஜனதிபதியால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை, யூன் மாதம் கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வண.வாரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரோ முஸ்லிம்களின் கடைகளை பகிஸ்கரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கை, யூலை முதல் வாரத்தில் 10,000 வரையிலான பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக கண்டியில் பொது பல சேன தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரால் கூட்டப்பட்ட மாபெரும் மாநாடும் அதில் சிங்கள இராட்சியம் நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மானம் உட்பட முஸ்லிம்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன எல்லாம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சரங்களாகவே அமைந்துள்ளன.

இவைகள் அனைத்தும் பெரும் பாலும் ராஜபக்ச குடும்பத்தின் பக்கம்  சாய்வுள்ள அச்சாரங்கள் ஆகும். இவற்றில் ஒன்றையேனும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேற்பாடு என்பதிலிருந்து விலக்கிப் பார்க்க முடியாது.வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பற்றிய முடிவு ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடக்கவுள்ள மேற்படி கட்ட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அக்கட்சி உத்தியோக பூர்வமாக  அறிவித்துள்ளது.

இக்கட்சியில் தீர்மானம் எடுக்கும் உண்மையான நபர் மகிந்த ராஜபக்ச ஆவார். அவரது நேரடி இளைய சகோதரரான கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அவர் தீர்மானித்துள்ளார் என்ற செய்தியின்படி கோத்தாபய  ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஏற்படக்கூடிய ஏதாவது சட்டத்தடைகளின் காரணமாக அவரை வேட்பாளராக நிறுத்த முடியாது போனாலும் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.BBVKztD ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்தியிலும் மகிந்த ராஜபக்ச பெருந் தலைவர் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுகிறார் என்பதுடன் இவரே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் ஒட்டுமொத்த பெரும் தலைவராகவும் பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார் ஆதலால் ராஜபக்ச குடும்பத்திலிருந்து யார் தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்கள் அவரை ராஜபக்சவுடன் இணைத்து அடையாளம்  கண்டு அவருக்கு வாக்களிப்பர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு பெரிதாக உள்ளது.கோத்தாபய  ராஜபக்ச 1949 ஆம் ஆண்டு யூன் மாதம் பிறந்தவர். ரணில் விக்ரமசிங்க அதே ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். இருவரும் இவ்வாண்டில் தமது எழுபதாவது பிறந்த தினத்தை தாண்டி இருப்பவர்கள்.

இவர்கள் இருவருமே பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாக களம் இறங்குவர் என்று பெரிதும் எதிர்பாக்கலாம்.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனதிபதியாக வேண்டும் என்ற அபிலாசையை ரணில் விக்ரமசிங்க கொண்டுள்ள போதிலும் கடந்த காலங்களில் அம்முயற்சிகளில் அவர் தோல்வியடைந்து “இராசி இல்லா ராஜாவாக” உள்ளார் என்ற கணிப்பீடு அவரது கட்சியினர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் உண்டு.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்  ஜெயவர்த்தனவின் நெருங்கிய உறவினரான ரணில் விக்கிரமசிங்க இளம் வயதிலேயே அமைச்சர் ஆகிய “ராஜா வீட்டு கன்றுக்குட்டி” ஆவார் என்ற ஒரு கணிப்பீடும் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.

மிக இளம் வயதிலேயே அமைச்சரான ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியில் இறுக்கமான பிடி இருப்பதுடன் கட்சியில் உயர் குழாத்தினரின் பலமான ஆதரவும் இவருக்கு உண்டு .அத்துடன் மேற்குலக ஆட்சியாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக அறியப்பட்டவரும், அவர்களின் நம்பிக்கைக்கும் பெரிதும் பாத்திரமாக காணப்படும் நிலையில் இவருக்கு மேற்குலகின் தெளிவான ஆதரவும் உண்டு.ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவானது என்றும் அடிமட்ட மக்களின் ஆதரவை உடைய பிரேமதாசவின் பாரம்பரியத்தை கொண்ட இளம் தலைவரான 52 வயது நிரம்பிய சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன.

எப்படியாயினும் கட்சியின் மீது ரணில் விக்கிரமசிங்கவிக்கு இருக்கக்கூடிய பலமான பிடி, கட்சிக்குள் உள்ள உயர் குழாத்தினரின்  ஆதரவு, மேற்குலக ஆதரவு என்பனவற்றின் பின்னணியிலும் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே ஏற்ப்படக்கூடிய சமரசத்திக்கான வாய்புகளின் பின்னணியிலும் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் பிரகாசம் ஆனது.“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பதற்க்கு ஏற்ப ரணிலின் வருகைக்காக அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளன.“ரணிலின் தலைமையை எதிர்பார்க்கும் அமெரிக்கா” என்ற தலைப்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழில் வெளியான பின்வரும் செய்தி குறிப்பிடத்தக்கது.

“மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர், சீன் கெய்ன் குரோஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்” என்று செய்தி நீள்கிறது.

எப்படியோ மேற்குலகின் ஆதரவு திட்டவட்டமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ராஜபக்ச குடும்பமானது நாடாளுமன்றமுறை அரசியலிலும் அதற்கு அப்பால் நாடாளுமன்றமுறை அரசியலுக்கு புறம்பான(Extra Parliamentary Politics) வெகுசன அரசியல், பலப்பிரயோக அரசியல், பௌத்த மதநிறுவன அரசியல், இராணுவ பல அரசியல் என்பனவற்றிலும் வல்லமை போருந்தியவர்கள்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற மற்றும் தேர்தல்முறை அரசியலில் மட்டுந்தான் பலமுள்ளவராக உள்ளார்.சஜித் பிரேமதாசாவிடந்தான் பாராளுமன்ற முறைக்கு வெளியேயான மக்கள் திரள் அரசியலில் பலம் உண்டு இறுதியில் ரணிலும், சஜித்தும் ஒரு குடையின் கீழ் நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் வெற்றி வாய்ப்பு எப்படி அமையக்கூடும் என்பதை சிறிது ஆராயலாம்.z p01 Ranil ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசு

ரணிலை விடவும் நான்கு வயதுகளால் மூத்தவரான மகிந்த ராஜபக்ச(1945) அரசியலில் இளமைத்துடிப்புடன் காணப்படுகிறார் இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தொல்வியுற்றிருந்தாலும் முடிசூடா மன்னரான இவரே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பெருந் தலைவராய் காட்சியளிக்கிறார்.

தம்பி கோத்தாபயவை அண்ணன் ராஜபக்சவுக்கு ஊடாகவே சிங்கள மக்கள் கணித்து வாக்களிப்பார்கள் சிங்கள மக்களால் பிரமிப்புடனும் அச்சத்துடனும் பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்திய இரட்டை வெற்றி வீரர்களாக மகிந்த ராஜபக்சவையும், கோத்தாபய  ராஜபக்சவையும் சிங்கள மக்கள் பார்க்கின்றனர்.

சிலவேளை சட்டத்தடைகளினால் கோத்தாபய வேட்பாளராக நிறுத்தப்படாதுவிட்டலும் மேற்படி பின்னணியில் ராஜபக்ச கும்பத்தினர் எவர் நின்றாலும் அவருக்கு வாக்களிக்கும் மனநிலையே சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.

அத்துடன் கோத்தாபயவுக்கு  தடை ஏற்பட்டாலும் அது மக்கள் மத்தியில் ஒருவகை கோபமாக உருவெடுத்து பெருமளவிலான வாக்கு வேட்டைக்கு ஏதுவாகவும் அமந்துவிடவும் கூடும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முஸ்லிம்கள்  ஒரு சவாலாக காணப்படுகின்றார்கள் என்ற தோற்றம் பெரிதாக ஸ்தாபிதம் அடைந்திருக்கும் இன்றைய சூழலில் பாதுகாப்பான, பலமான, ஸ்திரமான ஆட்சியை ராஜபக்சக் களால்தான் தரமுடியும் என்ற கருத்தாக்கம் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

“முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் இலங்கையில் சிறுபான்மையினர்.  ஆனாலும் உலகில் பலம் வாய்ந்த பெரும்பான்மையினர்” என்று கிழக்கு மாகாண ஆளுநராய் இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசிய பேச்சானது சிங்கள மக்கள் மத்தியில் கோபத்தை உருவக்கியுள்ளதுடன் சிங்கள மக்களை அதிகம் சிங்கள கடும்போக்காளர் பக்கம் ஒருங்கிணைத்தும் உள்ளது.

ஏற்கனவே காணப்படும் வேகமான முஸ்லிம் சனத்தொகை வெடிப்பு(Population Explosion) என்ற அச்சத்தின் பின்னணியில் மேலும் சிங்கள பெரும்பான்மை பலத்தை ஒருங்கு திரட்ட மேற்படி பேச்சு ஏதுமாய் அமைந்தது.இம்மாதம் 7 ஆம் திகதி கண்டியில் பொது பலசேன கூட்டிய மாநாட்டில் சிறுபான்மையினரின் வாக்குகளில் தங்கியிருக்காமல் முற்றிலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற கோசம் முதன்மை பெற்றிருந்தது.IMG 3756 man 600 11 ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசு

இலங்கையிலுள்ள 10,000 பௌத்த விகாரைகளில் 7,000விகாரைகளை ஒருங்கி ணைத்தால் அதன்மூலம் சிங்கள வாக்குகளால் மட்டுமான அறுதிப் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடியுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு திட்டத்துடன்தான் ராஜபக்சகள் ஜனாதிபதி தேர்தலை அணுகுகிறார்கள். இத்திசை வழி நோக்கி அவர்களின் கை ஓங்கியிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் அரசியல், சமூக, இராணுவ ரீதியில் பலம் பொருந்திய ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக வாக்களித்தால் சிங்கள மக்களுடன் ஒட்டி வாழும் தமக்கும் தமது வர்த்தகத்திற்கும் பெரும் கேடு ஏற்படும் என்ற அச்சம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்த சம்பவங்களால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆதலால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் தலைவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க ராஜபக்சவுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்தது போல் இம்முறை வாக்களிக்க மாட்டார்கள்.

முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு கேட்டுக்கொண்டலும் அதற்கும் அப்பால் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் இரு பெரும் பலம் பொருந்திய கட்சிகளுக்கிடையே ஏறக்குறைய சமபங்காக பிரியும். அதுதான் முஸ்லிம்களின் முன்னுள்ள தவிர்க்க முடியாத தெரிவாகவும் அமையும்.அவ்வாறு கடந்த தேர்தலில் அளிக்கப்பட்டது போல் முஸ்லிம்களின் வாக்குகள் ஒருபக்கம் செல்லாமல் இரண்டாக பிரிந்தாலே அது ராஜபக்சாக்களுக்கு பெரும் சாதகமாக அமையும்.

இப்பின்னணியில் ராஜபக்சகள் போதிய முற்தயாரிப்புடன் வெற்றிக்கான நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளனர். பாராளுமன்ற அரசியல் முறைக்கு வெளியேயான அரசியலிலும் கைதேர்ந்தவர்களான ராஜபக்சாக்களுக்கு உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து உருவான அரசியற் குழப்ப நிலையானது அனைத்து வகையிலும் வாய்ப்பான சூழலை தோற்றுவித்துள்ளது.

ஒருவேளை, இலங்கையில் 2020 ஆம் ஆண்டு தம்பி (அல்லது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர்) சிங்காசனத்தில் முடி தரித்து அமர்ந்திருக்க அருகே அண்ணன் (பெருந்தலைவர்)முதல் மந்திரியாய் வீற்றிருக்கக்கூடிய வரலாற்றுக் காட்சியை காண்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் தெரிகிறது .அதேவேளை. ஈரான் ஒருநாள் அணுகுண்டை தயாரித்துவிடும் என்பது இஸ்ரேலினதும், அமெரிக்காவினதும் கணிப் பீடாகும்.

ஈரான் அணுகுண்டு தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பேரழிவாய் அமைந்துவிடும் என்ற பின்னணியில் அத்தகைய அணு ஆற்றலை ஈரான் பெற்றிடாமல் தடுத்திட வேண்டும் என்பது இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் தீர்க்கமான முடிவாகும்.

ஈரான் படிமுறை வளர்ச்சியடைந்து அணுகுண்டு தயாரிக்கும் வரை காத்திருக்காமல் தற்போது காணப்படக்கூடிய ஒரு சாதகமான சூழலில் ஈரானின் மீது யுத்த மேகத்தை கவிழ்ப்பதன் வாயிலாக ஈரானை விரைவான அணுகுண்டு தயாரிப்பை நோக்கி தூண்டமுடியும்.

அவ்வாறாக அணுகுண்டு தயாரிப்பதற்கான முதிர்ச்சி நிலையை ஈரான்  எட்டும் போது அணுகுண்டு தயாரிப்பின் பெயரால் அதன்மீது  தொடுக்கும் நேரடி யுத்தத்தின் வாயிலாக அதன் அணுவாயுத ஆற்றலை முற்றாக அழித்து அதில் ஈரானை குறைந்தது இரண்டு தசாப்தங்களுக்கு பின்தள்ளிவிடலாம்.

1981 ஆம் ஆண்டு  ஓபரேசன் ஒபேரா அல்லது ஒபரேசன் பாபிலோன் (Operation Opera or Operation Babylon)என்ற பெயரில் ஈராக்கிய அணு உலைகள் மீது இஸ்ரேல் திடீர் விமான தாக்குதலை நடாத்தி அதனை முற்றிலும் அழித்தொழித்த உதாரணம் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் அணுகுண்டு தயாரிக்கும் விளிம்பை ஈரான் அடைய இன்னும் சற்று காலம் எடுக்கும்.

எனவே தற்போது ஈரான் மீது சூழ்ந்துள்ள யுத்த மேகங்கள் முதிர்ச்சியடைந்து கருமேகங்களாக்கூடிய காலத்தையும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனதிபத்தித் தேர்தலுக்கு முன்னான காலத்தையும் ஒட்டிய கால இடைவெளியை யுத்தத்திற்கான இலக்காக கொண்டு இன்றைய அமெரிக்க நிர்வாகம் ஈரான் தொடர்பான நடவடிக்கைகளை முன்னேடுக்கிறது.

அத்தகைய யுத்த சூழலில் “அமைவிடம்” என்ற இலங்கைக்குரிய அமைவிட அடுக்கு முக்கியத்துவத்தால் இலங்கை தவிர்க்க முடியாதவாறு யுத்தப் பிராந்திய புயலின் மையமாகிவிடும்.இந்நிலையிற்தான் இலங்கையுடன் அமெரிக்கா மேற்கொள்ள முனையும் ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் விசாலமடைகிறத இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மேற்படி அமெரிக் காவுடனான ஒப்பந்தம் தொடர்பான தமது ஒவ்வாமையை இறுக்கமாக வெளியிட்டு வருகின்றனர்.

சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எதிராக அபாயச் சங்கு ஊதுகின்றனர்.

ராஜபக்சக்களின் முகங்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் தொடர்பாக கறுத்துப் போயுள்ளன. ரணில் மட்டுமே பச்சைக்கொடி காட்டும் நிலையில் உள்ளார்.

இத்தகைய பின்னணியில் வாளேந்திய சிங்கத்தின் முதுகில் கோத்தாபயக்கள் அமரும் போது வாளேந்திய சிங்கத்தின் முற்றத்தை ஆடுகளமாக கொண்டு வெளிநாட்டு சக்திகள் பலவும் களமாடக்கூடிய காட்சிகள் அரங்கேற முடியும்.

இந்த ஆடுகளத்தை ராஜபக்சக்களோ அல்லது வேறெந்த சிங்கள ஆட்சியாளர்களோ எப்படி கையாளப் போகிறார்கள் என்பதற்கு அப்பால் தமிழ் தரப்பானது இதில்  பங்காளர்களாகவா அல்லது பார்வையாளர்களாகவா அல்லது பந்தாடப்படுப வர்களாகவா இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியது அவசியம்.

இவ்வாறு அடுத்த ஆண்டில் உருவாகக்கூடிய இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலை எவ்வாறு தமிழ் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தப் போகிறது? கற்பனைகளுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான வகையில் இவை பற்றிய முன்கூட்டிய சிந்தனைகளும் அணுகுமுறைகளும் எழவேண்டியது அவசியம்.

இத்தகைய உள்நாட்டு – வெளிநாட்டு சூழலை தமிழ் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதிலிருந்தே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

 

கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) – றோய் சமாதானம்

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்த கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் சிறப்பு பேட்டி

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீங்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்ததாக அறிகின்றோம். தங்கள் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் எப்போது எங்கே இடம்பெற்றது இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று கூறமுடியுமா?

நான் 2007 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கொழும்புக்கு அண்மையிலுள்ள யா-எல என்ற இடத்தில் வைத்து இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டேன். 1990 களில் இலங்கையை விட்டு வெளியேறி கனடாவில் தஞ்சடைந்திருந்த நிலையில் எனக்கு கனடாவில் வதிவிட உரிமை கிடைத்தது.

இதன் பின்னர் எனது திருமணத்திற்காகவும் வியாபாரத் தேவைகருதியும் 2005-2006 ஆண்டுகளில் இலங்கைக்கு சென்று திரும்பிய நிலையில் 2007 இல் இலங்கை சென்றிருந்தபோதே கைது செய்யப்பட்டேன். நான் கையடக்க தொலை பேசிகள் இறக்குமதி செய்ததில் அரசிற்கு வரி செலுத்தவில்லை என்றும் தங்களுக்கு பணம் தந்தால் உடனே விடுவோம் என்றும் கடுமையாக அச்சுறுத்தினார்கள். 25000 ரூபாவில் இல் தொடங்கி 50 இலட்சம் ரூபாவரை தருமாறு அச்சுறுத்தி கேட்டதோடு எனது கண்களைக் கட்டி என்னை பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு இடத்திற்கு கொண்டு சென்று கடுமையான சித்திரவதை செய்து விசாரணைகளைத் தொடர்ந்தார்கள்.

நான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு தான் நான் தொலை பேசிகளை கடத்தியதாகவும் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தான் என்னை 1990 இல் கனடாவிற்கு அனுப்பியதாகவும் அவர்களின் அறிக்கையில் எழுதியிருந்தது.

பொட்டம்மான் சொல்லித்தான் நான் இலங்கைக்கு வந்ததாகவும் நான் சரத் பொன்சேகா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் நோக்குடன் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் உண்மைக்கு புறம்பான பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி அறிக்கையை எழுதி எனக்கு ஒருவருடம் நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பை மறுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் கொழும்பு சையித் வீதியில் உள்ளது பழைய பாஸ்போட் அலுவலகத்தில் உள்ளது. அதில் ஒரு வருடம் அடைத்து வைத்திருந்தனர்.still torture continue 720x4801 கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) - றோய் சமாதானம்

அதற்கு பின்னர் உண்மைக்குப் புறம்பான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் கையப்பம் போட மறுத்ததால் என்னை பூசாவில் கொண்டுபோய் தனியாக அடைத்து வைத்திருந்தார்கள். அங்கு நான் அனுபவித்த துன்பங்களையும் பார்த்த கொடுமைகளையும் வார்த்தைகளால் கூற முடியாது. மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள் அங்கு அரங்கேற்றப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அங்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளையும் பல்வேறு சித்திரவதைகளையும் கண்டேன். நான் பார்த்த இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஆவணப்படுத் தியுள்ளேன்.

எனது மனைவி பிள்ளையையும் கைது செய்யப் போவதாகவும் அவர்களைக் கற்பழிப்புக்கு உள்ளாக்கப் போவதாகவும் கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டதால் எனது மனைவி பிள்ளைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவிலே வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த நேரத்திலே எனது வழக்கறிஞரும் கனடா அரசும் தலையிட்டு நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் கொண்டுவந்த தொழில்நுட்ப சாதனங்களில் நிறிஷி இருந்தது என்று ஒத்துக்கொள்ளுங்கோ என்று அறிவுறுத் தினார்கள் அதன்பின்னர் நான் அதை ஒத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் ஒன்று மற்றும் இரண்டிலும் சகல சார்ச்சும் எடுத்துவிட்டு எனக்கு ஐந்து இலட்சம் பணம் செலுத்துமாறும் தீர்த்தார்கள் உண்மையிலேயே உளவுத்துறை கேட்ட பணத்தை தரவில்லை என்பதற்காகவே என்னை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை என்று பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள்.

தங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட நடவடிக்கைகளுக் கான முனைப்புக்களை கூறமுடியுமா?

இலங்கையில் எனக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக 2013 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு போட்டேன். 2016 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஆறு மாதத்திற்குள் எனக்கு இழப்பீடு வழங்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்க வேண்டும். என்னை துன்புறுத்திய அனைத்து அதிகாரிகளும் பதவி விலக்கப்பட வேண்டும் போன்ற வரையறைகளுடன் ஆறு மாதத்திற்குள் இவற்றை நிறைவேற்ற வேணடும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்றைக்கு 2019 ஆகிறது இதுவரை எனக்கு நீதி கிடைக்க வில்லை. கோத்தபாஐ ராஜபக்ச எப்ப அமெரிக்கா வருவார் என்று 2017 தொடக்கத் திலிருந்தே நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். அவர் சில தடவைகள் வந்து வந்து போனார். ஆனால் சூழ்நிலை சரியாக அமையவில்லை. தற்போது இங்கு வருவதாக அறிந்தேன். ஏற்கனவே தொடர்பில் இருந்த நான், 2013 இல் இருந்தே எனது வழக்கில் உதவிய சட்ட செயற்பாட்டாளர்கள் யஸ்மின் சூக்கா பிரான்சிஸ் கரிசன் உட்பட அமெரிக்காவில் உள்ள எனது வழக்கறிஞர்கள் எல்லோரின் ஆதரவுடனேயே நான் வழக்கை பதிவு செய்துள்ளேன்.Gotae1341974562542 கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) - றோய் சமாதானம்

நான் இழப்பிடு கோரிய போடப்பட்ட ஒரு சிவில் வழக்கு. இது குற்றவியல் வழக்கல்ல. இதில் லசந்த விக்கிரம சிங்கவின் மகள் போட்ட வழக்கு வேறு. எனது வழக்கு வேறு. எனது வழக்குடன் 10 பேரை இணைத்துள்ளேன். என்னுடன் சேர்த்து 11 பேர் இந்த 10 பேரில் 03 பெண்கள் உட்பட 08 பேர் தமிழர்கள் 2 சிங்களவர்கள் உள்ளடங்கலாகவே நான் வழக்கை முன்னெடுத்து செல்கின்றேன்.

இந்த வழக்கிற்கும் கோத்தபாய ராஐபக்சவின் அமெரிக்காவின் பிரசாவுரிமை தொடர்பான வழக்கிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்படவும் முடியாது காரணம் எனது வழக்கு ஒரு சிவில் வழக்கு. அவரின் வழக்கு பிரசாவுரிமை வழக்குடன் தொடர்புடையதால் எந்த விதத்திலும் எமது வழக்குடன் சம்பந்தப் படாது. அவரின் பிரசாவுரிமை இரத்து செய்து அவர்கள் அடுத்த மாதமே தீர்ப்பை கொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கு எமது வழக்கிற்கு அப்பாற் பட்டது. அதேவேளை எமக்கு நீதி கிடைக்கும்வரை கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் போட்ட வழக்கிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் இதில் வெற்றி பெற்றால் இது சட்ட ரீதியாக ஆவணப்படுத்தப்படும்.

மனித உரிமை தளத்திலே நீதிவேண்டி தாங்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு புலம்பெயர் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எந்தளவில் ஆதரவு தருகின்றனர்?

ஐ.நா. தொடக்கம் சர்வதேச மட்டத்தில் நான் முன்னெடுத்த எந்தவொரு வழக்கிற்கும் எந்தவொரு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஆதரவு தரவில்லை. மேலும் ஐ.நா.வில் வழக்கை போடுவதற்கு கனடாவில் உள்ள இலாப நோக்கமற்ற அமைப்பான சில வழக்கறிஞர்கள் உதவினார்கள். நான் வாழும் கனடாவில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் எந்தவொரு ஆதரவையும் தரவில்லை. குறிப்பாக முக்கிய தமிழ் அரசியல் வாதியான கரி ஆனந்தசங்கரியோ கனடா அரசாங்கமோ எனக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கவில்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் எமது முயற்சியை மதித்து கனடாவில் உள்ள சில தமிழ் குடும்பங்கள் ஆட்களை ஒருங்கிணைத்து ஜெனிவா செல்வதற்கு போக்குவரத்து உதவிகளை செய்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ளனர். அதேநேரம் யஸ்மின் சூக்கா பிரான்சிஸ் கரிசன் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் எமது வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவாக இருந்து எம்மை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 13 படையி னரும் கடந்த 03 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலையுடன் படையினர். சம்பந்தப் படவில்லை என்றால் ஏன் இவ்வளவு காலமும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஏன் தற்போது திடீரென்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது நீதிபதி சொல்கிறார் போதிய ஆதாரம் இல்லை என்று. இந்த வழக்கில் மட்டுமல்ல எல்லா வழக்குகளிலும் படையினரையும் இலங்கை அரசையும் பாதுகாக்கும் நோக்குடனேயே இலங்கையின் நீதிப்பொறிமுறை செயற்படுகிறது. இந்த அடிப்படையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.