அத்துரலிய ரத்ன தேரரின் ஞானம்

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான ஊடக சந்திப்பின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை  சிங்கள பௌத்த மக்கள் மேற்கொள்ளக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக் கொண்டார்.

கன்னியா விவகாரத்தில் ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம், நீதியின் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்கள் வன்முறையை பிரயோகிக்கக்கூடாது எனவும் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.