நேற்று (19) அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இராணுவ மேஜர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இhணுவத்தினர் சென்ற பிக்கப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதிய பின்னர் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ரம்பேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்றவர்களும் காயமடைந்ததுள்ளனர். பிக்கப் வாகன சாரதியின் பொறுப்பற்ற தன்மையே விபத்துக்கு காரணம் என அதன் சாரதியை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.