Home Blog Page 2796

ஜுலியன் அசங்கே மீது மேலும் 17 வழங்குகள்

விக்கிலீக்ஸ் இணையத்தள உரிமையாளர் ஜுலியன் அசங்கே மீது அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் மேலும் 17 வழக்குகளை தொடுத்துள்ளது.

அமெரிக்காவின் படைத்துறை ஆவணங்களை வெளியிட்டது, அதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டது, அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டது தொடர்பில் அமெரிக்கா நீதி மன்றம் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அசங்கே பிரித்தானியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன், அவர் விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் 90,000 ஆப்கான் போர் ஆவணங்கள், 400,000 ஈராக் போர் ஆவணங்கள், 800 குவந்தனமோ சிறை தொடர்பான ஆவணங்கள், 250,000 அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக் கூறிய சம்பந்தன்

இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நீங்களும் இந்திய மக்களும் எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளைப் பெறவேண்டுமென்றும் நாம் பிரார்த்திக்கின்றோம் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு, விசேடமாக தமிழ் பேசும் மக்களுக்கு தாங்களும், தங்களது அரசும் நல்கிய அனைத்து உதவிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தொடர்ந்து வரும் காலங்களிலும் எமக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவதற்கும், தெற்காசிய பிராந்தியத்தில் சமாதானத்தினை ஏற்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் நீங்கள் செயலாற்ற வேண்டுமெனவும் ஆவலாயுள்ளோம் என்றும்,  தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் – வேல்முருகன்

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, நமது தொப்புள் கொடி உறவுகள் இலட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக் கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு பத்து ஆண்டுகளாகிவிட்டது.

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழர்களை முழுமையாக அழித்தொழித்து ஒட்டுமொத்த இலங்கை தீவையும் சிங்கள மயமாக்குவதற்கு சிங்கள இனவெறி அரசு அரங்கேற்றிய இனப்படுகொலையின் சாட்சியமாக முள்ளிவாய்க்கால் மண் விளங்குகிறது.

சர்வதேச போர் விதிமுறைகளுக்கு இலக்கணமாக தமிழர்களின் அறத்துடன் போர் புரிந்த தமிழீழ விடுதலை புலிகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசு 25க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு நீதிக்கு புறம்பாக முடக்கியதோடு இலட்சக்கணக்கான எமது ஈழத்து உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றுகுவித்த இந்த நாளை உலகத்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை நினைத்து பார்ப்பான்.

என் தொப்புள்க்கொடி உறவுகள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையு டனான வாழும் உரிமைக்காக எழுபது ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் சனநாயக போராட்டங்களை முடக்கிய சிங்கள பேரினவாதம் எண்பதுகளில் எனது சகோதர சகோதரிகளை ஆயுதமேந்துவதற்கு உந்தித் தள்ளியது என்பதே உலகறிந்த உண்மை.

இன வன்மமும், குரூர மனங்களையும் கொண்ட சிறீலாங்கா படைகள் தமிழனத்தின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை முன்னெடுத்தன. கொடூரங்களை அரங்கேற்றின. இறுதியாக முள்ளிவாய்க்காலிலேயே தமிழனத்தின் மீது ஒரு இனப்படுகொலையை சிறீலங்கா படைகளின் உதவியுடன் அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.

Velmurugan உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் - வேல்முருகன்இத்துடன் போர் முடிவுக்கு வருவதாக 2009 மே 18ஆம் நாள் அறிவித்து விட்டு தனது மிலேச்சத்தன இனப்படுகொலையை மறைத்து போரில் வெற்றி பெற்றுவிட்டோம், ஆயுத வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்று உலகம் முழுவதும் மார்பு தட்டியது.

தமது விடுதலைக்காக இலட்சக்கணக்கானவர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். எங்களின் உறவுகள் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும்போது அவர்களை சிறீலங்கா அரச படைகள் கொன்றொழித்து பத்தாண்டுகளாகின்ற போதும் அதற்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள். முகாம் வாழ்க்கை முற்றுப் பெறவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள்கதை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. சிறைகளில் சகோதரர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சிங்கள பேரினவாதிகள் எமது உறவுகளின் தாயக தேசத்திலே திட்டமிட்டு புத்த விகாரைகளை அமைக்கின்றது. காணிகளை கைப்பற்றி சிங்கள மக்களை குடியேற்றுகிறது. சிறிலாங்கா இராணுவம் எமது உறவுகளின் காணிகளையும், பண்ணைகளையும் வலிந்து பறித்து வைத்திருக்கின்றது.

தாயகம் எங்கும் சிறீலங்கா படைகள் நிலைகொண்டிருக்கின்றன. தமிழினத்திதை நசுக்குவதையே இலக்காக கொண்டு செயற்படுகின்றன. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் இன்னமும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எந்தெந்த வடிவங்களில் எல்லாம் முன்னெடுக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று பத்தாண்டுகளாகின்றன. அந்த நினைவேந்தல் தினத்தினை வெறுமனே உணர்வுகளுக்குள் மட்டுபடுத்தி நிறுத்திக் கொள்ளாது எமது தொப்புள்கொடி உறவுகள் சுயநிர்ணய உரிமைகளைப் பெற்று தாயகத்தின் தனது தேசிய அடையாளங்களுடன் வாழுவதற்கான இலக்கை அடைய உறுதியான நடவடிக்கைகளை தாயகத்திலும், தமிழகத்திலும் எடுக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதியெடுப்போமாக.

அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்

இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளுடன் தனித்துப் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 4 விகித வாக்குகளை பெற்றுள்ளது.

நிதிவளம் இன்றி தமிழ் மக்களின் மேல் நம்பிக்கை வைத்து போட்டியிட்ட அதன் வேட்பாளர்கள் பல இடங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் வந்துள்ளது அதிக கவனத்தை பெற்றுள்ளது.

உதாரணமாக காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 26 வயதான த. சிவரஞ்சனி 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாவது நிலைக்கு வந்துள்ளார். தி.மு.க மற்றும் ஆளும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் அவர் போட்டியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

50 விகிதம் பெண் வேட்பாளர்கள் உட்பட இளம் தலைமுறையினரை களமிறக்கிய நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 15 இலட்சம் வாக்குகளை தனதாக்கிக் கொண்டது. எனவே எதிர்வரும் காலங்களில் பெரும் திராவிடக் கட்சிகளுக்கு அது சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

thirumanalan அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்இதனிடையே, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல். திருமாவளவன் பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் ஏறத்தாள 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி – தோழர் தியாகு

முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும் என தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராசபட்சே தலைமை யிலான சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனக்கொலைப் போர் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு பல்லாயிரம் தமிழ்மக்கள் துள்ளத்துடிக்கக் கொல்லப்பட்ட அவலம் நிகழ்ந்து பத்தாண்டு நிறைவு பெறுகிறது.

இந்த இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும். தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டம் ஐநா மன்றத்திலும் பன்னாட்டு அரங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அனைத்துக்கும் மேலாகத் தமிழீழத் தாயகத்தில் சிங்கள இராணுவ வல்லிருப்பையும் மீறித் தமிழீழ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒப்புக்குச் சில தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இனவழிப்புக் குற்றத்துக்காகவோ, போர்க் குற்றங்களுக்காகவோ இது வரை ஒரே ஒருவர் கூடக் கூண்டிலேற்றப்படவில்லை.

அது மட்டுமன்று, நடந்தது இனவழிப்பு என்பதை உலக நாடுகளில் ஒன்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இனவழிப்புக் குற்றத்துக்காகச் சிங்கள அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கும் வரை நமக்கு ஓய்வில்லை.

தமிழினத்தின் உரிமைக் குரலை முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கும் சிங்கள அரசின் முயற்சி தோற்று விட்டது. மறுபுறம், தமிழீழ விடுதலைக் குறிக்கோளை மடைமாற்றும் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் முயற்சியும் தோற்று விட்டது. இருபெரும் சிங்களக் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தேசிய அரசு, நல்லாட்சி அரசு எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டன.

thiyagu இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி - தோழர் தியாகுபுதிய அரசமைப்புச் சட்டத்தின் ஊடாக சமஷ்டித் தீர்வு அல்லது அது போன்ற ஒன்று என வாயளந்து கொண்டிருந்த நாடாளுமன்றத் தமிழ்த் தலைமையின் கனவு கலைந்து விட்டது. இழந்த நிலத்தை மீட்கவும், போர்க் கைதிகளின் விடுதலைக்காகவும், காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடிக்கவும், இனவழிப்புக்கு நீதி கோரியும் தமிழீழ மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை.

தமிழீழ மக்களின் மறுபகுதியான புலம்பெயர் தமிழர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முதலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் நடத்திவரும் போராட்டமும் ஓய்ந்துவிடவில்லை, ஈழத் தமிழர்களோடு தோழமை கொண்டு தமிழகம் நடத்தி வரும் போராட்டமும் ஓயப் போவதில்லை. இனவழிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் போதாது. இனவழிப்பின் வேராகிய இன ஒடுக்குமுறை களையப்பட வேண்டும். அதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஒருமித்த கோரிக்கை.

இந்தப் பொதுவாக்கெடுப்பு வழியாகத் தமிழீழம் மலரும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். முள்ளிவாய்க்காலில் விதைந்த உயிர்கள் விடுதலையாக விளைவதே வரலாற்று ஏரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ .எஸ். ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புக்கள் இந்தியாவில் காலூன்றுகின்றன

உலகளாவிய தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புகள் இந்தியாவில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருந்தன. எனினும் இந்தியாவில் இவர்கள் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்த எண்ணியுள்ளதாக அறியமுடிகிறது.

சிறிலங்காவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தமது செயற்பாட்டை தெற்காசியாவில் தீவிரப்படுத்த முயற்சிப்பதாக   தெரியவருகிறது.

விலியத் அல் ஹிந்த் எனப்படும் ஐ.எஸ்.ஐ யின் இந்தியாவிற்கான புதிய தலைவராக அபு முகமது அல் பெங்காளி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மீதான தாக்குதலை இந்த அமைப்பு இந்தியாவிலும், பங்களாதேஷிலும் நிகழ்த்தப் போவதையே இந்த நடவடிக்கை காட்டுகின்றது என்று அறியமுடிகின்றது.

இந்தியா மற்றும் சிறீலங்கா போன்ற நாடுகளில் காணப்படும் இன முரன்பாடுகள் மற்றும் அரசியல் குழப்பங்கள் இந்த அமைப்புக்களின் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வருவதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

ஞானசார பௌத்த மதகுருவின் விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஞானசார பௌத்த மதகுருவை விடுவிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அனுமதி வழங்கியதற்கு தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவர் ஞானசார பௌத்த மதகுருவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தனது பதவியின் அதிகாரத்தையும், நாட்டின் சட்டத்தையும் அரச தலைவர் தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரான பௌத்த மதகுரு பௌத்த மதம் அல்லாதோர் மீது மேற்கொண்ட வன்முறைக்காக சிறைக்குச் சென்றவர். அவரின் உயர் நீதிமன்ற மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

சிறீலங்கா அரசு எல்லா மத வன்முறையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். மத வன்முறைகளை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் இது அவசியமானது. ஆனால் பௌத்த மதகுருவுக்கு வேறு ஒரு நீதியும், ஏனைய மதத்தவர்களுக்கு வேறு நீதியும் வழங்குவது நாட்டு மக்களுக்கு தவறான தகவலை வழங்கும்.

சிறீலங்கா அரச தலைவரின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் அனை-வரும் கண்டிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். பிற மதத்தவர் மீதான வன்முறைகள்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஆறு ஆண்டுக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறிலங்கா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

சனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை சிறைச்சாலை திணைக்களம் இன்று (மே 23) பெற்றுக்கொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னக்கோன் இன்று மாலை உறுதிப்படுத்தினார்.இன்று சனாதிபதி செயலாகத்தால்சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புத் திணைக்களத்தின் தலைவர் தலதா அத்துகோரலவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த ஆவணங்கள் பின்னதாக சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப் பட்டிருந்தன.

ஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து

ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பான வர்த்தகமாணி அறிவித்தலுக்கு அமைவாக நடந்துகொள்ளும்படி கல்வி அமைச்சால் பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து பலருக்கு சரியான விளக்கம் இன்மையால் பிரச்சினைகள் தோன்றியதையடுத்து இந்த கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
சில பட்ஸையாக்களில் ஆசிரியைகள் முகத்தை முழுமையாக மறைத்தபடி ஆடையணிந்து வந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் முகத்தை மறைத்தபடி தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நிலைமை தொடர்பில் நடவடிக்கையை மேற்கொண்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள் WhatsApp Image 2019 05 23 at 13.37.43 ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்