பொதுஜன பெரமுன, 10 அரசியல்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்துகைச்சாத்திடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயல்பட்ட அரசியல் கட்சிகளும்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதஅரசியல் கட்சிகளுமே இவ்வாறுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில்கைச்சாத்திட்டு உள்ளன.
மௌபிம ஜனதா கட்சி, இலங்கைதொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர்ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர்ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய,ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்காமகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சிஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறுஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், புத்த சாசன, வயம்ப அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆகியோர் புது டெல்லி நோக்கி பயணமானார்கள்.
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுமாறு, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளரும், இந்தியா பவுன்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் விடுத்துள்ள அழைப்பை ஏற்றே இலங்கை அரசாங்கத்தில் இந்து, பெளத்த மதங்களுக்கு பொறுப்பான இரண்டு இலங்கை அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.
இதனிடையே பெளத்த மதத்தையும் இந்து மதத்தையும் இணைக்கும் இந்த மாநாடு தமிழர் தாயகத்தில் சைவ ஆலயங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு துணை பாேகலாம் எனக் கருதப்படுகின்றது.
சர்வதேசநாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்குஅழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதியஅரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“யுத்தம்முடிந்து தற்போது 10 வருடங்கள்கடந்த போதும் தமிழருக்கு ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை. தற்போது தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாகநடத்தப்படுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்கவேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் உதவியது. இதனால் தமிழ் மக்களே அதிகம்பாதிக்கப்பட்டது.
தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை. நாட்டை பலவழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான்சமஷ்டிக் கட்சியின் கொள்கை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும்.
நாடுசக்திமிக்க ஒன்றாக மாறவேண்டுமானால் தமிழர்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். சமூக, கலாசாரஉரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையைஉங்களால் மறுக்க முடியுமா?
1956 ஆம் ஆண்டில்இருந்து வட கிழக்குமக்கள்மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்தஅரசு பொறுப்புடன்செயற்பட வேண்டும். சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்குகிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வுதாமதமாகிறதா என்று தமிழ் மக்களும்நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இதுசூட்சுமமாக முன்னெடுக்கப்படு கிறது.
எல்.எல்.ஆர்.சிஅறிக்கையின் சிபாரிசுகளைநிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்குவழங்கிய வாக்குறுதிகளைநிறைவேற்றாமல் விட்டு மக்களால்நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பைவைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சிசெய்தால் அது தவறு.
அப்படிச்செய்தால் நீங்கள்தோல்வியடைந்த அரசாக, செல்லுபடியற்றஅரசாக ஆகிவிடுவீர்கள். எனவே உச்சபட்சஅதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது.
தமிழ்மக்கள் சுய நிர்ணயஉரிமையைகோருவதற்கான அனைத்துதகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.இருந்தாலும் நாம் அவ்வாறான தீர்மானத்திற்கு செல்லவில்லை என்பதைஇங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அமைத்து மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுவீர்கள்என எண்ணுகின்றேன்” எனகூறியுள்ளார்
சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.அத்துடன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடடார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம் இன்னும் எதனையும் செய்யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு தெரிவிக்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாகவே இருந்து வருகின்றது. இதனை வாக்களித்த மக்களுக்கு மறைக்கவே அரசாங்காத்துக்கு எதிராக சபையில் கதைக்கின்றனர்.
அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்படுகின்றன என அவர் சபையில் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை வழங்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சம்மதிக்க இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே கெடுத்து விட்டார். எனத் அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் அதிகார பகிர்வு, தேர்தல் முறை திருத்தம் போன்றவற்றுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கிகரித்துக்கொள்ள முற்பட்டபோது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கி மக்கள் கருத்துக்கணிப்புடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் அபிலாஷையை சுமந்திரன் நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சியால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்திக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக் கொண்ட பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இனி கிடைப்பது சந்தேகம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் இனி ஒருபோது இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் இதன்போது கூறினார்.
500வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி (கே.பி.எஸ்) தார்சாலையாக மாற்றியமைத்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதானது, இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ரசாக் என்பவர் தன்னுடைய படத்தைப் பெரிதாகப் போட்டு, கே.கே.பி.வீதி என்று பெயர் மாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் மனதிற்கு வேதனை தரக்கூடிய விடயம் என மாநகரசபை உறுப்பினரான சந்திரசேகரம் சாமுவேல்ராஜன் தெரிவித்தார். இதற்கு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை வருடத்தின் முன்னர் கடற்கரைப் பள்ளி வீதி என பெயர்ப்பலகை வைக்கப்பட்ட போது, கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன்போது, நீதவான் நன்கு விசாரித்து, இது கடற்கரைப் பள்ளி வீதியல்ல. தரவைப் பிள்ளையார் வீதி என தீர்ப்பளிக்கப்பட்டது.
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பான மர்மம் நீடித்து வருகின்றது. எந்தவொரு நாட்டினதும் இலச்சினைகள் இல்லாது, குறித்த விமானம் வந்து சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கேட்டுக்கொண்டுள்ளார். பாதுக்க பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, நேற்று (25) கேட்டுக்கொண்டார்.
குறித்த விமானம் சிலநாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து மீளவும் கிளம்பிச் சென்றுள்ளது. இந்த விமானம் எந்த நாட்டிற்குரியது, எதற்காக வருகை தந்தது, இதில் வந்தவர்கள் யார்? போன்ற தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த, நளினி இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார்.
துப்பாக்கி தாங்கிய பொலிஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரயை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேராயர் சிங்கராயர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அரசியல்வாதிகளையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்கக்கூடாது என்பன அடங்கலாக 12 நிபந்தனைகளுடன் நளினி விடுதலையாகியுள்ளார். மீண்டும் ஓகஸ்ட் 25ஆம் திகதி சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே இவருக்கு பிணை வழங்கப்பட்டது.
நளினியின் மகள் ஹரிதா சிறையில் பிறந்தவராவார். தற்போது லண்டனில் கல்வி பயில்கின்றார். இவருக்கு அமையவுள்ள மாப்பிளை இலங்கையில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்று நளினி விரும்புகின்றார். இலங்கையில் வசிக்கா விட்டாலும், இலங்கைத் தமிழரையே நளினி தேர்ந்தெடுக்க விரும்புகின்றார்.
திருமணம் ஏற்பாடானதும், முருகனை பிணையில் எடுக்க ஒழுங்கு செய்யப் போவதாக நளினி தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு சிறப்புப் பேட்டி
எங்களுடைய தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். அதன் முதற்பகுதி வருமாறு,
பதில்:- தேசியம், சூழலியம், சுயநிர்ணயம் ஆகிய மூன்று கோட்பாடு களினதும் அடிப் படையில் தமிழ் மக்களின் பிரிக்கமுடியாத தாயகமான வடக்குகிழக்கில் தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துதல் என்பதே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இலக்கு ஆகும்.
பதில்:- இலங்கை அரசியலில் தமிழ்த்தேசியம் என்பது பெரும்பாலும் அதன் சரியான அர்த்தப் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளமால் ஒரு வாயப்பாடு போல, வெற்றுக்கோசமாகவே உச்சரிக்கப்படுகிறது. உண்மையில் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைச் சொல்லாடலின் உள்ளே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியலுமே அடங்கிக்கிடக்கிறது. இதில் எமது மொழி, எமது பண்பாடு, எமது வாழ்விடம் என்று இம் மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்று ஊடுபரவியுள்ளது. இவற்றில் ஒன்றில்லாமல் மற்றையது இல்லை. ஆனால் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு குறித்து நாம் பேசுகின்ற அளவுக்கு எமது சுற்றுச்சூழல் குறித்து நாம் பேசுவதில்லை.
ஒவ்வொரு தேசிய இனமும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் அந்த இனத்தின் தேசியச் சூழல் எனப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசியச் சூழல். அதேபோன்று தெற்கில் சிங்கள மக்களுக்கெனவும் ஒரு தேசியச் சூழல் இருக்கின்றது. ஆனால், இரண்டு தேசியச் சூழலும் பண்பியல் ரீதியாக வேறு வேறானவை.
சிங்களமக்களின் தேசியச் சூழலில் மழைக் காடுகள் இருக்கின்றன. எங்களுடைய தேசியச் சூழலில் உலர்காடுகள் இருக்கின்றன. அவர்களின் தேசியச் சூழலில் கித்துள் இருக்கின்றது. எங்களிடம் பனை இருக்கின்றது. அங்கு இரத்தினக்கற்கள் விளைகின்றன. இங்கு இல்மனைற் மணல் கொட்டிக் கிடக்கிறது.
அங்கு றம்புட்டான் பழம், இங்கு கூழாம்பழம். இப்படி இரண்டு இனங்களினதும் தேசியச் சூழல் வெவ்வேறானவை என்பதால் எங்களுடைய சூழல் பற்றிய போதிய அறிவு அவர்களுக்கோ, அவர்களுடைய சூழல்பற்றிய போதுமான புரிதல் எங்களுக்கோ இல்லை. இதனால்தான் எங்களுடைய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, சூழலியம் என்ற சித்தாந்தத்தையும் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பேசு பொருளாக முக்கியப் படுத்தியிருக்கின்றோம்.
பதில்:- விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே மண்மீட்புப் போராட்டம் அல்லவே. வருங்காலத் தலைமுறைகள் வாழ்வாங்கு வாழவேண்டுமெனில் இயற்கை வளங்களை வளங்குன்றாது அவர்களிடம் நாம் கையளிக்கவேண்டும். விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புப் பிரிவு, வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்று தனியான அலகுகளை நிறுவி யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் இந்த விடயத்தில் கவனமாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், 2009இல் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எமது மண்வேலிகள் இல்லாத தோட்டம்போல ஆகிவிட்டது.
தடுப்பார் இல்லாததால் மணல், கிறவல், காட்டு மரங்கள் என்று எல்லா வளங்களுமே கண்மூடித்தனமாகச் சுரண்டப்படுகின்றன. அரசாங்கமும், எமது சூழல் குறித்து கொஞ்ச மேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு, காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு சுண்ணாம்புக்கல்லை காங்கேசன் துறையில் இருந்து மீளவும் அகழவேண்டும் என்பதில் அரசாங்கம் விடாப்பிடியாக நிற்கிறது. ஏற்கனவே சுண்ணாம்புக்கல் அகழப்பட்டதால் அங்கு அதலபாதளத்துக்குப் பாரிய குழிகள் காணப்படுகின்றன.
கடலை அண்டிய பகுதியில் இவ்வாறு தொடர்ந்து சுண்ணாம்புக் கல் அகழ்ந்தால் கடல் நீர் உட்புகுவதற்கான கதவுகளை நாங்களே திறந்து விட்டவர்கள் ஆவோம். இதனாலேயே, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கிளிங்கர்களை கொண்டுவந்து அரைத்து சீமெந்தை உற்பத்தி செய்யலாம் அல்லது வெளியில் இருந்து சீமெந்தை கப்பல்களில் இறக்குமதி செய்து இங்கு பொதியிடும் வேலையைச் செய்யலாம் என்று நாங்கள் கூறி வருகிறோம்;. ஆனால் இவற்றைச்செவிமெடுக்காமல் நாங்கள் அபிவிருத்திக்கு எதிராக உள்ளோம் என்று அரசாங்கம் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றது.
வருங்காலத் தலைமுறைகளைப் பற்றிக் கருத்திலெடுக்காமல் இலாப வேட்கை கொண்டு அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது. இவற்றின் அடிப்படையிலேயே எங்களுடைய தேசியச் சு10ழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்கவேண்டும் என்று நான் சொல்லி வருகின்றேன்.
பதில்:- இஸ்லாமியப் பயங்கரவாதிகளினால் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்தே அவர்களுடன் ஒப்பிட்டு விடுதலைப்புலிகளும் போதைப்பொருள் வியாபாரம் செய்து பெற்ற பணத்தி லிருந்தே ஆயுதத்தை வாங்கினார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இஸ்லாமியப் பயங்கரவாதம் என்பதும் விடுதலைப் புலிகளின் போராட்டம் என்பதும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாதவை. விடுதலைப்புலிகள் தமிழ் இனத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். தமிழ் மக்களின் பேராதரவு அவர்களின் பின்னால் இருந்தது. அவர்கள் பொன்னாகவும் பொருளாகவும் விடுதலைப்புலிகளுக்கு வாரி வழங்கினார்கள். பெண்கள் மூக்குத்தி தொடங்கி தாலி வரை மனமுவந்து கழற்றி வழங்கியிருக்கிறார்கள்.
யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற எங்கள் உறவுகள் தங்கள் வியர்வையை டொலர்களாகவும், பவுண்களாகவும் மாற்றிப்புலிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்;. இதனால்,முஸ்லீம் மக்கள் ஆதரவைப் பெறாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுப் பணம் ஈட்டியதைப் போன்ற தேவை வெகுசன ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளுக்கு இருந்திருக்கவில்லை. ஜனாதிபதி அவர்களு டைய கூற்று விடுதலைப் புலிகளை மாத்திரம் அல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத் தையும் கொச்சைப்படுத்தியுள்ளது.