Home Blog Page 2724

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடைசி முயற்சியாக, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை கூட்டுங்கள் – சம்பந்தனுக்கு மனோ தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ததேகூ தலைவர் சம்பந்தனின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளான ஐதேக, ஸ்ரீலசுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த பின்னடைவுக்கு பிரதான காரணங்கள் ஆகும்.

ஆனால் இந்த பின்னடைவுகளையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. தென்னிங்கை பெரும்பான்மை கட்சி தலைமைகளிடம் அரசியல் தீர்வுக்கான மனோதிடம் இல்லை என நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயே அறிவித்திருந்தேன்.

இதை அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவிலேயே நான் பகிரங்கமாக கூறியிருந்தேன். இதை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று தமிழ் மக்கள் மத்தியிலும் கூறியிருந்தேன்.

நான் அன்று சொன்னது, இன்று சரியானதையிட்டு நான் மிகவும் கவலையே அடைகிறேன்.

1972ம், 1978ம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள் தமிழ் மக்களின் ஒப்புதல் ஆணைகளை பெறாமல் கொண்டுவரப்பட்டவை என சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மை.

எனவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பை தமிழர் கோருவதில் மிக வலுவான அரசியல் நியாயம் இருக்கின்றது.

இந்நாட்டு அரசியலமைப்புகள், இந்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆட்சியுரிமையையும், இறைமையையும் அங்கீகரிப்பனவையாக அமைய வேண்டும்.

எனவே இன்றைய நிலையில்
புதிய அரசியலமைப்பு ஒன்றை நோக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவே இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர், இது தொடர்பான கடைசி முயற்சியாக, புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை கூட்ட வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் யோசனையாகும்.

அமெரிக்க கடற்படை – சிறீலங்கா கடற்படை கிழக்கில் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய பிரிவைச் சேர்ந்த சிறப்புப்புப் படை அதிகாரிகளுக்கும் சிறீலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று கிழக்கு பிராந்திய கடற்படை தளத்தில் கடந்த புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

சிறீலங்கா கடற்படையின் பிரதி அதிகாரி ஜெயந்த குலரத்னாவை சந்தித்த இந்த குழுவில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி இஸ்ரேல் றோசா பங்கு பற்றியதுடன். சிறீலங்காத் தரப்பில் சிறீலங்கா கடற்படையின் சிறப்பு படையணியின் இந்திகா விஜயரத்தினா, மற்றும் சிறப்பு படையணியின் முதலாவது பற்றலியன் கட்டளை அதிகாரி காயங்கா கரியவாசம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

சிறீலங்கா கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையில் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள கூட்டு படைநடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்

குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்பம் என்பனவும், அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதும், மக்களுக்கான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

இலங்கையில் ஆய்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.“இலங்கையில் மேலும் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்டுமெனில், அது மக்களது ஐக்கியத்தின் ஊடாகவே சாத்தியப்படும் . எனினும், இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்ற சமூகங்களில் காணப்படும் பிரிவினைகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது என்பது மிக முக்கியமானது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.

அமைதியாக ஒன்றுகூடல், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் என்பன இலங்கை அரசியல் அமைப்பில் பேணிப் பாதுகாக்கப்படுகின்ற போதிலும், தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன இந்த உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் காணப்படுகிறது.

காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் இச்சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, தற்போது நீடிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமும் மக்களுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையிலேயே காணப்படுகிறது.

அத்தோடு, யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் கூட பாதுகாப்புத் துறையில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதமையானது, சிவில் சமூக இயக்கத்தில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் விசேட நிபுணர் எடுத்துரைத்தார்.

அதேநேரம், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை ஆராய்ந்துள்ள இவர், இது தொடர்பான தனது விசேட அறிக்கையினையும், பரிந்துரைகளையும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பார் .

 ‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam’)- ஆங்கில நூல் வெளியீடு

ஈழத்தமிழர் போராட்டம் வரலாறு அல்ல. அது ஒரு நீண்ட தொடர். அதன் அதிசயிக்க வைத்த ஒரு கட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அதிசயத்தில் ஒரு அதிசயம் தான் அதில் பெண்களின் பங்கு.  ஒரு சுருங்கிய குடும்பவட்டத்திற்குள் அடக்கப்பட்டு இருந்த ஈழத்தமிழ் பெண்கள், இப்புரட்சியின் போது,  1980களிலிருந்து 2009 வரையான ஒரு குறுகிய காலத்துக்கு, பொதுவெளிக்கு திரண்டு வெளிவந்தார்கள். இன்று வரை இதுபற்றி எழுதப்பட்டவை பெண்களின் போர்த்திறனையே பேசியது. இந்நூல் பெண்கள் தமக்கென உருவாக்கிய சமூக பொதுவெளியைப் பற்றி பேசுகிறது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளமிக்க சமூகம் மேற்குலகத்தின் வாழ்க்கைத்தரத்தைக் கொண்டநிலைய எட்டும்போது மேற்கூறப்பட்ட நவீன பெண்ணியல்வாதம் அங்கு கூர்ப்படைந்துள்ளது.

ஆனால் ஒரு இனஅழிப்பின் மூலம் 2009 ஆம் அழிக்கப்பட்ட தமிழீழ நிழல் அரசில் உருவாகிய பெண்ணியல் கோட்பாடுகள் வேறுபட்ட வடிவத்தில் இருந்து உருவாகியதாகும். அது உழைக்கும் வர்க்க பெண்களில் இருந்து உருவாகியதாகும். இந்த வகையான பெண்ணியல் கோட்பாடுகளே இந்த உலகத்திற்கு தேவையானது.இந்த பெண்ணியல் கோட்பாடுகள் எவ்வாறு உருவாகியது என்பதை கலாநிதி என். மாலதி அவர்கள் எழுதிய இந்த நூல் தெளிவாக விளக்குகின்றது.

இந்த ஆங்கில நூல் தமிழிலும் விரைவில் வெளியிடப்படவிருப்பது தமிழ் வாசகர்களுக்கு ஒரு நிறைவான செய்தியாகும்.

கணணித்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற நூலாசிரியர் நியூசிலாந்தில் பல காலம் வாழ்வதுடன், 2005 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையில் தமிழீழ நடைமுறை அரசில் பணியாற்றியிருந்தார்.mala b  ‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam’)- ஆங்கில நூல் வெளியீடு

தமிழீழ நடைமுறை அரசுபற்றி A FLEETING MOMENT IN  MY COUNTRY  என்ற நூலை  ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.பின்னர் அது தமிழிலும் வெளிவந்திருந்தது. கப்டன் மலரவனின் ‘போருலா  ‘ என்ற கள காவியத்தை WAR JOURNEY – Diary of a Tamil Tiger என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்திருந்தார்.பெண்போராளிகளின் பெண்போராளிகளின் எழுத்துருவாக்கங்களை ‘விடிவிற்காய்’ என்ற  நூலாகத்  தொகுத்துள்ளார்.

அவரின் TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam – Author(s) :N Malathy ,  நூலை பின்வரும் இணைத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

http://www.aakarbooks.com/details.php?bid=901

பிரபாகரனின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள் நீங்கள் – டக்ளஸ்

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு நேர பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா? அதைவிடவும், புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனிதநாகரீக பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா இல்லையா என்று கேட்கிறேன்.

புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள் கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.

அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களை காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன்.

நீங்கள் வரவில்லை. எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சுலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட இன்று உயிருடன் இருந்திருப்பார்.

முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளை துறந்து எதிர்ப்பை தெரிவித்தீர்களா? இல்லை.

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியை துறந்திருப்பேன்.

ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள். சவப்பெட்டி அரசியல் வாதிகளும். பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்கு கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்பு குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது தமிழ் மக்களையும் ஏமாற்றி உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள் இன்று பேச தொடங்கியுள்ளார்கள்.

முப்பது வருடங்களாக போராடி எதை சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனை தியாகங்களை கொசைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.

அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் அந்த முப்பது வருட போராட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.

சிறிலங்காவிற்கான இலவச விசா திட்டத்தில் சீனாவும், இந்தியாவும் இணைக்கப்பட்டன

இலங்கைக்கு வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொண்டது.

இதுவரை தாய்லாந்து ஐரோப்பிய êனியன் நாடுகள் உட்பட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பின்னர் விமான நிலையத்தில் வைத்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயற்படுத்தி வந்தது. ஆனால் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமானளவு குறைந்திருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்தியாவும் சீனாவும் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இரு அமைச்சுக்களில் மாற்றம்

அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார, அமைச்சர் பீ.ஹரிஸன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகித்த பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவியில், கிராமிய பொருளாதார அலுவல்கள் நீக்கப்பட்டு, கால்நடைவள அபிவிருத்தி பதவி இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பீ.ஹரிஸன் வகித்த விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியில், கால்நடைவள அபிவிருத்தி நீக்கப்பட்டு கிராமிய பொருளாதாரம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வளம் என அவரது அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதியே இவர்களுக்குரிய அமைச்சுப் பதவியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இப்போது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கான அமைச்சுப் பொறுப்பிற்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்து கொண்டார்.

 

யாழில் ஒன்று திரண்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வேலை வேண்டுமென்று யாழ். ஊடக மையத்தில் இன்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப்போவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் போது, யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உள்வாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ பட்டதாரிகளே தமது பதிவுகளை இன்று மேற்கொண்டனர்.

2017இற்குப் பின்னர் உள்வாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படவில்லை. இதனால் வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறு ஒன்றுகூடி இந்தப் பதிவை மேற்கொண்டனர். பாரபட்சம் காட்டாது வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டுமென்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள சுமார் ஐந்து இலட்சம் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்கள் உட்பட பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியில்லாமல் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகள் நீண்ட காலமாக வாழும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

பொறிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் முதல்வராக இருந்த வேளை பிரித்தானியாவில் சட்டபூர்வ வதிவிட அனுமதியில்லாமல் வாழும் குறியேறிகளுக்கு வதிவிட அனுமதி வழங்கும் பரிந்துரையை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை  அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனுகையளிப்பு

குறித்த மனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம்  பொன்ராசாபுவலோஜன் பிரேம்குமார்சந்திரகுமார் அற்புதம் டக்லஸ்மென்டிசன் ஆகியோரினால் குறித்தமனுவானது கையளிக்கப் பட்டது. குறித்தமனுவில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரதானமான முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டப் யுத்தத்தின் போது போர்க்குற்றங்களும், மனிதநேயக்குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் முன்னைய அறிக்கைகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.

கடந்த 20 ம் நாள் பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் (10 Downing Street) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்தமனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம், பொன்ராசா புவலோஜன், பிரேம்குமார் சந்திரகுமார், அற்புதம் டக்லஸ்மென்டிசன் ஆகியோரினால் குறித்தமனுவானது கையளிக்கப்பட்டது. குறித்தமனுவில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரதானமான முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டப் யுத்தத்தின் போது போர்க்குற்றங்களும் மனிதநேயக்குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைய அறிக்கைகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள்மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கும்  யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடந்தநிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை இதுவரையில் வழங்கத் தவறியுள்ளமையாலும், கடந்த காலவன்முறைகள் மீளெழுவதைத் தடுப்பதன் பொருட்டு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளமையாலும் ஓர்நிலையான அரசியல் தீர்வினைக்காண்பதை நோக்காகக் கொண்டும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிப்பதன் பொருட்டும் இத்தீவின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைஅரசிற்கு இரு வருட காலஅவகாசங்கள்வழங்கியும் அவற்றை இலங்கை அரசு செயற்படுத்த தவறியுள்ள நிலையில் இம்முறை மீண்டுமொருகால அவகாசத்தினை இலங்கைக்கு வழங்காது இணைஅனுசரணை வழங்கிநிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்குகிழக்கில் இராணுவத்தின் தொடர்பிரசன்னம், வடகிழக்கில் நடந்துவரும் தொடர்ச்சியான சிங்கள குடியேற்றங் களைநிறுத்துதல், இராணுவசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கையின் விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்புசபையிடம் பாரப்படுத்த வேண்டும் எனவும்குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது