ஈழத்தமிழர் போராட்டம் வரலாறு அல்ல. அது ஒரு நீண்ட தொடர். அதன் அதிசயிக்க வைத்த ஒரு கட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அதிசயத்தில் ஒரு அதிசயம் தான் அதில் பெண்களின் பங்கு. ஒரு சுருங்கிய குடும்பவட்டத்திற்குள் அடக்கப்பட்டு இருந்த ஈழத்தமிழ் பெண்கள், இப்புரட்சியின் போது, 1980களிலிருந்து 2009 வரையான ஒரு குறுகிய காலத்துக்கு, பொதுவெளிக்கு திரண்டு வெளிவந்தார்கள். இன்று வரை இதுபற்றி எழுதப்பட்டவை பெண்களின் போர்த்திறனையே பேசியது. இந்நூல் பெண்கள் தமக்கென உருவாக்கிய சமூக பொதுவெளியைப் பற்றி பேசுகிறது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளமிக்க சமூகம் மேற்குலகத்தின் வாழ்க்கைத்தரத்தைக் கொண்டநிலைய எட்டும்போது மேற்கூறப்பட்ட நவீன பெண்ணியல்வாதம் அங்கு கூர்ப்படைந்துள்ளது.
ஆனால் ஒரு இனஅழிப்பின் மூலம் 2009 ஆம் அழிக்கப்பட்ட தமிழீழ நிழல் அரசில் உருவாகிய பெண்ணியல் கோட்பாடுகள் வேறுபட்ட வடிவத்தில் இருந்து உருவாகியதாகும். அது உழைக்கும் வர்க்க பெண்களில் இருந்து உருவாகியதாகும். இந்த வகையான பெண்ணியல் கோட்பாடுகளே இந்த உலகத்திற்கு தேவையானது.இந்த பெண்ணியல் கோட்பாடுகள் எவ்வாறு உருவாகியது என்பதை கலாநிதி என். மாலதி அவர்கள் எழுதிய இந்த நூல் தெளிவாக விளக்குகின்றது.
இந்த ஆங்கில நூல் தமிழிலும் விரைவில் வெளியிடப்படவிருப்பது தமிழ் வாசகர்களுக்கு ஒரு நிறைவான செய்தியாகும்.
கணணித்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற நூலாசிரியர் நியூசிலாந்தில் பல காலம் வாழ்வதுடன், 2005 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையில் தமிழீழ நடைமுறை அரசில் பணியாற்றியிருந்தார்.
தமிழீழ நடைமுறை அரசுபற்றி A FLEETING MOMENT IN MY COUNTRY என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.பின்னர் அது தமிழிலும் வெளிவந்திருந்தது. கப்டன் மலரவனின் ‘போருலா ‘ என்ற கள காவியத்தை WAR JOURNEY – Diary of a Tamil Tiger என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்திருந்தார்.பெண்போராளிகளின் பெண்போராளிகளின் எழுத்துருவாக்கங்களை ‘விடிவிற்காய்’ என்ற நூலாகத் தொகுத்துள்ளார்.
அவரின் TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam – Author(s) :N Malathy , நூலை பின்வரும் இணைத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.aakarbooks.com/details.php?bid=901