இரு அமைச்சுக்களில் மாற்றம்

அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார, அமைச்சர் பீ.ஹரிஸன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகித்த பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவியில், கிராமிய பொருளாதார அலுவல்கள் நீக்கப்பட்டு, கால்நடைவள அபிவிருத்தி பதவி இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பீ.ஹரிஸன் வகித்த விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியில், கால்நடைவள அபிவிருத்தி நீக்கப்பட்டு கிராமிய பொருளாதாரம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வளம் என அவரது அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதியே இவர்களுக்குரிய அமைச்சுப் பதவியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இப்போது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கான அமைச்சுப் பொறுப்பிற்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்து கொண்டார்.