Home Blog Page 1950

ஈரானின் தாக்குதல்; அமெரிக்க படையினருக்கு மூளை அதிர்ச்சி

ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறி வந்த நிலையில் நிலையில் தற்போது தனது படையினர் 11 பேருக்கு மூளை அதிர்ச்சி அறிகுறிகள்(concussion symptoms) காணப்பட்டதாகவும் அவர்களுக்கு தற்போது சிகிச்சை அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் ‘அன் அல் ஆசாத்’ மற்றும் ‘ஹாரிர் கேம்ப்’ ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பொலன்னறுவையில் களமிறங்குகிறார் மைத்திரி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகவும் அவர்களுக்கான நன்னடத்தை கோட்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்காக கற்ற, ஆளுமையுள்ள பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களை தெரிவு செய்வதற்காக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலையில் பொங்குதமிழ் பிரகடன நிகழ்வு –

யாழ். பல்கலைக்கழகத்தில், பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டின் இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்,

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாக பொங்கு தமிழ் அமைந்தது.

இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த தமிழரின் மரபுவழித் தாயகமும், அதனால் சிதைக்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையையும் வேண்டிநின்ற தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தின்பால் தாம் கொண்டுள்ள ஆழமான விடுதலை உணர்வை வெளிக்கொணர்வதற்கும், வலியுறுத்துவதற்குமாக 2001.01.17இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட நிகழ்வே ‘பொங்கு தமிழ்’ ஆகும்.

இதனைத் தொடர்ந்து, ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும், புகலிட தேசங்களிலும் பொங்கு தமிழாய் எம் மக்கள் விடுதலைக்காய் பேரெழுச்சி கொண்டனர்.

அப்போது யாழ். மண்ணில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் அடக்குமுறைகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், வீதி மறிப்புக்களையும், கெடுபிடியான சோதனை நடவடிக்கைகளையும் தாண்டி, குடியிருப்புக்களின் மதில்களினால் பாய்ந்தும், குறுக்கு பாதைகளினாலும் இளைஞர்கள், முதியவர்கள், மதகுருமார், பெண்கள், மாணவிகள் என்ற பாகுபாடின்றி திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் பேரெழுச்சி கொண்டு பொங்கிப் பிரவாகித்து நின்றது 2001ஆம் ஆண்டு பொங்குதமிழ்.

இலங்கை அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ் தேசத்தின் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிராகவும் அவற்றைத் தகர்த்தெறிந்து எழுச்சி கொண்டு தமிழ் மக்கள் தமது உரிமைக் குரலை உயர்த்தி வெளிப்படுத்திய எழுச்சி மிக்க பிரகடனமே பொங்கு தமிழாகும்.

இந்நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும் எம்மினம் இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க முடியாது. இந்நாளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எமது பல்கலைக்கழகம் கடந்தகாலத்தில் மேற்கொண்ட வரலாற்றுக் கடைமையை ஜனநாயக வழியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் உறுதியெடுக்கின்றோம்.

இப்புனித நாளில் இலங்கை அரசினால் கடந்த ஆட்சியில் தாயாரிக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து எமது தேசத்தின் இருப்பைப் பாதுகாக்க பின்வரும் தீர்மானங்களை வலியுறுத்துகின்றோம்.

1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

2. தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

3. தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

மேற்படி கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டு இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை இப்பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான சேவை தொடர்பில் வவுனியாவில் செயலமர்வு

உள சமூக சேவை வழங்கலில் அதிபர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில் வவுனியாவில் அதிபர்களுக்கான செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா, மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அணுசரணையில் குடும்ப புனர்வாழ்வு நிலையம் மற்றும் வடமாகாண உளவியல் சமூக வள நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

‘சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான சேவை’ எனும் தொனிப் பொருளில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உளவியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம், முழுமையான மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், மன வடு என்றால் என்ன, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் மன வடுவின் தாக்கம் என்பன தொடர்பில் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதில் வவுனியா வடக்கு வலயம், வவுனியா தெற்கு வலயம் மற்றும் மடு வலயத்தை சேர்ந்த 36 அதிபர்கள், வடக்கு மாகாண உளவியல் சமூக வள நிலையத்தின் உதவி முகாமையாளர் எஸ்.உதயகலா வளவாளராக கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழை: அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ஒரு மாத காலத்தின் பின்னர் மீண்டும் வேளாண்மை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை முதல் அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் ஏறப்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, அழிவடையும் நிலை தோன்றியுள்ளது.

மழைவீழ்ச்சி தொடர்ந்தும் நீடிக்குமாயின் விவசாயம் பாதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன்அவர்களை ‘இலக்கு’ நேர்கண்டபோது, அவர் வழங்கிய கருத்துக்களின் தொகுப்பை இங்கு தருகிறோம்.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆகியும் எங்கள் பிரதேச எல்லைக் கிராமங்களில் வீட்டுத் திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. வவுனியா வடக்கு காஞ்சுரமோட்டை என்னுமிடத்தில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் அங்கு குடிதண்ணீர் பிரச்சினை பெரியளவில் உள்ளது. அத்துடன் போக்குவரத்துப் பிரச்சினையும் உள்ளது. அங்குள்ள மாணவர்கள் பாடசாலைக்காக நெடுங்கேணிக்கு வரவேண்டிய தேவை உள்ளது. பஸ் போக்குவரத்துகள் நடைபெறுவதில்லை. இதனால் மாணவர்கள் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.kunchuthan வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்

யுத்தம் முடிவடைந்து இவ்வளவு காலமாகியும் வீதிகள் புனரமைக்கப்படவில்லை. வவுனியா வடக்கைப் பொறுத்தவரையில் 95 சதவீதமானவை விவசாயக் கிராமங்களே. விவசாயிகள் தங்களின் விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு வீதிகள் புனரமைக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக தேர்தல் நேரங்களிலேயே வந்து  பேசுவார்கள். தேர்தல் முடிய அவர்கள் சென்று விடுகின்றார்கள். மீண்டும் தேர்தல் நேரத்திலேயே வருவார்கள்.

குறிப்பாக காஞ்சுரமோட்டை பகுதியில் சென்று பார்த்தால், அங்கு குடிதண்ணீர் இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. வவுனியா வடக்கிலுள்ள 20 கிராமசேவகர்கள் பிரிவிலும் இதே நிலைமைதான் உள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக திருத்தப்படாத வீதிகள் இன்றும் அப்படியே உள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட செல்ல முடியாது. மாணவர்கள் பாடசாலைகளுக்குக்கூட போகமுடியாத சூழ்நிலை உள்ளது.

அரசியல் கட்சிகள் இதுபோன்ற விடயங்களை பார்ப்பதில்லை. அவர்கள் தங்களின் தேவைகளுக்காகவே இந்த விடயத்தை மேற்கொள்கின்றார்களே தவிர, மக்களின் தேவை கருதி மக்களுக்காக இதனை செய்ய வேண்டுமென எந்த அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை.

பிரதேச சபையால் செய்யப்பட வேண்டிய வேலைகளில் 95 சதவீதமான வேலைகள் நடைபெறவில்லை. 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டமும் பலனளிக்கவில்லை. அதனால் இரண்டு தடவைகள் வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் தோற்கடித்துள்ளோம்.

பிரதேச சபையால் செய்து தரக்கூடிய வேலைகளைக்கூட செய்து தருவதில்லை என மக்கள் எம்மிடம் கேள்வி கேட்கின்றனர். உள்ளக வீதிகள் பிரதேச சபையால் புனரமைக்கப்பட வேண்டியவை. அவற்றைக்கூட இன்றுவரை பிரதேச சபை மேற்கொள்ளவில்லை. குறித்த பதவியில் இருந்து நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அறியும் பட்சத்தில் நாங்கள் அந்தப் பதவியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்து இந்த வேலைகளை செய்யலாம்.

பொதுமக்களுக்கான சந்தைகளைக்கூட அமைத்துத்தர முடியாத நிலைமை உள்ளது. உதாரணமாக 9 கிராமங்கள் அடங்கிய நயினாமடு பிரதேசத்தில் பிரதேச சபைக்கு சொந்தமான காணி உள்ளது. அந்தக் காணியில் ஒரு சந்தை அமைத்துக் கொடுக்கும்படி மனு கொடுத்திருந்தோம். அதைக்கூட செய்து தரவில்லை. அதேபோல் கனகராயன்குளம் தெற்கில் ஒரு சந்தை அமைக்கும்படி கோரப்பட்டிருந்தது. ஆனால் அதையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இவ்வாறே இந்த பிரதேச சபைகள் இருந்து வருகின்றன.

4 ஆண்டுகளாக தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொண்டு தங்களின் பதவிக் காலம் வரையிலும் பொது மக்களை ஏமாற்றிய பின்னர் வீட்டிற்குச் சென்றால் சரியென்ற நிலையே இருக்கின்றது. இதனால் இரண்டு தடவைகள் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான தேவைகளில் 75 வீதமான தேவைகளையாவது பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கட்சிகளும் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கும் பல வேலைத் திட்டங்களை  செய்வோம் என்று கூறியே வாக்குக் கேட்பார்கள். ஆனால் அதில் ஒரு வீதமாவது அந்த மக்களின் பிரதேசங்களில் செய்வதாக தெரியவில்லை. அதனால் ஒழுங்கான ஒரு சரியான தலைமைக்குக் கீழே  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த 17 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளோம்.

எங்கள் மக்கள் இந்த விவசாயத்தையே நம்பியிருக்கின்றார்கள். அரசியல் கட்சிகள்  முயற்சி செய்து இந்த வீதிகளை புனரமைக்க வேண்டும். மக்களின் சந்தைகள், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். காஞ்சுரமோட்டை கிராமத்திற்கு அரசியல்வாதிகள், மாகாணசபை உறுப்பினர்கள்  சென்றிருக் கின்றார்கள் என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. அவர்கள் முகநூல்களின் மூலமாகவே அப்படியான கிராமங்கள் இருக்கின்றன என்பதை அறிகின்றார்களே தவிர  அவர்களுக்கு அப்படியான கிராமங்கள் இருக்கின்றன என்பது தெரியாமலே உள்ளது.

காஞ்சுரமோட்டை, நயினாமடு, சின்னடம்பன் ஊடாக கனகராயன்குளம் செல்கின்ற இந்த மக்கள்கூட எந்தவிதமான போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் இன்றுவரை தவிக்கின்றார்கள். 30 வருடங்கள் கடந்தும் இன்றும் இவை இல்லை. யுத்தம் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட இன்றும் அந்த இடங்களுக்கு பஸ் போக்குவரத்துகள் இல்லை.

எனவே இந்த வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் செய்ய வேண்டும். இந்த விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை தொடர்பாக அரசியல் கட்சிகள் முடிவெடுக்க வேண்டும். அதனூடாகத் தான் எங்கள் பிரதேச சபையை அபிவிருத்தி செய்யலாம். மாணவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் மேற்கொண்டாலேயே  மக்களின் வாழ்வாதாரம் உயர்வடையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

‘ஏறுதழுவுதல்’ மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

தமிழ் நாட்டில் தைப்பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் போகிப் பொங்கல், உழவர் பொங்கல்(சூரியப் பொங்கல்), மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. பொங்கல் நிகழ்வின் போது அனைவராலும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக ஜல்லிக்கட்டு அமைகின்றது.
பொங்கல் கொண்டாட்டங்கள்.

முதலில் போகிப் பொங்கல் பற்றி பார்ப்போம். மார்கழி இறுதி நாளை அதாவது தைப்பொங்கலுக்கு முதல் நாளை பழையன கழிதல் என்பதற்கமைய போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது.

இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது சூரியப் பொங்கல் ஆகும். இது உலகில் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பொதுவான நிகழ்வாகும். உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக இப்பொங்கல் கொண்டாடப் படுகிறது.அதே போல மூன்றாவது நாளாக, தங்கள் உழவிற்கு உதவி செய்த மாட்டிற்கு நன்றி தெரிவித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.இதுவும் பொதுவாக எல்லா நாட்டு தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும்.dfearg 1537262920e 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

நான்காவது நாள் நிகழ்வாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் இந்நாளில் மக்கள் நெடு நாளாக கண்டிராத  நமது உற்றார் உறவினரை காணும் நாளே காணும் பொங்கல் என கொண்டாடுகின்றனர். இந்நாளில்  தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில், முகத்தில் பூசிக்கொள்வார்கள். இது பண்டைய கால வழக்கமாகும்.

உழவர் திருநாளில் முக்கியமான நிகழ்வாக ஜல்லிக்கட்டு அமைகின்றது. ஜல்லிக்கட்டை ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது  ஜல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்று அழைப்பர். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டே ஜல்லிக்கட்டாகும். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆண்டு தோறும்  தைமாதத்தில் பொங்கல்  திருநாளையொட்டி நடத்தப்படுகின்றன. jallikattu34 1547725878 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘ஜல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன்  ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார்.  இதனால் இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்த போதும். ஏதோ ஒரு காரணத்தினால் ஜல்லிக்கட்டு நிகழ்வை மத்திய அரசு தடுத்தே வந்தது. 2014 மே 7இல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.jallikattu 1 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

காளைகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் 01-12-2016 அன்று மறுபடியும் தடை விதித்தது.

தங்கள் உரிமைகளைப் பெறவும், பாரம்பரிய கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக் கோரியும் 2017 சனவரி 16ஆம் திகதி மரீனா கடற்கரையில் சுமார் 75பேர் கூடி தங்களின் உரிமைகளுக்காக போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஒன்று கூடினர். அன்று பிற்பகலில் 5000பேர் ஆகி போராட்டம் 23ஆம் திகதி வரை   இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்றது. பொதுமக்கள், மாணவர்கள் என அதிகரித்த போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகள், நடிகர்களை தங்கள் போராட்டத்தில் இணைக்க மறுத்தனர்.Jallikattu Supporters Around The World Save Jallikattu and We Do Jallikattu 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

முழுவதும் பொதுமக்கள் போராட்டமாக அமைந்தது. தலைமை என்ற ஒன்று இல்லாது, மக்கள் அனைவரும் புரிந்துணர்வுடன் போராட்டத்தில் இறங்கினர். ஆண்,பெண், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற அனைத்து தரப்பினரும் இரவு பகலாக கடற்கரையில் நின்று போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதிகளை பொது மக்களே ஏற்படுத்திக் கொண்டனர்.

போராட்டத்தை குழப்பும் வகையில் அந்தப் பிரதேச மின்விளக்குகளை அரசு அணைத்தது. இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்கள் கைபேசிகள் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தினர்.Jallikattu mobile 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

இது பார்ப்பதற்கு வானத்திலுள்ள விண்மீன்கள் கீழே இறங்கியது போல இருந்தது. போராட்டத்தை தடுப்பதற்காக பொலிசார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர். கலைந்து போகுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் இதை செவிசாய்க்கவில்லை. இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி போன்ற சிறப்புப் பெயர்களால் குறிப்பிடப்பட்டன.

தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களிலும், இலங்கை உட்பட வேறு நாடுகளிலும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. சமூக வலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.  சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.93649753 five 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

இந்தப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. தமிழர் பிரதேசங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பொங்கல் நிகழ்வின் போதும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட போராட்டமாக இது மட்டுமே அமைகின்றது. இதன் பின்னரோ இதற்கு முன்னரோ இப்படியான ஒரு போராட்டம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

யாழில் பட்டிமன்ற நடுவராக களமிறங்கிய சுமந்திரன்!

உடுவில் றோஸ்வில்லாவில் இன்றையதினம் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொண்டார்

தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சியடைந்தனவா? அல்லது தற்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளனவா எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் இந்தநிகழ்வில் பறை இசை, குழலிசை ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் நாடாளுமுன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே பார்வையால் இன்பம் காணலாகும்.

ஒருவன் பிறரது நிர்வாண உடலையும் பிறப்புறுப்புக்களையும், பிறரது பாலியல் நடத்தைகளையும் பார்ப்பதன் மூலம் பாலியல் ரீதியான இன்பத்தையும் மன நிறைவையும் பெற்றுக்கொள்ளுகின்றமை ஒரு பாலியல் கோளாறு ஆகும். ஆங்கிலத்தில் இது Voyeurism எனப்படும்.

இதில் Voyeur எப்பொழுதும் ஏனையவரது பார்வையிலிருந்து மறைந்தே இருப்பார். வொயரிசம் ஒரு வகையான அதீத பாலுணர்வு. வொயரிசத்தின் மாறுபட்ட வடிவமானது சிற்றின்ப உரையாடல்களை கேட்டல் மற்றும்ää தொலைபேசி மூலமான பாலியல் உறவையும் குறிக்கின்றது.

பார்வையால் இன்பம் காணலில் உடைகளை மாற்றும் போது, பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மற்றும் நிர்வாணமாக உள்ள நபர்களை பார்த்து சுயஇன்பம் அடைவதைக் குறிக்கும். பார்க்கின்ற,எட்டிப் பார்க்கின்ற செயற்பாடானது பாலியல் ரீதியான புத்துணர்ச்சியை பெறும் நோக்கிலேயே மேற்கொள்ளப்படும். பொதுவாக பார்ப்பவர் பார்க்கப்படும் நபருடன் பாலியல் ரீதியான தொடர்புகளையோ செயற்பாடுகளையோ வைத்திருக்க முனைவதில்லை.

பல அரசுகள் பார்வையால் இன்பம் காணலை ஒரு குற்றமாக கூறும் விதிகளை கொண்டிருக்கின்றன. பெரும்பாலான அரசுகள் ஒரு நபர் அவரது வீட்டில் தனிமையில் இருக்கும் போதும்,வேறு சில தனியார் இடங்களில் இருக்கும் போதும், அவரது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்தையோ வீடியோ எடுப்பதையோ தடுக்கிறது.

Langstram மற்றும் seto என்போரின் ஆய்வில் 18-60 வயது உடையவர்களில் 2450 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். 12% ஆண்களும், 41% பெண்களும் குறைந்தது ஒரு தடவையாவது அடுத்தவர் உடல் உறவு கொள்வதை பார்த்து இன்பமடைந்ததாக கூறி உள்ளனர். அமெரிக்காவிலுள்ள கிராமத்திலுள்ள கல்லூரியை சேர்ந்த 60 ஆண் மாணவர்களில் மேற்கொண்ட ஆய்வில் 42மூ மாணவர்கள் அடுத்தவரது பாலியல் உறவினை இரகசியமாக பார்ப்பதாகக் கூறினர்.

பார்வையால் இன்பம் காணலுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான காரணமும் இல்லை. அனேகமான நிபுணர்கள் எதிர்பாராமல் ஒரு நபர் ஆடைகளை களையும் போது- பாலியல் நடத்தைகளில் ஈடுபடும் போது- நிர்வாணமாக உள்ளதை தற்செயலாக காணும் போது அந்த நடத்தையை கற்றுக் கொள்கிறார். மீண்டும் மீண்டும் அந்த செயலை வெற்றிகரமாக செய்யும் போது பார்வையால் இன்பம் காணபதற்கு உறுதியாக தள்ளப்படுகிறார்.

இக் கோளாறு ஏற்படுவதற்கான ஏதுவான காரணிகள் எவை என்று இதுவரை சரியாக அறியப்படவில்லை ஆயினும் இந்தக் கோளாறுகள் ஏற்படுவதற்கு சில காரணிகள்; கண்டறியப்பட்டுள்ளன.

பொதுவாக பரம்பரை மூலம் கடத்தப்படும் நிறமூர்த்தங்கள் மூலம் இந்த கோளாறு கடத்தப்படுகின்றதாக கூறப்படுகின்றது அந்த வகையில் நிறமூர்த்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் நிறமூர்த்தத் திரிபுகள் என்பவை காரணமாக ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. குழந்தைப் பருவத்தில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களும் ஒரு காரணியாகக் கொள்ளப் படுகின்றது. குழந்தைப் பருவத்தில் ஒரு பிள்ளை தனது நடத்தையை குடும்ப மற்றும் சமூகத்தில் இருந்து அவதானிப்பின் மூலம் கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு கற்றுக் கொள்ளுகின்ற சந்தர்பத்தில் அப்பிள்ளை நேரான பண்புகளையும் கற்றுக் கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் எதிரான சில பண்புகளையும் கற்றுக் கொள்கின்றது. எதிரான பண்பாக பார்வையால் இன்பம் அடைவதை கற்க ஆரம்பிக்கின்றது.

ஒரு நபர் சிறுவயதிலோ அல்லது கட்டிளமைப் பருவத்திலோ பாலியல் சார் துஸ்பிரயோக்த்திற்குள்ளான சந்தர்ப்பங்கள் காணப்ப்படுமாயினும் அப்பிள்ளை பாலியல் சார் விலகல் நடத்தைகளை மேற்கொள்ளத் திட்டமிடும். அதாவது பாலியல் சார் துஸ்பிரயோகம் காரணமாக அப் பிள்ளை பாலியலில் அதிக ஆர்வம் கொண்டவராகவோ அல்லது மாறாக பாலியல் சார் ஆர்வமின்மை கொண்டவராகவோ மாறுகின்றார். இவ்வாறு பாலியல் சார் ஆர்வமின்மை காணப்படுமாயின் குறித்த நபர் தனது பாலியல் இன்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்தவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்து தனது பாலியல் இன்பத்தினை அடைகின்ற தன்மை ஏற்படுகின்றது.

மேலும் ஒரு நபர் தன்னைப் பற்றி தாழ்வான சுய மதிப்பீட்டினை ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் தான் அழகில்லாதவர் என்றும், தன்னால் எந்தப் பெண்ணையும் பாலியல் ரீதியாக சந்தோசபடுத்த முடியாது என்றும்ää தன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள், தான் பாலியல் செயற்பாட்டுக்கு பொருத்தமில்லாதவன் என்ற தாழ்வான சுயமதிப்பீடுகளும் ஒரு நபரை பாலியல் நெறிபிறழ்வுக்கு இட்டுச் செல்கின்றன.

இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் தனது பாலியல் சார் இன்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உயிரற்ற பொருட்களை மணத்தல், தொடுதல் என்பவற்றின் மூலம் சுய இன்பத்தினை அனுபவிக்கின்றார்கள்.

ஒருவருக்கு பாலியல் நடத்தையை மேற்கொள்வதில் உடலியல் சார் குறைபாடுகள் காணப்படுமாயின் அந்த நபர் தனது பாலியல் இன்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக மாற்று வழியில் இன்பத்தை பெற எத்தனிக்கின்றார். ஆண்குறி விறைப்பின்மை, பாலியல் உறவின் போதான வலி போன்ற குறைபாடுகள் காணப்படும் போது குறித்த நபர் தனது பாலியல் இன்பத்தினை அனுபவிக்கும் பொருட்டு ஏனையோர் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்து தனது பாலியல் இன்பத்தை அனுபவித்து தனக்கு ஏற்படும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றார் .

பாலியல் சார் இன்பத்தினை அனுபவிக்கின்ற போது ஏற்படுகின்ற உளவியல் சார் தடைகளும் முக்கியமான காரணியாக உள்ளன. பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் அதிக வெட்க உணர்வு, தாழ்வு மனப்பான்மை,ஆர்வமின்மை, பயம் போன்ற உளவியல் ரீதியான வெளிப்பாடுகள் காணப்படுமாயின் குறித்த நபரால் பாலியல் இன்பத்தினை அனுபவிப்பதற்கு வேறு வழிமுறை நாட்ப்படுகின்றது. மேலும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு பாலியல் சார் அடிப்படை அறிவின்மை என்பதும் ஒரு காரணியாக உள்ளது. அதாவது பாலியல் சார் அறிவின்மை என்பது நமது சமுதாயத்தில் இன்று அதிகரித்து வரும் ஒன்றாகும்.

பார்வையால் இன்பம் காணும் பாலியல் நெறிபிறழ்வை கொண்டிருப்பவரை அடையாளம் காண்பதற்கு அவர்கள் பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டுவர். எதிர்பாராத ஒரு நபர் ஆடை மாற்றும் போது அல்லது பாலியல் நடத்தையில் ஈடுபடும் போது பார்த்தல்- மீண்டும் மீண்டும் தீவிரமான பாலியல் உணர்வுகளை தூண்டுவதனான கற்பனைகள; பாலியல் தூண்டல்களில் ஈடுபடல்- நீலப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டல்- ஒரு நபரின் மறைவான பகுதிகளை உற்றுப் பார்த்தல் என்பன இனங்காணக்கூடிய அறிகுறிகள். பார்வையால் இன்பம் காண்பது ஒரு முறை மேற்கொள்ளப்படின் பொதுவாக இதைத் தடுக்க முடியாது. காலப்போக்கில் பாலியல் ரீதியான மனநிறைவை பெற்றுக்கொள்வதற்கான பிரதானமான வடிவமாக இது மாறும், இதுவொரு நீண்ட கால நோய்.

பாலியல் நெறிபிறல்வான,பார்வையால் இன்பம் காணும் நடத்தையை உள மருத்துவர்களும், உள ஆற்றுப்படுத்துநர்களும் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளை கையாளுகின்றனர். நடத்தை மாற்றுச் சிகிச்சை,உளக் கல்வியூட்டல், தளர்வுப் பயிற்சிகள், குடும்ப ஆற்றுப்படுத்தல்,அறிகைச் சிகிச்சை,ஆழ்துயில் சிகிச்சை, ஆள்மைய சிகிச்சை என்பவற்றின் மூலம் இச் செயல்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றன.

 

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள மாற்றம்!

நாடளாவிய ரீதியில் 10 மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு,கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு,மட்டக்களப்பு,புத்தளம்,ஹம்பாந்தோட்டை, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் செயாளர்களே இடமாற்றப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் ஓய்வுபெறவுள்ளநிலையில் அவரின் இடத்துக்கு தற்போது கிழக்கு மாகாண சபையில் பணியாற்றி வரும் கலாமதி பத்மராஜா நியமிக்கப்படவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக கடமையாற்றும் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் செயலாளராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் கொழும்பில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று அனர்த்த முகாமைத்துவபிரிவின் மேலதிக செயலாளராக பணியாற்றிவரும் எஸ்.அமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மாவட்ட செயலாளர்களின் விபரங்கள் தெரியவரவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.