அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழை: அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ஒரு மாத காலத்தின் பின்னர் மீண்டும் வேளாண்மை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை முதல் அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் ஏறப்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, அழிவடையும் நிலை தோன்றியுள்ளது.

மழைவீழ்ச்சி தொடர்ந்தும் நீடிக்குமாயின் விவசாயம் பாதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.