கல்வியில் பின்தங்கிய நிலலைக்குச் சென்ற கிழக்கு மாகாணம்

கல்வியில் பின்தங்கிய நிலலை

கிழக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கிய நிலலைக்கு சென்றுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபன்  சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த வருடம் 07வது நிலையிலிருந்து 08வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையிலும் பெரும்பாலான கல்வி வலயங்கள் மிகமோசமான பரீட்சை பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையிலும் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரோ, பிரதம செயலாளரோ, கல்விச் செயலாளரோ எதவித கருத்தினையும் தெரிவிக்காத நிலையே இருந்து வருகின்றது” என்றார்.

மேலும் அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தினை பெறுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபமானது உயர் நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடாகவுள்ளதாக பொன்னுத்துரை உதயரூபன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உயர்நீதிமன்றில் குறித்த சம்பள பெறுகைக்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் உதயரூபன் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021