மலேசியாவிலிருந்து இலங்கையர்கள் உட்பட 5,951 பேர் நாடு கடத்தல்

கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மார்ச் 18 முதல் ஜூலை 1ம் திகதிக்கு இடையிலானா காலக்கட்டத்தில் 5,951 வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டுள்ளனர்.

இதில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் 4,110 பேர், தாய்லாந்தை சேர்ந்தவர்கள் 637 பேர், மியான்மரை சேர்ந்தவர்கள் 391 பேர், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 380 பேர், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 279 பேர், சீனாவை சேர்ந்தவர்கள் 73 பேர், 26 இந்தியர்கள், 11 இலங்கையர்கள் மற்றும் மேலும் 44 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.