சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…!

விடையதைச் சொல்லு…!
**********

சர்வதேசம்
சொல்லுது இன்று
மனித உரிமைகள்
நாளாம் எமக்கு…அட

இல்லாத ஒன்றை
இருக்கெனச் சொல்ல
இந்த நாளும்
இருக்குது இப்போ…

மனிதரின் உரிமை
என்ன என்று
எழுதி வைச்சவர்
ஆரப்பா சொல்லு…?

விடுதலைப் போரில்
செத்தவர் யாரு…?
நினைச்சுப் பார்க்க
உரிமை இருக்கா….?

கைதியாய் பிடிச்ச
உறவுகள் எங்கே…? அவர்களின்
நிலையதை அறிய
உரிமை இருக்கா….?

புனர்வாழ்வு பெற்ற
எம்மவர் எல்லாம்
நல்வாழ்வு வாழ
உரிமை இருக்கா…?

ஈழ மண்ணில்
வாழும் எங்கள்
இனத்துக்கு என்ன
அடிப்படை உரிமை..?

அட
அதனை மட்டும்
இன்று சொல்லு
அதுக்குப் பிறகு
மிச்சம் கதைப்போம்…

இதுக்குப் பெயரா
மனித உரிமை….?
சர்வதேசமே
விடையதைச் சொல்லு…!!

-றோய்-