“மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசினால் எண்ணாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் வாடும் எமது தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்” என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தெரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 33வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளரை வரவேற்றலுடன் ஆரம்பமான இச்சபை அமர்வில், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட புதிய ஆணையாளர் ம.தயாபரன் மற்றும் பொறியியலாளர், கணக்காளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போதே மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தனது உரையில் தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.