பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை:   மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், இதனைத்தடுக்க சில மாநில அரசுகள் பல்வேறு சட்டத்திருத்தங்களை கொண்டுவந்து சட்டங்களை கடுமையாக்கி வருகின்றன.

அந்த வகையில், மஹாராஷ்டிர அரசு, பாலியல் குற்றங்களை தடுக்க ‛சக்தி திட்டம்’ என்னும் புதிய சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியுள்ளது.

இந்த சட்ட மசோதாவிற்கு  அம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.