கொரோனா: வவுனியாவில் 7125 பேர் பாதிப்பு, 200 பேர் மரணம்  

IMG 20211001 171047 கொரோனா: வவுனியாவில் 7125 பேர் பாதிப்பு, 200 பேர் மரணம்  

வவுனியாவில் 7125 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 பேர் மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

கொரோனா சமகால நிலமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில்  வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்தவகையில் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 72 வீதமானவர்களுக்கு இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. 29-59 வயதான 58 வீதமானவர்களுக்கு இரு தடுப்பூசிகளும், 18-29 வயதுக்குட்பட்ட 28 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு  ஊசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தமாத இறுதிப்பகுதிக்குள் முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் இறந்தவர்களில் 70 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்றப்பட்டவர்கள்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 114 பாடசாலைகள் உள்ளது. அவற்றை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021