கொரோனாவால் வீடுகளில் மரணிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் வீடுகளில் மரணிக்கும் நோயாளர்கள்கொரோனாவால் வீடுகளில் மரணிக்கும் நோயாளர்கள்: கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த வாரத்தில் மாத்திரம் 194 பேர் வீடுகளில் உயிரிழந்தனர் என அந்தப் பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான ஒருவார காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 99 பெண்களும் 95 ஆண்களும் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 1,094 பேர் வீடுகளில் உயிரிழந்திருக்கின்றனர்.

மொத்த மரணங்களில் 13.1 வீதம் வீடுகளில் இடம் பெற்றுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021